கல்விகடன்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக கல்விக் கடனுதவி வழங்கும் திட்டத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் வழங்கும் முறையை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது. கல்விக் கடனுதவி இலவசமாக வழங்கப்படுவதல்ல. அந்த தொகை குறைந்த வட்டியோடு பிற்காலத்தில் திருப்பி செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும் கல்வி கற்க வேண்டும் என்கிற சிந்தனையின் அடிப்படையில் அந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பலவீனமான, பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவது ஒரு சமூக கடமையாகும். கல்விக் கடனுதவி அளிப்பது சமூக நலத் திட்டமாகும். ஒருவகையில் பார்த்தால் அது சமூகத்திற்காக அளிக்கப்பட்ட வங்கி சேவையாகும். இந்த கொள்கையை பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள் கருத்தில் கொண்டு தகுதி பெற்ற நபர்களுக்கு நியாயமான கல்விச் செலவுகளுக்கான தொகையை அளிப்பதன் மூலம் அந்த மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முடியும்.

தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களும் கல்விக் கடனுதவி பெற தகுதியுடையவர்களா? என்பது குறித்து எழுந்த பிரச்சினை மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பின் மூலம் முடிவிற்கு வந்து விட்டது.

அந்த அறிவிப்பில் நிர்வாக இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களும், வங்கிகளில் அளிக்கப்படும் கல்வி கடனுதவி தொகையை பெற தகுதியுடையவர்கள் என்றும், அனைத்து வங்கிகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் முதன்மை நிர்வாகிகள் கூட்டம் 27.9.2012 ஆம் தேதி நடைபெற்றது. அதில் கடனுதவி பெறுவதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அந்த திட்டத்தை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. அதில் ஒரு பிரச்சினையாக நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்த நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மறுக்கப்படுவது ஒரு குறையாக உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலை குறித்து கல்வி கடனுதவி திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆய்வு செய்யப்பட்டு 27.9.2012 ஆம் தேதி நடைபெற்ற நிர்வாக குழுவிலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. கல்வி கடனுதவி திட்டத்திற்காக இந்திய வங்கி சங்கக் குழுவின் (IBA Committees) பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட நிர்வாக குழு கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியது. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் (Meritorious Students) தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு மற்றும் கல்லூரி வந்து செல்வதற்கான வசதி ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்தாலும் அவர்களுக்கும் கல்விக் கடனுதவி அளிப்பதற்கான ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. அதேபோல் கல்விக் கடனுதவி கோரிய விண்ணப்பங்களை அந்த விண்ணப்பங்கள் பெறப்பட்ட காலத்திலிருந்து 15 நாட்கள் அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கல்விக் கடனுதவி திட்டத்திற்கான குழு (Indian Bank Association) கடனுதவி பெறுவதற்கான தகுதிகள், கடனுதவி அளிப்பதற்கான செலவினங்கள், கடனுதவி தொகையின் அளவு மற்றும் அதற்கான பொறுப்பினை (Security) ஆகியவை குறித்து பின்வருமாறு பரிந்துரை செய்துள்ளது.

தகுதிகள் (Eligibility Criteria)
மாணவர் தகுதிகள் (Students Eligibility):

அந்த மாணவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்

இந்தியா அல்லது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் நுழைவுத் தேர்வின் மூலம் மேற்படிப்பில் சேருவதற்கான அனுமதியை (Admission) பெற்றிருக்க வேண்டும்

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் முறையானது 10,+2 கல்விமுறை அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கு பிறகு நடைபெற்றிருக்க வேண்டும். இருந்தபோதிலும் சில பட்ட மேற்படிப்புகள் அல்லது ஆய்வுப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை பொருந்தாது. அத்தகைய நிலையில் வங்கி அந்தப் படிப்பின் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கடனுதவி அளிப்பது குறித்து தீர்மானிக்கலாம்.

(குறிப்பு : மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தாலும், அந்த மாணவர் நிர்வாக ஒதுக்கீட்டில் ஒரு படிப்பினை படிப்பதற்கு தேர்வு செய்திருந்தாலும் அவர்களும் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கு தகுதியுடையவர்கள்)

கடனுதவி பெறுவதற்கான செலவினங்கள் (Expenses Considered for Loan) :

1.  கல்லூரி / பள்ளி / விடுதி ஆகியவற்றிற்கான கட்டணங்கள்

2.  தேர்வு / நூலகம் / ஆய்வகம் ஆகியவற்றிற்கான கட்டணங்கள்

3.  அயல் நாட்டில் படிப்பதற்கான பயணச் செலவுகள்

4.  தேவைப்பட்டால் கடன் பெறும் மாணவருக்கான காப்பீட்டுப் பிரிமீயக் கட்டணம்

5.  கல்வி நிறுவனத்தால் பில் / ரசீது வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கை வைப்பீடு, கட்டிடத்திற்கான நிதி, திரும்ப பெறக்கூடிய வைப்பீடு போன்றவை

6.  புத்தகங்கள், உபகரணங்கள், சீருடைகள் வாங்குவதற்கான செலவுகள்

7.  படிப்பை முடிப்பதற்கு கணினி அவசியமென்றால் நியாயமான விலையில் கம்ப்யூட்டர் வாங்குவதற்கான செலவு

8.  படிப்பை முடிப்பதற்கு தேவையான கல்விச் சுற்றுலாக்கள், புராஜெக்ட் வேலைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான செலவுகள்

9.  கடனுதவி வழங்கப்படும் பொழுது அந்த மாணவருக்கு வழங்கப்படும் இதர கல்வி உதவித் தொகைகள், கல்வி கட்டண குறைப்பு ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கல்விக் கடனுதவி அளிக்கப்பட வேண்டும்.

கடனுதவி அளிக்கப்படும் தொகையின் அளவு ( Quantum of Finance) :

மேலே குறிப்பிட்ட பத்தி 4(3) ல் கூறப்பட்டுள்ள செலவினங்களுக்காக தேவைப்படும் கடனுதவியை அளிப்பதற்கு கீழ்க்கண்ட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் படிப்பதற்கு அதிக பட்சமாக ரூ. 10,00,000/-

வெளிநாடுகளில் படிப்பதற்கு அதிக பட்சமாக ரூ. 20,00,000/-

பொருட்பிணை ( Security) :

ரூபாய் 4 லட்சம் வரை, பெற்றோர்களும் கூட்டாக கடன் பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

ரூ. 4 லட்சமும் அதற்கு மேல் ரூ  7.5 லட்சம் வரை, பெற்றோர்கள் கூட்டாக கடன் பெற்றதற்கான ஆவணங்களில் கையொப்பம் இடுவதோடு, மூன்றாம் நபரின் உத்தரவாதமும் துணை காப்புறுதியாக (Collateral Security) வழங்க வேண்டும். கூட்டாக கடன் பெற்ற பெற்றோர்களுக்கு அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான வருமானம் உள்ளது / வசதியுள்ளது என வங்கி திருப்தியுற்றால் ஒரு மூன்றாம் நபர் உத்தரவாதம் அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்கலாம்.

ரூ. 7 லட்சத்திற்கு மேல், பெற்றோர்கள் கூட்டு கடனாளியாக இருக்க வேண்டும். தெளிவான விலை மதிக்கக்கூடிய வங்கியால் ஏற்றுக்கொள்ள கூடிய சொத்தினை துணை காப்புறுதியாக அளிப்பதோடு, கடன் தவணைத் தொகையை மாணவரின் எதிர்கால வருமானத்திலிருந்து செலுத்துவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும்.

27.9.2012 ஆம் தேதி நடைபெற்ற மறு ஆய்வுக் கூட்டத்தில் (Review Meeting) வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் எந்தவொரு இடத்திலும் கல்வி கடனுதவித் தொகை 60% மதிப்பெண் அல்லது அதற்கு மேலும் பெற்றவர்களுக்கு தான் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடவில்லை.

எனவே நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் கல்வி கடனுதவித் தொகையை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 1632/2013, DT - 17.6.2014

கிளை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பெருமாநல்லூர், திருப்பூர்

                               Vs

1.  A. ரவி
2.  மாவட்ட ஆட்சியர், திருப்பூர்
3.   முதன்மை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை

2014-4-CTC-363

கடைகளில் சாக்லேட் விற்கக் கூடாது! - புதிய சட்டம்

இனி கடைகளில் சாக்லேட் விற்கக் கூடாது! - புதிய சட்டம்

கடைகளில் சாக்லேட் விற்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மத்திய, மாநில அரசுகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

அதில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சாக்லேட், பிஸ்கட் போன்ற குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் விற்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

சாதாரண பெட்டிக் கடைகளில் சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களுடன் பிஸ்கட், குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. 

