முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
யாருக்கு அனுமதி?: ஒரு வழக்கில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர் (Accused) மற்றும் பாதிக்கப்பட்டவர் (Victim) ஆகியோருக்கு மட்டுமே எஃப்.ஐ.ஆர் நகலை நேரடியாகப் பார்க்கும் உரிமை உள்ளது. பொதுமக்கள் ஒரு உரிமையாக அதைக் கோர முடியாது.
புதிய நடைமுறை : தமிழகக் காவல்துறையின் சி.சி.டி.என்.எஸ் (CCTNS 2.0) இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பொதுமக்களுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் இதனால் சிரமப்படுவதாகக் கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
நீதிமன்றத்தின் விளக்கம்: பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, எஃப்.ஐ.ஆர் நகல் தகவல் தருபவர் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
மூன்றாம் தரப்பினர் என்ன செய்ய வேண்டும்?: வழக்கோடு நேரடியாகத் தொடர்பில்லாத மூன்றாம் தரப்பினர் எஃப்.ஐ.ஆர் நகலைப் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி சட்டப்பூர்வமாகச் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment