பந்தலூரில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.




பந்தலூரில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.


பந்தலூரில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் மேற்க்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பந்தலூர் மகளீர் தையல் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது, வாக்களர் பட்டியலில் அளிக்க வேண்டிய தகவல்கள் மற்றும் ஆதார் எண் இணைப்புக்கான வழிமுறைகள் குறித்து பேசினார்.  நிகழ்ச்சியல் பந்தலூர் மகளீர் தையல் பயிற்சி மைய மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியில் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி ஜான்சி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது 2 ஆதார் எண் வாக்காளர் பட்டியலில் இணைப்பது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு சிவசுப்பிரமணியம் பேசினார்)

No comments:

Post a Comment

Ckyc என்றால் என்ன

  CKYC (Central Know Your Customer) என்றால் என்ன? CKYC (Central Know Your Customer) என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட Central KYC Rec...