சம்மத ஆவணம் (அ) துணை ஆவணம்:

 

சம்மத ஆவணம் (அ) துணை ஆவணம்: ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட கிரய ஆவணத் தில் கண்டுள்ளசொத்தில் பொதுபாத்தியம்உள்ள (அ)பாத்தியம் இருப்பதாகக்கொண்டாடும் எந்த ஒரு நபரும் கிரய ஆவணத்திற்கு சம்மதப்பத்திரம் எழுதிக்கொடுக்கலாம். இத்தகைய ஆவணத்தில் சொத்தை ஒப்படைத்துவிட்டேன் என்றோ (அ) பட்டா மாற்றிக்கொடுத்துவிட் டேன் என்றோ (அ)பட்டா மாற்றிக் கொடுக்க சம்மதிக்கிறேன் என்றோ வாசகங்கள் இருக்கக்கூடாது.

ஒரு ஆவணத்தின் மூலம் சொத்து பாத்தியப்பட்ட ஒருவர் சம்மதப்பத்திரம் எழுதிக் கொடுத் தால் அவ்வாவணம் உரிமைமாற்றம் (அ) விடுதலையாகவே கருதப்பட வேண்டும். கிரயம்,ஈடு,செட்டில்மெண்டு தன்மையுள்ள பதிவான ஆவணத்தில் முன்பதிவு விபரம் (அ) மின் இணைப்பு எண் (அ) கைமாறு தொகை பெற்றமைக்கான காரணம் போன்றவற்றை கூடு தலாக சேர்த்துக்கொள்ள அசல் ஆவணத்தை எழுதிக் கொடுத்தவரே துணை ஆவணம் என எழுதிக் கொடுக்கலாம். ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஒன்றுக்குமேற்பட்ட ஆவணங்களுக்கு ஒருஆவணத்திலேயே சம்மதப்பத்திரம் எழுதி தாக்கல் செய்யப்பட்டால் ஏற்கக்கூடாது. ஏனெனில் சம்மதப் பத் திரத்திற்கு இ.மு.ச.பிரிவு 16 ன்கீழ் சான்று சேர்க்க வேண்டிய நிலையில் ஒரு ஆவணத்தைப் பொறுத்த மட்டிலுமே சான்று சேர்க்க இயலும் என்பது தான்.

15.பரிவர்த்தனை ஆவணத்தைப் பொறுத்து மதிப்பு வித்தியாசம் இருந்தால்,மதிப்பு வித்தி யாசத்திற்காக தொகை கொடுக்கப்பட்டு பெறப்பட்டதா (அ) இல்லையா என்ற விபரம் எழு திப்பெற வேண்டும்.

16.குத்தகை ஆவணம் எனில் வாடகை தொகை, முன்பணம், குத்தகை காலம் சொத்தின் வரி யாரால் செலுத்தப்பட வேண்டும் என்ற விபரங்கள் விடலின்றி தெரிவிக்கப்பட்டுள்ளதா என் பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முன்பணம் இல்லையென்பது குறித்த வாசகம் ஆவணத்தில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

17.தற்பொழுது குடும்ப உறுப்பினர்களுக்கான செட்டில்மெண்டு, பாகஆவணம், விடுதலை ஆவணம் ஆகியவற்றில் வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாகவும் கட்டிடம் மற்றும் இதர இனங்களைப்பொறுத்து கூடுதலாகவும் மதிப்பிட்டு ஆவணம் பதிவு செய்யப்படும் சூழ்நிலை உள்ளதால் இத்தகைய ஆவணப்பதிவிற்குப்பின் இதே சொத்துக்கள் வேறு நபர்களுக்கு கிர யம் செய்யப்படும்பொழுது இந்த மதிப்பிற்குகுறையாமல் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.அவ்வாறு மதிப்புக்குறைவில் எழுதப்பட்டிருந்தால் இ.மு.ச.பிரிவு47(A) (1)ன் கீழ்நடவடிக்கைதொடரலாம். எனவே இவ்வகை ஆவணங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சொத் துக்கள் இருந்தால் இந்தியமுத்திரைச்சட்டம் மதிப்புக்குறைவு தடுப்புச் சட்டம் விதி 3(1)ன் கிழான அறிக்கை பெறப்பட வேண்டும். அதிகபட்ச முத்திரைத்தீர்வை உள்ளதால் விதி 3(1)ன் கீழான அறிக்கை தேவையில்லையென்பது சரியான அர்த்தமல்ல.

