*ஆயுள் தண்டனை என்றால் என்ன?*

 *ஆயுள் தண்டனை என்றால் என்ன?* 


பெரும்பாலான நேரங்களில் குற்றம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் தூக்கு தண்டனைக்கு பதிலாக பெரும்பாலான வழக்குகளில் இந்த ஆயுள் தண்டனையே வழங்கபடுகிறது. 


 *ஆயுள் தண்டனை என்பது எவ்வளவு நாட்கள் தண்டனைக்காலம்?* 


இந்த ஆயுள் தண்டனையை “life” “ஆயுள்” என்பது ஒரு மனிதனின் கடைசி மூச்சுவரை, அதாவது “அவனின் இறப்புவரை” என்பதாகும்.


 *ஆயுள் தண்டனை எந்த சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது?* 


இந்திய தண்டனை சட்டம் பிரிவு 45-ன்படி தான் ஆயுள் தண்டனை வழங்கபடுகிறது.


இந்திய தண்டனைச் சட்டம் 53 ஆம் பிரிவின்படி பல்வேறு குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகளையும் பிரித்து சொல்லியுள்ளது. இந்தச் சட்டத்தின் விதிகளின்படி குற்றவாளிகள் பொறுப்பேற்க வேண்டிய தண்டனைகள் எவ்வாறு பிரிக்கப்படுகிறது. நமது இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்தபோதிலிருந்தே வழங்கப்பட்ட சட்டங்களை வரையறுத்துள்ளேன்.

 

1) மரணதண்டனை. (Death)


2) ஆயுட்காலம் வரை சிறை. (imprisonment for life)


3) நாடு கடத்துவது (இந்த சட்டம் தற்போது அமலில் இல்லை. இந்த சட்டத்தின் அடிப்படையில் குற்றம் செய்தவர்களுக்கு 1955க்கு பின்னர் கடும்சிறை தண்டனை வழங்கப்பட்டது) 


4)இந்த நான்காவது பிரிவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

    

4 இன் உள்பிரிவு (1) கடும் சிறைதண்டனை Rigorous imprisonment (சிறையில் வேலை செய்ய வைப்பர்)


அல்லது 


4 இன் உள்பிரிவு (2) சாதாரண சிறை தண்டனை Simple imprisonment.


5) சொத்தை பறிமுதல் செய்வது.


6) அபராதமாக பணம் கட்டச் சொல்வது. (Fine)


ஆயுள் தண்டனைகளை மாற்றஅரசுக்கு அதிகாரமுண்டா?


பிரிவு 54-ன்படி மரணதண்டனை கொடுத்திருந்தால், அதை அடுத்த குறைந்த தண்டனைக்கு மாற்றிக் கொள்ள தகுந்த அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு.


இங்கு “தகுந்த அரசாங்கம்” என்று சொல்லியுள்ளதற்கு விளக்கமாகத்தான், தற்போது சுப்ரீம்கோர்ட், சிபிஐ வழக்குகளுக்கு மத்திய அரசு என்றும் மற்ற வழக்குகளுக்கு மாநில அரசு என்றும் விளக்கம் அளித்துள்ளது.


உதாரணமாக ராஜிவ்காந்தி கொலை வழக்கு எடுத்துக்கொள்ளலாம். 

 

பிரிவு 54-ல் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற தகுந்த அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு.


பிரிவு 55-ல் ஆயுள் தண்டனையை 14 வருடங்களுக்கு மிகாத தண்டனையாக மாற்ற தகுந்த அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு. 


(இந்தப் பிரிவை வைத்துத்தான், எல்லா ஆயுள் தண்டனை கைதிகளும் 14 வருடத்திலோ, அல்லது நன்நடத்தை விதிகளின்படி அதற்கு முன்னரோ சிறையிலிருந்து வெளியே வந்துவிடுகின்றனர்.)


இதுஇல்லாமல், பிரிவு 57-ல் ஆயுள் தண்டனை என்பதை 20 வருட தண்டனைக்கு சமமானதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது இல்லாமல், குற்றவாளி, கடும்சிறை அனுபவிக்க வேண்டுமா அல்லது சாதாரண சிறை அனுபவிக்க வேண்டுமா என்பதை, தண்டனை கொடுத்த நீதிபதிதான் முடிவு செய்து தீர்ப்புடன் அறிவிப்பார்.


அபராத தொகை எவ்வளவு என்பது அதே சட்டத்திலேயே (மிக அதிகபட்சம் எவ்வளவு என்று) சொல்லப்பட்டிருக்கும். அதற்கு மேல் அபராதம் விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், அதற்கும் குறைவாக அபாரதம் விதிக்க அவருக்கு அதிகாரம் உண்டு.

அந்த அபராத தொகையையும் கட்ட முடியாதவராக இருந்தால், அதற்கும் சேர்த்து சாதாரண சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்தால் போதும். (50 ரூபாய்க்கு 2 மாதமும், 100 ரூபாய்க்கு 4 மாதமும், எவ்வளவு பணமாக இருந்தாலும் 6 மாதமும் சிறைதண்டனை இது பொருத்தமாக இல்லாதது போலவே உள்ளது இன்னும் இதை யாரும் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது).


 *ஆயுள் தண்டனை பற்றி நீங்க புரிஞ்சிக்க வேண்டியது என்ன?* 

 

ஆயுள் தண்டனை என்பது 20 வருடங்களுக்கு மட்டுமே பிரிவு 57-ஐ பாருங்கள் உங்களுக்கு புரியும். ஆயுள் தண்டனையை 14 வருடங்கள் என குறைத்துக்கொள்ள அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. பிரிவு 55-ஐ பாருங்கள் குற்றவாளி அந்த 14 வருடத்திலும், நன்னடத்தை விதிகளைக் கொண்டு இன்னும் குறைத்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. (சிறைவிதிகள் பாருங்கள்) 2013ல் கிரிமினல் சட்ட திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தம் கற்பழிப்பு குற்றங்களுக்கு தண்டனையாக 7 வருடத்திற்கு குறையாத ஆனால் 10 வருடத்திற்கு மிகாத சிறை தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.


இதை இந்த 2013 திருத்த சட்டத்தின்படி திருத்தி குற்றவாளியின் உண்மையான ஆயுள் முடியும்வரை ஆயுள்தண்டனை என்று மாற்றியுள்ளது.


இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் வெறும் ஆயுள்தண்டனை என்பது 14 வருடத்திற்கு மட்டுமே என்றும் உண்மையான ஆயுள் தண்டனை ஆயுள்முடியும்வரை என்றும் விளங்கிக் கொள்ளலாம்.


கற்பழிப்பு குற்றங்களுக்கு ஆயுள் முடியும்வரை ஆயுள்தண்டனை என்று திருத்திய அரசு கொலைக் குற்றங்களுக்கு வெறும் ஆயுள்தண்டனை மட்டுமே (அதாவது 14 வருட தண்டனை மட்டுமே) என்று விட்டுவிட்டது.

கற்பழிப்பு குற்றத்தைக் காட்டிலும், கொலைக்குற்றம் குறைந்ததா என்று சுப்ரீம் கோர்ட்டும் ஒருவழக்கில் கேள்வியும் எழுப்பியுள்ளது.


Commute = reduce a judicial sentence to one less severe; தண்டனை மாற்றம்;

Remission = reduce period of judicial sentence; தண்டனை காலத்தை குறைத்து சலுகை அளிப்பது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

No comments:

Post a Comment

Ckyc என்றால் என்ன

  CKYC (Central Know Your Customer) என்றால் என்ன? CKYC (Central Know Your Customer) என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட Central KYC Rec...