குழந்தைகள் தங்களுக்ககான பொருட்களை வாங்கச் செல்லும்போது அங்கு விற்கப்படும் புகையிலைப் பொருட்களால் கவரப்படுகின்றனர்.

இதனால் சிறு வயதிலேயே புகையிலை பயன்படுத்துவதன் காரணமாகப் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். 

எனவே புகையிலை விற்பனை செய்யும் கடைகளில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது. 

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோர் கட்டாயம் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

இவற்றை, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் புகையிலைப் பொருட்கள் விற்க உரிமம் பெறும் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

விரைவில் அனைத்து மாநிலங்களிலும் இதை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.

கல்வி கடன் விளக்கம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக கல்விக் கடனுதவி வழங்கும் திட்டத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் வழங்கும் முறையை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது.

கல்விக் கடனுதவி இலவசமாக வழங்கப்படுவதல்ல.

அந்த தொகை குறைந்த வட்டியோடு பிற்காலத்தில் திருப்பி செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும் கல்வி கற்க வேண்டும் என்கிற சிந்தனையின் அடிப்படையில் அந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பலவீனமான, பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவது ஒரு சமூக கடமையாகும்.

கல்விக் கடனுதவி அளிப்பது சமூக நலத் திட்டமாகும். ஒருவகையில் பார்த்தால் அது சமூகத்திற்காக அளிக்கப்பட்ட வங்கி சேவையாகும்.

இந்த கொள்கையை பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள் கருத்தில் கொண்டு தகுதி பெற்ற நபர்களுக்கு நியாயமான கல்விச் செலவுகளுக்கான தொகையை அளிப்பதன் மூலம் அந்த மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முடியும்.

தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களும் கல்விக் கடனுதவி பெற தகுதியுடையவர்களா? என்பது குறித்து எழுந்த பிரச்சினை மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பின் மூலம் முடிவிற்கு வந்து விட்டது.

அந்த அறிவிப்பில் நிர்வாக இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களும், வங்கிகளில் அளிக்கப்படும் கல்வி கடனுதவி தொகையை பெற தகுதியுடையவர்கள் என்றும்,

அனைத்து வங்கிகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் முதன்மை நிர்வாகிகள் கூட்டம் 27.9.2012 ஆம் தேதி நடைபெற்றது.

அதில் கடனுதவி பெறுவதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அந்த திட்டத்தை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

அதில் ஒரு பிரச்சினையாக நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்த நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மறுக்கப்படுவது ஒரு குறையாக உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலை குறித்து கல்வி கடனுதவி திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆய்வு செய்யப்பட்டு 27.9.2012 ஆம் தேதி நடைபெற்ற நிர்வாக குழுவிலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.

கல்வி கடனுதவி திட்டத்திற்காக இந்திய வங்கி சங்கக் குழுவின் (IBA Committees) பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட நிர்வாக குழு கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியது.

நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் (Meritorious Students) தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு மற்றும் கல்லூரி வந்து செல்வதற்கான வசதி ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்தாலும் அவர்களுக்கும் கல்விக் கடனுதவி அளிப்பதற்கான ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது.

அதேபோல் கல்விக் கடனுதவி கோரிய விண்ணப்பங்களை அந்த விண்ணப்பங்கள் பெறப்பட்ட காலத்திலிருந்து 15 நாட்கள் அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கல்விக் கடனுதவி திட்டத்திற்கான குழு (Indian Bank Association) கடனுதவி பெறுவதற்கான தகுதிகள், கடனுதவி அளிப்பதற்கான செலவினங்கள், கடனுதவி தொகையின் அளவு மற்றும் அதற்கான பொறுப்பினை (Security) ஆகியவை குறித்து பின்வருமாறு பரிந்துரை செய்துள்ளது.

தகுதிகள் (Eligibility Criteria)
மாணவர் தகுதிகள் (Students Eligibility):

அந்த மாணவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்

இந்தியா அல்லது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் நுழைவுத் தேர்வின் மூலம் மேற்படிப்பில் சேருவதற்கான அனுமதியை (Admission) பெற்றிருக்க வேண்டும்

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் முறையானது 10,+2 கல்விமுறை அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கு பிறகு நடைபெற்றிருக்க வேண்டும்.

இருந்தபோதிலும் சில பட்ட மேற்படிப்புகள் அல்லது ஆய்வுப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை பொருந்தாது.

அத்தகைய நிலையில் வங்கி அந்தப் படிப்பின் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கடனுதவி அளிப்பது குறித்து தீர்மானிக்கலாம்.

(குறிப்பு : மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தாலும், அந்த மாணவர் நிர்வாக ஒதுக்கீட்டில் ஒரு படிப்பினை படிப்பதற்கு தேர்வு செய்திருந்தாலும் அவர்களும் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கு தகுதியுடையவர்கள்)

கடனுதவி பெறுவதற்கான செலவினங்கள் (Expenses Considered for Loan) :

1.  கல்லூரி / பள்ளி / விடுதி ஆகியவற்றிற்கான கட்டணங்கள்

2.  தேர்வு / நூலகம் / ஆய்வகம் ஆகியவற்றிற்கான கட்டணங்கள்

3.  அயல் நாட்டில் படிப்பதற்கான பயணச் செலவுகள்

4.  தேவைப்பட்டால் கடன் பெறும் மாணவருக்கான காப்பீட்டுப் பிரிமீயக் கட்டணம்

5.  கல்வி நிறுவனத்தால் பில் / ரசீது வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கை வைப்பீடு, கட்டிடத்திற்கான நிதி, திரும்ப பெறக்கூடிய வைப்பீடு போன்றவை

6.  புத்தகங்கள், உபகரணங்கள், சீருடைகள் வாங்குவதற்கான செலவுகள்

7.  படிப்பை முடிப்பதற்கு கணினி அவசியமென்றால் நியாயமான விலையில் கம்ப்யூட்டர் வாங்குவதற்கான செலவு

8.  படிப்பை முடிப்பதற்கு தேவையான கல்விச் சுற்றுலாக்கள், புராஜெக்ட் வேலைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான செலவுகள்

9.  கடனுதவி வழங்கப்படும் பொழுது அந்த மாணவருக்கு வழங்கப்படும் இதர கல்வி உதவித் தொகைகள், கல்வி கட்டண குறைப்பு ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கல்விக் கடனுதவி அளிக்கப்பட வேண்டும்.

கடனுதவி அளிக்கப்படும் தொகையின் அளவு ( Quantum of Finance) :

மேலே குறிப்பிட்ட பத்தி 4(3) ல் கூறப்பட்டுள்ள செலவினங்களுக்காக தேவைப்படும் கடனுதவியை அளிப்பதற்கு கீழ்க்கண்ட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் படிப்பதற்கு அதிக பட்சமாக ரூ. 10,00,000/-

வெளிநாடுகளில் படிப்பதற்கு அதிக பட்சமாக ரூ. 20,00,000/-

பொருட்பிணை ( Security) :

ரூபாய் 4 லட்சம் வரை, பெற்றோர்களும் கூட்டாக கடன் பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

ரூ. 4 லட்சமும் அதற்கு மேல் ரூ  7.5 லட்சம் வரை, பெற்றோர்கள் கூட்டாக கடன் பெற்றதற்கான ஆவணங்களில் கையொப்பம் இடுவதோடு, மூன்றாம் நபரின் உத்தரவாதமும் துணை காப்புறுதியாக (Collateral Security) வழங்க வேண்டும்.

கூட்டாக கடன் பெற்ற பெற்றோர்களுக்கு அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான வருமானம் உள்ளது / வசதியுள்ளது என வங்கி திருப்தியுற்றால் ஒரு மூன்றாம் நபர் உத்தரவாதம் அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்கலாம்.

ரூ. 7 லட்சத்திற்கு மேல், பெற்றோர்கள் கூட்டு கடனாளியாக இருக்க வேண்டும். தெளிவான விலை மதிக்கக்கூடிய வங்கியால் ஏற்றுக்கொள்ள கூடிய சொத்தினை துணை காப்புறுதியாக அளிப்பதோடு, கடன் தவணைத் தொகையை மாணவரின் எதிர்கால வருமானத்திலிருந்து செலுத்துவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும்.

27.9.2012 ஆம் தேதி நடைபெற்ற மறு ஆய்வுக் கூட்டத்தில் (Review Meeting) வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் எந்தவொரு இடத்திலும் கல்வி கடனுதவித் தொகை 60% மதிப்பெண் அல்லது அதற்கு மேலும் பெற்றவர்களுக்கு தான் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடவில்லை.

