பயன் அறிந்து பொருட்களை தேர்வு செய்ய வேண்டும்.
நுகர்வோர் விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
கூடலூர் அருகே ஓவேலி ஆரோட்டுப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் த சில்ரன் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு
பள்ளி தலைமை ஆசிரியர் நாகலிங்கம் தலைமை தாங்கினார்.
குடிமக்கள் நுகர்வோர் மன்ற
பொறுப்பு ஆசிரியர் ஜெனிவானன், ஆசிரியர்கள் சாஜிஸ், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் மாணவ சமுதாயத்தினர் விழிப்புணர்வு பெற குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுகர்வோர்கள் தற்போது ஒரு தேவைக்கு மாறுபட்ட வெவ்வேறு பொருட்களுக்கு செலவினங்களை அதிகம் செய்யும் சூழலுக்கு செல்கின்றனர். அதனால் வருவாய்க்கு மிஞ்சிய செலவினங்களை உருவாக்குகின்றன. இணைய வழி வணிகத்தில் தேவையற்ற பொருட்களையும் வாங்கும் சூழல் ஏற்படுகிறது. பொருட்கள் தேவை என்ன என்பதை உணர்ந்து பொருட்களின் தரம், பயன்பாடு, உழைக்கும் கால அளவு பயன்படுத்தும் விதங்கள், உணவு பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள சேர்மங்கள், அதில் கிடைக்கும் ஊட்ட சத்துக்கள் குறித்து அறிந்து பயன்படுத்த வேண்டும். தற்போது ஊட்ட சத்து பானங்கள் என விற்பனை செய்யப்படுவதில் பல்வேறு உப்பு தன்மை மற்றும் கார அமிலதன்மை, கொழுப்பு நிறைந்தவையாக உள்ளன. இதனால் உடலுக்கு தேவையான ஊட்டசத்துகளை விட தேவையற்றவை உடலில் தேங்கி நோய்களை உருவாக்குகிறது. இவற்றை தவிர்த்து உடலுக்கு ஊட்டம் அளிக்கும் சிறுதானிய உணவுகள், கீரைகள் எடுத்து கொள்ள வேண்டும். விளம்பரங்களை நம்புவதை தவிர்த்து பயன் அறிந்து பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். மாணவ சமுதாயத்தினர் ஒருமுறை பயன் படுத்தும். பேனா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்
ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது நாம் பயன்படுத்தும் பொருட்களின் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும். மிட்டாய், ஊறுகாய், உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். தங்களின் விழாக்களில் மரங்கள் நடுவது, கழிவுகளை தேங்காமல் பார்த்து கொள்வது உள்ளிட்ட சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளை மாணவர்கள் பழக்க படுத்தி கொள்ள வேண்டும். என்றார்.
ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.