அரசுப் பள்ளிக்குப் பரிசு

பந்தலூர்: சிறப்பான சேவை செய்த பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்றம் இரண்டாம் பரிசை பெற்றது.
அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாவட்ட நிர்வாகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து, பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2012-13ம் ஆண்டில் சிறப்பான சேவை செய்த நுகர்வோர் மன்றம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேர்வு செய்யப்பட்டது.
அதில், பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவை 2ம் இடத்தை பிடித்தன. பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜான்மனோகர், இதற்கான பரிசை தலைமையாசிரியர் சாமலேசனிடம் வழங்கினார். மைய தலைவர் சிவசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போலி ரேஷன் கார்டுகளை பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம்



ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டுகளை பிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார். 
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் பொதுவிநியோக திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. ஊட்டியில் நடந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். 
 மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராஜ் பேசியதாவது:
அரசு ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் விலையில்லா அரிசி வழங்கி வருகிறது. சர்க்கரை மற்றும் உணவு பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் ரூ.4900 கோடியை ஒதுக்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் 397 ரேஷன் கடைகள் உள்ளன. 2 லட் சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை ஆகியவை 100 சதவீதமும், பருப்பு வகைகள் 86 சதவீதமும், மண் எண்ணெய் 80 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிப கழகம், மகளிர் குழுக்கள் மூலமாக ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக தெரிந்தால் உடனடியாக இணை பதிவாளருக்கு புகார்கள் தெரிவிக்கலாம். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு குறைவாக இருந்தால் உடனடியாக மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அனைத்து ரேஷன் கார்டுகளிலும் தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதனை பார்த்து உடனடியாக கலெக்டர், மாவட்ட வழங்கல் அலு வலர், மண்டல மேலாளர், இணை பதிவாளர் ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம். ரேஷன் கார்டுகளை அடமானம் வைப்பது, விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். போலி குடும்ப அட்டை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அதனை ஒழிப்பது மட்டுமின்றி பிடித்து கொடுத்தவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்
படும். 
புதிய கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் உரிய சான்றுகள் இணைத்து விண்ணப்பித்தால், ஆய்விற்கு பின் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெயராஜ் பேசினார்.
இக்கூட்டத்தில், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள், ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நுகர்வோர் கூட்டங்களை முறையாக கூட்ட வேண்டும்




ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் ஆலோசனை கூட்டங்களை முறையாக கூட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டப்படும் கூட்டங்கள் முறை யாக கூட்டப்படவில்லை. அரசாணைகளில் காலாண்டிற்கு ஒருமுறை  நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட நுகர்« வார் பாதுகாப்பு குழு கூட்டம் ஆண்டிற்கு இரண்டிற்கு குறையாமல் நடத்தப்பட வேண்டும். மேலும் பொது விநியோக திட்ட ஆலோசனை கூட்டம் இரு மாதங்களுக்கு ஒரு முறைகூட்டப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் ஆண்டிற்கு 4 கூட்டங்கள் மட்டுமே தற்போது கூட்டப்படுகின்றது. மற்ற கூட்டங்களும் முறையாக கூட்டப்பட வேண்டும். எனவே நுகர்வோர் ஆலோசனை கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும்.
அதுபோல எரிவாயு நிறுவன மண்டல அலுவலர்களுடன் நடத்தப்பட வேண்டிய கூட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளாக நீலகிரியில் கூட்டப்படவில்லை.
எனவே எரிவாயு குறைதீர் கூட்டத்தினை விரைவில் கூட்ட வேண்டும். தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் கூட்டம் நடத்தப்படும் போது கூட்டத்தில் பங்கேற்கும் அலுவல்சாரா தன்னார்வ நுகர்வோர் பிரதிநிதிகளுக்கு போக்குவரத்து செலவு தரப்பட வேண்டும் என அராசாணையில் கூறப்பட்டுள்ளது. 
எனவே நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நுகர்வோர் பிரதிநிதிகளுக்கு போக்குவரத்து செலவு வழங்க வேண்டும். மளிகை கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். பல்வேறு உணவகங்கள் மற்றும் மளிகைகடைகள், பெட்டிகடைகளில் கலாவதி உணவு பொருட்கள் முறையான தகவல் பொட்டலமிட்ட தேதி போன்ற முக்கிய தகவல்கள் அச்சிடப்படாமலே விற்பனை செய்யப்படுகின்றன.
இது போன்ற கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு




