நீதிமன்ற உத்தரவு

 .              நீதிமன்ற உத்தரவு.

சிவில் வழக்கில் போலீஸ் விசாரணை என்ற பெயரில் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை காவல் நிலையம் வரவழைத்து வழக்கு சம்பந்தமாக தலையிடவோ, தொந்தரவோ, அல்லது விசாரிக்கவோ கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 

குறிப்பாக சொத்து யாருக்கு உரிமையானது என்பதை  நீதிமன்றங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். போலிசார் கட்டப்பஞ்சாயத்து செய்ய உரிமை இல்லை. 

ஆனால் மேலும் சில காவல் நிலையங்களில்  பல நேரத்தில் கட்டபஞ்சாயத்து செய்து மிரட்டி, FIR போட்டு ரிமாண்ட் செய்திடுவேன் என்று மிரட்டி, எதிர் தரப்பினருக்கு சாதகமாக இடப் பிரச்சனையில்,  இவர்களே கூடவே இருந்து நியாயமற்ற முறையில் நடந்துகொள்கின்றனர் என்ற வாதத்தை ஏற்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.

 மேலும் சொத்து யாருக்கு சொந்தம் என்பதை இவர்களே சம்பந்தப்பட்ட நபரை மிரட்டி எழுதி வாங்கி மிரட்டுவதும் சில இடங்களில் நடப்பதால் இதற்கு ஒரு தீர்வாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ரெவின்யூ ஸ்டாம்ப்

 ரெவின்யூ ஸ்டாம்ப்

(Revenue Stamp)

இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் இந்தியாவில் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப் படுகிறது.

1)புராமிசரி நோட் கடன் வாங்கும்போது, கடன் வாங்கியவர் எழுதிக் கொடுக்கும் புராமிசரி நோட்டில் இந்த ஸ்டாம்பை ஒட்ட வேண்டும்.

2)எந்த பணத்தையாவது யாரிடமிருந்தாவது வாங்கும்போது அதற்கான ரசீது கொடுக்க வேண்டுமென்றால், அப்போதும் அந்த ரசீதில் இந்த ரூ.1/- ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ரசீதை கொடுக்க வேண்டும்.

ரசீது (Receipts)

மாதச் சம்பளம் வாங்குபவர் இதை அதிகமாக உபயோகிப்பார்கள். அலுவலகங்களில் ரசீது கொடுக்கும்போது இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய ரசீதை கொடுப்பார்கள்.

மத்திய அரசின் சட்டப்படி, ரசீதுகளுக்கு (Receipts), அதாவது யாரிடமாவது எதற்காகவாது பணம் வாங்கினால், அதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ரசீதுகளுக்கு, இந்த சட்டப்படி ரூ.1/- மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதுவும், அந்த பணமதிப்பு ரூ.5,000/-க்கு மேல் இருந்தால் அந்த ரசீதில் ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதற்கு குறைவான மதிப்புள்ள தொகைக்கு ரசீது கொடுத்தால், அதற்கு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்டத் தேவையில்லை. வெறும், ஸ்டாம்ப் இல்லாத ரசீதை கொடுக்கலாம். (இதற்கு முன்பு இருந்த பழைய சட்டப்படி ரூ.500/-க்கு மேல் உள்ள தொகைக்கே 20காசு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதனால், ரெவின்யூ ஸ்டாம்ப் அதிகமாக புழக்கத்தில் இருந்தது.)

ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய ரசீதுக்கு, அதை ஒட்டாமல் வாங்கி இருந்தாலும், பரவாயில்லை. எங்காவது அதை சாட்சியமாக கொடுக்க நேர்ந்தால் அப்போது அதற்கு ரூ.10/- அபராதமாக கட்டி அதை சரிசெய்தும் கொள்ளலாம். சட்டப்படி அது செல்லும்.

