மின்சார சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கு

பந்தலூரில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர் நிலை பள்ளியில்  கூடலூர் நுகர்வோர் மனித  வள  சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், மின்சார வாரியம் கூடலூர் கோட்டம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு

தலைமை வகித்த  கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசும்போது இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் அனைத்து தேவைகளுக்கும் அத்தியாவசியமாகின்றது   நாம் மின்சாரத்தினை பயன்படுத்தும் பொது நாம் மட்டுமே பயன் அடைகின்றோம் ஆனால் இந்த மின்சாரம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பொது பொருள் உற்பத்தி செய்ய படுகின்றது அதனால் விவசாயி தொழிற்சாலை நிர்வாகம் தொழிலார்கள் நுகர்வோர்கள் என பல தரப்பினரும் பயன் பெறுவார்கள். நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.  எனவே, நாம் அன்றாட தேவைகளில் பயன் படுத்தும் மின்சாரத்தினை மிச்சம் பிடித்து நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் மின் கோட்ட  பொறியாளர் முரளிதரன் பேசும்போது மின்சாரத்தின் உற்பத்தி அளவு தேவையை பூர்த்தி செய்ய கூடிய அளவு இல்லை.  புதிய திட்டங்கள் நிறைவேறும் வரை மின் தேவையை சமாளிக்க நாம் பயன்படுத்தும் மின்சாரத்தினை குறைத்து கொள்ள வேண்டும் நீலகிரி மாவட்டம் மட்டுமே மின் தடை இல்லாத மாவட்டமாக உள்ளது. குண்டு பல்புகள் வெப்ப ஆற்றலை தருகின்றது இதனால் அதிக செலவு மற்றும் புவி வெப்பமடைதல் ஏற்படுகின்றது.

சி எப் எல் பல்புகள் பயன் படுத்த வேண்டும் வீடுகளில் பழைய வயரின் பழுதடைந்து இருந்தால் அதன் முலம் மின் விபத்து ஏற்படுவதுடன் மின்சரமும் விரையமாகும் இவற்றை தவிர்க்க வேண்டும்.  நட்சத்திர குறியீடு உள்ள மின் சாதனங்கள் வாங்கி  பயன் படுத்துவதால் மின் சிக்கனம் பெறுவதோடு வீண் செலவினகளை தவிர்க்கலாம்.  மின்சார கம்பிகள் கிழே அறுந்து கிடந்தாலோ மின் கம்பங்களில் செடிகள் வளர்திருந்தாலோ மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தால் அவை சரிசெய்து தரப்படும்.  மின் கட்டணங்கள் செலுத்துவதற்கான முறை இணைய தளம்   மூலம்    செலுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளது எனவே மின் கட்டணங்களை அஞ்சலகங்களில் வங்கிகளில்  இணைய தல சென்டர்களில்  செலுத்தலாம் மின் நுகர்வோர்கள் தங்களது செல்போன் எங்களை பதிவு செய்து கொண்டால் மின் கட்டணம் குறித்த தகவல்கள் தெரிவிக்க படும் என்றார்

நிகழ்ச்சியில் மின் வாரிய உதவி பொறியாளர்கள் சந்தோஸ் தமிழரசன் விக்னேஷ் ஆசிரியர் மார்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

 மாணவிகள் கனிமொழி யமுனா ஆகியோர் மின் சிக்கனம் குறித்து பேசினார்கள்

நிகழ்ச்சியில் 200க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்

முன்னதாக நுகர்வோர் மன்ற மாணவி உமா வரவேற்றார்





முடிவில் நுகர்வோர் மன்ற மாணவி கீர்த்தனா நன்றி கூறினார்

No comments:

Post a Comment

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005

RTI (Right to Information Act – தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005) முக்கியத்துவம் என்ன ? Right to Information Act, 2005 என்பது பொதுமக்கள் அ...