ஈ’ மொய்க்கும் தின்பண்டங்களால் ‘தீங்கு’

‘ஈ’ மொய்க்கும் தின்பண்டங்களால் ‘தீங்கு’ உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு அவசியம்

by SENTHIL
 
விருதுநகர்;விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தின்பண்டங்களை சாப்பிடுவதால் மாணவர்களை நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் காசு கொடுப்பதும், இடைவேளை நேரத்தில், பள்ளி முடிந்ததும் அருகே உள்ள கடைகளில் விற்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். முன்பு பள்ளி அருகே உள்ள பெட்டிகடைகளில் நெல்லிக்காய், கொய்யா, மாங்காய், நாவல் பழம், இலந்தை பழம், பனங்கிழங்கு, பனியாரம், ஆரஞ்சு, கடலை மிட்டாய் என ஏதாவது ஒரு சத்தான தின்பண்டங்களை மாணவர்கள் வாங்கி சாப்பிடுவர். தரமானதாக, சுவையாக இருந்ததால் மாணவர்கள் போட்டி போட்டு வாங்கி சாப்பிட்டு உடல்நலத்தோடு இருந்தனர்.
லாபம் ஒன்றே குறிக்கோள்இன்று லாப நோக்கை மட்டும் கொண்ட வியாபாரிகளால், கிராமங்களில் உள்ள பெட்டிகடைகளில், அதிலும் அரசுப்பள்ளிகள் அருகே உள்ள பெட்டிகடைகளில் தான் தரமற்ற சாக்லெட்டுகள், மிக்ஸர், சிப்ஸ், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஜூஸ், வறுக்கப்பட்ட பொருட்கள், செயற்கை முறையில் கலரூட்டப்பட்ட, பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள் விற்கப்படுகிறது.
சில கடைக்காரர்கள் காலாவதியான மிட்டாய் மற்றும் தின்பண்டங்களை காசாக்கும் நோக்கில் மனிதாபிமானமற்ற நிலையில் பள்ளி அருகே விற்று காசாக்குகின்றனர். மாணவர்கள் தங்கள் பிறந்தநாளுக்கு சாக்லெட் மற்றும் இனிப்புகள் வழங்குகின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் இனிப்புகளில் செயற்கையாக கலரூட்டப்பட்டவை தான் இருக்கின்றன.
போலிகள்
கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரை வித்தியாசம் தெரியாமல் மாற்றி, அதே பெயரில் பேக் செய்து போலி தின்பண்டங்கள் விற்பனை செய்வதும் சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இவ்வாறு போலியாக விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கும், நல்ல தின்பண்டங்களுக்கும் வித்தியாசம் தெரியாத குழந்தைகள் போலியை சாப்பிடுகின்றனர்.
இதுபோன்ற போலி மற்றும் சுகாதாரமற்ற தின்பண்டங்களை சாப்பிடும் குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம், வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் தாக்குகிறது.
மாணவர்கள் பாதிப்பு
ஆரம்பப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது, பள்ளி அருகே சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்பனை செய்யக் கூடாது என சட்டம் கூறுகிறது. இதை பள்ளிகள் மற்றும் கடைக்காரர்கள் உட்பட யாரும் கடைபிடிப்பதில்லை. இதனால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
அவித்த உணவு
மணிகண்டன், சைல்டு லைன், “அரசுப் பள்ளிகள் அருகே ஈ மொய்க்கும் தின்பண்டங்களை விற்கும் கடைகள் பல உள்ளன. இதை பள்ளி ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் முதல் பள்ளி ஆசிரியர்கள் வரை யாரும் கண்டுகொள்வதில்லை. இதற்கு ஒரே தீர்வு, இயற்கை விவசாயத்தில் விளைந்த சத்தான பழங்கள், திணை வகைகள், பயறு வகைகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அவித்த உணவுகளான பனியாரம், புட்டு போன்றவற்றை கடைகளில் விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களின் உடல்நிலையை சீரழிக்கும் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்கும் பெட்டிகடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

இழப்பீடு நுகர்வோர் கோர்ட் உத்தரவு:

பேன் ரெகுலேட்டருக்கு ரூ.20 கூடுதல் வசூல் ரூ.14,020 இழப்பீடு நுகர்வோர் கோர்ட் உத்தரவு:

திருநெல்வேலி
பேன் ரெகுலேட்டர் வாங்கியதில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.20 கூடுதலாக வசூலித்த நெல்லை எலக்ட்ரிக்கல் கடைக்கு ரூ.14 ஆயிரத்து 20 இழப்பீடு வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை சேர்ந்தவர் இசக்கி. இவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நெல்லையில் உள்ள பிரபல எலக்ட்ரிக் கடையில் ரூ.120க்கு பேன் ரெகுலேட்டர் வாங்கியுள்ளார். ஆனால் ரெகுலேட்டர் பாக்ஸில் விலை ரூ.100 என குறிப்பிடப்பட்டிருந்தது. 20 ரூபாய்தன்னிடம் கூடுதலாக வாங்கியிருப்பதாக கடைக்காரருக்கு இசக்கி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பதில் தகவல் ஏதும் வராததால் நெல்லை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பு சார்பில் ரூ.1 லட்சம் நஷ்டஈடு கேட்டு
இசக்கி வழக்கு தொடர்ந்தார். வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் ஜாபர்அலி ஆஜரானார்.வழக்கை நுகர்வோர் கோர்ட் நீதிபதி கிள்ளிவளவன், உறுப்பினர் ராணி ஆகியோர் விசாரித்து, மனுதாரருக்கு
இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்கவும், மனரீதியான உளைச்சலுக்கு ரூ.4 ஆயிரமும், ரெகுலேட்டருக்கு கூடுதலாக வசூலிக்ககப்பட்ட தொகை ரூ.20 சேர்த்து மொத்தம் ரூ.14 ஆயிரத்து 20ஐ ஒரு மாதத்திற்குள் வழங்கவேண்டும் என எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளருக்கு கோர்ட் உத்தரவிட்டது.
Source: http://www.dinamalarnellai.com/web/districtnews/4648

எனது முந்தைய பதிவு:

கூடுதல் விலைக்கு குழல் விளக்கு விற்பனை செய்த கடைக்கு. ரூ 5,000 அபராதம் விதித்தது நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம்,
https://www.facebook.com/groups/685954204947280/permalink/690308984511802/

திறனாய்வுத் தேர்வுகள் ஓர் அறிமுகம்

talent exams introduction in tamil திறனாய்வுத் தேர்வுகள் ஓர் அறிமுகம்

திறனாய்வுத்தேர்வுகள் அறிவோம்



           8 ஆம் வகுப்பு பயிலும்  அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்


   10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தன் உயர்கல்வி செலவு முழுவதையும்  பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்


  இதெல்லாம் சாத்தியமா? என்று ஐயம் தோன்றுகிறதா ?


    இது சாத்தியமே எப்படி என்றால் பள்ளியில் கற்கும் மாணவர்கள்

 அரசால் நடத்தப்படும் திறனாய்வுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் போதும் .


