தமிழ் சிறப்புகள்

 *மனிதர்களை போன்று இனமும் நட்பும் கொண்டது - எழுத்துக்கள்.*


- ங் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து க. எ.கா: சிங்கம், தங்கை.


- ஞ் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து ச. எ.கா: மஞ்சள், அஞ்சாதே


- ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் எழுத்துகள் பெரும்பாலும் சேர்ந்தே வரும். எசகா: பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.


- நட்பு எழுத்துக்களை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.


- க், ச்,த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும். எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.


- தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்து - ர், ழ். எ.கா: சார்பு, வாழ்க்கை.


*தமிழ்த்தாத்தா உ.வே.சா.*


* உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி.


* ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்


* இயற்பெயர் - வேங்கடரத்தினம்


* ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.


* அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்


* உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா


* இவரின் தந்தை - வேங்கடசுப்பையா


* காலம் - 19.02.1855 முதல் 28.04.1942


* 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.


* உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.


* உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.


* இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.


* பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.


* ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.


* ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.


* குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.


* தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.


* ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா


* உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.


* உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்


* ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர்.


* குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது


* எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.


* உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:


- எட்டுத்தொகை - 8


- பத்துப்பாட்டு - 10


- சீவகசிந்தாமணி - 1


- சிலப்பதிகாரம் - 1


- மணிமேகலை - 1


- புராணங்கள் - 12


- உலா - 9


- கோவை - 6


- தூது - 6


- வெண்பா நூல்கள் - 13


- அந்தாதி - 3


- பரணி - 2


- மும்மணிக்கோவை - 2


- இரட்டைமணிமாலை - 2


- பிற பிரபந்தங்கள் - 4


*கடைசிவரை நம்பிக்கை*


* கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.


* சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.


* ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.


* அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு * ஏற்பட்டது.


* சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம் நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.


* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.


* காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.


* 1955 அக்டோபர் 25-இல் நல்ல சடகோ இறந்தாள்.


* மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.


* சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.


* சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.


* அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.


* நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்! இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!


*வாழ்த்து - திருவருட்பா*


கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்


எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்


கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்


கலந்தான் கருணை கலந்து


* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்


* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்


* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.


* பெற்றோர் - இராமையா - சின்னமையார்


* வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874


* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.


* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை


* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை


* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.


* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.


* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்


* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.


* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.


* நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.


* வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.


* சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.


* மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.


* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.


* கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.


அறிவுரைப் பகுதி: திருக்குறள் - அன்புடைமை


சொற்பொருள்:


ஆர்வலர் - அன்புடையவர்


புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்


என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.


வழக்கு - வாழ்க்கை நெறி


நண்பு - நட்பு


மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே


அன்புதான் அடிப்படை என்பது பொருள்)


அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்


என்பிலது - எலும்பில்லாதது(புழு)


பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்


ஆருயிர் - அருமையான உயிர்


ஈனும் - தரும்


ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை


உண்டாக்கும் என்று பொருள்)


வையகம் - உலகம்


என்ப - என்பார்கள்


புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்


எவன் செய்யும் - என்ன பயன்?


அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு


பிரித்து எழுதுக:


அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -


அன்பு உள்ளத்தில் இல்லாத


வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்


தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல


வற்றல்மரம் - வாடிய மரம்


- இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.


- இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.


- சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்


- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.


- அதிகாரங்கள்: 133


- அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.


- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.


- திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.


- திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.


எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.


ஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து


* பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்.


சொற்பொருள்:


* பண் - இசை


* வண்மை - கொடைத்தன்மை


* போற்றி - வாழத்துகிறேன்


* இருக்கை - ஆசனம்


* திரு.வி.க என்பதன் விரிவாக்கம்


- திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.


* திரு.வி.க வின் பெற்றோர்


- விருத்தாசலனார் - சின்னம்மையார்


* திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர்


- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.


* துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?


- தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)


திரு.வி.க வின் சிறப்பு:


* இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.


* திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?


- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்


- பெண்ணின் பெருமை


- தமிழ்த்தென்றல்


- உரிமை வேட்கை,


- முருகன் அல்லது அழகு முதலியன.


* திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?


- 26.08.1883 - 17.09.1953


* திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?


- பொதுமை வேட்டல்


* பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?


- போற்றி


* பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது?


- நாடு, மதம், இனம், மொழி, நிறம்


* தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது?


- நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.


நூல் பயன்:


- இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.


* பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது?


- நானூற்று முப்பது


* சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்?


- இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி


* இறைவன் உயிரில் வைத்தது எதனை?


- இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.


* இறைவனின் இருக்கை யாது?


- இறைவனின் இருக்கை உண்மை.


திருக்குறள்


சொற்பொருள்:


* புரை - குற்றம்


* பயக்கும் - தரும்


* சுடும் - வருத்தும்


* அன்ன - அவை போல்வன


* எய்யாமை - வருந்தாமல்


* அகம் - உள்ளம்


* அமையும் - உண்டாகும்.


ஆசிரியர் குறிப்பு:


* திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.


சிறப்பு பெயர்கள்:


- நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்


நூல் குறிப்பு:


- மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.


- இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.


- ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.


- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.


- இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


- திருவள்ளுவரின் பெற்றோர் யார்?


- தாயின் பெயர் - ஆதி


- தந்தையின் பெயர் - பகவன்


* திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார்?


- மயிலாப்பூர் (மதுரை என்றும் கூறுவர்)


* திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்?


- வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்.


* வள்ளுவன் என்றால் பொருள் யாது?


- அரசருக்கு அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்


* திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?


- வாசுகி


* வாசுகி யாருடைய மகள்?


- மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள்


* திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?


- நெசவுத் தொழில்


* திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன?


- நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகன், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் என்பன.


* திருவள்ளுவர் காலம் எது?


- கி.மு. 31


- திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப் பெறுகிறது.


* திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?


- மூன்று பிரிவுகளைக் கொண்டது.


1. அறத்துப்பால்


2. பொருட்பால்


3. இன்பத்துப்பால்


* இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?


- திரு+குறள். மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.


* திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது.


* திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?


- பத்து


* திருக்குறள் நூலின் பயன் யாது?


- திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும், உலகெல்லாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும், மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும், எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.


* உடலை நீர் தூய்மை செய்யும்: வாய்மை உள்ளத் தூய்மையை வெளிப்படுத்தும்.


* வாய்மை என்றால் என்ன?


- மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.


* திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?


- ஆயிரத்து முந்நூற்று முப்பது


* திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று வழங்கப் பெறுகிறது?


- உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இவ்வாறு வழங்கப் பெறுகிறது.


பிரித்து எழுதுக:


* யாதெனின் - யாது + எனின்


* பொய்யாதொழுகின் - பொய்யாது + ஒழுகின்


* சொற்றொடரில் சொற்களை அமைத்தல்:


* இயற்கை - குற்றாலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்கின்றன.


* பெண்மை - பாரதியார் பெண்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.


* வாய்மை - வாய்மையே வெல்லும் என்ற தொடர் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது.


* உள்ளம் - குழந்தையின் உள்ளண் கள்ளம் புகா இடமாகும்.

அரசின் உரிமைகள் என்னென்ன?

 கிராம நத்தம் நிலமானது அரசுக்கு சொந்தமானதா? பட்டா வாங்கலாமா? அரசின் உரிமைகள் என்னென்ன?

2004 (2) MLJ 708 & 2012 (2) CTC315


பட்டா அல்லது பத்திரம் எது சொத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம்?

WP.எண்.16294/2012

SA.No.1715/1989 SA.No.2060/2001 SA.No.314/2008


பவர் ஏஜென்ட் இல்லாமல் பவர் பத்திரத்தை (Power of Attorney) ரத்து செய்ய சார் பதிவாளர் மறுக்க முடியுமா?

2016 2 CTC 438


அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் குடியிருந்து வருபவர்களுக்கு மின்சார இணைப்பை மறுக்க முடியுமா?

2014 (1) MLJ 261


சொத்தானது கிராம நத்தமாக மாற்றப்பட்டு விட்டால் அது அரசாங்கத்திற்கு சொந்தம் ஆகிவிடுமா...?