ஊட்டி,:கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஆகியவை சார்பில் ஊட்டியில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நுகர்வோர் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ்  தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசுகையில், நுகர்வோர் நலன் காக்கும் வகையில் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதை சார்ந்து பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பொருட்களின் தரங்கள் அறிய தரக்குறியீடுகளை வழங்கியுள்ளது. தரமான பொருட்களை வாங்குவதால் நமது பணத்திற்குரிய மதிப்பினை பெற முடிகிறது என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், தரமான பொருட்களை அடையாளம் காணும் வகையில் இந்திய தர கட்டுபாட்டு சட்டம் 1986ன்படி இந்திய தர அமைவனத்தை அமைத்துள்ளது. இந்த அமைவனம் பொருட்களுக்கான தர குறியீடுகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மின் உபயோகம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரையும் உணவு பொருட்களுக்கு அக்மார்க் முத்திரையும், பழவகை உணவு பொருட்களுக்கு எப்.பி.ஒ.,முத்திரையையும், சில்க்மார்க், பிஇஇ., உள்ளிட்ட பல முத்திரைகளை வழங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்து அவை முறைப்படி தயாரிப்பதை உறுதி செய்து இம்முத்திரைகளை வழங்குகிறது. இம்முத்திரைகளை பார்த்து வாங்குவதால் 90 சதவீத நம்பகத்தன்மை ஏற்படுகிறது. நகைக்கடைகளில் ஆல்மார்க் முத்திரை பெற அரசு வலியுறுத்தி உள்ளது. இதனால் ஆல்மார்க் முத்திரை இருந்தால் தங்கத்திற்கான நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது எனவே நுகர்வோர்களாகிய பொதுமக்கள் பொருட்களை வாங்கும் பொது தரமானதா தரக்கட்டுபாட்டு முத்திரைகளை பெற்றுள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய உதவியாளர் சதீஸ் செய்திருந்தார்.