என்ன தேர்வு? யார் யார் எழுதலாம்?எப்படி வினாக்கள் இருக்கும்? போன்ற தங்களின் ஐயங்களை களையவே இந்த பதிவு.




   மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆண்டுதோறும் (NMMS, TRUSTS, NTSE )  என திறனாய்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 மற்றும் ரூ. 1250என அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது .




தேர்வின் பெயர்: தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு (National Mean cum Merit Scholarship)-NMMS

Ø  தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:


    அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள்


Ø   தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:


  7ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்


  தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.


  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :


  அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.


  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .


  தேர்வுக்கட்டணம் ரூ. 50


Ø  தேர்வு நடைமுறை:


   ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


ü  மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST


 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்



இடைவேளை – 20 நிமிடங்கள்


ü  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST


 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்



Ø  தேர்ச்சி முறை:

 MAT மற்றும் SAT  தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் .

(தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றால் போதும்).


 மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு உண்டு.


  ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.


  நாடு முழுவதும் 1,00,000மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வீதம் 4ஆண்டுகள் ( 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை )  தொடர்ந்து அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.



தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத்தேர்வு: (TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAM) TRUSTS



Ø        தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:


    அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/  உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஒனபதாம்  வகுப்பு மாணவர்கள்


Ø   தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:


  8 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்


 தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.


  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :


 ஜூலை அல்லது செப்டமப்ர்  மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.


  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .


  தேர்வுக்கட்டணம் ரூ. 10


Ø  தேர்வு நடைமுறை:


  ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.



  மனத்திறன் தேர்வு (MAT) - MENTAL ABILITY TEST

 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


இடைவேளை – 20 நிமிடங்கள்


  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்



Ø  தேர்ச்சி முறை:


  மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களின்  தரநிலை அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் வரிசைபடுத்தப்படுவர்

.

  வருவாய் மாவட்டத்திற்கு 50மாணவர்கள் மற்றும் 50மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.


  ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரூ. 1000 வழங்கப்படும்.






தேசிய திறனாய்வுத்தேர்வு

 ( NATIONAL TALENT SEARCH EXAMINATIONS)-NTSE



Ø        தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:



        அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்


               NTSE -STAGE 1 – அந்தந்த மாநில அரசால் நடத்தப்படும்


Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :


  ஜூலை அல்லது செப்டம்பர்  மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.


  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .


  தேர்வுக்கட்டணம் ரூ. 50


Ø  தேர்வு நடைமுறை:


  ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.


   90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


  ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 50மதிப்பெண்கள்


பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


Ø  தேர்ச்சி முறை:


ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.


 ஆங்கில மொழித்திறன் தேர்வில் 50மதிப்பெண்களுக்கு 40% மதிப்பெண் பெற்றாலே தகுதியாக கருதப்படும். (இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றிருந்தால் போதும்.)


 மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களின்  தரநிலை அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.




NTSE - STAGE - 2 –  

               மத்திய அரசால் நாடு முழுவதும் நடத்தப்படும்


  தேர்வுக்கட்டணம்¸கிடையாது.


முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

   ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்

  (objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


  வினாத்தாள் இந்தி  மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.



     மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST

 50 வினாக்கள் - 50மதிப்பெண்கள் - 45 நிமிடங்கள்


 ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST –

 50 வினாக்கள் - 50மதிப்பெண்கள் - 45 நிமிடங்கள்


  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

100 வினாக்கள் -  100 மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


தவறான விடைகளுக்கு 1/3பங்கு மதிப்பெண் ( Negative Marks) குறைக்கப்படும்.


Ø  தேர்ச்சி முறை:

 MAT மற்றும் SAT  தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் . (தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மாற்று மாற்றுதிறனாளிகள் 32% பெற்றால் போதும்).


 ஆங்கில மொழித்திறன் தேர்வில் பெறும் மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது.


 மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களின்  தரநிலை அடிப்படையில் தேர்வு செய்யபடுவர்.


  தேர்வு செய்யப்படும் மாணவர்களில்

·          15% தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும்

·          7.5% பழங்குடியின் பிரிவினருக்கும்

·          3%  மாற்றுதிறனாளிகளுக்கும் சலுகை உண்டு.



ü   11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்ந்தோறும் ரூ. 1250வீதமும்


ü  இளங்கலை UG மற்றும் முதுகலை PG –பயிலும்போது  மாதந்தோறும் ரூ. 2000வீதமும்


ü   முனைவர் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை படியும் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.



திறனாய்வுத்தேர்வுகளில் வெற்றி பெற குறிப்புகள் :




    மேற்கண்ட அனைத்து திறனறித்தேர்வுகளிலும்  உள்ள படிப்பறிவுத்திறன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் முந்தைய வகுப்புகளின் பாடப்பகுதிகள் மற்றும் அந்த ஆண்டிற்கான பாடப்பகுதிகளில் தெளிவான ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.


    படிப்பறிவுத்திறன்   (SAT) தேர்வில்


அறிவியல்


கணிதம்


சமுக அறிவியல்


ஆகிய பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.



மனத்திறன் தேர்வில் ( MAT ) அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் பின்வரும் திறன்களை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைந்திருக்கும்.


Ø  பகுத்தாயும் திறன்

Ø  காரணம் அறியும் திறன்

Ø  சிந்திக்கும் திறன்

Ø  முப்பரிமாண வெளியில் கட்சிப்படுத்தி கண்டறியும் திறன்

Ø  முன்னறிவைத் தொடர்பு படுத்தும் திறன்


  போன்ற திறன்களை வெளிப்படுத்த மனத்திதிறன் தேர்வு வினாக்களில் போதிய பயிற்சி அவசியம் ஆகும்.


  மனத்திறன் தேர்வு நன்கு வினாக்களை புரிந்துகொண்டு சரியான திறனை வெளிப்படுத்தி விடையளித்தால் மிக எளியதாக் அமையும்.


மேலும் மனத்திறன் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு  பிற்காலத்தில் அரசுப்பணிகள் தேர்வு எழுதவும், வங்கி மற்று இரயில்வே தேர்வுகளை எழுதவும், குடிமைப்பணி தேர்வு எழுதவும் பெரிதும் துணை செய்யும்.


எனவே தகுதியுடைய அனைத்து மாணவர்களும் திறனாய்வுத்தேர்வுகளில் பங்கேற்று தங்கள் எதிகாலத்தை சிறப்பாக மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்.



தயாரிப்பு :


சே. கணேஷ், பட்டதாரி ஆசிரியர் ,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,
கிளரியம்
திருவாரூர் மாவட்டம்


நன்றி

பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் ஆலோசனை கூட்டம்

பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய
தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். மைய செயலாளர் சு. சிவசுப்பிரமணியம்
வரவேற்றார்.