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புகள் சட்டம், 1905-பிரிவு 6

ஆக்கிரமிப்பாளர்கள்-கேள்விக்குரிய நிலம் கிராமநாதன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அரசிடம் ஒப்படைக்க முடியாது- தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் விதிகள், வழக்குச் சொத்துக்கள் தொடர்பாக எதிர்மனுதாரர்களின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது.

2007 (2) MLJ 1113


பயணிகளுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பஸ் டிக்கெட்-ஐ கேன்சல் செய்தால்...?

NATIONAL CONSUMER

DISPUTES REDRESSAL

COMMISSION, NEW DELHI

REVISION PETITION NO, 1092 OF 2020


கூடலூர் நுகர்வோர் மனிதவள 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

{மாநில அரசு அங்கீகாரம் பெற்றது}

நீலகிரி மாவட்டம் 

வாக்கு பதிவு முக்கிய அறிவிப்பு

 *பொது  மக்கள்  நலன்  கருதி  ஒரு  முக்கிய  அறிவிப்பு !*

நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால், உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி, 

வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ் *"சேலஞ்ச் ஓட்டு"* கேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள்.                      உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால், 

*"டெண்டர் ஓட்டு"* கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். ஒரு வாக்குச் சாவடியில் *14%* க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால்,

அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படும்.  

 வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்றிட இத்தகவலை அதிகபட்ச வாட்ஸ் அப் குழுக்களுக்கும் , நண்பர்களுக்கும் சமுதாய  நலன் கருதி இத்தகவலை மறவாமல் பகிர்ந்திடுங்கள்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

643233.

RTI Act, 2005 அரசாணைகள்

 தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (RTI Act, 2005)

இணையதளத்தில் அரசாணைகள்

2 : டபிள்யூ.பி. (MD) 2016/7.4.2016 இன் எண். 4324

* House Feed நிறுவனமும் ஒரு பொது அதிகார அமைப்பாகும். அதனால் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் தமது நிறுவனத்தில் ஒரு பொதுத் தகவல் அதிகாரியையும் முதல் மேல் முறையீட்டு அதிகாரியையும் . STATE INFORMATION COMMISSION, PUNJAB Date of decision: 20.05.2015

* கூட்டுறவுச் சங்கங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் தகவல் அளிப்பதற்குக் கடமைப்பட்டதாகும். Punjab-Haryana High Court Civil Writ Petition No.19224

* கூட்டுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் தகவல் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் அல்லவென்று பதிலளித்ததையடுத்து எழுந்த வழக்கில் கூட்டுறவுத் துறையைச் சேர்ந்தவர்கள் மத்திய தகவல் ஆணையத்தில் தோன்றாததால் அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கங் கேட்டு பிறப்பித்த உத்தரவு. File No. CIC/SH/C/2014/000550

ஐம்புலம் சூரணம் செய்முறை விளக்கம்

 🪷 *புகை பிடிப்பவர்கள் மற்றும் அடிக்கடி சளி பிடிக்கும் பாதிப்பு உள்ளவர்கள் நுரையிரல் சுத்தம் செய்யும் ஐம்புலம் சூரணம் செய்முறை விளக்கம்*🪷

⚜️ *தேவையான மூலப்பொருட்கள்*⚜️

1. சித்தரத்தை - 50g

2. தாளிசபத்திரி - 50g

3. அதிமதுரம் - 25g

4. சுக்கு - 50g

5. சாதிக்கோஷ்டம் - 25g

6. ஆடாதோடை - 10g

⚜️ *செய்முறை விளக்கம்*⚜️

✍🏿 மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்

✍🏿 தனி தனியாக நன்கு வருத்து கொள்ளுங்கள்

✍🏿 தயார் செய்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்

✍🏿 அரைத்த மூலபொருட்கள் அனைத்தையும் சலித்து தயார் செய்து காற்று படாமல் வைத்து கொள்ளுங்கள்

⚜️ *சாப்பிடும் முறை*⚜️

🔅 200மி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு தயார் செய்த பொடியை கலந்து நன்கு கொதிக்க வைத்து 2 நிமிடத்தில் அனைத்து விடவும்

🔅 சூடான நிலையில் டீ போல குடிக்க வேண்டும் சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம்

🔅 இத்தனை தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலை எடுக்கலாம் 

🔅 இதை உணவுக்கு பின் அல்லது உணவுக்கு முன் என எப்படி வேண்டும் என்றாலும் எடுக்கலாம் அது உங்கள் உடல் நிலை சர்க்கரை

👉 *இதனால் என்ன மருத்துவ நன்மை கிடைக்கும்???*

இந்த சூரணம் முழுக்க முழுக்க நுரையிரல் சுத்தம் செய்யும் ஒரு சக்தி வாய்ந்த மூலிகை

இதனால் சளி, ஆஸ்துமா, இருமல், மூக்கடைப்பு, நுரையிரல் அலர்ஜி, சுவாச குறைபாடு, மூச்சு வாங்குதல், சுவாச முறைபாடு என அனைத்துக்கும் ஒரு வர பிரசாதம்

இதனை தேவை படும் நாள் வரை எடுத்தால் போதும்

புகை பிடுப்பவர்கள் வாரம் 2 முறை இதை எடுத்து கொண்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்

🔅🔅🙏🏼🙏🏼

கூடலூர் நுகர்வோர் மனிதவள  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நீலகிரி மாவட்டம். 

India's major research institutions: -

 List of names and places of India's major research institutions: - 


 ◆ Indian Agricultural Research Institute - New Delhi 

 ◆ Central Sugarcane Research Institute - Coimbatore 

 ◆ Central Tobacco Research Institute - Rajamundri 

 ◆ Indian Sugar Technology Institute - Kanpur 

 ◆ National Milk Research Institute - Colonel 

 ◆ Central Skin Research Institute - Chennai 

 ◆ Central Drug Research Institute - Lucknow 

 ◆ Indian Meteorological Institute - New Delhi 

 ◆ Raman Research Institute - Bangalore 

 ◆ National Metallurology Laboratory - Jamshedpur 


 ◆ Textile Industry Research Institute - Ahmedabad 

 ◆ National Institute of Immunology - New Delhi 

 ◆ Baba Nuclear Research Center - Trambe 

 ◆ Indian Petroleum Company - Dehradun 

 ◆ All India Medical Sciences Institute - New Delhi 

 ◆ Tata Institute of Fundmental Research - Mumbai 

 ◆ Indian Security Press - Nashik Road, Pune 

 ◆ Central Food Technology Research Institute - Mysore 

 ◆ Central Building Research Institute - Roori 

 ◆ Central Glass and Ceramic Research Institute - Kolkata 


 ◆ Central Electricity Research Institute - Karaikudi 

 ◆ Central Mechanical Engineering Research Institute - Durgapur 

 ◆ Central Salt and Marine Chemical Research Institute - Bhavnagar 


 Indian National Highway Authority - New Delhi 

 ◆ National Earth Physics Research Institute - Hyderabad 

 ◆ Central Coconut Research Institute - Kasargode 

 ◆ Central Potato Research Institute - Shimla 

 ◆ National Institute of Vision Disability - Dehradun 

 ◆ Central Forest Research Institute - Dehradun 

 ◆ Indian Democratic Research Institute - Ranchi 


 ◆ Central Fuel Research Institute - Jalgoda 

 ◆ Central Mining Research Center - Dhanbad 

 ◆ Survey of India - Dehradun 

 ◆ Indian Meteorological Department - Pune 

 ◆ Institute of Bacterial Technology - Chandigarh 

 ◆ Plasma Research Institute - Gandhinagar 

 ◆ Indian Earth Magnetic Institute - Mumbai 

 ◆ Indian astronomy company - Bangalore 

 ◆ National Maritime Company - Panaji 

 ◆ Diesel Locomotive Works - Varanasi 

 ◆ Central Road Research Institute - New Delhi 


 ◆ Central Tractor Company - New Delhi 

 ◆ Central Botanical Research Institute - Lucknow 

 ◆ Indian Chemical Biology Institute - Kolkata 

 ◆ High latitude Research Laboratory - Gulmark 

 ◆ Central Environmental Engineering Research Institute - Nagpur 

 ◆ Industrial Toxic Research - Lucknow 

 ◆ Cellular and Molecular Biology Center - Hyderabad 

 ◆ Indian Archeology Department - Kolkata 

 ◆ Central Suite Technology Research Institute - Kolkata 


 ◆ DNA Center Fingerprint and Diagnosis - Hyderabad 

 ◆ National Brain Research Center - Gurgaon 

 ◆ Bharat Electronic Limited - Jalahali 

 ◆ Central Paddy Research Institute - Cuttack 

 ◆ Indian Legal Research Institute - Kanpur

வேட்புமனு தாக்கல் செய்ய

 *வேட்புமனு தாக்கல் செய்யக்கூடிய தொகுதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை தொடர்பான விதிகள்* 


