வரதட்சணை கொடுமைப் புகார்கள்

வரதட்சணை கொடுமைப் புகார்கள் இந்திய தண்டனை சட்டம் - 1860 பிரிவு - 498A, 406,41

இந்திய தண்டனை சட்டம் - பிரிவுகள் 498A, 406, 41 மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ்

காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மனுக்களின் மீது காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்யக்கூடாது. அதேபோல் யாரையும் கைது செய்யவும் கூடாது.

(தீர்ப்பு நகல் எஸ்.முருகேசன் 👇👇👇🌹🌹)


புகாரை பெற்றவுடன் அந்த புகாரை Family Welfare Committee க்கு அனுப்ப வேண்டும். இந்த கமிட்டி ஒவ்வொரு தாலுகா வாரியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். மேலும் இந்த கமிட்டியில் ஒரு வழக்கறிஞர் உட்பட இரண்டு சமூக நல ஆர்வலர்கள் உறுப்பினர்களாக இருந்து காவல்துறையால் அனுப்பப்படும் புகார்களை விசாரித்து அந்த பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

இதற்கு இந்த கமிட்டி ஒரு மாதம் கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு தங்களது அறிக்கையை காவல்துறைக்கு வழங்க வேண்டும்.

அதன்பிறகே காவல்துறை FIR பதிவு செய்ய வேண்டும் என 27.7.2017 ஆம் தேதியில் உச்சநீதிமன்றம்

"ராஜேஷ் சர்மா Vs உத்திர பிரதேச மாநில அரசு"

என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...