பள்ளிகளுக்கு நகை அணிந்து வர தடை மொபைல் போனுக்கும் அனுமதி இல்லை

பள்ளிகளுக்கு நகை அணிந்து வர தடை மொபைல் போனுக்கும் அனுமதி இல்லை

பள்ளி மாணவர்கள்,மொபைல் போன் எடுத்து வரவும், நகைகள் அணிந்து வரவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு, பல்வேறு அறிவுரைகள் அடங்கிய கையேட்டை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்:

பள்ளியில் நடக்கும், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டத்தில், தவறாமல் பங்கேற்க வேண்டும். 

குழந்தையின் உடல்நலம் குறித்த விபரங்களை, வகுப்பு ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து, அவ்வப்போது, வகுப்பு ஆசிரியரிடம் ஆலோசிக்க வேண்டும்.குழந்தைகளின் நடை மற்றும் பாவனைகளை, பெற்றோர், தினமும் கண்காணிப்பது அவசியம். 

அதேபோல், பிள்ளைகள், மொபைல் போன், கணினி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவதை முறைப்படுத்தி, கண்காணிக்க வேண்டும். 

தங்கள் குழந்தைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது.மாணவர்கள், பள்ளி உடமைகளை பாதுகாக்க வேண்டும். 

தேர்வு நாட்களில் விடுமுறைகள் எடுக்கக் கூடாது. 

நீண்ட விடுப்பு எடுக்க, மருத்துவ சான்றிதழ் அவசியம். 

பள்ளிக்கு மொபைல் போனை எடுத்து வர அனுமதி இல்லை. 

விலை உயர்ந்த அணிகலன்களை அணிந்து வரக் கூடாது.

கூர்மையான மற்றும் கனமான பொருட்களை பயன்படுத்தி, ஆபத்தான முறையில் விளையாடக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யோகா கட்டாயம்!

பள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 

முற்பகலில், நான்கு பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். மதிய உணவுக்கு முன், யோகா வகுப்பு கட்டாயம் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, 10 நிமிடம்; 

9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 15 நிமிடமும் யோகா பயிற்சி அவசியம்* 

அதேபோல், ஒழுக்கம், சுற்றுச்சூழல், சுகாதார கல்வி தொடர்பான செயல்பாடுகளும், 

அவசியம் போதிக்கப்பட வேண்டும்.

தரமற்ற குடிநீர் ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார்

தரமற்ற குடிநீர் குறித்து பொதுமக்கள் ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார் தெரிவிக்கலாம்,” என கலெக்டர் எம்.பல்லவி
பல்தேவ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: குடிநீர் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், அவை தயாரிப்பு தேதி, தயாரிக்கப்பட்ட இடத்தின் முகவரி, இந்திய தர நிர்ணய சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ.,), உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய உரிமம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) உரிமம் பெற்றிருக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை தினமும் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து, உண்மை தன்மையை தெரிந்து கொள்வது அவசியம். தயாரிப்பு நிறுவன வளாகம், சுத்தம், சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். மிகவும் மோசமான நிலையில் உள்ள 20 லி., கேன்கள் பயன்படுத்தக்கூடாது.
குடிநீர் மற்றும் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள், வினியோகிக்கப்படும் பாட்டில்கள், கேன்களில் தரத்தை http:/safewater.gov.in/cleanwater/homeஎன்ற இணையதள முகவரியில் பொது மக்கள் தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்த புகார்களை 94440 42322 என்ற ‘வாட்ஸ் -ஆப்’
எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேன் குடிநீர் உற்பத்தி


கேன் குடிநீர் உற்பத்தி மையங்களில் ஆய்வு நடத்த அதிகாரம் இல்லை


கேன் குடிநீர் உற்பத்தி மையங்களின் தரத்தை தொடர்ந்து உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்த தங்களுக்கு அதிகாரம் இல்லை என இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (பிஐஎஸ்) பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
கேன் குடிநீரின் தரம் குறைவு தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, துறை சார் நிபுணர் ஆர். நாகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, “தற்போதுள்ள சட்டப்படி, நிறுவனங்கள் தரச் சான்றுக்காக விண்ணப்பிக்கும்போது, நாங்கள் அங்கு ஆய்வு செய்து தரச்சான்று தருவது மட்டுமே எங்கள் நிறுவனத்தின் பணி. குடிநீர் கேன் நிறுவனங்களின் தரத்தை தொடர்ந்து உறுதி செய்ய ஆய்வு நடத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை’ என பிஐஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 38 கேன் குடிநீர் நிறுவனங்களின் குடிநீர் மாதிரியைப் பரிசோதித்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
இதில், 22 நிறுவனங்கள் போதிய தரத்துடன் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டது. 7 நிறுவனங்களின் குடிநீர், தரக் குறியீடுகளை நிறைவு செய்வதாக இல்லாதபோதும், குடிநீர் பருகத் தகுந்தது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 29 நிறுவனங்கள் செயல்பட பசுமைத் தீர்ப்பாயம் அனுமதியளித்து. அதேசமயம் 7 நிறுவனங்கள் தங்களின் தரத்தை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மேம்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
குடிக்கத் தகுந்தது அல்ல எனச் சான்றளிக்கப்பட்ட 9 நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அந்த நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்த மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை அணுக வேண்டும். அந்த நடவடிக்கைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 10 நாள்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
சென்னை தவிர தமிழகத்தின். பிற பகுதிகளில் உள்ள 855 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் 753 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், அனுப்பப்படாவிட்டாலும், அனைத்து கேன் குடிநீர் நிறுவனங்களிலும் மாதிரிகளைப் பரிசோதித்து வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் தரப்பில், “சுவையூட்டப்பட்ட குடிநீர் என்பது உணவுச் சட்டத்தின் கீழ் வருகிறது. பிஐஎஸ் நிறுவனத்தின் கீழ் வருவதில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது.

குடிநீரின் தரத்தை பொதுமக்களே தெரிந்து கொள்ள


இணையதளத்தில் தரத்தை அறியலாம் போலி குடிநீர் பாட்டில் குறித்து புகார் தெரிவிக்கலாம்


தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட 
குடிநீரின் தரத்தை பொதுமக்களே தெரிந்து கொள்ள 
உணவுப் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, அந்தத் துறையின் https:/safewataerfssai.gov.gov.in/cleanwater/home  
என்ற இணையதளத்தில் உள்ள தரவினை பயன்படுத்தி 
குடிநீர் பாட்டில், பாக்கெட், கேனில்  ஐஎஸ்ஐ எண் அல்லது உணவுப் பாதுகாப்பு உரிமம் எப்எஸ்எஸ்ஏஐ எண்ணை பயன்படுத்தி அந்நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 
குடிநீரின் 6 மாதம், ஓராண்டு பரிசோதனை அறிக்கை மற்றும் அவர்களின் ஐஎஸ்ஐ மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையின் எண், உரிமம் செல்லுபடியாகும் காலம் போன்றவற்றை பொதுமக்கள் தெரிந்து கொண்டு குடிநீரின் தரத்தை அறியலாம்.
பொதுமக்கள் வாங்கும் தண்ணீர் பாட்டில்கள், 
பாக்கெட்டுகள் மற்றும் 20 லிட்டர் கேன்களிலும், 
அதன் தயாரிப்பு நிறுவனத்தின் ஐஎஸ்ஐ எண் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை உரிமம் எண் இரண்டையும் பதிவிட்டு இருக்க வேண்டும்.
இதில் ஏதேனும் ஒரு எண்ணை இணையத்தளத்தை பயன்படுத்தி,
அங்குள்ள செயலில் குடிநீர் நிறுவனத்தின் பெயரை பதிவேற்றம் செய்தால் அந்நிறுவனத்தின் ஐஎஸ்ஐ தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உரிமம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா? என்பதையும் 
தண்ணீர் ஆய்வக அறிக்கையையும் அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஏதேனும் புகார்கள் இருந்தாலோ, உணவு தொடர்பான புகார்கள் இருந்தாலோ 9444042322 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் புகார் தெரிவிக்கலாம். 
20 லிட்டர் கேன்களில் தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி அச்சிடப்பட்டுள்ளதா? என்பதை கவனிக்கவும். அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் 
ஐஎஸ்ஐ ISI மற்றும் எப்எஸ்எஸ்ஏஐ FSSAI எண் இல்லை என்றால் அது போலியானது என்பதையும் அறியவும். அவ்வாறு இருந்தால் உடன் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், விபரங்கள் அறிய 
நியமன அலுவலர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் என்ற முகவரியில்
 நேரிலும், 0461- 2340699 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் 
என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