புராமிசரி நோட்டு கடன் (Promissory Note)

புராமிசரி நோட் கடனுக்கு, கடன் எவ்வளவு தொகையாக இருந்தாலும், (கோடிக்குமேல் இருந்தாலும்), ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும். (அந்தச் சட்டத்தின்படி வெறும் 25 காசு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும் என்று சட்டம் சொல்லி உள்ள போதிலும், அவ்வாறான 25 காசு ஸ்டாம்புகளை அரசு அச்சடிக்கவில்லை. எனவே ஒருரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி எழுதி வாங்கிக் கொள்ளலாம்.)

இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல் வாங்கிய புரோநோட்டு சட்டப்படி செல்லாது. எந்த கோர்ட்டிலும் வழக்கும் போடவும் முடியாது. அபராதம் கட்டினாலும் அதை ஏற்க முடியாது. எனவே புரோநோட் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நிலஅளவை மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள் மற்றும் கால அளவுகள்

 நிலஅளவை மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள் மற்றும் கால அளவுகள் | Procedure for Survey of the Land with Timeline


மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண்.W.P.(MD)No.13465/2020 மற்றும் W.M.P.(MD)No. 11228/2020-ல் நீதிமன்றம் நில அளவைத் துறை சம்மந்நமாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நகல்.


https://drive.google.com/file/d/1vJNZ2Iz4f1RqGqZcEAJKdcHITJipeHua/view?usp=share_link


மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் ஆணைப்படி, சென்னை-5, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரால் ந.க.எண். 5/20403/2020 (நி.அ) நாள்: 15.03.2021-ன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து நிலஅளவை பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை மற்றும் நிலஅளவை செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய கடைமைகள். 


1. கட்டணம் செலுத்தி 30 நாட்களுக்குள் நில அளவை/ மறுநில அளவை செய்ய வேண்டுமென்றும்,


2. தவறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டணத்தை திரும்பி வழங்க வேண்டுமென்றும்,


3. தாமதத்துக்குக் காரணமான அதிகாரிகளின் சம்பளத்தில் ரூ.2,500 பிடித்தம் செய்ய வேண்டுமென்றும்,


4. மேலும், ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்று,


5. நில அளவீட்டுக்காக ட்ரோன் (Drone Camera) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். நில அளவீடு அல்லது மறு அளவீடு பணியை முழுமையாக புகைப்படம், வீடியோ பதிவு செய்ய வேண்டும். இதை சம்பந்தப்பட்டவர்கள் கட்டணம் செலுத்திக் கேட்டால் வழங்கலாம் என்றும்,


6. புல எல்லை மனுக்கள் தொடர்பான பதிவேட்டை பராமரித்து, மேல்நிலை அலுவலர்கள் (வட்டத்துணை ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர்) குறிப்பிட்ட காலங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை தினமும் சரிபார்த்திட வேண்டும். இந்த பதிவேட்டின் முழு தகவல்களையும் மனுதாரரோ/ சம்மந்தப்பட்டவர்களோ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரும் பட்சத்தில் மறுக்காமல் வழங்கப்பட வேண்டும்.


 நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரின் சுற்றறிக்கை நகல்: -

Commissionerate of Survey and Settlement Circular copy:- 


https://drive.google.com/file/d/1TdmNIcS7qC3eyyKgP0p2hEAVTMD0CHbr/view?usp=share_link


அதை தொடர்ந்து நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரால் ந.க.எண். 5/20403/2020 (நி.அ) நாள்: 15.03.2021-ன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து நிலஅளவை பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை என்னவென்றால்,


1. கட்டணம் செலுத்தி இயன்றவரை 30லிருந்து 90 நாட்களுக்குள் நில அளவை/ மறுநில அளவை செய்ய வேண்டுமென்றும்,


2. நிலஅளவை/ மறுநில அளவை பணிகளை மேற்கொள்வதை புகைப்படம்/ காணொளி (Video) எடுத்துக் கொள்வதற்கான செலவினை தொடர்புடைய மனுதாரர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், புகைப்படம் அல்லது காணொளி தொடர்பான பதிவுகளை உரிய கட்டணத்தினை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வழங்க வேண்டும்.