ஆகஸ்ட், 1996க்கு முன்பு, ஒரு வேட்பாளருக்கு அவர் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தத் தடையும் இல்லை. ஆகஸ்ட், 1996 இல், 1951-சட்டத்தின் 33-வது பிரிவில் உட்பிரிவு (7) சேர்க்கப்பட்டது மற்றும் இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம், கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பொதுத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டாலும், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்தும் ஒரு வேட்பாளரை இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மேல் பரிந்துரைக்க முடியாது. அதேபோல், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு மேல் அவரை நியமிக்க முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 33(7) வழங்குகிறது:


ஒரு நபர் தேர்தலுக்கு வேட்பாளராக நியமிக்கப்படக்கூடாது,-


(a) ​​மக்கள் சபைக்கு (அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும்) பொதுத் தேர்தலின் போது, ​​இரண்டுக்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து;


(b) ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவைக்கு (அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும்) பொதுத் தேர்தல் நடந்தால், அந்த மாநிலத்தில் உள்ள இரண்டுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து;


(c) மாநிலத்தின் இரண்டுக்கும் மேற்பட்ட கவுன்சில் தொகுதிகளில் இருந்து, அத்தகைய கவுன்சிலைக் கொண்ட ஒரு மாநிலத்தின் சட்டமன்றக் கவுன்சிலுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் பட்சத்தில்;


(d) ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக, மாநில கவுன்சிலுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல்களில், அத்தகைய இரண்டு இடங்களுக்கு மேல் நிரப்புவதற்கு;


(e) ஒரே நேரத்தில் நடத்தப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து, இதுபோன்ற இரண்டுக்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து, மக்கள் சபைக்கு இடைத்தேர்தல்கள் நடந்தால்;


(f) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தல்கள் நடந்தால், அதுபோன்ற இரண்டுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் நடைபெறும்;


(g) ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக மாநிலங்களவைக்கு நடத்தப்படும் இடைத்தேர்தல்களில், அத்தகைய இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கு ஒரே நேரத்தில் நடத்தப்படும்;


(h) ஒரே நேரத்தில் நடைபெறும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கவுன்சில் தொகுதிகளில் இருந்து, அத்தகைய கவுன்சில் கொண்ட மாநிலத்தின் சட்ட மேலவைக்கு இடைத்தேர்தல்கள் நடந்தால், அத்தகைய இரண்டுக்கும் மேற்பட்ட கவுன்சில் தொகுதிகளில் இருந்து.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி


 *சிவில் வழக்கில் வழக்கு தரப்பினருக்காக முகவராக ஆஜராகி வழக்கு விஜயாஜியங்களை கவனித்துக் கொள்வதற்கும், மனு செய்வதற்கும், மனுவை திரும்ப பெறுவதற்கும், சாட்சியங்களை விசாரணைக் உட்படுத்துவதற்கும், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வதற்கும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை பெறுவதற்கும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு கோப்புகளை பார்வையிடுவதற்கும் முகவராக நியமிப்பதற்கான மனு மாடல் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்*

 *கனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்*

பழனி

முதலேற்பு வழக்கு எண் .316/2006

நிறைவேற்றுகை மனு எண்.30/2019


டி.எம்.எஸ். நீலாவதி

மனுதார் / வாதி/தீர்ப்பாணை பெற்றவர்


           / எதிர் /

1.திரு.சுப்பைய்யா,

2. திரு.சொக்கைய்யா பிள்ளை,

3. திரு.பழனிச்சாமி,

எதிர்மனுதார்கள்/எதிர்வாதிகள்/தீர்ப்புக் கடனாளிகள்


உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் - கட்டளை 3 விதி - 2 இன் படி Power Agent நியமனம் செய்து அனுமதி வழங்கக் கோரும் மனு


1 . மனுதாராகிய நான் இந் நிர் வழக்கில் மனுதாரரும் / வாதியும் / தீர்ப்பாணை பெற்றவரும் / ஒரு முக்கிய சாட்சியும் ஆவேன். 


2. மனுதாராகிய எனக்கு வயது .......... ஆன மூத்த குடிமக்களில் ஒருவர் ஆவேன். எனது வயதான உடல் தளர்ச்சி சூழ்நிலை காரணமாக என்னால் இவ்வழக்கில் மாண்பமை நீதி மன்றத்திற்கு வருகை தர இயலாமலும், வழக்கு விஜயாஜ்ஜியங்களை கவனிக்க முடியாமலும் இருந்து வருகிறேன். மேலும் எனது வழக்கறிஞர் திரு. புலமை வேங்கடாசலம், எம்.பி.எல்., அவர்களுக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருதாலும் இந்நிர் வழக்கினை தொடர்ந்து வழிநடத்த இயலாமல் இருந்து வருகிறேன். இந்த தெய்வாதீனமான சூழ்நிலைகளால் மனுதாராகிய எனது தரப்பு கருத்துக்களை மாண்பமை நீதிமன்றத்தில் பதிவிட இயலாமல் இருந்து வருகிறேன். 


3. மேலும் இது போன்ற சூழ்நிலைகளில் வழக்கு விஜயாஜ்ஜியங்களை மேற்கொள்ளPower Agent ஆக அக்கறையுள்ள ஒருவரை நியமனம் செய்து கொள்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .CR.P.(PD) No.490/2018 And C.M.P.No.2558/2018 – தீர்ப்புரை நாள் : 18.09.2020 என்ற வழக்கில் தீர்ப்புரைத்துள்ளது. இத்தீர்ப்புரையானது அரசியல் அமைப்புச் சட்டம் - 1950 இன் 14வது பிரிவு படி எனது இந் நிர் வழக்கிற்கும் பொருந்தும் என மனுதாராகிய என்னால் கருதப்படுகிறது.


4.. ஆதலால் இந் நிர் வழக்கில் வழக்கு விஜயாஜ்ஜியங்களை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு உதவியாக எனது மகன் பழனிவேல், த/பெ... ................. வயது .......... என்பவரை power Agent ஆக நியமித்து உத்தரவிட வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கிறேன்.

                  மனுதார்


தேதி :

இடம்: பழனி


இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில் .............. தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.


                      Party In Persion


💐💐💐💐💐💐

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

💐💐💐💐💐💐

உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 (25)

 உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 இன் 25 மற்றும் அதன் உட்பிரிவுகள் குறித்து சட்டம் தெளிவோம் 


IPC 25. (1) ஒரு தரப்பினரால் செய்யப்படும் மனுவின் பேரில் அது பற்றிய அறிவிப்பைத் தரப்பினர்களுக்கு அளித்த பிறகு மற்றும் அப்படி விரும்புவோரை அதுபற்றிக் கேட்டறிந்த பின்னர், நீதியை நிலைநாட்டுவதற்கு இப்பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிப்பது அவசியம் என்று தெளிவு பெற்றால், எந்தக் கட்டத்திலும் உச்ச நீதிமன்றம், ஒரு மாநிலத்திலுள்ள உயர் நீதிமன்றம் அல்லது வேறு உரிமை இயல் நீதிமன்றத் தில் உள்ள வழக்கு, மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றை மற்றொரு மாநிலத்திலுள்ள உயர் நீதிமன்றத்திற்கு அல்லது வேறு உரிமையியல் நீதிமன்றத் திற்கு மாற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடலாம்.


(2) இப்பிரிவின்கீழ் செய்யப்படும் மனு ஒவ்வொன்றும் உறுதிமொழிப் பத்திரம் இணைக்கப்பட்டு அவசரப் பட்டியலில் இடம் பெறத்தக்கதாக இருக்க வேண்டும்.