தேவாலா அரசு பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன்,
 கூடலூர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேஸ்வரன்,
சமூக ஆர்வலர் செல்வகுமார், ,
சேரம்பாடி அரசு பள்ளி ஆசிரியர் கண்ணதாசன்,
சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன்,
மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத்,
 பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் பயிற்றுனர் பூபாலன், மற்றும்
சாருஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திர்மாணம் 1 பயிற்சி மையத்திற்கு மாணவர்கள் அதிகரிக்க முயற்சி எடுத்தல்
குறித்து பேசும்போது   பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேலை வாய்ப்புகள்
மற்றும் அரசு பணி தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் எனவும்
பெற்றோர்களிடம் போட்டி தேர்வுகளின் முக்கியத்துவம் எடுத்து கூறி
மாணவர்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்க்கொள்ளுதல் எனவும்
தீர்மாணிக்கப்பட்டது.

கல்லூரியில் மாணவர்களிடம் முதல்வர் அனுமதி பெற்று வகுப்பறைகளில்
விண்ணப்பம் கொடுத்து மாணவர்கள் சேர்க்கை மேற்க்கொள்ளுதல் எனவும்
தீர்மாணிக்கப்பட்டது.

திர்மாணம் 2 வரும் மாணவ மாணவிகள் தொடர் வருகையை உறுதி செய்வது குறித்து
பேசப்பட்டது,
தொடர் வருகையை உறுதி செய்ய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளுதல்
மற்றும் பெற்றோரிடம் மாணவர்களின் வருகை குறித்த தகவல் உறுதிபடுத்துதல் என
தீர்மாணிக்கப்பட்டது.

திர்மாணம்  3  கட்டணம் நிர்ணயம் மற்றும் பயிற்சி வழங்குதல் குறித்து
விவாதிக்கும்போது
இப்பகுதியில் ஏழை எளிய மக்கள் அதிகம் வசிப்பதால் அவர்களிடம் கட்டணம்
வசூலிப்பது ஏற்புடையதல்ல எனவும், கட்டணம் நிர்ணயம் செய்வதன் மூலம் பலரது
போட்டி தேர்வுக்கான ஆர்வமுள்ள ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அதனால்
மாணவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் தொடர்ந்து கட்டணமில்லா
பயிற்சியை வழங்குவது எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

திர்மாணம் 4  பயிற்சி வழங்குவது குறித்து பேசும்போது
வழக்கம்போல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வழங்குவது எனவும்
தற்போது பயிற்சி வழங்கி வரும் பூபாலன், சேரம்பாடி அரசு பள்ளி ஆசிரியர்
கண்ணதாசன், தேவாலா ஜிடீஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன்,
மற்றும் போட்டி தேர்வுகளை எதிர்க்கொண்டு வெற்றி பெற்ற சாருஹாசன், கூடலூர்
காசிகா பயிற்சி மைய ஆசிரியர் சுரேஷ்குமார், கல்லூரி பேராசிரியர்
மகேஸ்வரன், மற்றும்

தேவைக்கேற்ப இதர ஆசிரியர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள்
மூலம் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பயிற்சி வழங்குவது என
தீர்மாணிக்கப்பட்டது.  மேலும் முக்கிய அரசு பணிகளில் உள்ளவர்கள் மூலம்
ஊக்கப்படுத்துதல் மற்றும் வழிக்காட்டல் முகாமும் நடத்துதல் எனவும்
தீர்மாணிக்கப்பட்டது.

தீர்மாணம் 5  நிதி மேம்பாட்டிற்கு  பயிற்சி மையத்திற்கு கூடுதல்
புரவலர்கள் சேர்த்து அவர்கள் மூலம் நிதிவசூலித்து தேவையான உபகரணங்கள்
வாங்குதல் புத்தகங்கள் மற்றும் தகவல்கள் தயாரித்து மாணவர்களுக்கு குறைந்த
விலையில் வழங்குதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
முடிவில் பயிற்சி மைய பயிற்றுனர் பூபாலன் நன்றி கூறினார்.

தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் விலை 3 மடங்கு அதிகரிப்பு


ரெய்டை காரணம் காட்டி கூடுதல் தொகைக்கு விற்பனை: தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் விலை 3 மடங்கு அதிகரிப்பு

by SENTHIL
தமிழகத்தின் முக்கிய நகரங்களில், போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ரெய்டை காரணம் காட்டி, தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் விலையை, மூன்று மடங்கு அதிகரித்து விற்பனை செய்கின்றனர்.
போலீஸ் உயரதிகாரிகள், குட்கா வியாபாரிகளுடன் கை கோர்த்ததாக எழுந்த புகாரையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். ஒரு பக்கம் ரெய்டு, வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை தொடர்ந்த நிலையில், மறு பக்கம் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து விட்டு, வழக்கமான விற்பனை நடந்து வருகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் சேலத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. போலீஸ் ரெய்டை காரணம் காட்டி, குட்காவின் அதிக பட்ச விற்பனை விலையை தயாரிப்பு நிறுவனம், மூன்று ரூபாய் என நிர்ணயித்து, மொத்த வியாபாரிகளுக்கு, 2.10 ரூபாய்க்கு வழங்குகின்றது. தற்போது அதன் விலையை மொத்த வியாபாரிகள், ஐந்து ரூபாயாகவும், சில்லரை வியாபாரிகள், ஏழு ரூபாயாகவும் உயர்த்தி உள்ளனர். ஹான்ஸ் அதிகபட்ச விலை, 10 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 7.90 ரூபாய்க்கு வாங்கும் மொத்த வியாபாரிகள், 20 ரூபாய்க்கு விற்கின்றனர். சில்லரை வியாபாரிகள், 30 ரூபாய்க்கு விற்கின்றனர். இதேபோல், பான்பராக்கின் அளவை பொறுத்து விலை, ஐந்து ரூபாய் முதல், 10 ரூபாயாக உள்ள நிலையில், 30 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். டிரைவிங் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் இரவு நேர பணியில் ஈடுபடுபவர்கள், அதில் கிடைக்கும் போதை, தூக்கம் வராமல் இருப்பதற்காக, அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவது தொடர்வதால், தமிழகத்தில் திருட்டு விற்பனை கனஜோராக நடக்கிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் குட்கா, ஹான்ஸ் பொருட்களை உண்மையிலேயே போலீஸ் தடை செய்ய நினைத்தால், குடோன்களில் ஸ்டாக் வைத்துள்ள, பெரிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, முழுமையாக தடை செய்ய முடியும். ஆனால், பெரிய வியாபாரிகள் பெரும்பாலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளதால், போலீஸ் உயரதிகாரிகளை வளைத்து போட்டு, தங்கு தடையின்றி விற்பனை செய்கின்றனர். கணக்கு காட்டுவதற்காக, சிறிய வியாபாரிகள் மீது, போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்