எனவே நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் கல்வி கடனுதவித் தொகையை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 1632/2013, DT - 17.6.2014

கிளை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பெருமாநல்லூர், திருப்பூர்

                               Vs

1.  A. ரவி
2.  மாவட்ட ஆட்சியர், திருப்பூர்
3.   முதன்மை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை

2014-4-CTC-363

உயில் என்றால் என்ன?

Legal Awareness information forwarded by Advocate  M.Muthusamy, woriyur,Trichy-3
1.உயில் என்றால் என்ன?

ஒரு சொத்தினை தனது இறப்புக்கு பின்னர் யார் உரிமை கொண்டு அனுபவிக்கலாம் என்று தனது விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது உயில் சாசனம் ஆகும்.

2.எத்தகைய சொத்துக்களை ஒருவர் உயில் எழுதலாம்?

ஒரு நபர் தான் ,தனது சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்று அனுபவித்து வரும் சொத்து,பரம்பரையாக ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவித்து ஒரு நபர் தனது பெயரில் மட்டும் பாகப்பிரிவினை பெற்று அனுபவித்து வரும் சொத்து, கொடை எனப்படும் தான செட்டில்மென்ட் மூலம் பாத்தியப்படுத்திய சொத்து கொடை பெற்ற நபரின் பாத்தியதை எனப்படும் அனுபவத்தில் இருந்துவர வேண்டும்.இந்த சொத்துக்களை ஒரு நபர் உயில் எழுதலாம்.

3.உயில் எழுத ஆண்,பெண் என்று பாகுபாடு உண்டா?

கண்டிப்பாகக் கிடையாது வயது வந்த தனது பெயரில் பாத்தியதை கொண்ட சொத்தினை ஆண்,பெண் இரு பாலரும் எழுதலாம்.

4.உறவினர்களுக்கு மட்டும் தான் உயில் எழுதி வைக்க முடியுமா?

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது ,உறவினர் அல்லது உறவினர் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம்.

5.கருவில் உருவாகாத குழந்தைகளுக்கு உயில் எழுதலாமா?

எழுதலாம் ஆனால் அது நடை பெறவில்லை என்றால் உயில் செயல் படாது ,வழியுரிமை மூலம் சொத்து தகுந்த வாரிசுகளை சென்றடையும்.

6.உயில் சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது.பதிவு செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்.

7.உயில் சாசனத்தில் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?

கண்டிப்பாக இரண்டு சாட்சிகள் வேண்டும்,இவர்கள் முன்னிலையில் தான் உயில் சாசனம் இயற்றுபவர் கையொப்பம் இட வேண்டும்,சாட்சிகளும் உயில் சாசனம் இயற்றுபவர் முன்னிலையில் தான் சாசனத்தில் கையெழுத்திட வேண்டும்.

8.உயில் சாசனம் மூலம் சொத்தை அடைபவர் சாட்சி கையெழுத்து போடலாமா?

கண்டிப்பாகக் கூடாது சட்டம் இதனை அனுமதிக்கவில்லை.

9.உயிலை ரத்து செய்ய முடியுமா?

ஒரு நபர் தனது வாழ் நாளில் தனது சொத்து குறித்து எத்தனை உயில் வேண்டுமானாலும் இயற்றலாம்.கடைசியாக எழுதிய உயில் தான் செல்லும் .ஏற்கனவே எழுதிய உயிலை ரத்தும் செய்யலாம்.

10.உயில் எழுதியவுடன் சொத்தைப் பற்றிய சட்ட விளைவுகள் என்ன?யாரிடம் சொத்து இருக்கும்?

உயில் என்பது எழுதிய நபரின் இறப்புக்குப் பின்னர் தான் சட்ட விளைவை உண்டாக்கும் ,அது வரை அந்த சொத்தின் உரிமை எழுதிய நபரிடம் தான் இருக்கும்.உயிலில் கண்டுள்ள நபர் அந்த சொத்திற்கு உரிமை கோர முடியாது.

11,உயில் எழுதிய பிறகு, அந்த சொத்தினை உயில் எழுதிய நபர் விற்பனை செய்ய முடியுமா?

கண்டிப்பாக முடியும் ,உயில் சாசனம் இயற்றிய நபர் இறக்கும் வரை அவர் தான் அந்த சொத்தின் உரிமையாளர் ,அவர் அதனை எப்படி வேண்டும் என்றாலும் அனுபவிக்கலாம்.உயில் எழுதி விட்டு, அதை அவரே விற்று விட்டால், உயில் மூலம் பயனடைபவருக்கு எவ்வித சொத்தும் கிடைக்காது. உரிமையும் இல்லை.

12.கொடை சாசனத்திற்கும், உயில் சாசனத்திற்கும் என்ன வித்தியாசம் ?

கொடை சாசனம் எழுதியவுடன், அதில் கண்ட கொடை பெறுபவர் அந்த சொத்தின் அனுபவ பாத்தியத்தை பெற்றுக் கொள்ளலாம்,கொடை எழுதிய நபருக்கு அந்த சொத்தில் அதற்கு பின்னர் எந்த உரிமையும் கிடையாது.கொடை பெறுபவர் அந்த சொத்தினை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கொடை கொடுத்தவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டிருப்பார்.உயில் என்பது, அதை எழுதியவர் மறைவுக்கு பிறகு, நடைமுறைக்கு வரும்.

13.கொடை சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?

100ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால் கட்டாயம் கொடையை பதிவு செய்ய வேண்டும் ஆனால் உயிலை அப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

14.எப்படிப்பட்ட சமூக சூழ்நிலைகளில் உயில் எழுதப்படலாம்?

சட்டத்தில் இப்படிப்பட்ட சமூக சூழ்நிலையில் தான் உயில் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

பொதுவாக ஒரு நபருக்கு பல குழந்தைகள் இருந்து தனது இறப்பிற்கு பின்னர் யார் யார் எந்தெந்த சொத்துக்களை அடைய வேண்டும் என்று ஒரு முடிவை எடுத்து அதனை உயில் சாசனப் படுத்தினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கிடையே சொத்திற்காக சண்டை சச்சரவு தேவையில்லாமல் ஏற்படாது.

15.உயில் எழுதவில்லை என்றால் என்ன நடக்கும்?

ஒரு சொத்துக்குரிய நபர் தனது சொத்துக்களைப் பொறுத்து உயில் சாசனம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்றால் அவரது இறப்பிற்கு பின்னர் சட்டம் கூறும் வழியுரிமைப்படி சொத்து வாரிசுகளைச் சென்றடையும்.

16.எல்லா மதத்தினரும் உயில் எழுத முடியுமா?

     முடியும்.

17,உயிலை முத்திரைதாளில்தான் எழுத
    வேண்டுமா?

சாதாரண தாளிலும் எழுதலாம். ஆனால், ஒருவர் சாவுக்கு பின்பே, இது நடைமுறைக்கு வருவதாலும், நீதிமன்றத்தில் பின்னாளில் குறியீடு செய்ய தேவைப்படும் என்பதாலும், முத்திரைத்தாளில் எழுதினால் நல்லது. பதிந்தால்,அதை விட நல்லது.

18.சாட்சி யாரை போடலாம் ?

நம்பிக்கையான, இள வயதுள்ளவர்கள் இருப்பது நல்லது. பின்னாளில் நீதிமன்றம், வழக்கு என்று வந்தால், வயதானவர்களை சாட்சி போட்டால், இறந்துவிட்டால், பிரச்சினை வரலாம்.

19.உயிலை probate செய்ய வேண்டுமா ?

தமிழ்நாட்டில் சென்னை தவிர, அனைத்து இடங்களிலும், probate செய்ய தேவை இல்லை.

20.உயிலை நோட்டரி பப்ளிக் முன் எழுதி வைத்து
     கொண்டால் செல்லுமா?

எழுதலாம். ஆனால், பின்பு, அவரையும், பிரச்சினை என்று வந்தால், சாட்சியாக விசாரிக்க வேண்டும், நீதிமன்றத்தில்.

21.உயிலை பத்திர அலுவகத்தில் பதிய என்ன
     நடைமுறை ?

எந்த பத்திர அலுவகத்திலும் பதியலாம்.ஸ்டாம்ப் தேவை இல்லை. சொத்து மதிப்பில் 1 % கட்டணம்.அதிகபட்சம் 5௦௦ ரூ.

 22. உயிலை பத்திர அலுவகத்தில் வைத்திருக்க முடியுமா ?