3. வருவாய் துறை தொடர்பான பணிகளை ஒழுங்குபடுத்த வருவாய்த்துறையின் ஒவ்வொரு அலுவலர் மீதும் தொடர் கண்காணிப்பு செலுத்தப்பட வேண்டும். அவர்களும் குறிப்பாக நிலஅளவர்களும் கையூட்டு கோருவதை தடுப்பதற்காக இலஞ்ச ஒழிப்பு துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


4. நிலஅளவை பணி முடிவுற்று, பட்டா வழங்கக் கோரும் நிகழ்வுகளில் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை மட்டுமின்றி, இந்நீதிமன்றம் வழக்கு எண் W.P.MD.No.7746/2020ல் வழங்கிய ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.


Inspector of Surveyor - நில அளவை ஆய்வாளர்

Deputy Inspector of Surveyor – துணை நில அளவை ஆய்வாளர்

Head Surveyor – வட்டத் துணை ஆய்வாளர்

Deputy Surveyor/ Sub-Inspector Surveyor – சார் ஆய்வாளர் / வட்ட சார் ஆய்வாளர்

Firka Surveyor - குறுவட்ட நிலஅளவர்/ உள்வட்ட நிலஅளவர்

Senior Draftsman – முதுநிலை வரைவாளர்

Land Record Draftsman – நில ஆவண வரைவாளர்

Town Sub-Inspector - நகர் சார் ஆய்வாளர்


#patta #petition #fmb #fieldmeasurementbook #tamilnadu #survivor #survey #resurvey #land #aregister #தமிழ்நாடு

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்

 *இணையத்தைப் பயன்படுத்தும் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் என்ன*


இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒரு பங்களிப்பாக இருப்பதால் 


ஆண்களுக்கு பெண் குறைந்தவள் இல்லை என்று காட்டும் வகையில் 


பெண்கள் அவர்களுடைய தனித்திறமையை காட்டி முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.


இருந்தாலும் பெண்கள் ஒதுக்கப்பட்டாலும் பெண்கள் இணையதளத்தில் மிரட்டப்படுகிறார்கள் 


இனி அப்படி பயந்து வாழ தேவையில்லை இந்த சட்டங்கள் நிறைய இருக்கிறது 


அதை பற்றி தான் தொடர்ந்து தெரிந்து கொள்ளப்போகிறோம்.


இன்டர்நெட் மூலம் பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படக்கூடிய குற்றங்கள் பெருகிவருகிறது 


அந்த குற்றங்களுக்கு எதிராக சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என்னவென்று தெரிந்துகொள்வோம்.


பெண்களுக்கு எதிரான இணையதள குற்றம் மற்றும் தண்டனைச் சட்டம் என்ன?


இணையதள குற்றங்களுக்கு IT சட்டம் என்ன தண்டனையை வழங்குகிறது?


*IT Act சட்டம் எங்கெல்லாம் செல்லுபடியாகும்*


IT சட்டம் சட்டத்தின் அடிபடையில் பெண்கள் மட்டும் தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா?

பெண்களுக்கு எதிரான இணையதள குற்றம் மற்றும் தண்டனைச் சட்டம் என்ன?

பெண்களே உங்களுடைய முக நூல் இன்பாக்ஸில் Facebook ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, whatsapp பெண் சமூக வலைதளங்களில் அனுப்பினாலும், ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, தயங்காமல் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

இந்த மாதிரியான சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள குற்றங்களுக்கு IT சட்டம் சட்டமே தண்டனை வழங்குகிறது 

இந்த IT சட்டம் என்பதற்கான முழு அர்த்த தகவல் தொழில்நுட்ப சட்டம் என்பதாகும்.