18.கூட்டுப்பங்கு (Partnership) வியாபார ஒப்பந்த ஆவணத்தில் ஒவ்வொரு பங்குதாரரும் முத லீடு செய்யும் தொகை (அ) சொத்து (அ) இரண்டும் சேர்த்து எவ்வளவு என்பதை கணக் கிட்டு மொத்த தொகையின் மீது பதிவுக்கட்டணம் வசூலிக்க வேண்டும்.

19.பாகம்: (i).எந்த மதத்தைச் சார்ந்த பெண்ணாயிருந்தாலும் ஒரு பெண்ணின் பெயரில் உள்ள சொத்துக்கள் (ஆவணம் மூலம் வரப் பெற்றவை) அவருடைய தனிப்பட்ட சொத்துக்களாகும். அந்த பெண் உயிருடன் உள்ள வரையில் எவருக்கும் பாகமாக அளிக்க இயலாது. (ii) இந்துக்களை தவிர்த்து முகம்மதியர் கிறிஸ்துவ மதத்தைச்சேர்ந்த ஆண்கள் உயி ருடன் உள்ளபோது அவர்களுடைய பூர்வீகம் மற்றும் சுயசம்பாத்திய சொத்துக்களை தன் குடும்பத்தினருக்கு பாகமாக அளிக்க இயலாது. (iii).இந்து மதத்தைச்சார்ந்த ஒரு ஆண் உயிருடன் உள்ளபோது அவருடைய பூர்வீகம் மற் றும் சுயசம்பாத்திய சொத்துக்களையும் அவருடைய ஆண் மக்களால் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களையும் கூட்டுக்குடும்ப பொதுசொத்தாக அனுபவித்துவந்திருந்தால் அவருடைய மனைவி, மகன்கள் ,மகள்கள், ஏற்கனவே காலஞ்சென்ற மகன்களின் வாரிசுகள், ஏற்கனவே காலஞ்சென்ற மகள் களின்வாரிசுகள் ஆகியோருடன் பாகமாக பிரித்துக்கொள்ளலாம். ஆனால் பூர்வீக சொத்திலிருந்து மனைவிக்கு பாகமாக அளிக்க இயலாது. சுய சம்பாத்திய சொத்தி லிருந்து மட்டும் பாகமாக அளிக்கலாம். (iv).இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஆண் உயில் மூலம் தமது சொத்துக்களுக்கு ஒரு ஏற்பாடு செய்து வைக்காமல் இறந்துவிட்டால் அவருடைய சொத்துக்களை அவருடைய விதவை மனைவி, தாய்,மகன்கள் மகள்கள் ஏற்கனவே காலஞ்சென்ற மகனின் வாரிசுகள், ஏற்கனவே காலஞ்சென்ற மகளின் வாரிசுகள் ஆகியோர் பாகமாக பிரித்துக் கொள்ளலாம். (v)இந்து கூட்டுக்குடும்பத்தைச்சார்ந்த சகோதரர்கள் தனித்தனியாக கிரயம்பெற்ற சொத்துக் களையும் கூட்டாக கிரயம்பெற்ற சொத்துக்களையும் பூர்வீக சொத்து இருந்தாலும் (அ) இல்லையென்றாலும் கூட்டுக்குடும்ப பொது சொத்தாக அனுபவித்து வந்ததாக தெரிவித்து பாகம் பிரித்துக் கொள்ளலாம். கூட்டுக்குடும்ப பொது சொத்து என்பதற்கு மாறாக முந்தைய ஆவணப்பதிவுகள் (அதாவது தனிப்பட்ட முறையில் உடன்படிக்கை,அடமானம் ,போக்கியம், குத்தகை, செட்டில்மெண்டு போன்ற ஆவணங்கள் ஏதும்) இருக்கக்கூடாது. இந்த விதி முகம்மதியர்,கிறிஸ்துவ குடும்பத்தினருக்கு பொருந்தாது. சென்னை உயர்நீதி மன்ற Case law W.A.No.1318 of 2007, The District Registrar Tindivanam- Vs- V.Ranganathan & anr (reported in 2008 (1) CTC1) -ல் இரத்த உறவு அல்லாத சகோதர சகோதரிகள் இ. மு. சகூறு 45ன்கிழான "குடும்ப உறுப்பினர்கள்” என்பதற்கான விளக்கத்திற் குள் வர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற 4.4.2012 நாளிட்ட W.P. No.8887 (Eather Vijaya -Vs- CCRA) தீர்ப்புரையில் உயிருடன் உள்ள ஒரு சகோதரர் காலஞ்சென்ற இரு சகோதரர்களின் வாரிசுகளுடன் சேர்ந்து எழுதிக்கொண்ட பாகம் குடும்ப உறுப்பினர்களக்கிடையிலான பாகமாகவராது” எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றமதுரைக்கிளையின் 16.12.2011நாளிட்ட W.P.(MD). No.5445 of 2006 (M.Veeraiah -Vs-I.G.of Registration-cum-CCRA) தீர்ப்புரையில் உச்சநீதிமன்றம் Sulochana Amma-Vs- Narayanan Nair reported in (1994) 2 SCC 14 என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புரையினை மேற்கோள் காட்டி"சகோதரனின் மனைவியை குடும்ப உறுப்பினர் எனக்கருதஇயலாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் 24.2.2014 நாளிட்ட W.P. (MD). No.58 of 2012 (T.Muthu -Vs- I.G.of Registration) தீர்ப்புரையில் இ.மு.ச. கூறு58(a)ல் “குடும்பம்” என்பதற்கான விளக்கத்தில் இடம் பெற்றுள்ள உறவு முறையினை அப்படியேதான் பின்பற்றவேண்டுமேஒழிய அதற்கு கூடுதலாக விரிவுபடுத்தி பார்க்கக்கூடாது என தெரிவிக் கப்பட்டுள்ளது.