(3) அத்தகைய வழக்கு, மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை மாற்றி அளிக்கப் பெற்றுள்ள நீதிமன்றம், அத்தகைய மாற்றத்திற்கான உத்தரவில் சிறப்பாக நெறிப் படுத்தப்பட்டவற்றிற்கு ஆட்பட்டு, அதனை மறுவிசாரணை செய்யலாம் அல்லது அது மாற்றப்பட்ட நிலையில் இருந்த கட்டத்திலிருந்து அதனைத் தொடர்ந்து நடத்தலாம்.


(4) இப்பிரிவின் கீழ் செய்யப்பட்டுள்ள மனுவை, உச்சநீதி மன்றம் நிராகரிக்கும்போது, அந்த மனு அற்பமானது அல்லது வீண்தொல்லை தரக்கூடியது என்று கருதினால், அந்த மனுதாரர், எதிர்த்தரப்பினருக்கு இழப்பீடு தரவேண்டும். 


அதனை வழக்கின் தன்மைக்கு ஏற்பவும் தாம் தக்கதெனக் கருதுவதும் இரண்டாயிரம் ரூபாய்களுக்கு அதிகப்படாததுமாகிய ஒரு தொகையை இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிடலாம்.


(5) இப்பிரிவின்கீழ், மாற்றப்பட்ட முறையீடு, அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றில் அத்தகைய வழக்கு மேல் மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றுக்கு முதலேற்பு நிலையில் அனுசரிக்கப்பட்ட சட்டத்தையே தொடர்ந்து அனுசரிக்கப்பட வேண்டும்.


 Cpc கட்டளை 25. விதி (1) நிறைவேற்றுகைக்காக அந்தத் தாக்கீது ஒப்படைக்கப்பட்ட நபர், அது எப்பொழுது எவ்வாறு நிறை வேற்றுகை செய்யப்பட்டது என்பதற்கான மேற்குறிப்புச் செய்யவேண்டும். 


அதனைத் திருப்பித்தர வேண்டிய கெடு தாண்டியிருந்தால், காலதாமதத்துக்குரிய காரணத்தையும் அல்லது நிறைவேற்றுகை செய்யப்படாதிருப்பின் அதற்குரிய காரணத்தையும் அதில் மேற்குறிப்புச் செய்து, நீதிமன்றத் திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.


(2) அத்தகைய அலுவலரால் நிறைவேற்றுகை செய்யஇயலவில்லை என்று மேற்குறிப்புச் செய்யப்பட்டிரும் தால், அவருடைய இயலாமைபற்றி நீதிமன்றம்அவரை நேரில் விசாரிக்க விசாரணை செய்ய வேண்டும். அதன் முடிவைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


என்றென்றும் மக்கள் பணியில்

இரா. கணேசன்

அருப்புக்கோட்டை


💐💐💐💐💐💐💐

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம்

💐💐💐💐💐💐💐


CERTIFICATION MARKS IN INDIA


 ✅ CERTIFICATION MARKS IN INDIA 


🔶 Certification marks in India are used to assure consumers about the quality and standards of various goods and services. 


💢 AGMARK

✔️ Purpose: Guarantees the quality and purity of agricultural produce.

✔️ Issued by: The Directorate of Marketing & Inspection under the Ministry of Agriculture & Farmers Welfare, Government of India.


💢 ISI Mark

✔️ Purpose: Certification mark for industrial products, signifying conformity to Indian Standards.

✔️ Issued by: The Bureau of Indian Standards (BIS).


💢 FPO Mark

✔️ Purpose: Indicates that processed fruit products adhere to food safety standards.

✔️ Issued by: Ministry of Food Processing Industries.


💢  India Organic

✔️ Purpose: Certifies that a product meets the National Standards for Organic Production. 

✔️ Issued by: the National Programme for Organic Production (NPOP).


💢  Ecomark

✔️ Purpose: An eco-label issued for products that demonstrate reduced environmental impact. 

✔️ Issued by:  The Bureau of Indian Standards (BIS).


💢  Woolmark

✔️ Purpose: Assures the purity and quality of wool products.

✔️ Issued by: The Woolmark Company (a subsidiary of Australian Wool Innovation Limited).


💢  Hallmark 

✔️ Purpose: Certifies the purity of precious metals like gold and silver in jewelry.

✔️ Issued by: The Bureau of Indian Standards (BIS).

  

Gudalur Consumer Human Resources and Environment Protection Center - The Nilgiris 643233.




கர்ப்பிணிபெண்கள்* - 3

 *#கர்ப்பிணிபெண்கள்* - 3


போலிக் அமிலக் குறைபாடு

 

1. கை கால்கள் சில்லிட்டுப் போதல்.


2. கை கால்களில் சிறு உதறல் ஏற்படுதல்


3. குதிக்கால் வலி பிரதானமாக இருத்தல்.


4. தோல் வெளுப்பாக இருத்தல்.

5. ஞாபக மறதி அதிகமாக இருத்தல்


6. சதைப் பிடிப்பும், வாய்வுப் பிடிப்பும் அதிகமாக இருத்தல்


7. நரம்புத் தளர்ச்சி ஏற்படுதல்.

8. இரத்தச் சோகை அதிகரித்தல்


9. மதியம் சாப்பிட்ட பின், கொஞ்சமாவது தூங்கினால்தான் அடுத்த வேலையைச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்படுதல்.


கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மருந்து உட்கொண்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.


கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.


வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.


பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.


கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம்.


உடல் காரணங்களால் மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. 


கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. தேவைக்கேற்ப குடிக்கலாம். 


கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 643233.

ஐஸ் கிரீம்களில்

 ஐஸ் கிரீம்களில், "கிரீம்' அதிகமாக இருப்பதற்காகவும், நூடுல்ஸ்களில் நெகிழ்வுத் தன்மை இருப்பதற்காகவும், அதில், "சயனைடு' ஸ்டார்ச் மாவு கலக்கப்படுவதால், அதைச் சாப்பிடும் குழந்தைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தான், மரவள்ளிக் கிழங்கில் இருந்து, "ஸ்டார்ச்' மற்றும் ஜவ்வரிசி தயாரிக்கும் சேகோ தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. மரவள்ளிக் கிழங்கை அரைத்துத் தயாரிக்கப்படும், "ஸ்டார்ச்' எனப்படும், கிழங்கு மாவு, பேப்பர் கூழ், பசை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கில், தோல் நீக்கிய பின்பே மாவு தயாரிக்க வேண்டும். பெரும்பாலான ஆலைகள், தோலை நீக்காமலேயே, "ஸ்டார்ச்' தயாரிக்கின்றன.

வியாபாரிகள் பலர், தோல் கலந்த, "ஸ்டார்ச்'சை வாங்கி, குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலக்கின்றனர். "சயனைடு' என்பது கொடிய விஷம். 

இதன் வீரியத்தைக் குறைத்து, "ஸ்டார்ச்' மாவில் கலக்கின்றனர். 

அந்த உணவைச் சாப்பிடும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கின்றனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:"ஸ்டார்ச்'சை பேப்பர் கூழ், பசை தயாரிப்புக்காக விற்பனை செய்கிறோம் என, சேகோ ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

ஆனால், வெளி மார்க்கெட்டில் வியாபாரிகள் தோல் கலந்த, "ஸ்டார்ச்'சை கொள்முதல் செய்து, சில ஐஸ் கிரீம், நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். 

பால் மூலம், "கிரீம்' உற்பத்தி செய்ய செலவு அதிகமாகும். அதற்குப் பதிலாக, "ஸ்டார்ச்' மாவு கலப்பதால், குறைந்த செலவில், "கிரீம்' அதிகமாகக் கிடைக்கும். இதனால், சில தயாரிப்பாளர்கள், 

ஐஸ் கிரீமில், "ஸ்டார்ச்' கலக்கின்றனர்.

குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைத்த நூடுல்ஸ்களை விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். இந்த நூடுல்ஸ்களில் நெகிழ்வுத் தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட அளவில், "ஸ்டார்ச்' கலக்கப்படுகிறது.

சில்லி சிக்கன், மீன் வருவல் ஆகியவற்றிலும் மசாலா பிடிக்க வேண்டும், 

மொறுமொறு தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக,

குறிப்பிட்ட அளவில், "ஸ்டார்ச்' கலக்கின்றனர். "ஸ்டார்ச்' தயாரிப்புக்காக, தோலுடன் கூடிய மரவள்ளிக் கிழங்கை அரைத்து உலர வைக்கும்போது, தோலில் காணப்படும், "சயனைடு' விஷத்தின் வீரியம் குறைந்து விடும். எனினும், முழுமையாகக் குறையாமல் ஓரளவு மாவில் கலந்திருக்கும் .