மாவட்ட பதிவாளர் அலுவகத்தில், ஒரு உரையிட்ட கவரில் டெபாசிட் செய்து வைக்கலாம். அப்போது பதிய தேவை இல்லை. உயில் எழுதியவர் இறந்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அதை திறந்து பார்க்க விண்ணப்பித்து, அதை பதியலாம்.

Courtesy: Counsel Sree

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?

*பட்டா*

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

*சிட்டா*

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*அடங்கல்*

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*கிராம நத்தம்*

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

*கிராம தானம்*

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

*தேவதானம்*

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

*இனாம்தார்*

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்=
நிலத்தின் பரப்பளவு.

நான்கெல்லை= எல்லைகளை குறிப்பது.

ஷரத்து= பிரிவு.

இலாகா = துறை.

*கிரயம்*

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

*வில்லங்க சான்று*

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. நிலத்துண்டின் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகளின் விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண் = நில அளவை எண். (Survey number)

இறங்குரிமை =
வாரிசுரிமை (succession)

*தாய்பத்திரம்*
(Parent deed)
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

*ஏற்றது ஆற்றுதல்*
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல். (Specific performance)

*அனுபவ பாத்தியம்*
( possessory right)
நிலத்தில் உரிமையற்றவர் நீண்டகாலம் அதை அனுபவிப்பதால் ஏற்படும் உரிமை.

*சுவாதீனம் ஒப்படைப்பு*
நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி = வருவாய்தீர்வாயம்.

நன்செய்நிலம் =
அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம் =
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

*குத்தகை*
(Lease)
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இரத்த தான முகாமில் 20 யூனிட் இரத்தம் தானம்

கூடலூர் கலை அறிவியல் கல்லூரயில்நாட்டு நலப்பணி திட்ட நாளை முன்னிட்டு

கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,
கூடலூர் அரசு இரத்த வங்கி, நெலாக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியன
இணைந்து
இரத்ததான முகாமினை நடத்தின.

கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் மகேஸ்வரன் வரவேற்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.

முகாமிற்க்கு கல்லூரி முதல்வர் டி பழனிசாமி தலைமை தாங்கி பேசும்போது
இரத்த தானத்தினால் ஒரு உயிரையே காப்பாற்ற முடிகின்றது.  இதனால் அனைத்து
தானங்களிலும் இரத்த தானம் என்பது தானங்களில் சிறந்தது.

பிறந்தநாள் மற்றும் விஷேச நாட்களில் இரத்த தானம் செய்வது அல்லது 3
மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்வது பலருடைய வழக்கமாக உள்ளது.  சில
நேரங்களில் இரத்த தானம் வாழங்கும்போது அலைகழிக்கப்பபடுவது வேதனையானது.
எனினும் பலரால் இன்னும் இரத்த தானம் வழங்கப்படுகின்றது.

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பலரும் இரத்தம் கொடுக்க ஆர்வமாக பதிவு
செய்துள்ளது மிகவும் வரவேற்கதக்கது.  இதுபோன்ற முகாம்களில் இரத்த தானம்
செய்வதன் மூலம் சந்தேகங்கள் பயம் நீங்கி புதிதாக இரத்த கொடையாளர்கள்
உருவாக வாய்ப்புகளை உருவாக்குகின்றது. இதன் மூலம் பெறப்படும் அவசர
தேவைக்காக பயன்படுத்தபடுகின்றது.

உடலில் சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்கள் தாக்குவதால்  வயதான காலத்தில்
இரத்த தானம் செய்ய இயலாத நிலை ஏற்படுகின்றது.  ஆனால் இளைஞர்கள் இரத்த
தானம் வழங்க முன்வருவதால் இரத்த தேவை நிறைவு செய்யப்படுகின்றது.
முகாம்கள் மற்றுமின்றி அவசர தேவைக்கும் இரத்தம் வழங்கப்பட்டு வருவது
பாராட்டுக்குரியது என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
ஒவ்வொரு 2 நிமிடத்திற்க்கும் விபத்து மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு
இரத்தம் தேவைப்படுகின்றது. இரத்ததானம் வழங்குவதன் மூலம் இரத்ததேவை
நிவர்த்தி செய்ய முடியும்.

கல்லூரி மூலம் மாதந்தோறும் அவசர தேவைக்கு 20 யூனிட் வரை இரத்ததானம்
வழங்கப் படுகின்றது பாராட்டுக்குரியது. இளைஞர்கள் தீயபழக்கங்களை
அடமையாகமல் இருக்கவேண்டும்

சுயநலமற்ற சேவையே நாட்ட நலப்பணி திட்டம் அதனை மாணவர்கள் மூலம்
செயல்படுத்துவது சிறப்பிற்குரியது என்றார்.

அரசு மருத்துவர் சாலினி போசும்போது  கூடலூர் அரசு மருத்துவமனையில் இரத்த
சோகை, விபத்து, பிரசவம் ஆகியவற்றில் இரத்தம் தேவைப் படுபவர்களுக்கு
இலவசமாக வழங்கப்படுகிறது. யாரேனும் இரத்த சோகையால்
பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பயன்பெற்றுக்கொள்ளலாம்  முகாம்களில்
பெறப்படும் இரத்தம் பல்வேறு பரிசோதனைக்கு பிறகு தேவைப் படுபவர்களுக்கு
இலவசமாக வழங்கப்படுகின்றது என்றார்.

தொடர்ந்து நுகர்வோர் மைய நிர்வாகி ராஜா, பிரகாஷ் ஆகியோர் பேசினார்கள்.

தொடர்ந்து நடைப்பெற்ற இரத்ததான முகாமில் 20க்கும் மேற்பட்ட நாட்டுநலப்பணி
திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்தனர்.
இரத்த தானம் செய்தவர்களுக்கு டாலர் அனிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி குழுவினர் மூலம் சேகரிக்கப்பட்ட
இரத்தம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள்
பெரும்பாலனவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கரன் நன்றி கூறினார்.

இரத்த தானம்

அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர்.
  • ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.
  • இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.
  • ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.
  • ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை.
  • பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும்
  • ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும்.
  • ஒரு ஒற்றை கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.

இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்[தொகு]

  • இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
  • இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  • ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
  • எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
  • கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்[தொகு]

  • இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  • இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.
  • இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
  • தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
  • ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.
  • இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
  • இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

இரத்த வங்கி[தொகு]

நடமாடும் இரத்த சேமிப்பு ஊர்தி
தானம் பெறப்பட்ட இரத்தத்தை சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவமனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் குருதிக் கொடை குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், குருதிக் கொடையளிக்க விரும்புபவர்களிடம் குருதியைத் தானமாகப் பெறவும் குளிரூட்டப்பட்ட குருதி சேமிப்பு ஊர்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
*தேனும் லவங்கப் பட்டையும்*

உலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால்,  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

தேனை சூடு படுத்தக்கூடாது
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால்  அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.

*தேன் எனும் அற்புத உணவு.*
தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது
அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

தேனும் லவங்கப் பட்டையும்
குணப்படுத்தும் நோய்கள்

*இதய நோய்*
இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.

இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

*அற்புத மருந்து இதோ!*
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு
வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது. இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு
பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும்  ஒரு வரப்பிரசாதம். ஒரே மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.

அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவ மனைகளில் இந்த
உணவைக் கொடுத்து வருகிறார்கள். அதிசயக்கத் தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள்.

அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தைஅதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.

செலவு குறைச்சல் தானே!
முயற்சி செய்யுங்களேன்!

ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம். மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு
தித்திக்கும் தேன் போன்ற செய்தி.

தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்து வாருங்கள்.

ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்துச் சொல்கிறார்கள்
கோபன்ஹேகன் பல்கலைக் கழக ஆய்வு மையத்தினர்.

200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை  1 தேக்கரண்டி தேனும்,
1/2 தேக்கரண்டி லவங்கப் பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.

ஒரே வாரத்தில் 73நோயாளிகள் வலி
நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.

இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை
இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியைக் குறைத்துக் கொள்வோம்!

*சிறுநீர்க் குழாய் கிருமிகள்*
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில்
கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக் காலத்தில் இது அரு மருந்து.

கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து 2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்கப் பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணீருடன் கலந்து  குடியுங்கள். இரண்டு மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.

சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

*ஜலதோஷம்*
சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து  மூன்று நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடிப் போகும்.

வயிற்று அல்சர் இரு தேக்கரண்டி தேன்,  ஒரு தேக்கரண்டி லவங்கப்
பவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

*வாயு தொல்லை*
இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீருமாம்!

*எதிர்ப்பு சக்தி வளரும்*
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்கப் பொடியுடன் கலந்து
உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.

ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

*அஜீரணம்*
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து  சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் இரண்டு தேக்கரண்டி தேனில்
சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல்
ஜீரணமாகும்.

*நீண்ட ஆயுள்*
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன்,  1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக் கொண்டு
ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.

வயதான தோற்றம் மறைந்தே
போகும்.  100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பைக் காணலாம்.  சருமம் மிருதுவாக இருக்கும். ஆயுள் நீடிக்கும்.

*தொண்டையில் கிச் கிச்!*
1 தேக்கரண்டி தேனை எடுத்து
மெதுவாக உண்ணுங்கள்.
3 மணிக்கு ஒரு தரம் இப்படி
செய்து வாருங்கள்.
தொண்டையில் கிச்கிச் முதல்
அல்லது 2 தேக்கரண்டியில்
போய்விடும்.

*முகப்பருக்கள் அடியோடு மறைய!*
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடியை எடுத்து இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள்.

காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து இரு வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

*சரும நோய் தீர*
சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும். தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

எடை குறைய வேண்டுமா?
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்கப் பொடியையும் கலந்து குடிக்கவும்.

அதே போல இரவில் படுக்கப்
போகும் முன்னர் தேனையும்,
லவங்கப்பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல்
எடை குறைவது உறுதி.

*அதிசயம்.ஆனால் உண்மை.*
இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும்.

அதாவது நீங்கள் சாதாரண
உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

*புற்று நோய்க்கு அருமருந்து*
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரிய வந்துள்ளது.

ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து,
தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

*அயர்ச்சி*
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விடச் சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள
சர்க்கரை அபாயகரமானது
இல்லை.

உடலுக்கு உதவக்
கூடியது. வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில், ஒரு தேக்கரண்டி தேனில் லவங்கப் பொடியை நன்று தூவிக் குடிக்க வேண்டும். அதே போல மதியம் 3மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியைப்
பெறுவார்கள்.

வாய் துர்நாற்றத்தை போக்க!
தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்கப் பொடியையும் கலந்து சுடுநீரில்  வாய் கொப்பளிப்பார்கள்.

இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும்
வாய் மணக்கும்.

இரத்ததானம் முகாம்

கூடலூர் கலை அறிவியல் கல்லூரி யில்
நாட்டு நலப்பணி திட்ட நாளை முன்னிட்டு   கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
கூடலூர் அரசு இரத்த வங்கி.
நெலாக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியன இணைந்து இரத்ததான முகாமினை நடத்தின.
முகாமிற்க்கு கல்லூரி முதல்வர் டி பழனிசாமி தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
ஒவ்வொரு 2 நிமிடத்திற்க்கும் விபத்துமூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் தேவைப்படுகின்றது.
இரத்ததானம் வழங்குவதன் மூலம் இரத்ததேவை நிவர்த்தி செய்யமுடியும்.  கல்லூரி மூலம் மாதந்தோறும் 20 யூனிட் வரை இரத்ததானம் வழங்கப்படுகின்றது பாராட்டுக்குரியது.
இளைஞர்கள் தீயபழக்கங்களை அடமையாகமல் இருக்கவேண்டும் 
சுயநலமற்ற சேவையே நாட்ட நலப்பணி திட்டம் அதனை மாணவர்கள் மூலம் செயல்படுத்துவது சிறப்பிற்குரியது என்றார்.
அரசு மருத்துவர் சாலினி போசும்போது  கூடலூர் அரசு மருத்துவமனையில் இரத்த சோகை, விபத்து, பிரசவம் ஆகியவற்றில் இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பெறப்படும் இரத்தம் பல்வேறு பரிசோதனைக்கு பிறகு தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார்.
நுகர்வோர் மைய நிர்வாகி ராஜா பேசினார்.
தொடர்ந்து நடைப்பெற்ற இரத்ததான முகாமில் 20க்கும் மேற்பட்ட நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்தனர். கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி குழுவினர் மூலம் சேகரிக்கப்பட்ட இரத்தம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் மகேசுவரன் வரவேற்றார்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கரன் நன்றி கூறினார்.

உணவு கலப்படம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு


கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில்
உணவு பாதுகாப்பு மற்றும் உணவு கலப்படம்  குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட 

நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசும்போது

இயற்கை உணவுகளால் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைக்கின்றன. 

மாவட்டத்தில் உற்பத்தியாக கூடிய தேயிலை பல்வேறு பயன்களை தருகின்றது. 

 ஆனால் அதில் கலப்படம் செய்வதால் புற்றுநோய் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.  

உணவு பொருட்கள் தரமானவற்றில்
தரம்குறைந்த பொருட்களை சேர்ப்பதால் உடலுக்கு பல்வேறு பதிப்புகளை ஏற்படுத்துவதோடு இன்று அதிக்கரித்துவரும் புற்றுநோய் தாக்கத்திற்க்கு ஆளாகும் நிலையும் உருவாகின்றது.

கலப்படத்திற்க்கு எதிராக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது
உணவு சரிவிகித ஊட்டச்சத்து தர கூடிய உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது.

காலாவதி உணவுகள் குறித்தும் கலப்பட உணவுகள் குறித்தும் விற்பனை செய்வது தெரிந்தால் உணவு பாதுகாப்பு துறையின் வாட்சப் எண் 94440 42322  மூலம் ஆதாரத்துடன் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க சொல்லலாம்.  

விளம்பரங்களை நம்பி ஊட்டச்சத்து பானங்களுக்கு அடிமையாகவேண்டாம் என்றார்

தொடர்ந்து சாயம் கலந்த தேயிலை தூள் கலப்படம் அறிவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் மைய அமைப்பாளர் ராஜா பயிற்சி மைய ஆசிரியர்கள் மாணவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொது தகவல்

Plc share pannunga....

தயவு செய்து ஷேர் பண்ணுங்கள்....

*பொது தகவல் மையம் வாட்சப்குழு +919787472712*
1. குடும்ப அட்டை 5ரூபாயிலும்,

 2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும்,

வீட்டிற்கு மின் இணைப்பு 1600 ரூபாயிலும்,

2சிலிண்டர் இணைப்பு 3285ரூபாயிலும்
இப்படி சுமார் 36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்"
பெற
ஆதரவு இயக்க அறக்கட்டளை
90437 44957,
82200 44957
web atharavuiyakam.weebly.com

2. தமிழ் நாட்டில் எங்கேயாவது குழந்தைகள் பிச்சை எடுத்தால் கிழே உள்ள தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவலாம்.
"RED SOCIETY" @ 9940217816.

3. உங்களுக்கு தேவையான இரத்தத்தை இங்கே இருந்து பெறலாம்.இங்கே இரத்தம் கொடுப்பவரின் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
BLOOD GROUP @ www.friendstosu
pport.org

4. பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் இங்கே உங்கள் விவரங்களை பதித்து வைத்தால் உங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ 40 கம்பெனிகளிடமிருந்து வாய்ப்பு கிடைக்க பெறலாம்.
இணையதள முகவரி :
www.campuscouncil.com

5. உடல் ஊனமுள்ளவர்கள் இலவசமாக படிக்கவும் தங்குமிடத்திருக்கும் இங்கே தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் :- 9842062501 & 9894067506.

6. இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்ள
முகவரி :
Kodaikanal PASAM Hospital > From 23rd March to 4th April by German Doctors.

தொலைபேசி எண்கள் : 045420-240668, 245732
"Helping Hands are better than Praying Lips"

7. நீங்கள் கீழே இருந்து ஓட்டுநர் லைசென்ஸ்,ரேஷன் கார்டு,பாங்க் பாஸ் புக் போன்ற முக்கியமான ஆவணங்கள் எதையாவது கண்டெடுத்தால் அருகிலுள்ள தபால் பெட்டியில் சமர்பித்தால்,அந்த ஆவணங்கள் உரியவரிடம் பத்திரமாக சேர்ந்து விடும்.

8. கண் தானத்திற்கான தொலைபேசி எண்கள் : 04428281919 and 04428271616
(Sankara Nethralaya Eye Bank).
மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தை பாருங்கள்.
இணையதள முகவரி : http://
ruraleye.org/

9. 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள இங்கே அணுகவும்.
Sri Valli Baba Institute Bangalore. 10.
தொலைபேசி எண்கள் : 9916737471

10.  இரத்த புற்றுநோய் உள்ளவர்கள் இலவசமாக சிகிச்சை பெற.
முகவரி :-
"Adyar Cancer Institute in Chennai".
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: NearMichael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
044-22350241 044-22350241

11.ஏதாவது விழாக்காலமா? வீட்டில் ஏதாவது விருந்து பார்ட்டியா? அதில் உணவு மீந்து விட்டதா?
அதை குப்பையில் கொட்டாதீர்கள்.