Regulator proposes to deploy 62 mobile food lab units across the country


FSSAI plans food safety index to measure performance of States

by SENTHIL
 
Pawan Agarwal, CEO, FSSAI
Regulator proposes to deploy 62 mobile food lab units across the country
NEW DELHI, AUGUST 22:
In a bid to encourage States to have a robust food safety ecosystem, the Food Safety and Standards Authority of India (FSSAI) will soon launch a food safety index to measure their performance on various parameters.
In addition, the food regulator has asked the Indian Railways, which had been earlier slammed by the Comptroller and Auditor General for serving poor quality food, to conduct an internal audit. This will be followed by a third party audit.
Pawan Agarwal, CEO, FSSAI, said here on Tuesday: “We are developing an index that will measure the performance of States on various parameters of food safety to promote positive competition among them. All the States are in agreement on this and we hope to launch this soon.” The various parameters will include status of food safety infrastructure, manpower, enforcement, training capacity and steps to address consumer grievances, among others.
Replying to a query on food safety issues concerning the Railways, he said: “We have asked them to conduct an internal audit first and then we will conduct a third party audit of food safety system in the Railways.”
Agarwal was speaking at an FSSAI event to launch key initiatives, including “Food Safety on Wheels”, to strengthen the country’s food testing infrastructure.Mobile food labs
Under the Food Safety on Wheels initiative, 62 mobile food lab units will be deployed across the country for food testing, public education and awareness and for conducting training and certification programmes. The mobile labs will help officials of various States and Union Territories to enhance their surveillance activities and outreach even in far-flung areas.
The multi-purpose vehicles will have a fully functional laboratory equipped with basic infrastructure for quick testing for detection of common adulterants in various food commodities, FSSAI said in a statement. Nine mobile units were flagged off on Tuesday. The regulator has also launched a digital solution to connect all the government and private food labs to a centralised lab management system called InFolNet (Indian Food Laboratory Network).High-end testing
The regulator is also working on further strengthening 45 State food labs by providing them high-end testing equipment. Other initiatives include conducting Junior Analyst Examination to attract young talent and plans to set up an international training centre in Mumbai in collaboration with the Export Inspection Council.
“We are making a holistic effort by using digital solutions, strengthening food safety infrastructure, enhancing testing and training capacities as well as growing the pool of trained food analysts to give a big push to country’s food testing system,” Agarwal added.
SENTHIL | 

தரமற்ற, போலி டீத்தூள் பயன்பாடு:

தரமற்ற, போலி டீத்தூள் பயன்பாடு: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

by SENTHIL
நாமக்கல்: நாமக்கல் அதன் சுற்று வட்டாரத்தில் செயல்படும் டீக்கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் உத்தரவின்படி, அலுவலர்கள் பாஸ்கரன், பாலமுருகன் ஆகியோர், நாமக்கல்லில் உள்ள டீக்கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தரமான டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா, பால் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், போலி அல்லது கலப்பட டீத்தூளை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் எச்சரித்தனர். 
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர் கவிக்குமார் கூறியதாவது: மாவட்டத்தில், நான்கு மாதங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், 73 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 18 லட்சம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல், தற்போது வரை, 31 கிலோ வரை தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலப்பட, காலாவதியான, தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை குறித்து, 94440-12322 என்ற, வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால், 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

குறைதீர் நீதிமன்றம் தீர்ப்பு.

கடன் பெறுவதற்காக வழங்கிய ஆவணத்தை தொலைத்த வங்கிக்கு ரூ.8 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு:

வீட்டுக் கடன் பெறுவதற்காக வாடிக்கையாளர் வழங்கிய ஆவணங்களைத் தொலைத்த வங்கிக்கு, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரூ.8 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கோவை,  பீளமேடு அருகேயுள்ள வீரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கிடுபதி. இவர் வீட்டுக் கடன் பெறுவதற்காக காளப்பட்டியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் கிளையை கடந்த 2008-ஆம் ஆண்டில் அணுகியுள்ளார். வீட்டுக் கடன் பெறுவதற்காக தனது சொத்துப் பத்திரம், வங்கி அதிகாரிகள் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் வழங்கியுள்ளார்
ஆனால், பல மாதங்களாகியும் கடன் வழங்கப்படாமலும் ஆவணங்கள் திரும்பி வழங்காமலும் இவர்அலைக்கழிக்கப்பட்டுள்ளார். ஆவணங்களை திருப்பிக் கேட்டபோது, அவை தொலைந்துவிட்டதாக வங்கி அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து சேவைக் குறைபாடுக்காக வங்கி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெங்கிடுபதி கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன், வாடிக்கையாளரின் ஆவணத்தை தொலைத்ததுடன் அவரை அலைக்கழித்ததற்காக சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ.8 லட்சம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், மனுதாரருக்கு வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதுடன், ஆவணங்கள் தொலைந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, தொலைந்த ஆவணங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Source : dinamani   Published on : 21st December 2016

வங்கி சேவை குறைபாடு சார்பான எனது முந்தைய பதிவுகள்:
கடனை செலுத்தியும் ஆவணம் தராத நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/118481116832943
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688314954711205/
தொலைந்துபோன ஏடிஎம் அட்டையை உடனடியாக முடக்காத வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688190528056981/
Consumer forum imposes Rs 1 lakh fine on SBI CreditCard
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1173404539470095
ஒரிஜினல் ஆவணங்களை திருப்பி வழங்காத எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ 8 ஆயிரம் அபராதம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் தீர்ப்பு.
https://www.facebook.com/groups/685954204947280/permalink/689545991254768/

குறைதீர் நீதிமன்றம் தீர்ப்பு.

கடன் பெறுவதற்காக வழங்கிய ஆவணத்தை தொலைத்த வங்கிக்கு ரூ.8 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு:

வீட்டுக் கடன் பெறுவதற்காக வாடிக்கையாளர் வழங்கிய ஆவணங்களைத் தொலைத்த வங்கிக்கு, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரூ.8 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கோவை,  பீளமேடு அருகேயுள்ள வீரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கிடுபதி. இவர் வீட்டுக் கடன் பெறுவதற்காக காளப்பட்டியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் கிளையை கடந்த 2008-ஆம் ஆண்டில் அணுகியுள்ளார். வீட்டுக் கடன் பெறுவதற்காக தனது சொத்துப் பத்திரம், வங்கி அதிகாரிகள் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் வழங்கியுள்ளார்
ஆனால், பல மாதங்களாகியும் கடன் வழங்கப்படாமலும் ஆவணங்கள் திரும்பி வழங்காமலும் இவர்அலைக்கழிக்கப்பட்டுள்ளார். ஆவணங்களை திருப்பிக் கேட்டபோது, அவை தொலைந்துவிட்டதாக வங்கி அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து சேவைக் குறைபாடுக்காக வங்கி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெங்கிடுபதி கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன், வாடிக்கையாளரின் ஆவணத்தை தொலைத்ததுடன் அவரை அலைக்கழித்ததற்காக சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ.8 லட்சம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், மனுதாரருக்கு வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதுடன், ஆவணங்கள் தொலைந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, தொலைந்த ஆவணங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Source : dinamani   Published on : 21st December 2016

வங்கி சேவை குறைபாடு சார்பான எனது முந்தைய பதிவுகள்:
கடனை செலுத்தியும் ஆவணம் தராத நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/118481116832943
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688314954711205/
தொலைந்துபோன ஏடிஎம் அட்டையை உடனடியாக முடக்காத வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688190528056981/
Consumer forum imposes Rs 1 lakh fine on SBI CreditCard
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1173404539470095
ஒரிஜினல் ஆவணங்களை திருப்பி வழங்காத எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ 8 ஆயிரம் அபராதம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் தீர்ப்பு.
https://www.facebook.com/groups/685954204947280/permalink/689545991254768/

கடை அரிசியும் கடைசித் தலைமுறை விவசாயிகளும்..

