இயற்கை பாதுகாப்பு தினம்

அத்திக்குன்னா அரசு உயர் நிலை பள்ளியில்
இயற்கை பாதுகாப்பு தினம் கடைபிடிக்க பட்டது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், தேசிய பசுமை படை ஆகியன சார்பில் அத்திக்குன்னா அரசு உயர்நிலை பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கபட்டது.  பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதர சுந்தரம்  தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் இயற்கை பாதுகாப்பின் அவசியங்கள் குறித்து பேசும்போது நமக்கு உணவு, உடை, நீர், காற்று என அனைத்தும் இயற்கையே தருகிறது.  நமது செயல்களால் இயற்கை பதிப்புகள் அதிகரிக்கிறது.  இயற்கையில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள் நமக்கே பாதிப்பாக அமைகிறது.  நமது தேவைகளை குறைத்து கொண்டு இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்வதால் இயற்கை அழிவை தடுக்க முடியும்.  இயற்கைக்கு பாதிப்பு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது.   நமது சந்ததியினர் நலமாக வாழ நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துகொன்டனர்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி ஆசிரியர் பிரதீப் வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் ரகுபதி நன்றி கூறினார்.

மழவன்சேரம்பாடியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது




மழவன்சேரம்பாடியில்  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட்,  மலையரசன் விளையாட்டு குழு சூப்பர் பாய்ஸ் மழவன்சேரம்பாடி  ஆகியன இணைந்து  இலவச கண் சிகிச்சை முகாமினை மழவன்சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய  துவக்க பள்ளியில் நடத்தின.
முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் தலைமை  தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய  தலைவர் சிவசுப்பிரமணியம்,  ஊர் பிரமுகர்கள் குமார், ராஜகோபால், பாய்குமார், மணி, ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் உதகை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்  அமராவதி  தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இதில் 15 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில் கொளப்பள்ளி வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், கண் தொழில் நுட்புனர் முத்துராஜ், பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, ஸ்ரீதர், கூடலூர் நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர்  தனிஸ்லாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மலையரசன் விளையாட்டு குழு தலைவர் இளங்கோவன்  வரவேற்றார்.  முடிவில் மலையரசன் விளையாட்டு குழு செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...