திசைக்காட்டி கல்வி விழிப்புணர்வு முகாம்

திசைக்காட்டி  கல்வி விழிப்புணர்வு முகாம்

போட்டிதேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில்

மாணவர்கள் உணர்ந்து படிக்க அறிவுரை

பந்தலூர். ஜுலை, 24: பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அர்ஜுணன் தலைமை தாங்கினார்.

நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய ஆலோசகர் காளிமுத்து. மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், நிர்வாகி செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது

மாணவர்கள் புரிதலுடன் பாடங்களை படிக்க வேண்டும்.  எதிர்கால லட்சியம் எதுவென்று தீர்மாணித்து படிக்க வேண்டும்.  தற்போதைய நிலையில் தனியார் பள்ளிகளில் லட்சங்கள் செலவு செய்து படிப்பதை அரசு பள்ளிகளில் கட்டணம் ஏதுமின்றி படித்து தரப்படுகின்றது.

கூலி வேலை செய்யும் பெற்றோர் தனது சிரம்மங்களை கடந்த பிள்ளைகளை படிக்க வைக்கும்போது மாணவர்கள் அவர்களின் கஷ்டங்களை புரிந்து படிக்க வேண்டியது அவசியம்,

மருத்துவ கனவு தற்போது நீட் எழுதி வெற்றி பெற்றால் எளிதில் கிடைக்கும்.  எனவே 11 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை முழுமையாக, உணர்ந்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

இந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்று சேரந்தால் அவர்களுக்கான மருத்தவ கல்வி செலவிற்கு உதவ தயாராக உள்ளோம். என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது

கல்வியே ஒருவரின் எதிர்கால வாழ்வை தீர்மாணிக்கும் சக்தியாக உள்ளது.  புரிந்து படித்தல் மாணவர்களுக்கு எதிர்கால போட்டிதேர்வுகளை எதிர்கொள்ள எளிதாக அமையும்.

இன்றைய நிலையில் அனைத்து அரசு பணிகளுக்கும் திறமையை நிருபிக்க போட்டி தேர்வுகளில் வெற்றி பெற உதவுகின்றது.  நடப்பு நிகழ்வுகள்,  பொது அறிவை வளர்க்க பத்திரிக்கைகள் படிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.   போட்டி தேர்வுகளால் எளிதில் அரசு பணி பெற முடியும் என்றார்.

ஒய்வு பெற்ற மாவட்ட சித்தா மருத்துவரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான கனேசன் பேசும்போது மாணவர்கள் பள்ளிகளில் பங்கேற்புடன் படிக்க வேண்டும்  ஒழுக்கம் கல்வி வாழ்வை மேம்படுத்தும் என்றார்.

பந்தலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுநாத், மருத்துவம் சார்ந்த படிப்புகள் தேர்வு செய்தது குறித்து விளக்கம் அளித்தார்

பந்தலூர் கிளை நூலகர் அறிவழகன், பொது அறிவை வளர்க்க நூலகம் பயன்படுவதும் போட்டிதேர்வுக்கு உதவும் வகைகள் நூலக பயன்கள் குறித்தும் பேசினார்

மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் கபீர் ஆங்கில அறிவு, நேர்முக தேர்வுகள் எதிர்கொள்ளுதல் குறித்து பேசினார்.

தொடர்ந்து பள்ளியில் பொது தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகளும், ஊக்கதொகையும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வரவேற்றார்.

முடிவில்  பள்ளி முதுநிலை ஆசிரியர் சித்தானந்த் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.


S. Sivasubramaniam
General Secretary
CCHEP Nilgiris
http://cchepnlg.blogspot.com/?m=1

இரத்ததானம் மற்றும் 108 சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் 28:06:2018

கூடலூர் அரசு மேல் நிலை பள்ளியில்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,  கூடலூர் அரசு மருத்துவமனை,
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் 108 ஆம்புலன்ஸ்
ஆகியன சார்பில்

இரத்ததானம் மற்றும் 108 சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம்,  கூடலூர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேஸ்வரன், ஆசிரியர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் புகழேந்தி பேசும்போது  

இரத்ததானம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றது.  ஆனால் அதில் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். சைவ உணவுகள், அசைவ உணவுகள்,  உடல் எடை பருமன், போன்றவைகளில் எப்படி இருந்தாலும் இரத்தம் ஒரே மாதிரியாகதான் இருக்கும்.

இரத்தம் மாற்று பொருள் அல்லது இரத்த உற்பத்திக்கு மாற்று வழிகள் ஏதும் கண்டறியபடவில்லை.

எனவே இரத்த தானம் மூலமே தேவைக்கான இரத்ததினை நிறைவு செய்ய முடியும்.

இரத்தம் தர தேவையான உடல் தகுதியை மாணவர்கள் தங்கள் ஊட்ட சத்தான உணவு பழக்கங்கள் மூலம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மயில்சாமி பேசும்போது.  

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரத்த தானம் செய்ய முடியும்.  உடல் எடையளவு 45 கிலோவாகவும் எச்பி அளவு 12 சதவீதம் உள்ளவர்களும் இரத்தம் கொடுக்கலாம்.  இரத்த எடுக்கும்போது 300 மில்லி எடுக்கப்படும்.

இந்த இரத்தம் முறையாக பரிசோதித்த பின்னர் தேவையான நபர்களுக்கு வழங்கப்படும்.

இரத்தம் தானம் செய்பவர்களுக்கு பணம் வழங்கப்படாது.  இரத்த தொற்று நோய்கள் உள்ளவர்களிடம் இரத்தம் எடுக்க மாட்டோம்.

கூடலூர் அரசு மருத்துவமனையில் தற்போது மாதம் 30 பேர் வரை இரத்தம் பெற்று பயன்அடைகின்றனர்.

சில நேரங்களில் இரத்த தேவைக்கு தன்னார்வலர்கள் இரத்த கொடையாளர்கள் தேவை இருக்கின்றது.

மாணவர்கள்  வரும் காலங்களில் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.

