நில அளவை_கற்கள்
நில அளவை_கற்கள்
ஸ்கேன் மையங்களில் முறைகேடு
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் பெருகி வரும் ஸ்கேன் மையங்களில் முறைகேடுஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ துறையில் அரசுமருத்துவமனைகள் தான் முன்னனியில் சிசிச்சை அளித்து கொண்டிருந்தது.
ஆனால் போதியமருத்துவர்கள் இல்லாத காரணத்தாலும், மேற்படிப்பு படித்த மருத்துவர்கள், அறுவை சிசிச்சைநிபுனர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் தற்போது பல தனியார் மருத்துவமனைகள்அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார்நிறுவணங்கள் ஸ்கேன் மையங்கள் அமைத்து உள்ளனர்.
ஸ்கேன் மையங்கள் அமைக்கரேடியோதெரபி பட்டயம் இரண்டாண்டு படிப்பு படித்தவர்களுக்கு மட்டுமே உரிமம்வழங்கப்படுகின்றது.
ஆனால் இந்த படிப்பு படித்தவர்கள் தான் இதுபோன்ற ஸ்கேன்மையங்களில் பணி புரிய வேண்டும்.
அப்போது தான் ஸ்கேன் அறிக்கை சரியாக தயாரிக்கமுடியும்.
ஆனால் பல ஸ்கேன் சென்டர்களில் உரிய கல்வி தகுதி இல்லாதவர்களும்பணியில் உள்ளனர். அரசு மருத்துவமனைகள் மூலம்எடுக்கப்படும் ஸ்கேன்களுக்கு அறிக்கை தரப்படுவதில்லை.
அரசு மருத்துவமனைகளிலும்,ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எடுக்கப்படும் ஸ்கேன்கள் பெயரளவிற்கேஎடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிட தக்கது.
அரசு மருத்துவ மனைகள் சுகாதாரநிலையங்களில் கூட ஸ்கேன் எடுக்க தனியார் மருத்துவமனைகளுக்கே பரிந்துரைசெய்யப்படுகின்றது.
கர்ப்பினி தாய்மார்களுக்கு கர்ப்பம் உறுதி செய்ய 3 மாதத்திலும், 6மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி விகிதம் கணக்கிடவும், குழந்தையின் நிலை குறித்து அறியகடைசியாக 9 மாதத்திலும் ஸ்கேன் எடுக்கப்படுவது வழக்கம்.
தற்போது தனியார்மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஸ்கேன் மையங்களில் மாதந்தோறும் ஸ்கேன் எடுக்ககட்டாயபடுத்தி அதன் மூலம் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
சில மருத்துவர்கள்மாதந்தோறும் ஸ்கேன் எடுக்க சொல்வதும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
அடிக்கடிஸ்கேன் எடுப்பதால் ஸ்கேன் கதிர்வீச்சில் குழந்தைக்கும் தாய்க்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுஅறிவியல் ஆய்வுகள் தரும் தகவல்கள் ஆகும்.
அரசு மருத்துவர்களுக்கு 6 மாதம், 2 மாதம்என ஸ்கேன் எடுக்க பயிற்சி அளிக்கப்பட்டாலும் பல அரசு மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்கதயக்கம் காட்டி, பயிற்சி பெற்ற மருத்துவர்களும் தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கே கர்ப்பினிதாய்மார்கள் மற்றும் வயதான பெண்களை கர்ப்பபை புற்றுநோய் குறித்த ஸ்கேனுக்குஅனுப்புவது பல ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஸ்கேன் மையங்களில் வயிற்றில் வளரும் குழந்தைகள் ஆணா, பெண்ணா என ஆய்வுசெய்து தகவல் தெரிவிக்க கூடாது என அரசு மூலம் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்குஒருமுறை ஸ்கேன் சென்டர் உரிமம் புதுபிக்கும்போது உறுதிமொழி ஆவணம் கொடுத்தேஉரிமம் புதுபிக்கப்படுகின்றது.
ஆனால் சில தனியார் ஸ்கேன் சென்டர்களில் இதுபோன்று வயிற்றில் இருக்கும் குழந்தை குறித்த தகவல் அளிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது,
இதனால் முறைகேடுகள் அதிகரிப்பதால் ஏழை எளிய மக்கள் பெருமளவில்பாதிக்கப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் ஸ்கேன் சென்டர்கள் முறையானஅங்கீகாரம் பெற்றுள்ளதா எனவும், ஸ்கேன் மையங்களில் பணியாற்றுபவர்கள் தகுதிபெற்றிருக்கின்றார்களா என்பதை சம்பந்தபட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டியதுஅவசியம்.
அதுபோல அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு பல்வேறு பயிற்சிஅளிப்பது போல் ஸ்கேன் எடுக்கவும் போதிய பயிற்சி அளித்து அனைத்து அரசுமருத்துவமனைகள் மற்றும் சமுதாய சுகாதார நிலையங்களில் தாய்மார்களுக்கு ஸ்கேன்எடுத்து அதற்கான அறிக்கை அளிக்க வேண்டும். என கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.
உலக தாய்ப்பால் வாரவிழாவிழிப்புணர்வு
உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு ஶ்ரீ மதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் முக்கியத்துவம் மற்றும் கர்ப்பகால மனநல ஆலோசனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். ஆல்த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிர்வாக அலுவலர் திலகராணி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
ஶ்ரீமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மணிகண்டன் பேசும்போது குழந்தை பிறந்த உடன் துவங்கி 6 மாதம் கட்டாயம் தாய்ப்பால் மட்டும் அனைவரும் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அதுபோல் தாய்மார்களுக்கு மார்பக கட்டி, புற்றுநோய் உள்ளிட்டவை வராமல் தடுக்கிறது. பெண்கள் கூச்சபடாமல் தயங்காமல் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாய பொறுப்பாகும். 6 மாதத்திற்கு பிறகு கிழங்கு, பருப்பு, உள்ளிட்டவைகளோடு அரிசி சாப்பாடு சேர்த்து கொடுக்கலாம். என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
கர்ப்பிணிகள் உடலுக்கு தேவையான ஊட்டசத்தான உணவுகளாக பழங்கள், சிறுதானிய உணவு வகைகள், கீரைகள் உள்ளிட்டவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான கார்ப்போஹைட்ரேட், நார் சத்துக்கள், புரத சத்துக்கள், கிடைக்கும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். பொறித்த உணவுகளையும் அதிக ரசாயனம் சேர்த்த கேக், நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக உடல் உறுப்புக்கள் வளர அயோடின் நுண்ணூட்ட சத்து அவசியம் ஆகிறது. இதன்மூலம் கருவில் குழந்தை முறையாக, ஆரோக்கியமாக வளர்கிறது. குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க தாய் சேய் நலமுடன் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்றார்.
செவிலியர்கள்,
அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் குழந்தை வளர்ச்சி, பாலூட்டும் முறைகள், அரசு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஊட்டசத்து கூல் மற்றும் சிறுதானிய சத்து லட்டுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிர்வாக அலுவலர் திலகராணி, கள அலுவலர்கள் கிஷோர், ஜான்சி, அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கர்ப்பிணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005
RTI (Right to Information Act – தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005) முக்கியத்துவம் என்ன ? Right to Information Act, 2005 என்பது பொதுமக்கள் அ...