Siragu kadai arisi1
“கடை அரிசி வாங்கி சாப்பிடுறவன்லாம் பேச வந்துட்டான்” என்னும் சொலவடை எங்கள் ஊரில் வழங்கப்பட்டு வந்த மிகப்பெரிய அவமான சுட்டு வாக்கியம்..
தன் உழைப்பில் ஈட்டாமல், அந்த உழைப்பில் விளைவித்ததோ அல்லது வேலைசெய்து நெல் கூலி வாங்கியோ உழைக்காமல் சமைத்து உண்ணும் சோறு என்பது மிகப்பெரிய அவமானமாக வாக்கியமாக எடுத்தாளப்பட்டது, நான் சிறுவனாக இருந்த அந்தக்காலத்தில்..
இப்போது, நாங்கள் அரிசியை கடையில் மட்டுமே வாங்கி உணவை உண்ணும் ஒவ்வொரு வேளையின் போதும் உணர்கிறேன்.. நாமே விளைவித்த ஒரு தக்காளியாவது அந்த உணவில் சேர்த்து அந்த அவமானத்தை ஈடுகட்டவேண்டும் என்று.. நமக்காக காய்கறிகளையாவது நாமே உற்பத்தி செய்ய வேண்டும்..
என் அப்பா, நான் பெங்களூரில் வசித்தபோதும்கூட “நீயும் கடை அரிசி சாப்பிடுபவந்தானா” என்று கிண்டல் பேசுவது உண்டு:) மூட்டை முடிச்சுகளுடன் எங்கள் வயலில் விளைந்த அரிசியை, காய்கறிகளை, கீரைக்கட்டுகளை பெங்களூருக்கு அம்மாவும் அப்பாவும் ஊரிலிருந்து வரும்போதெல்லாம் சுமந்து கொண்டு வருவார்கள். அவர்கள் சுமந்து வரும்போது வருத்தமாக இருந்தாலும் உண்ணும்போது அத்தனை திருப்தியாக, ருசியாக இருக்கும்! ஊருக்குச் சென்று அமெரிக்காவுக்குத் திரும்பும் ஒவ்வொருமுறையும் வயலில் விளைந்த அரிசியை எடுத்துவர அனுமதி இல்லையென்று அம்மாவிடம் வருத்தமாக, ஏக்கமாகச் சொன்னாலும்கூட அரைக்காப்படி அளவாவது அம்மா அன்புடன் என் பெட்டியில் திணித்து அனுப்பிய வயலில் விளைந்த நெல் அரிசி என் பெட்டியில் இருக்கும்!.
Siragu kadai arisi3
நாம் ஒவ்வொருவருமே, இந்த அல்லது கடந்த தலைமுறையில் இல்லாவிட்டாலும், சில தலைமுறைகளுக்கு முன்பாகவாவது, விவசாயத் தலைமுறையாகத்தான் இருந்திருப்போம். விவசாயம் வெறும் வணிக நோக்கோடும், நுகர்வு நோக்கோடும் மட்டும் பார்க்கவேண்டிய ஒரு தொழில்முறை அல்ல. மனித இனம் மட்டுமின்றி, இயற்கை வளத்தையும் காக்கும் தன்மைகொண்ட பல பரிமாணங்களில் நோக்க வேண்டிய இயற்கை சார்ந்த வாழ்வியல் முறை. தலைமுறை தலைமுறையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படித்தான் விவசாய வாழ்வியல் இருந்து வருகிறது. செழித்துக் கொழித்து விளைந்து வந்த வயல் நிலங்களின் நிலை இன்று பரிதாப நிலையில் இருப்பது வேதனையான ஒரு சூழல். நமது அனுபவத்தில் நேரடியாக நாம் பார்த்தவாறு, பத்தடி ஆழத்தில் கூடச் சுரந்து வந்த நிலத்தடி நீர், இப்போது ஆயிரம் அடிகள் துளைத்தும் கிடைக்காத அவல நிலையைப் பார்க்கும் நிலை வந்திருக்கிறது. வயலுக்கு நீர் இல்லை என்பதையும் தாண்டி, குடிக்கக் கூட நீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையையும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் அனுபவித்து வருகிறது. இயற்கை வளங்களைச் சூறாடி, வளர்ச்சி என்ற பெயரில் நீர்வளங்களை அழித்து மரங்களற்ற, மழைகளற்ற வரட்டு நிலங்களாக, வறண்ட நிலங்களாகத்தான் அடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச் செல்கிறோம்..
வலைத்தமிழ் வானொலியில், ‘விவசாயம் பேசுவோம்’ என்னும் வாராந்திர வானொலித் தொடர் நிகழ்ச்சியில் (hosted by ValaiTamil Radio & AIMS India Foundation), மரபு விவசாயத்தில் சிறப்பான மாற்றங்களை உருவாக்கி வரும் பல்வேறு விவசாய வல்லுனர்களை நேர்முகம் செய்து நான் வலியுறுத்தியது போல, நம் வீட்டு முற்றத்தில், வீட்டின் பின்புறத்தில் நட்டு நாம் ஒருசில காய்கறிச் செடிகளை விளைவித்தால் கூட நாமும் விவசாயிதான். விவசாயத்தின் எச்சமாக, நாம் இருக்கும் இடத்திலேயே, குறைந்தது காய்கறிகளையாவது நட்டு வளர்த்து நமது சுயசார்புத் தன்மையுடன், ஆரோக்கியமான உணவு உண்ணும் அடுத்த தலைமுறைகளை உருவாக்குவோம். இப்போது நமக்குக் கடைகளில் அதிகம் கிடைப்பதெல்லாம் ‘உணவு போல்’ தோற்றமளிக்கும் உணவுப்பொருட்கள் தான். கொடை உணர்வோடு உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அல்ல. ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமெனில் ‘These days we do not get food products in the shops.. but ‘food-like’ products
Siragu kadai arisi6
தன்வீட்டுத் தோட்டத்தில் 40+ வகைக் தாவரங்களை (காய்கறிகள் கீரைகள் உட்பட) வளர்த்துவரும் / வளர்க்க மற்றவர்களையும் தூண்டி தங்கள் வீட்டுப் பின்புறத்தையே காய்கறித் தோட்டமாக்கி மற்றவர்களுக்கும் பயிற்சி கொடுத்துவரும் ஹியூஸ்டன் தோழி மைதிலி தியாகு, நியூஜெர்ஸி தோழி கவிதா, வர்ஜீனியா தோழர் அன்புமணி, சிகாகோ தோழர் சவடா போன்றவர்களையும் இந்த நேரத்தில் அன்புகூர்ந்து, பிரமிப்புடன் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். வீட்டில் தோட்டமிடும் தோழர்கள் & தோழிகள், உங்கள் பெயர்களை/படங்களை சிறகு இதழுக்கு அனுப்புங்கள்.. பார்ப்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும்..
இப்போதும் கடை அரிசி பற்றிய சொலவடை ஊரில் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருக்காது என்றே நினைக்கிறேன். விவசாயம் நொடித்துப் போயிருக்கும் இந்த சூழ்நிலையிலும் அரசாங்கமே தானமாக (அல்லது தந்திரமாக!) குடும்ப அட்டை மூலம் வழங்கும் இலவச அரிசியும் கொடுத்துவரும் சூழலிலும் இப்போது அந்த குடும்ப அட்டையும் பரிபோகும் நிலையையும் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த நிலையில், ‘கடை அரிசியே கதி’யென்று ஊர்சனமும், ஊரைத் துறந்து விவசாயம் துறந்து, பல்வேறு நகரங்களுக்கும் நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த விவசாயத் தலைமுறைகளும் உலகமெங்கும் இருக்கக்கூடும்..
*இப்புவியில் பிறந்ததற்காய்
நற்செயல்கள் விட்டுப் போ!
இல்லையேல் நல்விதைகள்
சிலவேனும் நட்டுப்போ* என்று எப்போதோ நான் எழுதிய கவிதை வரிகளையும் இந்தச் சூழலில் நினைவுகூர்கிறேன்..
இதுபோலவே அன்பகலாத ஆற்று நீருக்கு நன்றி கூறும் ஆடிப்பெருக்கு நினைவுகளையும் நினைத்துப்பார்க்கிறோம். எழுச்சிமிகு எங்கள் திருச்சியில் கரைகள் மிரளத் திரண்டு வரும் காவிரிக் கரைகளில் திரளும் கூட்டம் கூட்டமாகத் திரளும் மக்கள் வெள்ளத்துடன் வெல்லம், அரிசி, எள் என்று படைத்துத் தின்று இன்புற்று எங்கள் மருத நிலப் பூமியில் ஆடிப்பெருக்கு அன்றும் தீபாவளி பொங்கல் பண்டிகைக்கு நிகராக அவ்வளவு பூரிப்புடன் காவிரி ஆற்று நீரை வணங்கிப் புத்தாடைகளுடன் புத்துணர்வுடன் ஆயிரக்கணக்கில் கூடிக் கொண்டாடினோம்.
ஆடி சீர் என்றே எங்கள் வீட்டு சகோதரிகளின் வீடுகளுக்கு பசு, ஆடு உட்பட சீர்வகைகளை வண்டிமாடுகள் கட்டிப் பங்காளி உறவினர்களுடன் சென்று விருந்து வைத்துக் கொண்டாடினோம்..
அந்த அற்புத நாட்கள் எல்லாம் எங்கே? ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பதெல்லாம் ஆடி அயர்ந்து அடிபட்டு விதையற்ற கனிகளையும் ‘உணவுபோல் காட்சியளித்து’ நம்மையே கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் ரசாயனக் கலவைகளை உண்டு வாழும் நுகர்வுக்கலாச்சார அடிமை இனங்களாக ஆகிவிட்டோமோ?
ஆற்று நீரே அற்றுப் போகுமோ.. நாம் கண்ட ஆற்று நீர்த் திரள் காட்சிகளை நமது அடுத்தத் தலைமுறைகள் காணாமல் விவசாயக் குடும்பங்களில் இருந்து வெளிவந்த ‘முதல் தலைமுறை’ என்று பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டிருக்கும் பெரும்பாலான நாம், ‘விவசாயத்தின் கடைசித் தலைமுறைகளாக ஆகிவிட்டோமோ என்ற அச்சத்துடன் நமது கண்களில் தான் நீர்.. ஆறுகளாக..
Siragu kadai arisi2
விவசாயம் காப்போம்.. நீர்நிலைகளை, சுயசார்பு வாழ்வியலை மீட்டெடுப்போம். அடுத்த தலைமுறைகளுக்கும் விவசாயத்தின் மேன்மையைப் புரியவைப்போம். தன்வீட்டுத் தோட்டத்தில் குறைந்தது காய்கறிகள் கீரைகளேனும் வளர்க்க நாமே முன்னுதாரணங்களாகி, நமது தலைமுறையினரையும் நமது அடுத்தடுத்தத் தலைமுறையினரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துவோம்..

உப்பட்டியில் இரத்ததான முகாம்

டெங்கு காய்ச்சல் பரவுவதால் அதனை தடுக்க இரத்த தேவை அதிகமாக உள்ளது அதனால் உப்பட்டியில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

உப்பட்டி எஸ் ஒய் எஸ் கிளை அலுவலகத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கூடலூர் அரசு இரத்த வங்கி, உப்பட்டி எஸ்எஸ்எப் எஸ் ஒய் எஸ் கிளை, உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன இணைந்து இரத்ததானம்  முகாமினை நடத்தின.

முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி. காளிமுத்து தலைமை தாங்கினார்.  உப்பட்டி எஸ் ஒய் எஸ் கிளை நிர்வாகி ஐமுட்டி முன்னிலை வகித்தார்.

கூடலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சாந்தி தலைமையிலான குழுவினர் கொடையாளர்களிம் இருந்து  இரத்ததானம் சேகரித்தனர். 20 பேர் இரத்த தானம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் இரத்த பரிசோதனை செய்து இரத்த கொடையாளர்கள் பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சு. சிவசுப்பிரமணியம், இரத்த வங்கி செவிலியர்கள் வசந்த், ரெக்சினா, மற்றும் எஸ்ஒய்எப் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு நோட்டீஸ்! – உணவு பாதுகாப்பு துறை தடாலடி

ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு நோட்டீஸ்! – உணவு பாதுகாப்பு துறை தடாலடி

by SENTHIL
கோவை : கொசு உற்பத்தி செய்ய ஏதுவாக சுகாதாரமற்ற முறையில் பராமரித்த ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க, சுகாதார துறை சார்பில், தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இருப்பினும் கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கோவை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், டாஸ்மாக் பார்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை உணவுப்பிரிவு நியமன அலுவலர் விஜய் கூறியதாவது:ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில், தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுகளில், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கப்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இவற்றில் தேங்கும் நீர் வாயிலாக, கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்பட வழி இருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. அவை உடனடியாக அகற்றப்பட்டன. பிளாஸ்டிக் தட்டுகள், காலியான அட்டைப்பெட்டிகள், பாட்டில்களை உடனுக்குடன் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டல்களில் சமையலுக்காக பயன்படுத்த, ஏழு நாட்களுக்கு மேல் தண்ணீர் பிடித்து வைக்கக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீரை திறந்து வைக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கும் நிலையில் உள்ள இடங்களை, உடனடியாக சரி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம் பின்பற்றாத ஓட்டல்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Food Adulteration: The Muck in Milk