நீங்கள் இந்த எண்ணினை 1098 (இந்தியாவில் மட்டும் ) தொடர்பு கொண்டால் அதை
B வாங்கி பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.#

தமிழ்


பகிர்வோம்  மக்களே!!!!

நுகர்வோர் மன்ற தீர்ப்புகள்

தவறான சிகிச்சையால் இன்ஜினியரிங் மாணவி பலி மருத்துவருக்கு 13 லட்சம் அபராதம்:

[தீர்ப்பு நகல் --- தமிழ் வரி வடிவில்,]

சென்னை: தவறான சிகிச்சையால் பெண் இன்ஜினியர் உயிரிழந்த வழக்கில் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு 13 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை சேர்ந்தவர் விஸ்வநாதன், சாந்தி தம்பதியர். இவர்களது ஒரே மகள் ரேவதி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். காய்ச்சல் காரணமாக, கடந்த 2010ல் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, டாக்டர் தரன் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஊசி போட்ட சில மணி நேரத்தில் ரேவதி ரத்த வாந்தி எடுத்துள்ளார். மேலும் இதய பகுதி செயலிழக்க ஆரம்பித்துள்ளது. பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, ரேவதியை பரிசோதித்த மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை டாக்டர் தரன் கொடுத்த தவறான சிகிச்சையால்தான் உடலில் ஒரு பகுதி செயலிழந்து கோமா நிலைக்கு ரேவதி வந்துள்ளார் என்றனர்.

இதையடுத்து, கோமா நிலையில் உள்ள மகளை காப்பாற்ற தந்தை விஸ்வநாதன் சொத்துகளை விற்றுள்ளார். பலரிடம் கடன் வாங்கியுள்ளார். மேலும் பெற்றோர் மகளை காப்பாற்ற மருத்துவ செலவுக்காக பெரும் மன உளைச்சலடைந்துள்ளனர். இந்நிலையில், ரேவதி கடந்த 12.3.2014 அன்று இறந்துள்ளார். இதை தொடர்ந்து, தந்தை விஸ்வநாதன் ரேவதிக்கு தவறான ஊசிபோட்ட மருத்துவர் மீது செங்கல்பட்டு நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவானந்தஜோதி. விஸ்வநாதன் தம்பதிக்கு ரேவதி ஒரே மகள், கல்லூரி முடித்து வேலைக்கு சென்று இருப்பார். மேலும் ரேவதியை காப்பாற்ற பெற்றோர் பல கஷ்டங்கள் அடைந்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம், தவறான ஊசி போட்ட போரூரில் உள்ள தனியார் மருத்துவர் ஸ்ரீதரன்தான். இதனால் விஸ்வநாதனுக்கு இழப்பீடாக வழக்கு செலவுடன் சேர்த்து 13 லட்சத்து 56 ஆயிரத்தை புகார் அளிக்கப்பட்ட நாளிலிருந்து 7 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
SOURCE: dinakaran 2017-05-26

மருத்தவம் சம்மந்தப்பட்ட எனது முந்தைய பதிவுகள்:

மிகப் பெரிய நஷ்டஈடு இந்தியாவில் முதல்முறை : ‘வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு’ - வழங்கியது உச்ச நீதி மன்றம்
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1200357580108124

மருத்துவ அலட்சியத்தால் பெண் பாதிப்பு: ரூ.12 லட்சம் இழப்பீடு அளிக்க கொல்கத்தா தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1199899170153965

பிரசவத்தின்போது சிறுநீர் பையில் காயம்: இரு மருத்துவர்கள் ரூ.65 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1198822176928331

Indore hospital fined Rs 15 lakh for telling mother her ultrasound was 'normal'..
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1197899660353916

ஹெச்.ஐ.வி இருப்பதாக தவறான ரிசல்ட்- நோயாளிக்கு மருத்துவமனை இழப்பீடு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1194247724052443

சிகிச்சையில் அலட்சியம்: மருத்துவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1192444504232765

தவறான சிகிச்சை அளித்து, பெண் இறப்புக்கு காரணமான, தனியார் மருத்துவமனை, மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1191962060947676

எடுக்காத ஸ்கேனுக்கு பணம் வசூலித்த குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரூ.38 ஆயிரம் அபராதம்:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1191943580949524

அலோபதி /ஆங்கில மருத்துவ சிகிச்சை வழங்கி ஒருவரின் உயிர் இழப்பிற்கு காரணமான ஹோமியோபதி மருத்துவருக்கு 15 லட்சம் அபராதம் :
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1190554327755116

குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷனுக்கு பின் கருவுற்ற பெண்ணுக்கு தமிழக அரசு கருணை தொகை வழங்க: நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1188791054598110

கு.க. ஆபரேஷனுக்கு பின் கருவுற்ற உதகை பெண்ணுக்கு இழப்பீடு: நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1188503824626833

டைபாய்டு காய்ச்சலுக்கு சாதாரண சிகிச்சை அளித்த டாக்டருக்கு அபராதம்:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1188171567993392

டாக்டருக்கு ரூ.6.60 லட்சம் அபராதம்:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1184445218366027

சிகிச்சையில் அலட்சியம்: தனியார் மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம்
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688177844724916/

போலி மருத்துவருக்கு ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் மன்றம் 2.4 லட்சம் அபராதம் விதித்தது.
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688341784708522/

உணவு கலப்படம் அறிவது அவசியம்

ட்டரீதியாகத் தடைசெய்யப்பட்ட விஷயங்கள்கூட நம் நாட்டில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, சாலை விதிகளை மீறுவது, பொருள்களை அதிகவிலை வைத்து விற்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்துமே சட்டப்படி தண்டனைக் குரிய குற்றங்கள்தான். இந்த வரிசையில் நம்மை நேரடியாகப் பாதிக்கும் ஒன்று கலப்படம். பால் முதல் மருந்துப் பொருள்கள் வரை இந்தக் கலப்படங்கள் நடைபெறுகின்றன. இவை சட்டப்படி குற்றம் என்பதையும் தாண்டி, கலப்படம், நுகர்வோரின் உடல்நலனுக்கே தீங்கு விளைவிக்கக்கூடியது என்பது இன்னொரு முக்கியமான விஷயம்.
இப்படி உணவுப்பொருள்களில் நடக்கும் கலப்படங்களைக் கண்டறிய, உணவியல் நிபுணர்களும் வேதியியல் நிபுணர்களும்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சில உணவுப்பொருள்களில் இருக்கும் கலப்படங்களை நாமே சோதித்துத் தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம் நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் தரமானவையா என்பதைக் கண்டறியவும் தரமற்ற உணவுப்பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்கவும் முடியும்.
கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?
பால் vs தண்ணீர்
நீண்டகாலமாக நடந்துவரும் கலப்படங்களில் ஒன்று இது. பாலில் ஒரு துளியை எடுத்து வழவழப்பான பரப்பில் விடுங்கள். நீர் கலக்காத பால் என்றால், சாய்வுப் பகுதியை நோக்கி மெதுவாக ஓடும். அத்துடன் ஓடும் வழித்தடத்தில் பாலின் தடமும் இருக்கும். அதுவே நீர் கலந்த பால் என்றால், எந்தத் தடத்தையும் விட்டுவைக்காமல் விரைவாக ஓடிச்செல்லும்.
பால் vs சோப்புத்தூள்
பாலில் சோப்புத்தூள் கலந்துள்ளதா எனக் கண்டறியும் சோதனை இது.
சிறிதளவு பால் மற்றும் அதே அளவு தண்ணீரை ஒரு டம்ளரில் கலக்கவும். பின்னர் டம்ளரை நன்கு குலுக்கவும். சோப்புத்தூள் கலக்காத பால் என்றால், சிறிய அளவு நுரை மட்டுமே பாலின் மேற்பரப்பில் இருக்கும். சோப்புத்தூள் கலந்த பால் என்றால், அதிக அளவிலான நுரை, பாலின் மேற்பரப்பில் தேங்கியிருக்கும்.

