பொது சேவை உரிமை சட்டம்உடனே செயல்படுத்த கோரிக்கை

ஊட்டி:"பொது சேவை உரிமை சட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,' என வலியுறுத்தி, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், ஊட்டி தலைமை தபால் அலுவலகத்திலிருந்து முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடந்தது.இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், அனைத்து வட்டங்களிலிருந்தும் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது. நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன், மலைச்சாரல் கவி மன்ற தலைவர் சோலூர் கணேசன், விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், நெஸ்ட் அறங்காவலர் சிவதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் முக்கிய பயன்களை    “திடீர் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் குடும்ப...