"ஸ்டார்ச்' கலந்த நூடுல்ஸ், ஐஸ் கிரீம் சாப்பிடும் குழந்தைகள், குறுகிய காலத்தில் வயிற்று வலி, அல்சர் உட்பட பல்வேறு பாதிப்புக்கு ஆளாவர். நூடுல்ஸ் தயாரிக்கும் பெற்றோர், நூடுல்சை பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொதிக்க வைத்த நீரில், 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின், வெந்நீரை கொட்டி விட்டு, நூடுல்சை எடுத்து வழக்கம் போல தயாரிக்க வேண்டும். 

ஐஸ் கிரீமை பொருத்தவரை, நுகர்வோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.உணவுப் பொருட்களில் சட்டவிரோதமாக, "ஸ்டார்ச்' கலக்கப்படுவதால், சேகோ ஆலைகளில் தோல் நீக்கிய மரவள்ளிக் கிழங்கில் இருந்து, "ஸ்டார்ச்' தயாரிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

மீறி தயாரிக்கும் ஆலைகள் மீது, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அனுராதா கூறினார். - நமது சிறப்பு நிருபர் -

கிர்ணி பழத்தை யாரும் மிஸ் பண்ணாதீங்க

 இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கிர்ணிப்பழம்...!


கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அலவு அதிகமாக உள்ளதால் இதனை ஜூஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது.


உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழம் துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் கண்கள் பிரகாசிக்கும். 


ஒரு கப் கிர்ணி பழத்தில் உள்ள கலோரி 546, வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மூன்றும் இதில் அதிகமுண்டு.

 

கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும். கிர்ணி விதை பவுடரை தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

 

பசியின்மை, எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர் பாதைக் கோளாறு, அமிலத் தன்மை, அல்சர் ஆகிய அனைத்துக்கும் நல்லது. 


பசியின்மையை சரி செய்து, களைப்பை நீக்கி, வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும்.வேறு எந்தப் பழமும் இதைப் போல வேகமாக உடல் சூட்டைத் தணிப்பதில்லை.

 

உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

 

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி. முகம் டல்லடிக்கும், அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

 

கிர்ணிப் பழம் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோடின் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஊட்டச்சத்துகள் ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்க உதவியாக உள்ளன.

 

நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலை மிக விரைவாக பாதுகாத்து புகைப்பழக்கத்தினை நிறுத்தக் கூடிய அரிய குணம் கொண்ட பழமாகவும் இருக்கிறது கிர்ணி பழம்.


இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட கிர்ணி பழத்தை யாரும் மிஸ் பண்ணாதீங்க....

ஒரு உத்தரவாதி (பிணை தருபவர் விலகி கொள்ள முடியுமா

 *ஒரு உத்தரவாதி (பிணை தருபவர்) ஜாமீன் (SURETY)   கையெழுத்து போடுபவர்கள் தங்கள் பிணையை நீக்கி கொள்ள முடியுமா? 

தங்களின் உரிமைகள் என்ன?கடமைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.*            


இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) - 1872

இந்த சட்டத்தின் 8 ஆம் பகுதியில்   (Indemnity and Guaranty) இழப்பு, எதிர்காப்பு மற்றும் உத்தரவாதம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  


124 வது பிரிவு முதல் 147 வது பிரிவு வரையில்  SURETY பற்றி நாம் இந்த சட்டத்தில் விரிவாகக் காணலாம். 

SURETY கொடுப்பவரை உத்தரவாதம் கொடுப்பவர் என்பதால் உத்தரவாதி என்றும் தமிழில் கூறுகிறார்கள்.


SURETY LOAN என்றால்.


மற்ற லோன்கள் வங்கியில் வாங்கும்போது  கொடுப்பவர், வாங்குபவர் என்று இருவர் மட்டுமே இருப்பார்கள். அடமானக் கடன் என்றால், இவர்கள் இருவரைத் தவிர சொத்துக்கள் இருக்கும்.  


ஆனால், இந்த சூரிட்டி லோனில் கடன் கொடுத்தவர் (Creditor), கடனை பெற்றவர் (Principal Debtor) மற்றும் உத்தரவாதம் அளித்தவர் (SURETY)  என்று மூன்று நபர்கள் இருப்பார்கள். 


இவர்கள் மூன்று பேர்களில் பாதுகாப்பு இல்லாதவர் உத்தரவாதம் அளித்தவர்தான். 


ஆனால்  உத்திரவாதம் அளித்தவருக்கும் சட்டம் மூன்று வகையான உரிமைகளை அளித்திருக்கிறது.  அது என்ன என்று பார்ப்போம்.


1. கடன் பெற்றவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்பும் உரிமை.

வாங்கிய கடனை உரிய காலத்திற்குள் செலுத்தி அந்தக் கடனை உடனே தீர்க்க வேண்டும்! என்று கடன் வாங்கியவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்ப சூரிட்டி தந்தவருக்கு உரிமையுண்டு.


2. பற்று உரிமையை மாற்றிக் கொள்ளுதல்  கடன் வாங்கியவர் வங்கிக்கு கொடுக்க வேண்டிய தொகை முழுவதையும் வங்கியில் சூரிட்டி அளித்தவர் கட்டிவிட்டு, வங்கிக்கு இருந்த உரிமைகளை தனக்கு மாற்றிக் கொள்லலாம். 


இதனை ஆங்கிலத்தில் Subrogation (பற்று உரிமை மாற்று) என்று சொல்கிறார்கள்.


3. கடன் பெற்றவருக்குள்ள பத்திரங்கள்மீது உரிமை பற்று உரிமையை மாற்றிக் கொண்ட பிறகு, கடன் வாங்கியவர் வங்கியில் இந்தக் கடனுக்காக அடமானமாக வைத்திருந்த சொத்துப் பத்திரங்களின்மீது, 

கடன் கொடுத்திருந்த வங்கி எடுக்கின்ற நடவடிக்கைகள் எல்லாவற்றையும் எடுக்கும் உரிமை பிரிவு 141-ன்படி   கடன் கொடுத்தவருக்கு வந்துவிடும்.   

               

4. இழப்பு எதிர்காப்பு உரிமை - Indemnity

கடன் வாங்கியவர் சார்பாக சூரிட்டி கொடுத்தவர் வங்கியில் செலுத்திய தொகை முழுமைக்கும் இழப்பு எதிர்காப்பு  உரிமை  பிரிவு 149-ன்படி  அவருக்கு உண்டு.


5. கடனாளியை கட்டாயப்படுத்தும் உரிமை

சூரிட்டி கொடுத்தவர், வங்கியின் நெருக்கடி காரணமாக, கடன் வாங்கியவர்   சார்பாக வங்கியில் பணம் செலுத்துவதற்கு முன்பாக  கடன் வாங்கியவரிடம்  தன்னை, கடனைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்கலாம்.


தனது சூரிட்டியை ஏற்று கடன் கொடுத்தவருக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் 


1. வங்கியில் உள்ள, கடன் வாங்கியவரின் பத்திரங்களை கடனாளிக்கு பதிலாக உத்தரவாதி பணத்தை செலுத்தி கடனை தீர்த்திருந்தால்,  தன்வசம் ஒப்படைக்க கோரலாம்.


2.  கடன் வாங்கியவர் அவருக்குச் சொந்தமான சொத்துக்களின் பத்திரங்களை ஏற்கனவே தான் வாங்கிய கடனுக்கு  சூரிட்டியாக வங்கியிடம் கொடுத்திருப்பார். 


அந்த சொத்துக்களை முதலில் விற்று, அந்த தொகையில் வங்கிக்கு சேரவேண்டிய கடன் தொகையை முதலில்  எடுத்துக் கொள்ளச் சொல்லும் உரிமை உத்தரவாதிக்கு உள்ளது.


3. வங்கியாளர் பணம் கேட்டு தன்னிடம் வரும் போது, அவர்களிடம் கொடுத்த கடன் தொகையை வசூல் செய்ய கடன் வாங்கியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தரவாதிக்கு உரிமை உண்டு.