*இணையதள குற்றங்களுக்கு IT சட்டம் என்ன தண்டனையை வழங்குகிறது*

Fake Id மூலமாக உங்களை இணையதளத்தில் ஒருவர் ஏமாற்றி இருக்கிறார் என்றால் அதற்கு IT Act பிரிவு 66A மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.

ஃபேக் மெசேஜ், பேக் அக்கவுண்ட்,மூலமாக உங்களுக்கு தவறான தகவல்களை அனுப்பி இருந்தாலோ, தவறாக உங்களிடம் நடந்து கொண்டாலோ, தவறான பரிவர்த்தனையை மேற்கொண்டாலோ, இந்த சட்டத்தின் படி தண்டனை வழங்கப்படும். 

இந்த குற்றத்தை செய்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உங்களைப்பற்றி தரங்குறைவாக முகநூலிலோ அல்லது இணையதளங்களிலோ போட்டிருந்தால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 509 மூலமாக நடவடிக்கை எடுக்கலாம். 

இந்த குற்றத்தை செய்த நபருக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த மாதிரியான இணையதள குற்றங்களுக்கு ஆதாரமாக அவர்கள் பதிவிட்ட அந்த இணையதள போஸ்டை ஸ்க்ரீன் ஷாட் (ஸ்கிரீன் ஷாட்) செய்து வைத்துக்கொள்ளுங்கள் 

உங்களது புகார் மனுவோடு இந்த ஆதாரங்களை இணைத்து புகாரை கொடுக்கும் போது காவல்துறை அதிகாரி விரைந்து எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

தவறான எண்ணத்தோடு உணர்வுபூர்வமான ஆபாசமாக தொல்லை கொடுக்கும் வகையில் இணையதளத்தில் பதிவுகள் பதிவிட்டிருந்தால் இந்த குற்றத்தை செய்த நபருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்களுடைய புகைப்படங்களை இன்னொருவர் ஷேர் (பங்கு) செய்து தரக்குறைவாக விமர்சித்து இருந்தாலோ, ஆபாசமான வெப் சைட்களில் இணையதளம் உங்கள் புகைப்படங்களை போட்டிருந்தாலோ, IPC பிரிவு 499 படி ஒரு வருடம் வரை சிறைத் தண்டனை குற்றவாளிக்கு கிடைக்கும்.

*IT Act சட்டம் எங்கெல்லாம் செல்லுபடியாகும்*

இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லுபடியாகும். 

மேலும் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இந்த குற்றத்தை புரிந்தால் அவர்களுக்கும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 188 படி (crpc பிரிவு 188) மேற்சொன்ன சட்டப்பிரிவுகளில் உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம்.

IT சட்டம் சட்டத்தின் அடிபடையில் பெண்கள் மட்டும் தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா?

இல்லை இந்த சட்டம் ஆண்,பெண் இருபாலருக்கும் சமமான சட்டமாகும். இரு தரப்பினரும் இந்த சட்டத்தின் அடிபடையில் புகார் அளிக்கலாம்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

மரம் வளர்ப்பின் நன்மைகள்

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? 

ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும். 

பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒரு மரம் தனி நிழல் மூலம் தருகின்றது. 

சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன.

பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய்

காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய்

மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய்

ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய்

நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய்

உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய்

பூக்கள் முதலியன - 1.25 இலட்சம்

இது சற்றுப் பழைய கணக்கீடு. 

தற்போதைய நிலவரப்படி இது பதின் மடங்கு அதிகரித்திருக்கலாம். 

ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாத மக்களால் இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் மொட்டையடிக்கப்படுகின்றன என ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.


 *_மரம் தாங்க சாமி_* 


 *மரம் நடுவோம்* 

 *மழை பெறுவோம்* 

 *மண் வளம் பெறுவோம்* 


 **மரம் நடுவோம்* 

 **உடல் நலம் பெறுவோம்* 

 *மனம் வலிமை பெறுவோம்*** 

இயற்கையுடன் இணைந்து வாழ்வதே சொர்க்க வாழ்க்கை

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் https://kutumbapp.page.link/Hx9LLKQKU8xGGhHt8

எனது நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன...

முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்!** 

"எனது நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன... 

அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது!"

என் எதிரே பரிதாபமே உருவெடுத்து வந்தது போல ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தார். 

வழக்கு தொடுத்தவரும், அவரே!

ஐயா, "எங்களுக்கு ஒரே மகள்; என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது; நான் நாலைந்து வீட்டில் வீட்டு வேலைசெய்து அதில் வரும் சம்பாத்யத்தில் தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்; வருகிறேன்!

மகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன்; பலரது கால்களில் விழுந்து நல்ல பள்ளியில் படிக்க வைத்தேன்; 

வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால், அதை சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதை பார்த்து மகிழ்வேன்! 

அதே போல யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன். 

அவள் இப்போது சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்; இனி எங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும்; அவள் எங்களை பார்த்துக் கொள்வாள் எனறு நினைத்தபோது... 

திடீரென ஒருநாள் அவள் காணாமல் போய்விட்டாள்; அவளை அவளது விருப்பமின்றி யாரோ மயக்கும் வார்த்தை கூறி கடத்திப் போயிருப்பதாக சந்தேகப்படுகிறேன்!

ஆகவே எப்படியாவது என் மகளை கண்டுபிடித்து சேர்த்துவைக்க வேண்டும்" என்ற கேட்டிருந்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி...

அவரது மகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மிக அலட்சியமாக நின்றிருந்த அந்த இளம்பெண், "யாரும் என்னைக் கடத்தவில்லை; நான் மேஜரான பெண்; எனக்குப் பிடித்தவருடன் வாழ்வதற்காக நானே தான் விரும்பிச் சென்றேன்!" என்றாள்.

நல்ல ஆங்கிலத்தில் பேசிய அந்த பெண்ணிடம் சம்பாதிக்கும் தோரணையும் இருந்தது.

சரிம்மா, அதற்காக உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கி விட்ட பெற்றோரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அம்போ...ன்னு விட்டுட்டு போய்ட்டியே... இது என்ன நியாயம் என்று கேட்டேன்!

அந்த இளம் பெண்ணிடம் இருந்து பதில் ஏதுமில்லை;

இதற்கு மேல் சட்டத்திலும் இடமில்லை!

ஆனால் என் மனம் கேட்கவில்லை!

இது சினிமாவில் வரும் நீதிமன்றம் அல்ல; 

நிஜமான நீதிமன்றம்!

எனவே உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு;

எல்லாமே எந்திரத்தனமாக நடந்துவிடாது!

ஏதாவது ஒரு திருப்பம் நடக்கும் என்று நினைத்து....

‛சரிம்மா.. உன்னை ஒன்றும் சொல்லல... 

உன் கூட உன் அம்மா கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்கிறார்;

கொஞ்ச நேரம் பேசிவிட்டு வாருங்கள்' என்றேன்.

இருவரும் பேசும்போது அந்த தாயின் பாசம் மகளின் அடிமனதை நிச்சயம் தொடும்; பழசை நினைத்துப் பார்ப்பாள்; கொஞ்சமாவது பாசத்தோடு ஏதாவது செய்ய முற்படுவாள் என்பது என் எண்ணம்!

ஆனால் அவர்கள் பேசி முடித்து வந்தபோது நான் நினைத்தது போல எதுவுமே நடக்கவில்லை!

"ஐயா உங்களுக்கு எல்லாம் நிறைய சிரமம் கொடுத்துட்டேன்; என் மகள், அவளது விருப்பப்படி விரும்பினவங்க கூடவே இருக்கட்டும்; அவ சந்தோஷமா இருந்தா சரி! என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டு...

ஒரே ஒரு வேண்டுகோள் தான்யா!

இவ மேலே இவங்க அப்பனுக்கு கொள்ளை உசிரு, மகளைப் பார்ப்பற்காக வந்திருக்காரு, அந்த மனுஷன்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போகச் சொல்லுங்கய்யா' என்றார்.

