கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சிறப்பு மோசடி

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சிறப்பு மோசடி
கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளது,  இதன் படி பல தனியார் பள்ளிகள் முறையாக மாணவர்களை சேர்க்கவில்லை,  இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலக தகவலின்படி நுகர்வோர் அமைப்புகள் இதனை கண்காணிக்க கேட்டிருந்தனர்.  இதன்படி கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மைய தலைவர் சிவசுப்பிரமணியம்செயலாளர் கனேசன்துணை தலைவர் செல்வராஜ்ஒருங்கிணைப்பாளர்கள் தனிஸ்லாஸ் (பந்தலூர்), சத்தியசீலன் (நெலாக்கோட்டை), யோகேஸ்வரன்சிவநேசன் (கூடலூர்), மாரிமுத்து (உதகை), வீரபாண்டியன் (குன்னூர்)  உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்க்கொண்டனர்.  இதில் பல முறைகேடுகளில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டுள்ளது ​தெரிய வந்துள்ளது.
1. 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் பள்ளிகளில் ஒருசில பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைக்கு இலவச கல்விக்கான சீட்டு தருகின்றோம் ஆனால் கல்வி கட்டணத்தினை தற்போது செலுத்தி விடுங்கள் அரசு தங்கள் குழந்தைக்கான கல்வி கட்டணம் தரும்போது திரும்ப தருகின்றோம் என்று கூறி சேர்த்துள்ளனர்.
ஆனால் சட்டப்படி இலவச ஒதுக்கீட்டில் சேர்க்கும் மாணவர்களிடம் பெற்றோர்களிடம் எந்தவித கட்டணமும் பெற கூடாது என்று தெளிவாக கூறியுள்ளது குறிப்பிடதக்கது,
2. சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் குடியிருப்போருக்கு மட்டுமே இலவச சீட்டுகள் வழங்க முடியும் அதனால் இந்த எல்லைக்குள் 10 சதவீதம் முதல் 15 சதவீதத்தினரை மட்டும் சேர்த்துள்ளோம்,  அவ்வளவு பேர் தான் உள்ளனர் என கூறி மற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கின்றனர்.
ஆனால் மேற்படி சட்டத்தில் 25 சதவீதம் பள்ளியை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரம் வரை எடுக்கலாம் என கூறியுள்ளது,  எனினும் பள்ளிக்கு அருகில் உள்ளவர்கள் தகுதியுள்ளவர்கள் இல்லை எனில் விண்ணப்பம் பெற்று மற்ற பகுதியில் உள்ளவர்களையும் சேர்க்கலாம் எனவும் கண்டிப்பாக 25 சதவீதம் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு இலவச சேர்க்கை மேற்க்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது,
3. சில பள்ளிகளில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படித்த தகுதியற்ற ஆசிரியர்களை பணிக்கு நியமித்துள்ளனர்,  சட்டப்படி மாணவர்களை கல்வி கற்றுக்கொடுக்க அரசால் அங்கிகரிக்கப்பட்ட அரசால் அளிக்கப்படும் கல்வியியல் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களை தான் நியமிக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடதக்கது,
4. பல பள்ளிகள் கடந்த ஆண்டு நாங்கள் 15 சதவீதம் சேர்த்துள்ளோம்இந்தாண்டு 10 சதவீதம் சேர்த்தால் போதுமானது.  என கூறி கூடுதல் மாணவர்களை சேர்ப்பதில்லை எனவும் ​தெரியவருகின்றது,  மேலும் அவர்கள் நடத்தும் அறக்கட்டளை மூலமாக படிக்க வைப்பதாக கூறி அரசின் இலவச திட்டத்திற்கும் அந்த மாணவர்களை கணக்கு காட்டுவதும் தெரியவருகின்றது,  சில பள்ளிகள் தங்கள் பள்ளி வாகனத்தில் குழந்தைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்துவதாகவும்இலவச கல்வியில் சேரும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் பராமரிப்பாளர் (ஆயாஆகியோர் கட்டணம் தனியாக வசூலிப்பதாகவும் பெற்றோர்களிடம் விசாரனை மேற்கொண்டதில் தெரியவந்துள்ளது,