108 வாகன சேவை குறித்து 108 மேற்பார்வையாளர் கற்பக வினாயகம் பேசும்போது

108 சேவை என்பது ஒரு உயிரை இலவசமாக எட்டு திசைகளிலும்  உள்ள உயிர்களை காப்பாறுவதே முக்கிய நோக்கமாகும்.   மற்ற ஆம்புலன்ஸ் முதலுதவி வசதிகள் இருக்காது.   http://cchepnlg.blogspot.com/2018/06/108-28062018.html?m=1

ஆனால் ஒவ்வொரு பாதிப்புக்கும் ஏற்றவாறு 108 ஆம்புலன்சில் முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சேவையை முறையாக பயன்படுத்த வேண்டும்.  தவறாக பயன்படுத்துவதால் சேவை பாதிக்கபடும்.  தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் நுகர்வோர் மைய தலைவர் காளிமுத்து, தேவாலா பள்ளி ஆசிரியர்  கிருஷ்ண குமார், அரசு மருத்துவமனை இரத்த பரிசோதகர் வசந்த்,  108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


..

குற்ற செயல் தடுப்பு விழிப்புணர்வு

பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 

 பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், 

தேவாலா காவல் துறை, 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் 
ஆகியன சார்பில் 

மாணவர்களுக்கான குற்றசெயல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.  

நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியரும், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான தண்டபாணி தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம்,  பள்ளி ஆசிரியர் சித்தானந்த், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேவாலா அனைத்து மகளீர் காவல் ஆய்வாளர்  உஷா பேசும்போது 

தற்போது மாணவர்களிடையே புதிதாக சேர்ந்த மாணவர்களை ரேகிங் செய்வது, அவர்களை சிரம்மபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.  

மீறி ஈடுபடுவோர் மீது ரேகிங் தடுப்பு சட்டம், ஈவ்டீசிங் சட்டம் உள்ளிட்டவற்றில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 

காவல்துறை நட்பாக இருந்தாலும் தவறுகளை திருத்த கடுமையாக நடக்கும் நிலையும் வரலாம்.  

பள்ளி பருவத்தில் வரும் காதல் எண்ணங்கள் தவறான பாதைக்கு அழைத்து செல்லும்.  

இளவயது ஆண் பெண் தவறு செய்தால் அவர்களது எதிர்காலம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.  மாணவர்கள் என்ற சலுகை தற்போது கிடையாது.  

பள்ளி வளாகத்திலும், மற்ற பகுதிகளிலும்  மாணவர்கள் சுய கட்டுபாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.  

நகர் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றது.  

தவறு செய்பவர்களை எளிதில் கண்டுபிடித்து தண்டிக்கபடுவார்கள். 

மாணவர்கள் செய்யும் தவறுகள் பெற்றவர்கள் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.  

போக்சோ சட்டத்தின் படி சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் தற்போது மரண தண்டனை வரை விதிக்க திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.  எனவே வரம்பு மீறி தவறு செய்ய கூடாது, 

மாணவர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் படித்து முன்னேற வேண்டும், தினசரி செய்திதாள்கள் படித்து நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வதும் அவசியம்  என்றார்.

தேவாலா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சௌந்தர்ராஜன், மகளீர் காவல் உதவி ஆய்வாளர் பானுமதி ஆகியோரும்  

பகடிவதை எனும் ரேகிங், மற்றும் மாணவர்களிடையேயான குற்ற செயல்கள் தவிர்ப்பது குறித்து பேசினார்கள்.

 நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

முன்னதாக.  ஆசிரியர் வரவேற்றார்.  முடிவில்  ஆசிரியர் ஸ்டீபன்சன் நன்றி கூறினார்.
அங்கிகாரம் இல்லாத கல்வி நிலையங்கள் பொதுமக்கள் பணம் வீண்

அங்கிகாரம் இல்லாத கல்வி நிலையங்கள்
பொதுமக்கள் பணம் வீண்

மாணவர்கள் கல்வி பாதிப்பு

பல்வேறு பகுதிகளில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் மேற்கல்வி தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு கல்வி என கூறி ஏதேதோ பாட பிரிவுகளை நடத்துகின்றன.

இவை படித்தபின் வேலை வாய்ப்பை தருமா என்பது மிக பெரும் கேள்வி குறியே,

இந்த படிப்புகள் பின்னனி என்ன

அரசு அங்கிகாத்த தொழிற்படிப்புகள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களிலேயே நடத்தப்படுகின்றது.

அதற்கு பல்வேறு விதிமுறைகள், கட்டிட அமைப்பு முறைகள், வகுப்பறைகள்,  செயல்முறைக்கான பயிற்சி வசதிகள் (லேப்), கழிப்பிடம், தகுதியான ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் என பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் இவை புதுபிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு.

ஆனால் எந்தவித அரசு அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் அரசு அங்கிகரிக்காத பாட பிரிவுகளை உடனடி வேலை வாய்ப்பு தரும் கல்வி என கூறி பலரும் தனியாக கல்வி நிலையத்தை துவக்கி செயல்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் படித்தவர்கள் பலரும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த சம்பள வேலைக்கே சென்று வருகின்றனர்.

சில மாவட்டங்களில் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் மீது அரசு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கல்வித்துறை, சுகாதார துறை உள்ளிட்ட துறையினர் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால் ஏமாற்றிய நிறுவனங்களில்
ஏமாந்த பலரும்
போன பணம் போகட்டும் என்று தனது நிலையை என்னி வருந்தி கொண்டு இருப்பது தான் மிச்சம்.

அங்கீகாரம் உள்ள படிப்புகள்  ஆசிரியர் படிப்பு

அரசு ஆசிரியர் பயிற்சி கல்வியியல் துறை சார்பில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகள்

இவை இரண்டாண்டு கல்வியியல் பட்டய படிப்பு D.Ted இவற்றை படித்தால் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம்

கல்வி தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி,

மற்றது

பி எட் எனப்படும் கல்வியியல் பட்ட படிப்பு இது கல்வியியல் கல்லூ ரிகளில் படிக்கலாம்.

இதற்கு கல்வி தகுதி இளங்கலை பட்ட படிப்பு

இவை தவிர பிற ஆசிரியர் பயிற்சிகள் அரசால் ஏற்றுக் கொள்வதில்லை என்பது குறிப்பிடதக்கது.

நர்சிங் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நர்சிங் பயிற்சி மட்டுமே அரசு மருத்துவமனை மற்றும் இதர தனியார் மருத்துவமனையில் நர்சிங் பணிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகின்றது

நர்சிங் கவுன்சில் அனுமதி இல்லாத நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களை ஏற்றக்கொள்ள முடியாது என சமிபத்தில் நடைப்பெற்ற வழக்கில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசு வேலை வாய்ப்பு மற்றும் முக்கிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பல்கலைகழகம் ஆகியன நேரடியாக வழங்கும் சான்றுகள் மட்டுமே செல்லுபடியாகும்.

இதர சான்றுகள் பயன்அளிக்காது என்பது குறிப்பிட தக்கது.

தீயணைப்பு மற்றும் இதர துறைகளின் படிப்புகளும் இதே நிலைதான்

 *கல்விக்கான செலவு மூலதனம்

அதை முறையாக செலவிடுவது
முக்கியம்*

எனவே அரசு வழங்கும் சன்றுகள் பெறும் படிப்புகளை தேர்வு செய்து படித்தால் அதற்கான செலவு செய்த பணம் பயணளிக்கும்.
இல்லையேல் வீனாகும்

எனவே அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் மற்றும்

பல்கலை கழகம் இணைப்பு பெற்ற கல்லூரிகளில்

பல்கலை கழகம் வழங்கும் சான்றிதல் கொண்ட படிப்பை தேர்வு செய்வது அவசியம் ஆகும்.

at May 16, 2015

CCHEP Nilgiris
http://cchepnlg.blogspot.in/?m=1

*உலக காற்று தினம் (World Wind Day) ஜூன் 15..!*

___________________________*~
                    🌱 * :15.06.18*

*உலக காற்று தினம் (World Wind Day) ஜூன் 15..!*

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும்.இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.

இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும்,

அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும்.

மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது.

இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான்.

மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து,

இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான்.

மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள்.

இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது.

இயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொள்வோமா?

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள்.

இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம்.

ஆறு அறிவுடைய மனிதன் முதல் ஓரறிவுடைய தாவரம் வரை உள்ள ஒவ்வோர் உயிருக்கும் காற்று இன்றியமையாததாகும். இக்காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது.

காற்றோட்டமில்லாத இடத்திலும், மக்கள் நிறைந்த இடத்திலும் நச்சுக்காற்று மிகுந்திருக்கும் ஆதலால் அங்கு அதிக நேரம் தங்குவதற்கு சிரமமாக இருக்கும்.

ஒருவேளை தங்க நேரிட்டால் தூய காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறும் –

உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும்.

ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது

உயிரினங்கள் தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடுமிகவும் முக்கியமாகும்.

தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்-டை-ஆக்ஸைடு என்றகரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது.

உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன

பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக இருந்த காடுகளை அழித்ததன்விளைவுதான் காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது.

மேலும் எண்ணற்ற தொழிற் சாலைகளின் புகை, வாகன புகை என பல வகைகளில் காற்றுமாசடைந்து வருவதால் இயற்கை சீர்கெட்டு, மனித இனமும் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது –

நெருங்கிய வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள்,

இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது.

இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே  உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்களுக்கும் காற்று தேவை.

உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு மிகவும் முக்கியம்.

தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்- டை -ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது.

உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன.

நாட்டின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட காடுகள், தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, வாகனப் புகை போன்ற பல காரணங்களினால் காற்று மாசடைகிறது.

காற்றின் ஆற்றலைக் கொண்டாடும் தினம் இது. காற்றின் ஆற்றல், காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

காற்று மாசுபாட்டால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள் முதலியவையும் பாதிக்கப் படுகின்றன.

வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம்.

எனினும் அறிவியலில் இவை வேறுவேறாகப் பொருள் கொள்ளப்படுகின்றன. தட்பவெப்பவியலில், காற்று அதன் வலு, வீசும் திசை ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படும்.

காற்று (wind) : வளி மண்டலத்தில் வளி (Gas) பெருமளவில் நகர்வதே காற்று.

மாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால் என்ன ஆகும்?
* கண் எரிச்சல்

* தலைவலி

* தொண்டைக்கட்டு

* காய்ச்சல்

* காச நோய்

* ஆஸ்துமா

* சுவாசக் கோளாறு

* நுரையீரல் புற்றுநோய்

* உரிய வயது முதிர்வுக்கு முன் இறப்பு (Premature Death)

சூரியக் காற்று (Solar Wind): விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் வெளியேறிச் செல்வது.

கோள் காற்று (Planetary Wind): கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம்.

வன் காற்று (Gust): குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று.

சூறாவளி (Squall): நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று.

காற்று வேகமானி (அனிமோ மீட்டர் -/ Anemometer): காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி. சுழலும் கிண்ண அமைப்பு கொண்ட காற்று வேகமானிகளே பொதுவாகப் பயன்படுகின்றன.

தமிழில் பண்டைக்காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்கு தனித்தனி பெயர் இடப்பட்டு உள்ளது.

வாடை – வடக்கில் இருந்து வீசும் காற்று

சோழகம் – தெற்கில் இருந்து வீசும் காற்று

கொண்டல் – கிழக்கில் இருந்து வீசும் காற்று

கச்சான் (காற்று) – மேற்கில் இருந்து வீசும் காற்று

ஓசோன் படலம்: வாயு மண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான புற ஊதாக் கதிர்களை தடைசெய்கிறது.

அதிகவேக விமானங்கள் வெளியிடும் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்ஸைடுகளும், குளிர்சாதனப் பெட்டி,

தீயணைப்பான் போன்றவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களின் மூலமாகவும் ஓசோன் படலம் சிதைக்கப்படுகிறது.

இதன் விளைவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது.

காற்றின் தரம்: காற்றில் உள்ள தூசி, புகை போன்ற நுண்துகள்களைக் (Fine Particles) கொண்டு அதன் தரம் அளவிடப்படுகிறது. ‘PM 2.5’, ‘PM 10’ என்று 2 வகையாக காற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றனர்.

காற்றின் தோழன்: மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றுகிறது. மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. இதனால் காற்று மாசு ஏற்படுகிறது.

வாகனங்கள்: வாகனப் புகை மூலமாக வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, பிற வாயுக்கள் காற்றில் நச்சுப் படலத்தை ஏற்படுத்தி சூழலைப் பாதிக்கின்றன

அமில மழை: தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் அமில மழை பெய்யும்.

இதனால் மண்ணின் அமிலத் தன்மை அதிகமாகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் விவசாய உற்பத்தித்திறன் பாதிக்கப்படும்.

காற்றைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
வீடுகளில் சமையலுக்கு தரமான எரிபொருள், சாண எரிவாயு பயன்படுத்தலாம். குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாகனங்களில் புகை வெளியேறும் அமைப்பை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். பொது வாகனப் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.

எரிபொருள் தட்டுப்பாடு, காற்று மாசு, சாலை நெரிசல் போன்றவற்றை இது குறைக்கும்.

தொழிற்சாலைகளின் புகை வடிகட்டிகள், சுத்திகரிப்புக் கலன்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, தூசி போன்ற கழிவுப் பொருள்கள் காற்றில் கலந்து மாசடைவதைத் தடுக்கலாம்.

பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலம் பல வாயுக் கலவை உடையது.

வளி மண்டலத்தில் நிறைந்துள்ள வாயுக்கள்
79% நைட்ரஜன்

20% ஆக்சிஜன்

3% கரியமில வாயு

1% இதர வாயுக்கள்

காற்று திசை காட்டி: காற்று எங்கிருந்து உருவாகிறது என்பதைக் காட்டுகிறது.

காற்று மாசு ஏற்படுத்துபவை:

தொழிற்சாலைகள் > நைட்ரஜன், கந்தக ஆக்சைடு, புகை

பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் > ஹைட்ரோ கார்பன்

உலோகத் தொழிற்சாலைகள் > உலோக நுண்துகள்கள்

ரசாயனத் தொழிற்சாலைகள் > கரிமச் சேர்மங்கள்

வாகனங்கள் > கார்பன் மோனாக்சைடு

விட்டுக்கு ஒரு மரம் நடுவோம் !!!

காற்று மாசடைவதை தடுப்போம் !!


கோத்தகிரி பாறை ஒவியங்கள்

பாறை ஓவியங்களில் ஜல்லிக்கட்டு தோன்றிய தகவல்

ஊட்டி,: ஆதிகாலத்தில் மனிதன் மாடுகளை அடக்கி, வளர்ப்பு பிராணியாக மாற்றிய போராட்டங்கள்தான், பிற்காலத்தில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளாக மாறின என்ற தகவல்கள், பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன.

