கர்ம வீரர். 1

 
எளிமையின் சிகரம்... 
அனைவரும் விரும்பும் ஓர் மாமனிதர்...!!

இந்தியாவின் கிங்மேக்கர்...!!

🌟மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களின் பிறப்பிற்கான அர்த்தத்தை நிலைநாட்டிவிட்டு செல்லவேண்டும் என்பார்கள். அந்த வகையில் தனது பிறப்பையும், செயலையும் அர்த்தமுள்ளதாக மாற்றியவர்தான் இவர்.

🌟இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் என பலர் இருந்தாலும் அவர்களில் ஒருசிலரே நம் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர்.

🌟அவர்களின் தனிச்சிறப்புகள் இன்று வரையிலும் எவராலும் தொட்டுவிட முடியாத அளவில் இருக்கின்றன. அப்படிப்பட்ட அரசியல் தலைவர்களுள் ஒருவரைப்பற்றிதான் நாம் இங்கு காண இருக்கிறோம்...

🌟தமிழகத்தில் உணவின்மையால் மாணவர்களின் கல்வி கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக பள்ளிக் குழந்தைகளுக்காக முதன்முதலில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

🌟இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாக விளங்கியது.

🌟இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் 'கிங்மேக்கராக" விளங்கியவர் இவர்.

🌟எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர் இவர்.

🌟என்றைக்கும் நான் ஏழைப்பங்காளன்தான் என்பதை வாழ்நாளில் நிரூபித்துவிட்டு சென்ற உத்தமர் இவர்.

🌟இன்றைக்கு தமிழகம் கண்டுள்ள பல வளர்ச்சிகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் இந்த கருப்புத் தங்கம்தான்.

🌟தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர்,

பெருந்தலைவர்

தென்னாட்டு காந்தி

படிக்காத மேதை

கர்மவீரர்

கல்விக்கண் திறந்தவர்

கருப்பு காந்தி
என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். 

சாதிக்க நினைக்கும் இளைஞர்களின் மனதில் முன்மாதிரியாக திகழ்பவர்

பெருந்தலைவர் காமராஜர்..!!
கல்விகண் திறந்த படிக்காத மேதை கர்மவீரர் காமராஜரின் சகாப்தியத்தை தொடர்ந்து  பார்க்கலாம்.


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் 
நீலகிரி மாவட்டம்.
http://cchepnlg.blogspot.com/?m=1
 
 

No comments:

Post a Comment

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005

RTI (Right to Information Act – தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005) முக்கியத்துவம் என்ன ? Right to Information Act, 2005 என்பது பொதுமக்கள் அ...