20.அதிகாரஆவணம்: நான்/நாங்கள் எழுதிக்கொடுத்த (அல்லது) எழுதிக்கொடுக்கும் ஆவ ணம் /ஆவணங்களை உரிய பதிவு அலுவலகத்தில் தாக்கல் செய்யவும் நான் / நாங்கள் எழு திக்கொடுத்ததை ஒப்புக்கொண்டு ஆவண மேலெழுத்தில் கையொப்பமிட்டு பதிவுப்பணி சம் மந்தமான அனைத்துபணிகளையும் முடிக்கவும்அதிகாரம் அளிப் பதாக”ஆவணவாசகம்இருந் தால் கண்டிப்பாக அத்தாட்சி செய்யப்பட வேண்டும். அதிகாரஆவணம் அத்தாட்சி செய்ய முதல்வர் (அ) முதல்வர்கள் தம்முடைய சார்பதிவக எல்லைக்குள் வசிப்பவர்களாக இருந் தால் மட்டுமே அத்தாட்சி செய்ய இயலும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

21.பொது அதிகார ஆவணத்தில் கைமாறு தொகை உள்ளதா (அ)இல்லையா என்ற விபரம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் எழுதிக் கொடுக் கப்படும் அதிகார ஆவணத்தில் கண்டுள்ள சொத்துக்கள் எழுதிக்கொடுப்பவர்களின் தனிப்பட்ட உரி மையின் அடிப்படையில் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் கணக்கிடப்பட வேண் டும்.

22.ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் ஒரு அதிகார ஆவணம் எழுதிக்கொடுக்கப்பட்ட பின் அவர்களில் ஒருவர் இறந்து போனாலும் அல்லது ஒருவரால் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அல்லது ஒருவர் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு கொடுத்தாலும் அந்த அதிகார ஆவணம் செல்லாது. (அதாவது நடைமுறைக்கு வராது).

23.அதிகாரம்பெற்ற முகவரால் ஒருஆவணம் எழுதிக்கொடுக்கப்பட்டபின் அதிகார ஆவணம் ரத்து செய்யப்பட்டிருந்தால், முகவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய அல்லது பிழைதிருத்தம் செய்ய வேண்டியிருக்கும் நிலையில் முகவருக்கு அதிகாரம் இல்லாத தால் முதல்வரே அதாவது அதிகார ஆவணம்எழுதிக்கொடுத்தவரே ரத்து (அ) பிழைதிருத் தல் ஆவணம் எழுதிக் கொடுக்கலாம்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 


No comments:

Post a Comment

FIR

முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்த...