பண்டைகால மக்களின் வாழ்வியல் முறைகள், உலகில் உள்ள பல இடங்களிலும் பாறை ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுஉள்ளன. 
பிரான்சில் உள்ள லஷ்காஸ், ஸ்பெயினில் உள்ள அல்டமிரா, இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் உள்ள பிம்பேத்கா ஆகிய இடங்களில் காணப்படும் பாறை ஓவியங்கள், மனிதனின் அன்றாட வாழ்வில், மாடுகளுக்குள்ள முக்கியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன.
சில ஓவியங்களில், வன உயிரினமாக இருந்த மாடுகளை, மனிதன் போராடி அடக்கி, தன் வயப்படுத்தி, வளர்ப்பு பிராணியாக மாற்றுவதை சித்தரிக்கும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த போராட்டம் பிற்காலத்தில், காளைகளுடனான வீரவிளையாட்டாக மாறியிருக்கலாம் என்றும், பின்பு அவை, தமிழகத்தில் ஜல்லிக்கட்டாக மாற்றம் பெற்றிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விழுப்புரத்தில் ஆலம்பாடி, மதுரையில் கிடாரிபட்டி, வேலுாரில் குடியாத்தம், தர்மபுரியில் பல பகுதிகளில் உள்ள பாறை ஓவியங்களில், மனிதன், மாடுகளுடனான வாழ்வியல் முறைகள் இன்றளவும் காணப்படுகின்றன. 
இதேபோன்று, நீலகிரியில் கோத்தகிரி கரிக்கையூர், பொரிவரை, தெங்குமரஹாடா; ஊட்டி அருகே, இடுஹட்டி, கோணவக்கரை, வெள்ளரிக்கம்பை; மசினகுடி அருகே சீகூர் பகுதிகளில் மனிதன், மாடு வாழ்வியல் முறைகள், பாறை ஓவியங்களாக காணப்
படுகிறன. 
கோத்தகிரி கரிக்கையூர் பகுதியில் உள்ள பாறை ஓவியங்களில், 3,500 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள், கால்நடைகளுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங் கள் காணப்படுகின்றன

கரிக்கையூர் பாறை ஓவியங்கள்.

கோத்தகிரி நகரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கரிக்கையூர் பாறை ஓவியங்கள்.

(கரிக்கையூர் பாறை ஓவியங்கள்,கோத்தகிரி,நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)

இப்பாறை ஒவியங்கள் கி.மு.2000ஆண்டு முதல் கி.மு.1500ஆண்டு காலம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இது தென்னிந்தியாவின் மிகப் பழமையான பாறை ஒவியமாகும். சுமார் 500 ஒவியங்கள் ஒருங்கிணைந்த தொடர் ஓவியங்களாக உள்ளது.

இவ்வோவியங்கள் 2004 ஆம் ஆண்டு தொல் ஓவிய ஆராய்ச்சியாளர் கே.டி.காந்திரஜன், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், பேராசிரியர் ஜி. சந்திராசேகரன் முதல்வர் அரசு ஓவிய கல்லூரி சென்னை, குழுவினரால் கண்டெடுக்கப்பட்டது,

இவ்வோவியதில் நன்கு வளர்ந்த திடகாத்திரமான எருதினை வீரர்கள் துரத்தி பிடிப்பது போல வெள்ளை, சிகப்பு வண்ணங்களால் வரையப்பட்டுள்ளது.

அவ்வாறே மதுரையிலிருந்து 35 கிலோ மீட்டர், தொலைவில் மதுரை, திண்டுக்கல் வழியில் கல்லூத்து மேட்டுப்பட்டியில் குகை ஓவியங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வோவியங்களிலும் எருது தழுவுதல் வரையப் பட்டுள்ளது.

இவ்வோவியங்கள் காலமும் கி.மு.2000 முதல் கி.மு. 1500 காலமாக உள்ளது4. எருது தழுவுதல் என்பது 4000 வருடம் பழமையான தமிழர் நாகரீகத்துடன் இரண்டரக் கலந்த ஒரு பண்பாடு, கலாச்சாரம் ,வீர விளையாட்டு என்பது சரித்திர, சமூக, மனித இன இயல் ஆராய்ச்சி மூலமாக தெளிவாகிறது.

எருது தழுவுதலின் தொன்மை மட்டுமல்ல அதன் பரவலான பழக்கமும் தமிழர்களின் வாழ்வியலையும் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

 நமது தமிழர் நாகரிகமும் வாழ்வும் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது. வேளாண்மைக்கு இன்றியமையாத தோழன் ஆவினங்கள்.

அதுவும்ஆவினங்கள் மிகப் பெரிய அசையும் சொத்துக்களாக இருந்து வந்துள்ளது. ஆதித் தமிழர் காடுகளைத் திருத்தி நாடாக்கினார்கள்.

காட்டு விலங்கினங்களை அடக்கி வீட்டுத் தேவைக்கு உபயோகப்படுத்தினார்கள், யானைகள்,எருதுகள்,ஆடுகள் ஆகியவை முக்கியமானவைகள் ஆகும். இவற்றில் மாடுகள், வேளாணுக்கு மட்டுமல்ல, போருக்கும், பயணத்திற்கும், இன்னும் பல அன்றாட அத்யாவசிய தேவைகளுக்கும் இருந்து வந்துள்ளது.

இன்றும் பல தெற்காசிய நாடுகள் மாடுகளை தங்களது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழக, கேரள மாநிலங்களில் யானையையும், மாடுகளையும் பல கோவில்களில் புனிதமாக வளர்த்து வருகிறார்கள்.அது மட்டுமல்ல யானைகளையும், எருதுகளையும் வளர்ப்பது மிகப் பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

எருதினை நந்தி தேவராக, பிரதோஷ தினம் அன்று மிகுந்த பக்தியுடனும், விமரிசையுடனும் சிவலாயங்களில் நடைபெறுகிறது.
எருது திருவிழா இந்தியாவில் பல மாநிலங்களில் அறுவடை திருவிழாவினை ஒட்டி நடத்தப்படுகிறது.

எருது ஓட்டுதல், கழனியில் ஏருடன் காளைகளைப் பூட்டி ஓட்டுதல்,என்று மாட்டிற்கும் மனிதனுக்கும் ஒரு பிணைப்பை உருவாக்குவதற்கு ஏற்பட்டு வழிவழியாக கடைப்பிடித்து, அதனை ஒரு பாரம்பரிய விளையாட்டாக கொண்டாடி வருகிறார்கள்.

சங்கத் தமிழர் வரலாறினைப் படிக்கும்போது எருது தழுவுதால்,

ஒரு அரசியல் போர் பயிற்சியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. ஆநீரை கவர்தல் என்பது போர் முறையின் முதற்கட்டமாக இருந்துள்ளது.

பகைவனின் நாட்டிற்கு படையெடுக்கும் முன் போர் எச்சரிக்கையாக ஆநிரைகளை வெட்சிப் பூ மாலை அணிந்து கவர்வது, கவர்ந்த ஆநீரைகளை மறுபடியும் கரந்தை பூ மாலை அணிந்து மீட்டு வருவது, என்று போர் முறைகளையும் விரிவாக எடுத்துரைக்கிறது ‘புறப் பொருள்’.

5 இதனை தொல்காப்பியமும் வெட்சி மாலை அணிந்து பகைவனின் ஆநிறைகள் கவர்ந்து, பாதுகாப்பாக வைத்து, முதியவர்கள்,பெண்கள், குழந்தைகளை அகற்றி, பகைவனின் ஊர்களை எரிப்பது பற்றி விரிவாக கூறபட்டுள்ளது.

மதுரைக் காஞ்சியில் எருது தழுவுதலைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. கலித்தொகையின் ஒரு பகுதியான முல்லைக்கலியில் ஆயர் குலப்பெண்கள் எருது தழுவுதலில் வெற்றிப்பெறாத ஆண்களை அடுத்த பிறவியிலும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள் என்கிறது.

