தனியார் வாகன கட்டணங்கள் உயர்வு:ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பந்தலூர் : "அதிகரிக்கும் தனியார் டாக்சி, ஆட்டோ கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' வலியுறுத்தப்பட்டுள்ளது
.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் ஆலோசனை கூட்டம் பந்தலூரில்நடந்தது.தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
பொது செயலாளர் கணேசன், இணைசெயலாளர்கள் செல்வராஜ், ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர்
.தனிஸ்லாஸ் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கெரசின் ஒதுக்கீட்டை முழுமைப்படுத்திட வேண்டும்;
மளிகை கடைகளில் விலைப்பட்டியல் வைக்காதது குறித்தும், மளிகை மற்றும் பெட்டி கடைகளில் உரிய முகவரி, தேதி இல்லாமல் தரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதையும் கண்காணிக்க வேண்டும்;
ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உரிய பதில் தெரிவிக்க வேண்டும்;
உள்ளூர் கிராமப்புறங்களுக்கு போதிய பஸ் வசதியும், தீபாவளி சீசன் காலங்களில் கூடுதல் பஸ் இயக்கவும் வேண்டும்.
மாவட்டத்தில் டாக்சி வாகனங்கள், ஆட்டோக்களின் திடீர் கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்;
பந்தலூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இருந்தும் உதவியாளர்கள் இல்லாதது குறித்தும்,
மாவட்டத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் உரிய பணியை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையை தடுக்கவும் வேண்டும்
என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நௌசாத் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
ஊட்டச்சத்துக்கள்
# 🥗 **உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் (Essential Nutrients)** மனித உடல் ஆரோக்கியமாக இயங்க **6 வகையான அடிப்படை சத்துக்கள்** தேவைப்படுகின...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
https://kutumbapp.page.link/Dva5RTUpZAbb1pR57 பட்டா பதிவு புத்தக சட்டம் 1983 1. பிரிவு 3(1) - ன் கீழ் வட்டாட்சியர் நில உரிமையாளருக்கும் ...
-
பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது என்ன? Law on registration of societies 1. பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது என்ன? பதிவு செய்யப்பட்ட சங...
No comments:
Post a Comment