Food Adulteration: The Muck in Milk

by SENTHIL
 
Even as the apex court had directed the government to amend the Food Safety and Standards Act and IPC to award life imprisonment for milk adulterators, studies have found the presence of coliform bacteria in it~By Ramesh Menon
Some things do not change in India. Like the adulteration of milk. First it was done with plain water, then it was chemicals that included detergent. And now a study done by the Consumer Education and Research Centre (CERC) at Ahmedabad has found that 70 percent of loose milk sold is unfit for human consumption. Out of 55 loose milk samples tested, 38 were found to contain coliform bacteria indicating faecal contamination. This could be due to milch cattle not being washed properly, leading to dung falling into the milk vessel. It could also be due to contaminated water being used to adulterate the milk.
DAMAGING EFFECTS
Coliform bacteria can cause diarrhoea, vomiting, urinary tract infections and typhoid. Unless boiled or pasteurised, milk in the raw form can be dangerous. Thirty-one of the 55 samples tested were graded fair to poor in tests that measured contamination by bacteria which can cause gastroenteritis, food poisoning and intestinal irritation.
Milk adulteration has been going on for a long time. In 2014, the UP government in a startling admission told the Supreme Court that adulteration of milk was rampant in the state. Vijay Bahadur, assistant commissioner (food safety), Uttar Pradesh Food Safety and Drug Authority, said the menace was most rampant during festival seasons when the demand for milk rises.
In an affidavit, the UP government admitted that it had actually failed to take effective steps to curb it. It pointed out that out of the 4,503 samples collected between January 2012 and May 2013, 1,280 were found to be adulterated with detergent, starch, carbohydrate and whitener. Another sample size of 613 found that 207 samples were adulterated. The worst cases of adulteration were from Faizabad, Moradabad, Agra and Saharanpur.
Last year, the Bombay High Court took note of milk adulteration and directed the Maharashtra government and the Commissioner of Food and Drugs Administration to spell out how it planned to deal with this as the health of the public and children was at risk.
UNHYGIENIC HANDLING
Incidentally, due to its high nutritive value and moisture content, milk is an excellent medium for the growth of microorganisms. Microbial content in it depends on the living conditions and hygiene in sheds of milch cattle and the cleanliness of those milking them, the animals and vessels. Once micro-organisms enter milk, they multiply due to the warm ambient temperature, resulting in rapid deterioration. As there are no regulations on hygiene in barns, cleanliness is given the go-by.
Union Minister of Agriculture and Farmers Welfare, Radha Mohan Singh, visits Mother Dairy Milk outlets in Delhi.
Pritee Shah, chief general manager, CERC, Ahmedabad, told India Legal: “Milch cattle eat garbage and plastic instead of nutritious fodder. There is lack of hygiene while milking, collection, storage and distribution of milk. You can’t trust local doodhwallas to adhere to safety standards. Today, it is vital to buy only packed and pasteurised milk.”
India is not only the largest producer but also the largest consumer of milk in the world. The organised dairy sector pasteurises and packs only 25-30 percent of milk. The remaining is either locally consumed or handled by the unorganised sector in an unhygienic manner.
HAZARDOUS ADULTERANTS
A 2016 study in Mirzapur, UP, of milk adulteration done by Pooja Jaiswal of Benaras Hindu University and SK Goyal, assistant professor, KVK Institute of Agricultural Sciences, Mirzapur, showed that 20 percent of milk samples contained urea, 44 percent had salt and 36 percent, soap. As many as 42 percent of the samples were found to contain skimmed milk powder to increase the weight or relative mass of natural milk, while ten percent were found to contain glucose to prolong the keeping quality of milk. Formalin was also found in 36 percent for the same reason.
Another study done by Maitreyi College in Delhi that tested 75 milk samples from Delhi, Faridabad, Gurgaon and Noida found that most of them had neutralisers, skimmed milk powder, urea, detergent and ammonium sulphate. Neutralisers are usually added to prevent curdling and increase the shelf-life of milk. They could be added in the form of caustic soda, sodium bicarbonate and sodium carbonate. Skimmed milk power was found in all the samples.
A local shop in Delhi selling milk-made products.
In 2011, the “Executive Summary on National Survey on Milk Adulteration” released by the Foods Safety and Standards Authority of India (FSSAI) pointed out that at the national level, 68.4 percent of milk being sold was adulterated. It said the worst performers were Bihar, Chhattisgarh, Odisha, West Bengal, Mizoram, Jharkhand and Daman and Diu, where adulteration in milk was found up to 100 percent! This Authority was established under the Food Safety and Standards Act (FSSA), 2006. The Act not only replaces the Prevention of Food Adulteration Act 1954 but also consolidates other food acts such as the Fruits Product Order, Meat Food Products Order, Vegetable Oil Products (control) Order and the Milk and Milk Products order.
So how can this menace be curbed? Ashish Bahuguna, chairman of the FSSAI, said that milk adulteration is more in North India than the South. A kit has been produced to check the quality of milk by FSSAI. It is presently negotiating with investors and entrepreneurs to mass produce and market it.
LIFE IMPRISONMENT
A year ago, a Supreme Court bench had asked both the centre and the states to look at amending the FSSA and also the IPC so that those who adulterate milk can be awarded life imprisonment. Referring to its orders of December 5, 2013 and December 10, 2014, the apex court said: “It will be in order, if the Union of India considers making suitable amendments in the penal provisions at par with the provisions contained in the State amendments to the Indian Penal Code” by Uttar Pradesh, West Bengal and Odisha governments, which have enhanced the punishment for adulteration of food and products to life imprisonment.
Speaking for the bench, Justice R Banumathi had said: “Since in India traditionally infants and children are fed milk, adulteration of milk and its products is a concern and stringent measures need to be taken to combat it. The consumption of adulterated milk and adulterated milk products is hazardous to human health.”
Coliform bacteria can cause diarrhoea, vomiting, urinary tract infections and typhoid. Unless boiled or pasteurised, milk in the raw form can be dangerous.
The direction by the apex court to make milk adulteration punishable with life imprisonment came after a PIL was filed by an Uttarakhand-based religious seer Swami Achyutanand Tirth. He had highlighted the menace of growing sales of adulterated and synthetic milk in different parts of the country.
Last year, Harsh Vardhan, the science and technology minister told the Lok Sabha that over 68 percent of milk in the country does not conform to standards laid down by the food regulator. He added that the most common adulterants found in milk were detergent, caustic soda, glucose, white paint and refined oil, considered “very hazardous” as it could lead to serious ailments.
Milk sold in packets is more hygienic than milk sold raw.
In olden days, there were no pasteurisation units and the milkman supplied the milk. But then cattle grazed in lush green fields, were healthy and well-fed. Today, milch animals are just seen as vehicles to make money. They live in cramped sheds that are dirty, full of dung and urine and are let out into the open, where they feed mainly on waste found in polythene bags. As there is no law on hygiene and cleanliness, the local milkman does not want to incur extra costs to ensure that the milk is unadulterated.
But with reports of coliform in it, there are enough reasons to worry.

