1 முதல் தமிழர்

 நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான்....


கிழக்கு

மேற்கு

வடக்கு

தெற்கு

வட கிழக்கு

வட மேற்கு

தென் கிழக்கு

தென் மேற்கு


திசையை எட்டாகப் பிரித்த தமிழன் 

இசையை ஏழாகக் கொடுத்தான்... 


ச ரி க ம ப த நி


இசையை ஏழாக கொடுத்த தமிழன் 

சுவையை ஆறாக பிரித்தான்... 


இனிப்பு

கசப்பு

கார்ப்பு

புளிப்பு 

உவர்ப்பு

துவர்ப்பு


சுவையை ஆறாக பிரித்த தமிழன் 

நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 


குறிஞ்சி  (மலைப்பகுதி) 

முல்லை   ( வனப்பகுதி) 

நெய்தல்  ( கடல் பகுதி) 

மருதம்      ( நீர் மற்றும் நிலம்) 

பாலை      ( வறண்ட பகுதி) 


நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்

காற்றை நான்காக பிரித்தான்... 


தென்றல்

வாடை 

கோடை 

கொண்டல்


கிழக்கிலிருந்து வீசும் காற்று

கொண்டல் 


தெற்கிலிருந்து வீசும் காற்று

தென்றல்


மேற்கிலிருந்து வீசும் காற்று

கோடை 


வடக்கிலிருந்து வீசும் காற்று

வாடை


காற்றை நான்காக பிரித்த தமிழன்

மொழியை மூன்றாக பிரித்தான்... 


இயல் ( இயற் தமிழ் ) 

இசை  ( இசைத்தமிழ்) 

நாடகம் ( நாடகத்தமிழ்) 


இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 


இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 


மொழியை மூன்றாக பிரித்த தமிழன்

வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... 


அகம் 

புறம் 


கணவன் மனைவி வாழும் வாழ்க்கை

அக வாழ்க்கை... 


வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் 

புற வாழ்க்கை... 


வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்... 

ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்... 


ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான் 

அதை... 

உயிரினும் மேலாக வைத்தான்... 


இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்... 

"ஒழுக்கம் விழுப்பந் தரலான் 

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்


பார்த்தேன்,

படித்தேன் 

ரசித்தேன் 

பகிர்ந்தேன்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...