7 சிலப்பதிகாரத்தில் ஏறு தழுவுதலை மக்கள் பெருந்திரளாக பாதைகளின் இருபுறமும் நின்று பார்த்து மகிழ்ந்தார்கள் என்கிறது.8 இன்னும் பற்பல தமிழ் இலக்கியங்கள் எருது தழுவுதலைப் பற்றி பல அறிய தகவல்களை, அதன் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக கூறுகிறது.

பாரம்பரியமான குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் எருதுகளையும் வளர்க்க ஆரம்பித்து விடுவார்கள். எருதுகளை அடுக்குபவனுக்கே பெண் மணம் முடித்து தரப்படுவாள்.

எருதினை திறமையுடன் அடக்குபவன், பெண்ணையும் சொத்தையும் திறமையுடன் பாதுகாப்பான் என்பதே இதன் அடிப்படை.
தமிழகத்தில் பேரரசுகள் மறைந்து போனபிறகும் எருது தழுவுதல் தொடர்ந்து ஒரு புதிய பரிமாணத்தில் நடைப்பெற்றது.

விஜயநகர நாயக்கர் ஆட்சியில் பாளயங்கள் பலம் வாய்ந்த குறுநிலங்களாக தனிப்பட்ட அரசுரிமையுடன் ஆட்சி செய்தன. தங்கள் பாளயங்களை விரிவுப்படுத்தவும், அவர்களுக்கு திறம் வாய்ந்த வீரர்கள் தேவைப்பட்டார்கள், இதனால் எருது தழுவுதல் பரவலாக தென் மண்டலம் முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டது.

திருமலை நாயக்கர் காலம் முதலே எருதின் கொம்புகளில் சல்லிக்காசுகள் துணி முடிப்பில் கட்டப்பட்டு, சல்லிக்கட்டு – ஜல்லிக்கட்டாக திரிந்தது.
திருமலை நாயக்கர் தனது இறுதிக் கால ஆட்சியில்,கிருஷ்ண தேவராயர் மறைவுக்குப் பிறகு,

மதுரை நாயக்கர்களை விஜயநகர நாயக்கர் அரசிடமிருந்து சுதந்திர நாயக்கர்களாக அறிவித்த பிறகு, மதுரை 10 நாட்டு கள்ளர்களுடனும், இராமநாதபுரம்,சிவகங்கை சேதுபதிகளுடனும் நட்புறவை பாராட்ட, எருது தழுவுதலுக்கு ஆதரவு தந்தார்.

இன்றும் மதுரையைச் சுற்றியே ஜல்லிகட்டு என்று அழைக்கப்படுகிறது, ஏனைய பிற இடங்களில் மஞ்சு விரட்டு, எருது கட்டு என்று அழைக்கப் படுகிறது.

-- சங்க இலக்கிய ஆராய்ச்சி நடுவம்
பெரம்பலூர்

#உலக இரத்ததான தினம்

வரலாற்றில் இன்று - (14-06-2018)

#உலக இரத்ததான தினம்

🎀 ஐ.நா சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்ததான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏ, பி, ஓ ரத்த வகையை கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்த நாளையும், இரத்தம் தானம் வழங்குபவர்களை கௌரவிக்கவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

💉 ரத்தப் பிரிவுகளை வகைப்படுத்திய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1896ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா-வில் பிறந்தார்.

💉 பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு நோய் எதிர்ப்பாற்றல் காரணிகளை கண்டறிந்து அதற்கு ஹhப்டன்ஸ் எனப் பெயரிட்டார். மேலும் ஏ, பி, ஓ வகையை 1901-ல் முதன்முதலாக கண்டறிந்தார்.

💉 1927-ல் பல புதிய வகை ரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்ததற்காக 1930-ல் இவருக்கு அலெக்சாண்டர் எஸ்.வெய்னருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

💉 நோயியல், உடற்கூறியல், தசை திசுக்கள், நோய் எதிர்ப்பாற்றல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 75-வது வயதில் (1943) மறைந்தார்.

உணவு தரத்தை ஆய்வு செய்ய கையடக்க கணிணி





மக்களுக்கு விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யவும், அதிகாரிகளின் பணியைக் கண்காணித்து மேம்படுத்தவும் நாட்டிலேயே மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 4ஜி தொழில்நுட்பத்துடன்கூடிய ‘கையடக்க கணினிகள்’ பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். மக்களிடம் உணவு விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். அதனால் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தவும், அதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உணவுப் பாதுகாப்புத் துறை தொடங்கப்பட்டது.


மக்களிடம் விழிப்புணர்வு

சாலையோர உணவகம் முதல் ஸ்டார் ஓட்டல் வரை சோதனை நடத்தி, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் தரம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சிறு வியாபாரிகள், வணிகர்களை உரிமம் எடுக்கச் செய்வது, தகுதியானவர்களுக்கு உரிமம் வழங்குதல், அவர்களது விற்பனையைக் கண்காணித்தல், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்போர் மீது நடவடிக்கை எடுப்பது ஆகிய பணிகளை உணவுப் பாதுகாப்புத் துறை செய்து வருகிறது.

உணவுப் பொருட்கள் உற்பத்தி, வாகனத்தில் எடுத்துச் செல்லுதல், கிடங்கில் இருப்பு வைப்பது, ரீபேக் செய்வது, விநியோகிப்பது, சில்லறை விற்பனை என உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை பல கட்டங்களாக உணவுப் பொருட்கள் ஆய்வு செய்யப் படுகின்றன.

உணவுப் பாதுகாப்புத் துறையில் உணவுப் பொருட்களில் கலந்துள்ள ரசாயனத்தால் எந்த மாதிரியான பாதிப்பு அல் லது நோய் வரும் என்று கண்டறிவதற்காக மாவட்ட அளவில் டாக்டர்களே உணவுப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். 

இவர்களைத் தவிர, 584 உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்தான் பணியாற்றுகின்றனர்.

உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்கள், உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், ஜவ்வரிசி, உப்பு உள்ளிட்ட பொருட்களில் ஏதேனும் தரமற்றவையாக இருந்தால் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் கொடுக்கலாம்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இந்த எண்ணில் குரல் மூலமாகவும் புகாரைப் பதிவு செய்யலாம். கடைகள், ஓட்டல்கள் மட்டுமல்லாமல் சத்துணவுக் கூடம், அம்மா உணவகம், கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் அன்னதானமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் பெ.அமுதா கூறியதாவது:

உணவுப் பாதுகாப்புத் துறைக்கு குடிநீர், ஓட்டல்களில் விற்கப்படும் உணவுப் பதார்த்தங்கள், எண்ணெய் வகைகள், உப்பு, ஜவ்வரிசி போன்றவை தொடர் பாக அதிக புகார்கள் வருகின்றன. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான சோதனையுடன், வாட்ஸ்-அப் மூலம் வரும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.


உணவுப் பொருட்களின் தரம்

மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்யவும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பணியைக் கண்காணித்து மேம்படுத்தவும் நாட்டிலேயே மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய கையடக்கக் கணினிகள் (TAB) பயன்படுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு அதிகாரி, எந்தக் கடையில் ஆய்வு மேற்கொள்கிறாரோ அந்தக் கடையின் முகவரி தெரியும் வகையில் கையடக்கக் கணினியில் புகைப்படம் எடுத்துக் கொள்வார். பின்னர் அந்த கடை உரிய முறையில் செயல்படுகிறதா, அங்குள்ள பொருட்கள் தரமானவையா என்று கையடக்கக் கணினியில் இருக்கும் பட்டியலைக் கொண்டு சரிபார்ப்பார். ஆய்வு முடிந்ததும் கடைக்காரருக்கு இ-மெயில் இருந்தால் ஆய்வு குறித்து மெயில் அனுப்புவார். இல்லாவிட்டால், பேப்பரில் எழுதிக் கொடுப்பார். அதேநேரத்தில் ஆய்வின் முழுவிவரமும் எங்கள் துறை இணையதளத்தில் பதிவேற்றமாகிவிடும்.