‛எங்கேம்மா உன் வீட்டுக்காரர்' என்று கேட்டேன்.

அந்தம்மா கை காட்டிய இடத்தில் ஒருவர் சுவரோடு சுவராக சாத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

அவருக்கு கைகால் வராது என்பதால் துாக்கிக் கொண்டுவந்து சுவற்றில் சாத்தி வைத்துள்ளனர். 

கோர்ட்டில் நடப்பதை எல்லாம் பார்த்து... அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்தது.

அந்த ‛அன்பு' மகளை நோக்கி என்ன செய்யப்போகிறாய் என்பது போல பார்த்தேன்!

அந்த பெண்ணோ இதை எல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல்,‛ நான் கிளம்பலாமா?' என்று கேட்டுவிட்டு வெளியே காருடன் காத்திருந்த காதலன் அல்லது கணவனுடன் சிட்டாக பறந்து சென்றுவிட்டார்.

‛சரிங்கய்யா, நாங்க புறப்படுறோம்' என்ற அந்த பெண்ணின் தாயாரிடம் ‛ஊருக்கு எப்படி போவீங்க' என்று கேட்டபோது... ‛

சொந்த ஊருக்கு போக எப்படியும் நாற்பது ரூபாய் தேவைப்படும்; பஸ்ஸ்டாண்ட் போய் பிச்சை எடுப்பேங்கய்யா; கூடுதலா கிடைச்சா இரண்டு பேரும் சாப்பிடுவோம்யா; அப்புறம் ஊருக்கு போய்ட்டா...

வீட்டு வேலை செய்யற இடத்துல உதவி கிடைச்சுடும்; பிழைச்சுக்கவோம், ஐயா' என்றார்.

நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேருக்கும் துாக்கிவாரிப்போட்டது!

‛இந்தாம்மா, நீ பிச்சை எடுக்க வேணாம்; என்னோட அன்பளிப்பா ஏத்துக்குங்க' என்று சொல்லி பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்!

நான் கொடுத்ததைப் பார்த்த நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என்று ஆளாளுக்கு கொடுத்ததில் நாற்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது.

அதை அந்த அம்மாவிடம் கொடுத்து... உங்கள் கவலைக்கு இது மருந்தல்ல; ஊருக்கு போவதற்கான சிறு தீர்வு தான்! என்று சொல்லிக்கொடுத்தேன்.

*பெற்றவர்களைப் புரிந்து கொள்ளாத இப்படிப்பட்ட பிள்ளைகளும் இருக்கிறார்களே... என்று அன்று முழுவதும் மனம் வேதனைப்பட்டது.*

"பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம்! என்பதை உணருங்கள்" என்ற வேண்டுகோளுடன் 

முன்னாள் நீதிபதியான சா.நாகமுத்து தனது உருக்கமான பேச்சை முடித்தார்.

படித்ததும் மனம் வெடித்தது🤔

நன்றி

உறவுகளில் வலி

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்... https://kutumbapp.page.link/thBAkxuNd9tFtFY37

வாழ்க்கையில் என்றும் சந்தோஷமாக இருக்க.


✅வாழ்க்கையில் என்றும் சந்தோஷமாக இருக்க... 

இந்த 40 பழக்கங்களை கடைபிடியுங்கள்,


1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.


2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.


3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.


4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.


5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.


6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.


7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம்  கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.


8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.


9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!


10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.


11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.


12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.


13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,


14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.


15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.


16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.


17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர்  இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.


18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.


19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,


20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.


21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.


22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன்  நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.


24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.


25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.


26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை  தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை  கைவிடாதீர்கள்.


27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.


28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.


29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக  அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.


30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.


31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.


33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.


34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.


35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.


36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.


37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.


38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள்.


39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!


40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம்.. https://kutumbapp.page.link/D3KDBdLeFm7sKC5r7

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...