தேங்காய் எண்ணெய் vs மற்ற எண்ணெய்
சிறிதளவு தேங்காய் எண்ணெயைக் கண்ணாடி டம்ளரில் எடுத்துச் சில நொடிகள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து அதனை வெளியே எடுக்கவும். சுத்தமான எண்ணெய் என்றால் டம்ளரில் இருக்கும் எண்ணெய் முழுவதும் உறைந்திருக்கும். கலப்படம் எனில், அதில் இருக்கும் தேங்காய் எண்ணெய் தவிர மீதி எண்ணெய் உறையாமல் இருக்கும்.
தேன் vs சர்க்கரைப்பாகு
சுத்தமான தேனுக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் அதில் சர்க்கரைப்பாகு போன்றவற்றைச் சேர்க்கும் போது, தன் தூயதன்மையைத் தேன் இழந்துவிடுகிறது. இந்தக் கலப்படத்தைக் கீழ்க்கண்ட சோதனையின்மூலம் கண்டறியலாம்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடவும். சுத்தமான தேன் என்றால் கரையாமல், அப்படியே நீருக்கடியில் சென்று தங்கும். கலப்படம் எனில் நீரில் கரைந்துவிடும்.

உணவு தானியங்கள் vs தானியக் கழிவுகள்
பருப்பு வகைகள், கோதுமை, அரிசி போன்றவற்றில் தானியக் கழிவுகள், பாதிப்புக்குள்ளான தானியங்கள் போன்றவை கலப்படம் செய்யப்படும். இவற்றை மிக எளிதாகக் கண்டறிந்துவிடலாம்.
வெள்ளை நிறம் கொண்ட பாத்திரம் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் சிறிதளவு தானியங்களை எடுத்துக்கொண்டு அவற்றைக் கண்ணால் பார்த்தாலே போதும். தூய்மையற்ற தானியங்கள் கண்ணில் படும்.
உணவு தானியங்கள் vs செயற்கை நிறமிகள்
தானியங்களின் தரத்தை உயர்த்திக் காட்டுவதற்காக உணவு தானியங்களில் செயற்கை நிறமிகள் கலப்படம் செய்யப்படுகின்றன.
சோதனை செய்ய வேண்டிய தானியங்களை, ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு போடுங்கள். சுத்தமான தானியங்கள் எனில், எந்த நிறமும் மேலே மிதக்காது. நிறமிகள் பயன்படுத்தப்பட்டவை எனில், தண்ணீரில் கரைந்துவிடும். எனவே தண்ணீரின் நிறம் மாறும். இதை வைத்து நிறமிகள் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துவிடலாம்.
துவரம் பருப்பு vs கேசரிப் பருப்பு
சிறிதளவு துவரம்பருப்பைக் கையில் எடுத்துப் பார்த்தாலே, கேசரிப் பருப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
உடைக்கப்பட்ட துவரம்பருப்பு எவ்வித மாசுகளும் இன்றித் தெளிவாக இருக்கும்.
ஆனால் கேசரிப் பருப்பு வட்டமாக இல்லாமல், லேசாகச் சதுர வடிவத்தில் காணப்படும். இதைவைத்து கேசரிப் பருப்பை அடையாளம் கண்டுபிடித்துவிடலாம்.
மிளகு vs பப்பாளி விதை
மருத்துவகுணம் வாய்ந்த உணவுப்பொருள்களில் ஒன்று மிளகு. விலை அதிகம் என்பதால், பப்பாளி விதைகளை இதில் கலப்படம் செய்வர்.
சில மிளகுகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும். சுத்தமான மிளகு, தண்ணீரில் மூழ்கி, அடியில் தங்கிவிடும். பப்பாளி விதைகள் எனில், நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும்.
கடுகு vs ஆர்ஜிமோன் விதைகள்
சிறிதளவு கடுகைக் கையில் எடுத்துப் பார்த்தாலே கலப்படத்தைக் கண்டுபிடித்துவிடலாம். ஆர்ஜிமோன் விதைகள் வெளிப்புறத்தில் சொரசொரப்பாகவும் அளவில் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்.
கலப்படமற்ற  கடுகை உடைத்தால் உள்ளே மஞ்சள் நிறமாகவும் ஆர்ஜிமோன் விதைகள் உள்ளே வெள்ளையாகவும் இருக்கும்.
ராகி சேமியா vs செயற்கை நிறமிகள்
நிறமிகளைக் கண்டறிய உதவும் மற்றொரு சோதனை இது.
சிறிதளவு ராகி சேமியாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பஞ்சு உருண்டையை நீரில் நனைத்து, கிண்ணத்தில் இருக்கும் சேமியாவின் மீது லேசாகத் தேய்க்கவும். ராகியில் நிறமிகள் இருந்தால், பஞ்சில் அவை ஒட்டிக்கொள்ளும்.
பெருங்காயம் vs பிசின்
ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தை எடுத்து, அதனை நெருப்பில் காட்டவும்.
உடனே அது கற்பூரம்போலத் தீப்பிடித்து எரிந்தால் அது சுத்தமான பெருங்காயம். அதுவே பிசின் கலந்த பெருங்காயம் எனில், கற்பூரம் எரியும் அளவிற்கு ஜுவாலை இருக்காது.

பெருங்காயத்தூள் vs மண் துகள்கள்
பெருங்காயத்தூளில் கலந்திருக்கும் மண் துகள்கள் மற்றும்  கசடுகளை ஒரு டம்ளர் தண்ணீர் மூலமாகவே கண்டறியலாம்.
ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் ஊற்றி, அதில் சிறிதளவு பெருங்காயத் தூளைப்போட்டுக் கலக்க வேண்டும். பெருங்காயத் தூள் தூய்மையானது என்றால், முழுவதுமாக நீரில் கரைந்துவிடும். மண் போன்ற மாசுகள் இருந்தால், அவை நீருக்கடியில் படிந்துவிடும்.

மிளகாய்த் தூள் vs செயற்கை நிறமிகள்
தானியங்களில் மட்டுமல்ல; மிளகாய்த் தூளில்கூட செயற்கை நிறமிகள் கலக்கப்படுகின்றன. அவற்றை எளிமையாகக் கண்டறிய முடியும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் மிளகாய்த் தூளைப் போடவும். செயற்கை நிறமிகள் கலந்திருந்தால் நீரில் கரைந்து, அடியில் படலம்போலத் தெரியும்.
சுத்தமான மிளகாய்த் தூள் அப்படிப் பரவாமல், நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும்.
மிளகாய்த் தூள் vs செங்கல் தூள்
சிறிதளவு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூளைப் போட வேண்டும். கலப்படம் இருப்பின் துகள்கள் நீருக்கடியில் படியும். அவற்றை உற்றுக் கவனியுங்கள்.
சொரசொரப்பாக, ஒழுங்கற்ற துகள்கள் அதில் இருப்பின் செங்கல் தூள்கள் கலந்திருக்கின்றன எனலாம்.
மரத்தூள் vs மசாலா தூள்
ஒரு டம்ளர் நீரில் மசாலா தூளைப்போட்டு லேசாகக் கலக்கவும். தூய்மையான மசாலா என்றால் நீரில் அப்படியே கரைந்துவிடும்.
மரத்தூள் கலந்தது என்றால் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.
மஞ்சள் தூள் vs செயற்கை நிறமிகள்
மிளகாய்த் தூளுக்குச் செய்த அதே சோதனை மஞ்சள் தூளுக்கும் பொருந்தும். ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள் தூளைப் போட்டு, நிறமிகளைக் கண்டறிந்துவிட முடியும்.
பச்சைப்பட்டாணி vs செயற்கை நிறமிகள்
பச்சைப்பட்டாணிகளில் நிறமிகள் பயன் படுத்தப்படுகின்றன என்ற விஷயமே பலருக்கும் தெரியாது. ஆனால் பெரும்பாலான கடைகளில்  விற்கப்படும்  பச்சைப் பட்டாணிகளில் இந்தச் சிக்கல் உண்டு.
சிறிதளவு பச்சைப்பட்டாணிகளை எடுத்து ஒரு டம்ளரில் போடவும். பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிவிட்டுச் சிறிது நேரம் காத்திருக்கவும். செயற்கையான நிறமிகள் இருந்தால், அவை தண்ணீரில் கரையும்.
பச்சைக் காய்கறிகள் vs நிறமிகள்
பச்சை மிளகாய், குடை மிளகாய், பீன்ஸ் போன்றவற்றில் அழகுக்காக நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.
பஞ்சைத் தண்ணீரில் நனைத்து, இவற்றின் மேற்பரப்பில் தேய்ப்பதன்மூலம் நிறமிகளை இனம் கண்டுவிடலாம். நிறமிகள் இருந்தால், பஞ்சு பச்சை நிறமாக மாறும்.
மஞ்சள் கிழங்கு vs நிறமிகள்
கவர்ச்சிக்காக மஞ்சள் கிழங்கில் மஞ்சள் நிறமிகள் சேர்க்கப்படும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் ஊற்றி, அதில் மஞ்சள் கிழங்கைப் போட வேண்டும். செயற்கை நிறமிகள் கலக்காத மஞ்சள் எனில், நீரின் அடியில் தங்கிவிடும். செயற்கை நிறமிகள் இருந்தால், நீரில் பரவும்.
ஆப்பிள் vs மெழுகு
ஆப்பிள் பளபளப்பாக இருப்பதற்காக அதன் மேற்பரப்பில் மெழுகு பூசப்படுகிறது.
ஆப்பிளின் தோலை, கூர்மையான கத்தி வைத்துச் சுரண்டவும். மேற்பரப்பில் மெழுகு பூசப்பட்டு இருந்தால், கத்தியோடு உரிந்து வந்துவிடும்.
சுத்தமான உப்பு
உப்பில் அயோடின் சேர்க்கப்படுவதோடு, அவை கட்டியாகாமல் இருப்பதற்காக ஆன்டி கேக்கிங் ஏஜென்ட்டுகளும் சேர்க்கப்படும். இவற்றால் சிக்கல்கள் இல்லை. ஆனால் தரமற்ற உப்பில் தூசுகள், வெள்ளை பவுடர் போன்றவையும் கலந்திருக்கும். இவற்றையும் தண்ணீரை வைத்தே கண்டுபிடித்துவிட முடியும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை ஊற்றிவிட்டு, அதில் கால் டீஸ்பூன் உப்பைப் போட வேண்டும். 