இந்தக் கையடக்கக் கணினி மூலம் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் வழக்கமான ஆய்வுப் பணியான கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தல், குறைகள் இருந்தால் மாதிரி எடுத்தல், அதனை ஆய் வுக் கூடத்துக்கு அனுப்புதல், பணி குறித்த தினசரி அறிக்கை, வாட்ஸ்-அப் புகார் குறித்து மேற்கொண்ட ஆய்வு ஆகியனவற்றை இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கிறோம்.


பணி மேம்பாடு

அதுமட்டுமல்லாமல் ஆய்வு மேற்கொள்ளும்போது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை உடனுக்குடன் தீர்த்துவைத்து அவர்களது பணியும் மேம்படுத்தப்படுகிறது.

ஆய்வின்போது கடைக்காரர் கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பேச்சுக்கும் இப்போது இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



மக்களுக்கு விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யவும், அதிகாரிகளின் பணியைக் கண்காணித்து மேம்படுத்தவும் நாட்டிலேயே மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 4ஜி தொழில்நுட்பத்துடன்கூடிய ‘கையடக்க கணினிகள்’ பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். மக்களிடம் உணவு விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். அதனால் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தவும், அதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உணவுப் பாதுகாப்புத் துறை தொடங்கப்பட்டது.


மக்களிடம் விழிப்புணர்வு

சாலையோர உணவகம் முதல் ஸ்டார் ஓட்டல் வரை சோதனை நடத்தி, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் தரம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சிறு வியாபாரிகள், வணிகர்களை உரிமம் எடுக்கச் செய்வது, தகுதியானவர்களுக்கு உரிமம் வழங்குதல், அவர்களது விற்பனையைக் கண்காணித்தல், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்போர் மீது நடவடிக்கை எடுப்பது ஆகிய பணிகளை உணவுப் பாதுகாப்புத் துறை செய்து வருகிறது.

உணவுப் பொருட்கள் உற்பத்தி, வாகனத்தில் எடுத்துச் செல்லுதல், கிடங்கில் இருப்பு வைப்பது, ரீபேக் செய்வது, விநியோகிப்பது, சில்லறை விற்பனை என உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை பல கட்டங்களாக உணவுப் பொருட்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

உணவுப் பாதுகாப்புத் துறையில் உணவுப் பொருட்களில் கலந்துள்ள ரசாயனத்தால் எந்தமாதிரியான பாதிப்பு அல் லது நோய் வரும் என்று கண்டறிவதற்காக மாவட்ட அளவில் டாக்டர்களே உணவுப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, 584 உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்தான் பணியாற்றுகின்றனர்.

உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்கள், உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், ஜவ்வரிசி, உப்பு உள்ளிட்ட பொருட்களில் ஏதேனும் தரமற்றவையாக இருந்தால் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் கொடுக்கலாம்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இந்த எண்ணில் குரல் மூலமாகவும் புகாரைப் பதிவு செய்யலாம். கடைகள், ஓட்டல்கள் மட்டுமல்லாமல் சத்துணவுக் கூடம், அம்மா உணவகம், கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் அன்னதானமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் பெ.அமுதா கூறியதாவது:

உணவுப் பாதுகாப்புத் துறைக்கு குடிநீர், ஓட்டல்களில் விற்கப்படும் உணவுப் பதார்த்தங்கள், எண்ணெய் வகைகள், உப்பு, ஜவ்வரிசி போன்றவை தொடர் பாக அதிக புகார்கள் வருகின்றன. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான சோதனையுடன், வாட்ஸ்-அப் மூலம் வரும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.


உணவுப் பொருட்களின் தரம்

மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்யவும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பணியைக் கண்காணித்து மேம்படுத்தவும் நாட்டிலேயே மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய கையடக்கக் கணினிகள் (TAB) பயன்படுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு அதிகாரி, எந்தக் கடையில் ஆய்வு மேற்கொள்கிறாரோ அந்தக் கடையின் முகவரி தெரியும் வகையில் கையடக்கக் கணினியில் புகைப்படம் எடுத்துக் கொள்வார். பின்னர் அந்த கடை உரிய முறையில் செயல்படுகிறதா, அங்குள்ள பொருட்கள் தரமானவையா என்று கையடக்கக் கணினியில் இருக்கும் பட்டியலைக் கொண்டு சரிபார்ப்பார். ஆய்வு முடிந்ததும் கடைக்காரருக்கு இ-மெயில் இருந்தால் ஆய்வு குறித்து மெயில் அனுப்புவார். இல்லாவிட்டால், பேப்பரில் எழுதிக் கொடுப்பார். அதேநேரத்தில் ஆய்வின் முழுவிவரமும் எங்கள் துறை இணையதளத்தில் பதிவேற்றமாகிவிடும்.

இந்தக் கையடக்கக் கணினி மூலம் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் வழக்கமான ஆய்வுப் பணியான கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தல், குறைகள் இருந்தால் மாதிரி எடுத்தல், அதனை ஆய் வுக் கூடத்துக்கு அனுப்புதல், பணி குறித்த தினசரி அறிக்கை, வாட்ஸ்-அப் புகார் குறித்து மேற்கொண்ட ஆய்வு ஆகியனவற்றை இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கிறோம்.


பணி மேம்பாடு

அதுமட்டுமல்லாமல் ஆய்வு மேற்கொள்ளும்போது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை உடனுக்குடன் தீர்த்துவைத்து அவர்களது பணியும் மேம்படுத்தப்படுகிறது.

ஆய்வின்போது கடைக்காரர் கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பேச்சுக்கும் இப்போது இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மரம் வளர்ப்போம்; ஆக்சிஜனை பெறுவோம்:

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். 

ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை 700 ரூபாய். 

மூன்று சிலிண்டர்களின் விலை ரூ. 2100. ஒரு ஆண்டு கணக்கு பார்த்தால் ரூ.7, 66,000 மதிப்பிலான ஆக்சிஜனை சுவாசிக்கிறான். 

மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 ஆண்டுகள் என்றால் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. 

இவ்வளவு மதிப்பு மிக்க ஆக்சிஜனை மரங்கள்தான் நமக்கு இலவசமாக தருகிறது.

மரங்கள் இருப்பதால்தான் மனித இனமும் பிற உயிரினங்களும் பூமியில் வாழ்கின்றன. 

அப்படியானால் மரங்களுக்கு எந்தளவிற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். 

மரங்கள் இயற்கை தந்த பொக்கிஷம் என்பதை அனைவரும் உணர வேண்டும். 

ஒரு மரம் தன் வாழ்நாளில் ஆயிரம் கிலோ கார்பன்டை ஆக்சைடை கிரகித்து கொள்கிறது. 

பல ஆண்டுகளாக நாடு வறட்சியை சந்தித்து வருகிறது. வறட்சி எதனால் ஏற்படுகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

நம் முன்னோர்கள் காலத்தில் சரியான அளவில் மழை பெய்து வந்தது. அதனால் வீடு, காடு, ரோடு என கண்ணுக்கு எட்டும் துாரம் எங்கும் மரங்கள் வளர்ந்தன. 