dinakaran news thanks


18 அக்டோபர் 2012 ... கூடலூர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நுகர்வோர் மைய நிர்வாகி...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=108726&cat=504
25 மே 2012 ... ஊட்டி: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையத்தின் மாவட்ட குழு ஆலோசனை ...
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=46365...
26 மே 2012 ... இதனால் மழை காலங்களில் மீண்டும் சேதமடையும் எனகூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் குற்றம்சாட்டியுள்ளது.
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=46617...
3 ஜனவரி 2013 ... கூட்டத்தில் கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புமற்றும் மக்கள் மைய ... விரைவில் இந்த மையம் திறக்கப்படும்.
www.dinakaran.com/District_Detail.asp?Nid=137567&cat=504
16 பிப்ரவரி 2013 ... இலங்கை பயணிகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு00:17:13 ...பந்தலூர், : பந்தலூர் அங்கன்வாடி மையத்தில் பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல்பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=155617
27 அக்டோபர் 2012 ... ஊட்டி, : கூடலூர் சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி... முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=111777&cat=504
28 ஜனவரி 2013... கூடலூர் நுகர்வோர் சுற்று சூழல் பாதுகாப்பு மையம்...கூடலூர், பந்தலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் ஆகியன ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=146974&cat=504
9 ஜூலை 2012 ... இதில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல்பாதுகாப்பு மையம் மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது: ...
www.cinema.dinakaran.com/District_Detail.asp?Nid=64486&cat...
6 ஜூலை 2012 ... 6 தாலுகாவில் 13ம் தேதி நுகர்வோர் குறை தீர் கூட்டம் ...சிறுபான்மையினர் நலஅலுவலர் முன்னிலையிலும், கூடலூர் வட்டாரத்தில் ...மையம் அமைக்க கோரிக்கை · சங்க பொதுக்குழு கூட்டம் ... குழந்தைகள்பாதுகாப்பு சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் ...
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=63290...
31 ஜனவரி 2013 ... பந்தலூர், : பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவைமையத்தின் ... இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=148629&cat=504
18 அக்டோபர் 2012 ... கூடலூர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நுகர்வோர் மைய நிர்வாகி...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=108726&cat=504
25 மே 2012 ... ஊட்டி: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையத்தின் மாவட்ட குழு ஆலோசனை ...
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=46365...
26 மே 2012 ... இதனால் மழை காலங்களில் மீண்டும் சேதமடையும் எனகூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் குற்றம்சாட்டியுள்ளது.
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=46617...
3 ஜனவரி 2013 ... கூட்டத்தில் கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புமற்றும் மக்கள் மைய ... விரைவில் இந்த மையம் திறக்கப்படும்.
www.dinakaran.com/District_Detail.asp?Nid=137567&cat=504
16 பிப்ரவரி 2013 ... இலங்கை பயணிகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு00:17:13 ...பந்தலூர், : பந்தலூர் அங்கன்வாடி மையத்தில் பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல்பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=155617
27 அக்டோபர் 2012 ... ஊட்டி, : கூடலூர் சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி... முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=111777&cat=504
28 ஜனவரி 2013... கூடலூர் நுகர்வோர் சுற்று சூழல் பாதுகாப்பு மையம்...கூடலூர், பந்தலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் ஆகியன ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=146974&cat=504
9 ஜூலை 2012 ... இதில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல்பாதுகாப்பு மையம் மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது: ...
www.cinema.dinakaran.com/District_Detail.asp?Nid=64486&cat...
6 ஜூலை 2012 ... 6 தாலுகாவில் 13ம் தேதி நுகர்வோர் குறை தீர் கூட்டம் ...சிறுபான்மையினர் நலஅலுவலர் முன்னிலையிலும், கூடலூர் வட்டாரத்தில் ...மையம் அமைக்க கோரிக்கை · சங்க பொதுக்குழு கூட்டம் ... குழந்தைகள்பாதுகாப்பு சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் ...
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=63290...
31 ஜனவரி 2013 ... பந்தலூர், : பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவைமையத்தின் ... இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=148629&cat=504
29 அக்டோபர் 2012... என கூடலூர் நுகர்வோர் மையம் வலியுறுத்தியுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் அரசு ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=112322&cat=504
25 பிப்ரவரி 2013 ... MORE VIDEOS. பந்தலூர், : கூடலூர் நுகர்வோர், சுற்றுச்சூழல்பாதுகாப்பு மையம் மற்றும் மேன்கொரேஞ் மருத்துவமனை சார்பில் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=159891&cat=504
13 டிசம்பர் 2012... கூடலூர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி ... சேவை மையம், பந்தலூர் வட்டார நுகர்வோர் சங்கம் இணைந்து ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=129651

சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு


பந்தலூர் புனித சேவியர் உயர்நிலைப்பள்ளியில்
சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு
பந்தலூர், செப். 5:
கூடலூர் நுகர்வோர், மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு உணவுப்பொருள் வழங்கல் துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியவற்றின் சார்பில், சுகாதார விழிப்புணர்வின் அவசியம் என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவி மஞ்சு வரவேற்றார்.
கருத்தரங்குக்கு நுகர்வோர் மன்ற தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து, ஊட்டச்சத்து குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள், சத்தான உணவு உண்பதன் அவசியம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதன் வழிமுறைகள் குறித்து பேசினார்.
பந்தலூர் அரசு மருத்துவமனையின் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் யசோதரன், பேசியதாவது:
இந்தியாவில் காச நோய் பாதிப்பால் 3 நிமிடத்திற்கு 2 பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதன் காரணமாக இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. தொடர் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று காசநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தக்க விழிப்புணர்வு இருந்தால், எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு தலைமை அரசு மருத்துவமனையிலும் நம்பிக்கை மையம் உள்ளது. அங்கு சென்று பரிசோதனை மற்றும் ஆலோசனை பெறலாம்� என்றார்.
இக்கருத்தரங்கில், நுகர்வோர் மைய நிர்வாகி தனிஷ்லாஸ், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், மாணவி கீர்த்தனா நன்றி கூறினார்.

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...