உதகையில் சட்ட தினம் கடைப்பிடிக்கப்பட்டது

*
உதகையில் சட்ட தினம் கடைப்பிடிக்கப்பட்டது* . 

உதகை நகர விழிப்புணர்வு சங்கம் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில்
உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற சட்டதின நிகழ்ச்சிக்கு பள்ளி *உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ண குமார் தலைமை* தாங்கினார்.

பள்ளி மாணவி *குணசியா* வரவேற்றார்

 *உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன்* பேசும்போது நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்க்கு எதிராக அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் கைகோர்த்து செயல்படுகின்றனர். வாகன ஓட்டிகளின் விதிமீறியமாக பெறப்படும் ஓட்டுனர் உரிமம் உட்பட பறிமுதல் செய்யப்படும் ஆவணங்கள் திரும்ப பெற அழைகழிக்கப்படுகின்றது.
மக்களுக்கான சட்டத்தின் மூலம் மக்கள் அழைகழிக்கப்படுவது வேதனையானது என்றார்

 *வழக்கறிஞர் நஜூமா பாய் நசீர* ் பேசும்போது
சட்டம் அனைவருக்கும் சமம் என்று அரசியலமைப்பு கூறுகின்றது.  அனைவரும் சட்டம் கற்க வேண்டியது அவசியம் ஆகும்.  குறிப்பாக பொண்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு மிகவும் அவசியம்,  தன் தாய் மொழியில் வழக்காட நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றார்.

 *கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்பிரமணியம்* பேசும்போது
அனைவரையும் சட்டத்தால் சமமப்படுத்தும் நோக்கில் சட்டம் உருவாக்கபட்டுள்ளது.  சட்டத்தை மீறுவோர் இன்று சுதந்திரமாகவும், சட்டத்தை மதிப்பவர்கள் கட்டபாட்டில் வழ்வது போலவும் நிலை காணப்படுகின்றது.  சட்டத்தின் பயன்கள் பெற சட்டத்தையும் வெளிவரும் தீர்ப்புகளையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.  சாட்சிகளும், ஆவணங்களும்ழ வாதங்களுமே சட்டத்தின் பயனை பெறமுடியுமெ என்றார்.

தமிழாசிரியர் *நாகராஜ்* பேசும்போது
முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான சட்டங்கள் மற்றும் வன்கொடுமை சட்டங்களின் மூலம் சம்பந்தபட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்யவேண்டும்.  சட்டத்தை மீறுவோர் மீது சட்னரீதியான நடவடிக்கை இல்லாததினால் சட்டத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது என்றார்.

சட்டதின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டதினம் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகள் *ரோசினி, குணசியா, தீக்க்ஷா, சுஜித், தீபக், யோசிதா, சிமைலீ, சைந்தவி* ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

முடிவில் மாணவி *யோசிதா* நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Ckyc என்றால் என்ன

  CKYC (Central Know Your Customer) என்றால் என்ன? CKYC (Central Know Your Customer) என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட Central KYC Rec...