Misleading to call soya, almond beverages ‘milk’, says Parag Foods by SENTHIL


Misleading to call soya, almond beverages ‘milk’, says Parag Foods

by SENTHIL
 
“Only milk obtained from milch animals can be called milk. Soya/badam drinks can only be called as substitute of milk or alternative to milk, but they cannot be termed as milk”
NEW DELHI, AUGUST 17:
Dairy company Parag Milk Foods has raised concerns on plant-based soy or almond-based beverage makers classifying their product as milk.
Devendra Shah, Chairman, Parag Milk Foods, said: “According to the regulations, only milk obtained from milch animals can be defined as milk”. He added that as per the regulations, even toned milk or full-cream milk should be made out of milk or milk products obtained exclusively from animal-sourced milk and should not contain any other substances.
“One can’t promote soy and almond milk, the same as milk , in contravention of the provisions of food safety law. Therefore, the association of the word ‘milk’ with soya or almond beverages is quite misleading and should not be permitted to be sold as soya or almond Milk,” he added.
In a letter to the Food Safety and Standards Authority of India, the company has said that under the FSS Act and Regulations, beverages having vegetable plant origin and having milky appearance sourced from soyabean and almond cannot be termed as milk.
“Manufacturing and selling of soya/badam beverage as soya/badam milk is misleading. These drinks can only be called as substitute of milk or alternative to milk, but they cannot be termed as milk as per Food Safety and Standards ( Food products and Food Additives) Regulations 2011,” the letter stated.
Non-milk alternatives
According to Euromonitor, non-dairy milk alternatives in India are still in the nascent stage and have pegged the retail value sales of soy milk currently at about ₹106 crore. The category is expected to grow at 15.7 per cent CAGR in the country in 2017-2022 period, it said.
This concern comes at a time when a similar debate has been raised in more developed markets of Soy Milk such as the United States. According to media reports, traditional dairy companies and makers of plant-based alternatives are locked in a battle over labelling norms of plant-based alternatives in the US since the beginning of this year.
Ashwin Bhadri, CEO, Equinox Labs, said: “ For more clarity for consumers, additional disclaimer such as “non-dairy milk” can be put on the labels of such products. It becomes a bigger concern, if someone is marketing flavoured milk as almond milk or soy milk.”

அடிப்படை குடிமைக் கடமையை ஏற்கும் உறுதிமொழி

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
கீழ்கண்ட உறுதிமொழியை

 தேசிய கொடியை ஏற்றிய பின் அனைவரும் வாசித்து ஏற்றுக்கொள்ளச் செய்தால் நன்றாக இருக்கும்.

$#################

அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 51 (அ) படி
அடிப்படை குடிமைக் கடமையை ஏற்கும் உறுதிமொழி

############################

 அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடந்து, அதன் குறிக்கோள்களையும், அரசியல் அமைப்புச்சட்டத்தின் பல்வேறு அமைப்புகளையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதிப்பேன்.

 நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட உன்னதமான குறிக்கோள்களைப் போற்றி அதன்படி நடப்பேன். இந்தியாவின் இறையான்மையையும் முழுமையையும் கடைபிடித்துக் காப்பேன்.

 நாட்டைப் பாதுகாத்து, நாட்டுப் பணி ஆற்றுவதற்கென்று அழைக்கப்படும் பொழுதெல்லாம் உடனுக்குடன் பணியாற்றுவேன்.

 மதம், மொழி, இனம், போன்ற வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் அனைவரிடமும் மனப்பூர்வமான சகோதரபாவத்தையும் நல் இணக்கத்தையும் வளர்ப்பேன்.

 மகளிரின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் பழக்க வழக்கங்களைக் கைவிடுவேன்.

 பன்முகத் தன்மையுள்ள நமது கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாப்பேன்.

 இயற்கைச் சுற்றுச் சூழலையும், ஆறுகள், காடுகள், வன உயிர்கள் ஆகியவற்றையும் பாதுகாத்து மேம்படுத்துவேன்.

 உயிரினங்கள் அனைத்திடமும் பரிவு காட்டுவேன்.

 அறிவியல் மனப்போக்கு, மனித நேயம், ஆராய்ச்சிகளிலும் சீர்திருத்தங்களிலும் ஆர்வம், போன்ற பண்புகளை எந்நாளும் வளர்ப்பேன்.

 பொதுச் சொத்தை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பேன். வன்முறையை அறவே தவிர்ப்பேன்.

 நாடு தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் வகையில் தனி மனித மற்றும் கூட்டுச் செயல்பாடுகள் அனைத்துத் துறைகளிலும் உன்னதத்தை அடைய ஓயாது பாடுபடுவேன்.






*நம்பிக்கையையே*

*பதினாறு வகையான அர்தங்கள்*
-------------------------------------------------

1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]

9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.



10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு
*நம்பிக்கையையே* ஆகும்.

15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!
எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?

1. ஜனவரி 26 (குடியரசு தினம்)
2. மே 1 (உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)
4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)

2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?

ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?

உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம்.

ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

5. கிராம சபையின் தலைவர் யார்?

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது
துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம்.

இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

6. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?

உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும். அதேபோல,
உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை
501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்.

3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் ,

10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும்
கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை.
 [அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]

7. தேவையான குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன?

அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

8. கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?

சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

9. எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?

உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம்.

பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.

உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம்.

ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.

மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும்.

அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.

10. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா?

இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.

இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.

11. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?

முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை.

பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.

கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

12. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா?
அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?

கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும்.

அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

13. கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?

இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை.

எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை.

முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.

14. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?

பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள்.

 கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.

15. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும் ?

கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது.

ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை,
சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ]
வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்

16. சிறப்பு கிராம சபை என்றால் என்ன?

தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும்.
1. ஜனவரி 26 (குடியரசு தினம்)

2. மே 1 (உழைப்பாளர் தினம்)

3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)

4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)

இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம்.
அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.

17. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?

சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்து தலைவர் மறுத்தால்,
மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு
[சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பர்] சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.

18. கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பித் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.

19. முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன?

* மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது
* மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது
* மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்
* பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்
* கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது

20. கிராம சபையில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டுமா? அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா?

அனைவரும் தரையில்தான் அமரவேண்டும்.
முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.

21. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?

கலந்துகொள்ளலாம்.

ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர்.

மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.

22. இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?

முடியாது.
உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள்.

எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்

உள்ளாட்சி அமைப்புகள்: அடிப்படை கேள்விகள்

1. ஏன் இதை புதிய பஞ்சாயத்து என அழைக்கிறோம்?

1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம்,
இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சரத்துக்களை கொண்டிருந்தது.

அதில் குறிப்பாக;
மாநில நிதி ஆணையம்,
மாநில தேர்தல் ஆணையம்,
கிராம சபை,
மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய சரத்துக்களை இருந்தன.

எனவே இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் என்பதால் இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் என அழைக்கிறோம்.

2. பஞ்சாயத்து நிர்வாகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?

மூன்று அடுக்குகளைக் கொண்டது.
1. கிராம பஞ்சாயத்து,
2. பஞ்சாயத்து ஒன்றியம்,
3. மாவட்ட பஞ்சாயத்து

3. தமிழகத்தில் மொத்தம் எத்தனைக் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன?

தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன

4. நகர உள்ளாட்சி அமைப்புகள் என்னென்ன?

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்

5. ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும்?

இது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் மாறுபடும்.

ஒரே ஒரு உட்கிராமம் உள்ள பஞ்சாயத்தும் உள்ளது ,

பல உட்கிராமங்கள் உள்ள கிராம பஞ்சாயத்தும் தமிழகத்தில் உள்ளது.

சராசரியாக ஏழு முதல் எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து. 

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...