இணை உத்தரவாதிகளுக்கு எதிராக உத்தரவாதியின் உரிமைகள்

கடன் வாங்கியவர் தன் கடனை தீர்க்காமல் போய்விடும் நேரத்தில், உத்தரவாதியை  அந்தக் கடனை தீர்க்கச் சொல்லி வங்கி நெருக்கடி கொடுக்கும். 


அந்த நேரத்தில் உத்தரவாதி இதர இணை உத்தரவாதிகளையும் அதில் பங்கு பெறுமாறு கேட்க உரிமை உண்டு. 


அப்போது உத்தரவாதியும் மற்றும் இதர இணை உத்தரவாதிகளும் இணைந்து ஒவ்வொருவரும்  சமமாக வங்கிக்கு செலுத்தப்படுகின்ற தொகையில் பங்கு பெற வேண்டும். 


இவ்வாறாக,  அணைத்து  உத்தரவாதிகளும் சேர்ந்து கடன் வாங்கியவரின் கடன் முழுவதையும் வங்கியில் தீர்த்த பிறகு, வங்கியின் வசம் இருக்கின்ற கடன் வாங்கியவரது சொத்துப் பத்திரங்களில் அவர்கள் அனைவருக்கும் உரிமை வந்துவிடும். 


அவர்கள் ஒவ்வொருவரும் அந்தச் சொத்தில் அவரவர்களுக்குரிய  பங்கினை பெற்றுக் கொள்ளலாம்.


உத்தரவாதத்திலிருந்து வெளியேறுதல் 

கொடுத்த உத்தரவாதத்தை திரும்பப் பெற முடியுமா?


இந்திய ஒப்பந்தச் சட்டம் - 130,131 மற்றும் 133 ஆகிய பிரிவுகளில், உத்தரவாதி தான் கொடுத்த உத்தரவாதத்திலிருந்து எந்தெந்த சூழ்நிலையில் வெளியேறலாம்? என்பதைக் கூறுகிறது.


பிரிவு - 130 - உத்தரவாதத்தை திரும்ப பெறும் அறிவிப்பு ஒன்றினை வங்கிக்கு எழுத்து மூலமாக கொடுப்பதன் மூலம்


பிரிவு - 131- உத்தரவாதி n இறந்து போனால்.


பிரிவு - 133- ஒப்பந்த விதிமுறைகளில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்படுத்தப்படும் போது.


என்றென்றும் மக்கள் பணியில்

இரா.கணேசன்

அருப்புக்கோட்டை

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

குறட்டையை நிறுத்த மருந்து

 குறட்டையை நிறுத்த மருந்து

தூக்கத்தில் சிலர் பக்கத்தில் யாரும் தூங்க முடியாதவாறு கர்ண கொடூரமாக குறட்டை விடுவார்கள். இதற்கு பல காரணங்கள் கூறினாலும் அன்னாக்கு உள்ளே இலுத்துக்கொள்வதும் ஒரு காரணமாகும்.

இதை நிறுத்த மருந்து  

மூக்கிரட்டை வேர் பொடி 100 கிராம் 

மிளகு பொடி 25 கிராம்

இந்த சூரணத்தை காலை,இரவு உணவிற்கு பின்பு ஒரு வேளைக்கு இரண்டு கிராம் அளவு தேனில் குழைத்து (20 நாட்கள்) சாப்பிடவும். 

மருந்து சாப்பிட்டு முடியும் வரை மது, அசைவம், அகத்திக்கீரை,பாகற்காய் பறங்கிக்காய் இவைகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

(மூக்கிரட்டை வேரை முறையாக காயவைத்து பொடி செய்ய வேண்டும்.)



வரதட்சனை சட்டம் 1961

 வரதட்சனை சட்டம் 1961 : 


பிரிவு 7. குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு.


1 [ 7. குற்றங்கள் பற்றிய அறிவாற்றல். --(1) குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (2 இன் 1974) இல் உள்ள எதுவும் இருந்தபோதிலும்,--


(அ) ​​மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் அல்லது முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் ஆகியோருக்குக் குறைவான எந்த நீதிமன்றமும் இந்தச் சட்டத்தின் கீழ் எந்தக் குற்றத்தையும் விசாரிக்கக் கூடாது;


(b) எந்த நீதிமன்றமும் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தை எடுத்துக் கொள்ளாது--


(i) அதன் சொந்த அறிவு அல்லது அத்தகைய குற்றத்தை உருவாக்கும் உண்மைகள் பற்றிய போலீஸ் அறிக்கை, அல்லது


(ii) குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது அத்தகைய நபரின் பெற்றோர் அல்லது பிற உறவினர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நலன்புரி நிறுவனம் அல்லது அமைப்பு மூலம் புகார்;


(c) ஒரு பெருநகர மாஜிஸ்திரேட் அல்லது முதல் வகுப்பின் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் இந்தச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தண்டனையையும் வழங்குவது சட்டப்பூர்வமானது.

விளக்கம் 


.--இந்த துணைப்பிரிவின் நோக்கங்களுக்காக, "அங்கீகரிக்கப்பட்ட நல நிறுவனம் அல்லது அமைப்பு" என்பது மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல நிறுவனம் அல்லது அமைப்பு.


(2) குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (1974 இன் 2) இன் அத்தியாயம் XXXVI இல் உள்ள எதுவும், இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய எந்தவொரு குற்றத்திற்கும் பொருந்தாது.]


2 [(3) தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தச் சட்டத்திலும் எதனையும் உள்ளடக்கியிருந்தாலும், குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபரின் அறிக்கை, அத்தகைய நபரை இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படாது.]


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

சில தீர்ப்புகள்

 ஒரு கட்சிக்காரருக்காக வக்காலத்து தாக்கல் செய்த வழக்கறிஞர் , தனக்கு வழக்குரைஞர் கட்டணம் கொடுக்கவில்லை என்பதற்காக வழக்கில் ஆஜராக மறுக்க முடியாது. கட்சிக்காரரின் வக்காலத்தை ஏற்றுக் கொண்ட வழக்கறிஞக்கு அக்கட்சிக்காரர் சேவை கட்டணம் கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் அவருக்காக வாதாட வேண்டியது அவ்வழக்கறிஞரின் கடமை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Ali Mohammed Kashmiri case - AIR 1960 AII (FB) P 660

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் ஆவணங்களை, பொது ஆவணங்களாக கருத வேண்டும். ஆகவே அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சான்றாவணங்களாக குறியீடு செய்யலாம். 


(2009) 4 MLJ (Crl) Rakkappan Vs. State rep. By Inspector of Police, Cherambadi Police Station, Uthagamandalam District 


and 2011-1-LW (Crl) 335 S.Ramkumar Vs. State and Ors.

 புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியுமா? 

சென்னை உயர்நீதிமன்றம் " மந்திரன் கோனான் Vs காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் (2006-2-MWN-CRL-356)" என்ற வழக்கில், திருமணம் சம்மந்தமாக இல்லாமல் எதிரி தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டால் அதனை இ. த. ச பிரிவு 498 A ன் கீழான குற்றமாக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. 


அதேபோல் உச்சநீதிமன்றம் " பிரீத்தி குப்தா Vs ஜார்க்கண்ட் மாநில அரசு (2010-7-SCC-667)" என்ற வழக்கில், ஒரு கணத்தில் ஏற்படுகிற கோபத்தின் காரணமாக பெரும்பாலான புகார்கள் இ. த. ச பிரிவு 498 A ன் கீழ் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறு விசயத்தை மிகவும் பெரிதுபடுத்தி அது சம்பந்தமாக புகார் அளிக்க கூடாது. வழக்கறிஞர்கள் இ. த. ச பிரிவு 498 A ன் கீழான பிரச்சினையை ஒரு அடிப்படை சமூக பிரச்சினையாக கருதி அதனை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பொய் புகார் கொடுக்க உடந்தையாக இருக்கக்கூடாது. பல பொய் புகார்கள் உருவாக வழக்கறிஞர்கள் காரணமாக இருக்கக்கூடாது. எனவே பொய்யான வரதட்சணை வழக்குகளை ஏற்க முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. 


இதே கருத்தை உச்சநீதிமன்றம் " பஸ்கான் குமார் மீன் Vs பஞ்சாப் மாநில அரசு"  என்ற வழக்கில் வலியுறுத்தியுள்ளது. 


