லஞ்சத்தினை ஒழிக்க இளம் சமுதாயம் முன்வர வேண்டும்

ஊட்டி, : லஞ்சத்தினை ஒழிக்க இளம் சமுதாயத்தினர் முன்வர வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேரு யுவகேந்திரா, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியவை சார்பில் உப்ப ட்டி எம்.எம்.எஸ்.பள்ளியில் லஞ்சம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் கணே சன், ஆசிரியர் சூசன் ஜே ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் கவிதா தலைமை தாங்கி பேசு கையில், ‘லஞ்சம் இல்லாத இடம் இல்லை எனும் நிலை உருவாகி விட்டது. எல்லே ரும் லஞ்சம் வாங்குவதில்லை. பலர் லஞ்சம் வாங்க மாட் டாம் என்ற உறுதியுடன் உள்ளனர். லஞ்சம் ஒரு புற்றுநோய் போல பரவி விட்டது. இதனை தடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்’ என்றார்.
மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசு கையில், லஞ்சம் அதிக ரிக்க மக்க ள முதல் காரணம். மக்கள் தகுதி யை மறைத்து அரசு சலுகைகளை பெற நினை ப்பதாலேயே லஞ்சம் அதிகரித்து வருகிறது. முன்பு கட மயை செய்த பின்னர் லஞ்சம் கேட் டனர். ஆன ல் தற் பாது லஞ்சம் கொடுங்கள் கடமையை செய்கிறோம் என்ற நிலை உள்ளது. லஞ்சம் அதிகரிப்பதால் நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் கோடிக்கணக்க ன ஏழைகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை வேறு தகுதியில்லாதவர்கள் லஞ்சம் கொடுத்து பெற்று செல்கின்றனர். லஞ்சத்தினை ஒழிக்க இளம் சமுதாயத்தினர் முன்வர வேண்டும். லஞ்சம் வாங்க மாட்டே ம் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். பொது சேவை உரிமை சட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் லஞ்சம் ஒழியும் என்றார்.
தொடர்ந்து லஞ்சம் ஒழிப்பு தொடர்பான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் குடிமக்கள் நுகர் வோர் மன்ற பொ றுப்பாளர் ராஜாங்கம், ஆசிரி யர் பரிமளாதேவி மற்றும் மாணவ மாணவிகள் உட் பட பலர் கலந்து கெ ண்டனர்.

No comments:

Post a Comment

Ckyc என்றால் என்ன

  CKYC (Central Know Your Customer) என்றால் என்ன? CKYC (Central Know Your Customer) என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட Central KYC Rec...