ஆனால் இன்றைய நிலை காடு தோறும் பிளாட், கட்டடங்கள், தொழிற்சாலைகளாக மாறி விட்டதால் மரங்களை அழித்து நமக்கு நாமே தீங்கு செய்கிறோம். 

நம் வசதிக்காக ரோடுகளை அகலப் படுத்துகிறோம் என்ற போர்வையில் அங்கிருந்த எண்ணிலடங்கா மரங்களை வெட்டி விட்டோம். 

மறுபுறம் கழிவுகளாலும், எரிபொருள் மாசுகளால் பூமியை ஒவ்வொருவரும் மாசு படுத்தி வருகிறோம். 

மாசுபடுத்துவதால் எண்ணற்ற நோய், தொந்தரவுகளை நாம் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

நாம் உயிர் வாழ்வதற்கு உணவு பயிர்களை விளைவிக்கும் விளை நிலங்கள் படிப்படியாக விஷமாக மாறி வருகிறது. இதற்கு காரணம் நீர்நிலைகள் முறையாக பராமரிக்காதது, ஆக்கிரமிப்புகளே. 

நீர்நிலைகள் துர்நாற்றம் இன்றி இருந்தால் பொதுமக்கள் பயன்பெற்று வருவார்கள். 

அரசும் இதை கவனத்தில் கொண்டு 
சுற்றுலா தலமாக மாற்றி படகு சவாரி 
ஏற்படுத்தலாம்.

தேவையாகுது கழிவு நீர் சுத்திகரிப்பு

சுற்றுச்சூழல் மாசுபடுவதை ஒருவரால் தடுக்க முடியாது. 

மக்களும் அரசும் இணைந்து முயற்சிக்க வேண்டும். கண்மாய்களுக்கு மழைநீர் வரக்கூடிய கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றி சீரமைக்க வேண்டும். 

தீப்பெட்டி ஆலை கழிவு, இறைச்சி கழிவுகளை நேரடியாக வாய்கால் ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் விடுவதை நிறுத்த வேண்டும். 

நீர்நிலைகளை பாதுகாக்க தனியார் பங்களிப்புடன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கலாம். 

சுத்திகரிக்கப்பட்ட நீரை குளங்களில் சேமித்தால் நிலத்தடி மாசுவை குறைக்கலாம்.

இதையும் பின்பற்றலாமே...

* ஒவ்வொரு ஆண்டும் உலகில் 50,000 கோடி பாலிதீன் பைகள் விற்பனை ஆகின்றன. இவைகள் மண்ணில் மக்காது. 

அதனால் பயன்படுத்திய பாலிதீன் பைகளை வீசி எறியாமல் சேமித்து முறையாக பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம். 

* நம் நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு தலா அரை கிலோ குப்பையை உருவாக்குகிறோம். 

இந்த குப்பை எல்லாம் ஊரில் ஏதோ ஒரு இடத்தில் மலைபோல் தேங்குகிறது. இதை உரமாக்க அரசு துறை முன்வரலாம்.

* தனி நபர் வாகனம் ஒவ்வொரு 5 கி.மீ.,க்கு ஒன்றரை கிலோ கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகிறது. 

அடிக்கடி வாகனங்களை எடுத்து செல்லாமல் நடந்து செல்லலாம். அல்லது சைக்கிளில் செல்லாம். 
பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தலாம்.

தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை

தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை

 *அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி கூறலாமே*

இது நடைமுறைக்கு வர நாமும் ஒத்துழைக்க வேண்டும்

அன்புடன்
 *கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்*
நீலகிரி.

கூடுதல் தகவல்

ஜூன் 05,2018 11:48

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இது வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் முழு அளவில் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிக்கை:

மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பிளாஸ்டிக் உள்ளது.

பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பாட்டீல்கள், கைப்பைகள் உள்ளிட்டவை தடை செய்யப்படுகின்றன.

பால், தயிர், எண்ணெய், மருந்துப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. சேமித்து வைக்கவும் கூடாது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இந்த தடைக்கு பொது மக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத சூழலை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

உங்களைத் தாங்கும் பூமிக்கு நீங்க என்ன செஞ்சீங்க?


இன்று உலக சுற்றுச்சூழல் தினம்... 

உங்களைத் தாங்கும் பூமிக்கு நீங்க என்ன செஞ்சீங்க?


உலக சுற்றுச்சூழல் தினமான இன்று நாம் சில உறுதிமொழிகளை எடுப்பது அவசியமானது.


உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 


சொர்க்கமாக இருந்த பூமி கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் வேறு யாரும் அல்ல மனிதர்களாகிய நாம் தான்.


நாம் என்ன செய்தோம் என்று மட்டும் கேட்காதீர்கள்.


பூமியை பற்றி கவலை இல்லாமல் மரங்களை வெட்டி கட்டிடங்கள் கட்டுவது, வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து மண்டலம் மண்டலமாக புகையை வெளியேற்றி ஒசோன் படலத்தை கெடுப்பது என பல நல்ல காரியங்களை செய்து பூமியை அழித்துக் கொண்டிருக்கும் பெருமை மனிதர்களையே சேரும்.


போதாது


ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுச்சூழல் தினத்தன்று மட்டும் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது, மரங்கள் நடுவது பற்றி பேசினால் போதாது. 


சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா அதனால் என்ன என்ற மெத்தனத்தை முதலில் நாம் கைவிட வேண்டும். 


உறுதிமொழி


இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருக்கும் நாம் 


உலக சுற்றுச்சூழல் தினமான இன்று 

5 *உறுதிமொழிகளை* எடுப்போம்.


உறுதிமொழிகளை ஏற்பது மட்டும் போதாது அதை செயல்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


 *குப்பை* 


கண்ட இடத்தில் குப்பையை வீச மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். 


அருகில் குப்பைத் தொட்டி இல்லாவிட்டால் பேப்பர்களை உங்கள் கைப்பையில் சிறிது நேரம் வைத்திருப்பதில் தவறு இல்லை.


 *பிளாஸ்டிக்* 


நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் பூமியில் மக்காமல் கிடக்கும் தன்மை உடையன. 


அதனால் இனி பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்போம்.


 *மாசு* 


கார், பைக்குகளை அதிக அளவில் பயன்படுத்தி காற்றை மாசுபடுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்போம். 


அருகில் உள்ள இடங்களுக்கு கால்நடையாகவோ அல்லது சைக்கிளிலோ செல்வது நம் உடல் நலத்திற்கும், பூமிக்கும் நல்லது. தண்ணீரை வீணாக்குவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.


 *மரங்கள்* 

மரங்களை வெட்டிவிட்டு நிழல் தேடி அலையும் நாம் இனியாவது மரங்கள் நடுவோம். மரங்களை வெட்டுவதை முடிந்த அளவில் குறைத்துக் கொள்வோம். 


மரங்களின் எண்ணிக்கை குறைய குறைய மழையின் அளவும் குறையும் என்பதை நினைவில் கொள்க.


விலங்குகள், பறவைகள்


அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளை அழிக்காமல் அவைகளின் மதிப்பை உணர்ந்து நடந்து கொள்வோம் என்று உலக சுற்றுச்சூழல் தினமான இன்று உறுதிமொழி எடுப்போம்.


தகவல் பெறும் உரிமை சட்டம் 2005

RTI (Right to Information Act – தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005) முக்கியத்துவம் என்ன ? Right to Information Act, 2005 என்பது பொதுமக்கள் அ...