எனவே புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

 RSO 31 - 5(ii) மற்றும் 8 ன்படி புல உட்பிரிவுக்கு உட்படாத இனங்கள் மற்றும் பிரச்சினைக்குரியவை இல்லாத இனங்களில் பட்டாதாரர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு வருவாய் ஆய்வாளரால் பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை தற்போது இல்லை. பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் (CLA Lr. K4/369/2013, DT - 5.2.2013)


2.  RSO 31-6(ii) ன்படி 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கப்படும் நிலையில் அவரது வாரிசுகள் அல்லது அனுபவதாரர் பெயரில் உரிமையியல் நீதிமன்றங்களின் தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)


3. RSO 31-7 ன்படி 12 ஆண்டுகளாக நிலத்தின் சுவாதீனம் தன்னிடம் உள்ளது என்று நிரூபிப்பவரின் பெயரில் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)


4.  கிரையம் பெற்றவரின் சொத்து விற்றவரின் பெயரில் கிராம கணக்கில் இருந்தால், கிரைய ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யலாம். (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)


5.  நிலத்தை மாற்றம் செய்பவர் பெயரும் 10(1) சிட்டாப்படி பதிவு செய்யப்பட்டவர் பெயரும் வெவ்வேறாக இருந்தால் நிலத்தை வாங்குபவர் மற்றும் விற்பவரை அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும். ஆவணச் சான்றுகள், முந்தைய விற்பனை பத்திரங்கள், கிஸ்தி ரசீதுகள், கிராம நிர்வாக அலுவலரின் நேர்முக சாட்சியங்கள் முதலியவற்றை பரிசீலனை செய்து 10(1) சிட்டாப்படி பதிவு பெற்ற நிலச்சுவான்தாரர் மற்றும் நிலத்தை தன் பெயருக்கு பதிவு மாற்றம் கோருபவர்களுக்கிடையே உள்ள தொடர்பை கண்டறிந்து ஆணை பிறப்பிக்க வேண்டும். (நிலவரித் திட்ட இயக்குநரின் கடிதம் H 1.113.287/1981, dt - 4.4.1981)


6.  பட்டா மாற்றத்தை ரத்து செய்யப்படும் மனுக்களில் அதற்கான காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் அனுப்பி அவர்கள் பெற்றுக் கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டையை சம்பந்தப்பட்ட கோப்பில் வைக்க வேண்டும் (நிலவரித் திட்ட இயக்குநரின் கடிதம் எண். K4. 16014/1985(சர்வே) dt - 8.2.1986)


VAO-க்கள் மீதான புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும், தவறு செய்யும் VAO-க்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் உயர் நீதிமன்றம்.


CASE: W. P. No – 13916/2019, DATE – 1.7.2019.

 வண்டி சாவியை எடுக்க காவலர்களுக்கு அதிகாரம் உள்ளதா?

- May 24, 2021


பவன் பாரிக் (Pawan Parikh) என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த (தகவல் அறியும் உரிமை) ஆர்.டி.ஐ'ன் படி, மதுபோதையில் வண்டி ஓட்டுதல், திருட்டு வண்டி, தேடப்படும் குற்றவாளி மற்றும் சோதனைக்கு உட்படாமல் தப்பிக்க முயலுதல் போன்ற எந்தவொரு காரணமும் இல்லாமல் வாகனத்தின் சாவியைப் எடுக்க, எந்த அதிகாரிக்கும் உரிமை இல்லை.


காவலர் வண்டியை நிறுத்த சொல்லும்போது, நிறுத்தி..அவரின் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில், மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 179ன் படி 1 மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது 500.ரூ வரையிலான அபராதமோ விதிக்க முடியும்.


சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழே உள்ள காவலர்க்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்கவும் மற்றும் அபராதம் விதிக்கவும் அதிகாரம் இல்லை.  


இதனை மீறிச் செயல்படும் காவலர்க்கு எதிராக, 100'ஐ தொடர்பு கொண்டு, காவலரின் பெயர் - இடத்தினை குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.


கிராமப்புறங்களில் சட்ட ஒழுங்கு காவலரே, போக்குவரத்து காவலராகவும் செயல்படுவார்.

புலன் விசாரணையை மறுக்கலாம்

 1. காவல்துறையினர் எப்போதெல்லாம் ஒரு வழக்கின் புலன் விசாரணையை மறுக்கலாம் என்பது குறித்து, அரசாணை எண். 332, நீதித்துறை 28, பிப்ரவரி, 1906 மற்றும் அரசாணை எண். 485 நீதித்துறை 14,மார்ச் 1911 என்ற அரசாணைகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்நிலை ஆணை எண். 562 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(b) யிலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது. 


2. கடித எண். வி1 - 24021/97/84/ஜிபிஏஎல், நாள் - 4.7.1978 மற்றும் 10.7.1985 ன்படி இந்திய அரசு, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், கண்டிப்பாக காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


3. காவல்நிலைய பொறுப்பு அலுவலர்கள் FIR நகலை புகார்தாரருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க மறுப்பது மிகக் கடுமையான குற்றமாகும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் சி. எண். /165918/குற்றம் /(2)(1)/94, நாள் - 27.7.1994 ன்படி கீழ் ஆணை பிறப்பித்துள்ளார். 


4. காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பெற்றுக் கொண்டவுடன் அது பிடியாணை வேண்டா குற்றமாக இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். பிடியாணை வேண்டும் குற்றமாக இருந்தால் அந்த குற்றத்தை விசாரணை செய்ய, குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலை பெற வேண்டும். சாதாரண மனுக்களை பெறும்போது, அவை உடனடியாக மனுக்கள் பதிவேட்டில் (CSR) பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்கு உடனடியாக CSR நகல் கொடுக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்காதது சட்ட விரோதமானதாக கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் RC. NO /62868/குற்றம் /1(2)/2001,நாள் - 31.3.2001 ன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசாணை எண். 865, உள் (காவல் - 1) துறை, நாள் - 9.6.1997.என்ற அரசாணை உள்ளது. மேலும் தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம் - 1(1)/97, நாள் - 17.6.1997 ம் உள்ளது. 


5. காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை உள்நோக்கத்துடன் பதிவு செய்யாமல் இருப்பதை கண்காணிக்கவும், தடுத்திடவும் என்ன விதிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என்று RC. NO - 274292/குற்றம் - 1(1)/2004, நாள் - 3.2.2005 என்ற சுற்றறிக்கையின் கீழ் விதிமுறைகளை வகுத்துள்ளார். 


6. வரதட்சணை மரணம் வழக்கில், கோட்டாட்சியர் பிரேத பரிசோதனை நடத்திய 15 நாட்களுக்குள் புலன் விசாரணை அதிகாரிக்கு அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு அரசு, உள்துறை, அரசு செயலாளர் கடிதம் (பல்வகை) எண். 1059,நாள் - 23.5.1990 ன் கீழ் ஆணை பிறப்பித்துள்ளார். 


7. குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட புகார்களிலும், சாதாரண பிரச்சினை சம்பந்தப்பட்ட புகார்களிலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் வீட்டுக்கு நேரிடையாக சென்று அவர்கள் பிரச்சினையை விசாரித்து ஆலோசனை வழங்க வேண்டும். தேவையில்லாமல் இதுமாதிரியான பிரச்சினைகளில் கணவரை கைது செய்யக்கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 134085/குற்றம் - 1(3)/2003 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து காவல் நிலையத்திற்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார். 

8. கைது செய்யப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 15857/குற்றம் 1(1)/2004,நாள் - 21.7.2004 ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

முஸ்லீம் பெண் பராமரிப்புக்காக தாக்கல் செய்யலாமா?

பிரிவு 125 CrPC இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண் பராமரிப்புக்காக தாக்கல் செய்யலாமா? உச்சநீதிமன்றம் பரிசீலிக்க*

விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்குவதற்கான உத்தரவை எதிர்த்து ஒரு முஸ்லீம் ஆணின் மனுவில், 

சிஆர்பிசி பிரிவு 125 இன் கீழ் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஒரு மனுவை பராமரிக்க உரிமை உள்ளதா என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது. 

நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சமீபத்தில் குடும்பநல நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு வழக்கை விசாரித்தது, இது ஒரு முஸ்லீம் பெண்ணின் விருப்பமான பிரிவு 125 CrPC மனுவில், மனுதாரருக்கு (அவரது கணவர்) இடைக்கால பராமரிப்பு தொகை ரூ. 20,000 செலுத்துமாறு உத்தரவிட்டது. 

மாதம். 2017 ஆம் ஆண்டு தனிப்பட்ட சட்டங்களின்படி இருதரப்பினரும் விவாகரத்து பெற்றனர் மற்றும் அதற்கான விவாகரத்து சான்றிதழ் இருந்ததன் அடிப்படையில், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவு சவால் செய்யப்பட்டது, ஆனால் அதை குடும்ப நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. 

ஆனால், இடைக்கால பராமரிப்புக்கான உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. இதில் உள்ள உண்மைகள் மற்றும் சட்டத்தின் பல கேள்விகளைக் கருத்தில் கொண்டு, மனு தாக்கல் செய்த நாளிலிருந்து செலுத்த வேண்டிய குவாண்டம் தொகையை மாதம் ரூ.20,000லிருந்து ரூ.10,000 ஆகக் குறைத்தது. 

ஐம்பது சதவீத நிலுவைத் தொகையை மனுதாரர் ஜனவரி 24, 2024 க்குள் செலுத்தவும், மீதமுள்ள தொகையை மார்ச் 13, 2024 க்குள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், முக்கிய வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க குடும்பநல நீதிமன்றம் கேட்கப்பட்டது. 

விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்ணுக்கு CrPC பிரிவு 125ன் கீழ் மனுவைத் தொடர உரிமை இல்லை என்றும், முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 இன் விதிகளின் கீழ் தொடர வேண்டும் என்றும் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

 1986 ஆம் ஆண்டு சட்டம் முஸ்லீம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் வலியுறுத்துகிறார். 

உண்மைகளின் அடிப்படையில், மனுதாரர் தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு இத்தாத் காலத்தில் பராமரிப்புக்காக ரூ.15,000 செலுத்தியதாகக் கூறுகிறார். பிரிவு 125 CrPC இன் கீழ் குடும்ப நீதிமன்றத்தை அணுகிய தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் செயலை அவர் சவால் செய்தார், அதன் அடிப்படையில் இருவரும் 1986 சட்டத்தின் மீது CrPC விதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் எந்த பிரமாணப் பத்திரத்தையும் பிந்தைய சட்டத்தின் 5 இன் படி சமர்ப்பிக்கவில்லை. 

ஆரம்ப சமர்ப்பிப்புகளைக் கேட்ட நீதிமன்றம், மூத்த வழக்கறிஞர் கௌரவ் அகர்வாலை உதவிக்கு நியமித்து, பிப்ரவரி 19, 2024 அன்று இந்த விஷயத்தை பரிசீலனைக்கு பட்டியலிட்டுள்ளது. 

பின்னணி

முகமது அகமது கான் எதிராக ஷா பானோ பேகம் வழக்கில் உச்ச நீதிமன்றம் மைல்கல் தீர்ப்பை வழங்கிய 1985 ஆம் ஆண்டிலிருந்து பிரச்சினையின் வரலாற்றைக் காணலாம். நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச், ஒருமித்த தீர்ப்பில், பிரிவு 125 CrPC முஸ்லிம் பெண்களுக்கும் பொருந்தும் மதச்சார்பற்ற விதி என்று அந்த நேரத்தில் தீர்ப்பளித்தது. எவ்வாறாயினும், இந்த தீர்ப்பு சமூகத்தின் சில பிரிவினரிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை மற்றும் மத, தனிப்பட்ட சட்டங்கள் மீதான தாக்குதலாக பார்க்கப்பட்டது. 

முஸ்லீம் பெண்கள் சட்டம், 1986 இயற்றுவதன் மூலம் தீர்ப்பை ரத்து செய்யும் முயற்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இது விவாகரத்துக்குப் பிறகு (இத்தாத் காலம்) 90 நாட்களுக்கு முஸ்லீம் பெண்களின் பராமரிப்பு உரிமையை கட்டுப்படுத்தியது. 

இந்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாக்கம் 2001 இல் டானியல் லத்திஃபி & அன்ஆர் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா என்ற உச்ச நீதிமன்றத்தின் முன் சவால் செய்யப்பட்டது. சிறப்புச் சட்டத்தின் செல்லுபடியை நீதிமன்றம் உறுதி செய்தது. எவ்வாறாயினும், 

1986 சட்டத்தின் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியைப் பராமரிக்க ஒரு முஸ்லீம் கணவரின் பொறுப்பு இத்தாத் காலத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்று அது தெளிவுபடுத்தியது. 

சில ஆண்டுகளுக்குப் பிறகு, இக்பால் பானோ v. மாநிலம் உ.பி. மற்றும் Anr (2007), எந்த ஒரு முஸ்லீம் பெண்மணியும் CrPC பிரிவு 125 இன் கீழ் மனுவைத் தக்கவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஷபானா பானோவில் வி. இம்ரான் கான், நீதிமன்றத்தின் மற்றொரு பெஞ்ச், ஒரு முஸ்லீம் பெண் விவாகரத்து செய்யப்பட்டிருந்தாலும், 

அவள் மறுமணம் செய்யாத வரை, இத்தாத் காலம் முடிந்த பிறகு, CrPC இன் பிரிவு 125 இன் கீழ், அவள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று கூறியது. 

அதைத் தொடர்ந்து, ஷமிமா ஃபரூக்கி எதிர் ஷாஹித் கான் (2015) வழக்கில், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்ணுக்குப் பராமரிப்புக்கான பிரிவு 125 CrPC மனுவைப் பராமரிக்க உரிமையுள்ள குடும்ப நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் மீட்டெடுத்தது. 

2019 ஆம் ஆண்டில், நீதிபதி ஏ அமானுல்லா (பாட்னா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக) ஒரு முஸ்லீம் பெண்ணின் பராமரிப்பு மனுவை நிராகரித்த குடும்ப நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார். 

முஸ்லீம் பெண் 1986 சட்டம் மற்றும் CrPC இன் கீழ் பராமரிப்புக்காக செல்ல விருப்பம் உள்ளது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. அவர் கோட் தேர்வு செய்தால், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண் என்ற காரணத்திற்காக சட்டத்தின் கீழ் அவர் தடை செய்யப்பட்டார் என்று கூற முடியாது. 

சமீபத்திய நீதித்துறை முன்மாதிரிகள்

அலகாபாத் உயர் நீதிமன்றம்

ஷகிலா காதுன் எதிர் உ.பி. மற்றும் மற்றொரு (2023), ஒரு தனி நீதிபதி விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்ணுக்கு பிரிவு 125 CrPC இன் கீழ் இத்தாத்திற்குப் பிறகும் மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும், வேறொருவருடன் திருமணம் போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்படாவிட்டால், அவர் பராமரிப்புக்காக உரிமை கோருகிறார். 

ரசியா எதிர் உ.பி மாநிலம் (2022), விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண் மறுமணம் செய்யாத வரை, இத்தாத் காலம் முடிந்த பிறகும், பிரிவு 125 CrPC இன் கீழ் தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று ஒரு தனி நீதிபதி கவனித்தார். 

Arshiya Rizvi மற்றும் Anr இல். v. உ.பி மாநிலம் மற்றும் Anr. (2022), ஒரு முஸ்லீம் பெண் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரிவு 125 CrPC இன் கீழ் தனது கணவரிடம் இருந்து பராமரிப்புப் பெற உரிமை உண்டு என்று ஒரு தனி நீதிபதி தீர்ப்பளித்தார். 

கேரள உயர் நீதிமன்றம்

In Noushad Flourish v. அகிலா நௌஷாத் & Anr. (2023), 'குலா' என்று கூறி விவாகரத்து செய்த முஸ்லீம் மனைவி, 125 சிஆர்பிசியின் கீழ், குலாவை நிறைவேற்றிய பிறகு தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று ஒரு தனி நீதிபதி தீர்ப்பளித்தார். 

முஜீப் ரஹிமான் எதிராக. தஸ்லீனா & அன்ர். (2022), விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண் 1986 சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் நிவாரணம் பெறும் வரை பிரிவு 125 CrPC இன் கீழ் ஜீவனாம்சம் பெறலாம் என்று ஒரு தனி நீதிபதி தீர்ப்பளித்தார். 

சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படும் வரை பிரிவு 125 இன் கீழ் நிறைவேற்றப்பட்ட உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று சேர்க்கப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் முக்கிய பயன்களை    “திடீர் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் குடும்ப...