பின்னர் அது கரையும் வரை கலக்க வேண்டும். தூய்மையான உப்பு என்றால், தண்ணீர் தெளிவாகவோ மிகவும் லேசான, மங்கலான தன்மையுடனோ இருக்கும். ஆனால் கலப்படம் இருந்தால் தண்ணீர் மிகவும் மங்கலாக இருக்கும். அடர்த்தியான துகள்களும் மிதக்கலாம்.
அயோடின் உப்பு vs சாதாரண உப்பு
சாதாரண உப்பா அல்லது அயோடின் கலந்த உப்பா என்பதையும் எளிய சோதனை மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஓர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, அதன் மேற்பகுதியில் உப்பைத் தடவவும். பிறகு ஒரு நிமிடம் கழித்து அதில் சிறிதளவு எலுமிச்சைச்  சாற்றை விடவும்.
சுத்தமான அயோடின் உப்பு என்றால், உருளைக்கிழங்கு நீல நிறமாக மாறும். இல்லையெனில் அது அயோடின் கலக்காத உப்பு என அர்த்தம்.
காபித்தூள் vs சிக்கரி
ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி, அதில் சிறிதளவு காபித்தூளைப் போடவும். சிறிதுநேரம் காத்திருக்கவும்.
நல்ல காபித்தூள் என்றால், நீருக்கடியில் மூழ்காமல் மேல்பகுதியில் மிதக்கும். சிக்கரித் தூள் நீருக்கடியில் மூழ்கத் துவங்கும்.
கோதுமை மாவின் தூய்மை
கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றிவிட்டு அதில் ஒரு டீஸ்பூன் கோதுமை மாவைப் போடவும்.
தூய்மையான மாவு என்றால், அடிப்பரப்பிற்குச் சென்று தங்கிவிடும். குப்பைகள் இருந்தால் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.
மைதா vs இரும்புத்துகள்கள்
தூய்மையற்ற முறையில் தயாராகும் மைதா, கோதுமை மாவு மற்றும் ரவைகளில் இரும்புத்துகள்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருள்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு.
சிறிய அளவு மைதா, கோதுமை, ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதன் அருகில் காந்தத்தைக்கொண்டு செல்லுங்கள்.
இரும்புத்துகள்கள் ஏதேனும் இருப்பின் காந்தத்தின்மீது ஒட்டிக்கொள்ளும்.
செயற்கை நிறமிகள் vs சுப்பாரி பான் மசாலா
தரத்தை உயர்த்திக் காட்டுவதற்காக சுப்பாரி பான் மசாலாவில் நிறமிகள் கலக்கப்படும்.
இவற்றை ஒரு டம்ளர் தண்ணீரைக்கொண்டுகண்டுபிடித்துவிடலாம். சிறிதளவு சுப்பாரி பான் மசாலாவை ஒரு கண்ணாடி டம்ளரில் உள்ள நீரில் போடவேண்டும். செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டிருந்தால் நிறங்கள் நீரில் கரையும்.
இவையனைத்தும் கலப்படங்களைக் கண்டறியும் வழிமுறைகள். சரி… கலப்படம் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? எங்கே புகார் செய்ய வேண்டும்? வழிகாட்டுகிறார் தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த, சென்னை நியமன அலுவலர் ஆர்.கதிரவன்.
கலப்படங்கள் குறித்து எப்படிப் புகார் செய்வது?
“கலப்படங்கள் குறித்துப் பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார் அளிக்கலாம். இதற்காகத் தனி எண், உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரால் ஏற்படுத்தப்பட்டுத் தற்போது செயல்பட்டு வருகிறது. நீங்கள் வாங்கும் பொருள்களில் கலப்படம் இருக்கிறது என உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் தகுந்த ஆதாரங்களுடனோ செய்தியையோ வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம். உடனே அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் நேரில் புகார் அளிக்கலாம்.
வாட்ஸ்அப் எண்: 9444042322
இதேபோல இன்னும் அதிகம்பேருக்குத் தெரியாத விஷயம், செய்தித்தாள்களில் வைத்து உணவுப்பொருள்களை உண்ணக்கூடாது என்பது. சூடான பலகாரங்களைச் செய்தித்தாள்கள் அல்லது அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் வைத்து உண்டால், அவற்றில் இருக்கும் வேதிப்பொருள்களான கார்பன், காரீயம் போன்றவை உடலுக்குள் செல்லும். இவை உடலுக்குத்  தீங்குவிளைவிக்கக்கூடியவை. உணவுப்பொருள்களை உண்பது மட்டுமல்ல; அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் கைகளைத் துடைப்பதுகூட ஆபத்தானதுதான்.
மேலும் கடைக்காரர்கள் செய்தித்தாள்களில் வைத்துச் சூடான உணவுப்பொருள்களை விநியோகிப்பதைக் கண்காணித்து அதனை உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் தடுத்து வருகிறோம். ஏதேனும் ஒரு கடைக்காரர் அப்படிச் செய்தால், உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் ‘மேம்பாட்டுத் தாக்கீது அறிக்கை’ கொடுக்கப்படும். அதற்கு அந்தக் கடைக்காரர் விளக்கமளிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இந்தச் செயலில் ஈடுபட்டால் அவர்மீது வழக்குப் பதியவும் முடியும். எனவே செய்தித்தாள்களைக் கொண்டு உணவுப் பண்டங்கள் உண்பதைத் தவிர்ப்பது குறித்த விழிப்பு உணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும்”.
கலப்படம் மட்டுமல்ல… இதற்கும் புகார் செய்யலாம்!
உணவுப்பொருள்களில் கலப்படம் இருந்தால், தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்திருக்கும் வாட்ஸ்அப் எண் இருப்பதுபோல, பாக்கெட்டுகளில் வாங்கும் உணவுப் பொருள்களின் மீதான குறைகளையும் மொபைல் ஆப் மூலமாகப் பதிவு செய்யலாம். இதற்காகத் தமிழக அரசின் தொழிலாளர் துறையின்கீழ் இயங்கும் சட்டமுறை எடை, அளவுப் பிரிவு TN-LMCTS என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது.

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருள்களைப் பொறுத்தவரை சட்டப்படி, பாக்கெட்டின் மீது யார் அதை பேக் செய்தார், யார் அதைத் தயாரித்தார், எப்போது பேக் செய்யப்பட்டது, எடை எவ்வளவு, பாக்கெட்டிற்குள் என்ன இருக்கிறது, அதிகபட்ச சில்லறை விலை போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நுகர்வோர் இதுகுறித்துப் புகார் அளிக்கலாம். இந்த ஆப்பில் எழுத்து வடிவத்தில் அல்லது போட்டோ, வீடியோ, ஆடியோ வடிவில் புகார் அளிக்கலாம். இதில் புகார் அளித்தால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கைகள் குறித்துப் புகார் செய்தவருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

பாக்கெட் பொருள்கள் மட்டுமின்றி, மோட்டல்களில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருள்கள், அதிக விலை வைத்து விற்கப்படும் வாட்டர் பாட்டில்கள் போன்றவை குறித்தும் இதில் புகார் செய்ய முடியும். சாலையோரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள், ரேஷன் கடைகள், மோட்டல்கள் போன்ற அனைத்துக்கும் இந்த ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்.

நன்றி 
https://foodsafetynews.wordpress.com/2017/09/14/கலப்படம்-அறிவோம்/

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...