மேலும் ஒரு சில பள்ளிகள் கீழ் தளங்களை கடைகள் நடத்த வாடகைக்கு விட்டுவிட்டு மாடிகளில் பாடங்களை நடத்த வகுப்புகளை அமைத்துள்ளனர்,  கும்பகோணம் தீவிபத்திற்கு பின் கல்வி துறை சார்பில் வெளியிட்ட ஆணையில் சிறு குழந்தைகள் தரை மட்ட வகுப்புகளில் தான் வகுப்பு நடத்த வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடதக்கது,
மேற்படி சம்பவங்கள் அடிப்படையில் விரைவில் அறிக்கை தயாரித்து கல்விதுறை அதிகாரிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் அறிக்கை அனுப்பபடும்சம்பந்த பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு இது போன்ற குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இளையோர் பாராளுமன்றம்

கொளப்பள்ளி பகுதியில் இளையோர் பாராளுமன்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்திய அரசு நேரு யுவகேந்திரா நீலகிரி மாவட்டம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மெர்குரிகாய்ஸ் இளைஞர் மன்றம் ஆகியன இணைந்து இளையோர் பாராளுமன்றம் குறித்த விழிப்புணர்வு நிகழச்சியை நடத்தின.
நிகழ்ச்சிக்கு ​​மெர்குரிகாய்ஸ் இளைஞர் மன்ற தலைவர் ஜம்சீர் தலைமை தாங்கினார். இளையோர் பாராளுமன்றம் குறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும், நீலகிரி மின் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினருமான சு.சிவசுப்பிர மணியம் பேசும்போது அரசின் திட்டங்கள் குறித்து இளைஞர்கள் அறிந்து கொண்டு அவற்றின் பயன்கள் கிராம மக்களுக்கு கிடைக்கவும். கிராமங்களின் தேவையை அரசிடம் சம்பந்தபட்ட துறைகளில் ​​தெரிவித்து அதன் மூலம் கிராம மேம்பாட்டிற்கு உதவும் இளைஞர் மன்றத்தினர்​ செயல்பட முன்வர வேண்டும் என்றார்.
கப்பாலா ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் பேசும்போது அரசு பல்வேறு துறைகள் பல்வேறு கட்டங்களில் செயல்பட்டு வருகின்றது. அவற்​றை அறிந்து ​​கெள்ள ​வேண்டும். குப்பைகளை குறைக்கும் போது அதனை அகற்ற உள்ளாட்சிகள் செய்யும் செலவு குறைகின்றது.  இதனால் மற்ற திட்டங்களுக்கும் அரசு செலவிட்டு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும். சிலர் பெயரளவிற்கு அமைப்பு தெடங்கி அதனை பயன்படுத்தி மக்களையும் ஏமாற்றுதல், தவறான செயல்பாடுகளுக்கு பயன்படுத்துதல், அரசு துறையினரை மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சமூகத்தில் அமைப்புகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.  இது போன்று இளைஞர் சங்கங்கள் செயல்பட கூடாது என்றார்.
கொளப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சத்தியமூர்த்தி பேசும்போது இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.  அப்போது தான் வெற்றி பெற முடியும்.  இளைஞர்களிடையே தாழ்வு மணபான்மை இருக்ககூடாது.  போட்டி ​தேர்வுகளில் பங்கேற்பதால் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
கொளப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் கிருஸ்ணமூர்த்தி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்து, பேக்டோ நிறுவன இயக்குனர் ராதாகிருஸ்ணன், அமைப்பு சாரா தொழிலாளர் வாரிய உறுப்பினர் கதிரேசன் சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ​மெர்குரிகாய்ஸ் இளைஞர் மன்றம், விவேகானந்தா இளைஞர் மன்றம்,  பாரதி இளைஞர் மன்றம் 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  முன்னதாக ​மெர்குரி காய்ஸ் இளையோர் மன்ற நிர்வாகி உதயராசு வரவேற்றார்.  முடிவில் நேரு யுவகேந்திரா தேசிய சேவை தொண்டர் ஆண்டம்மாள் நன்றி கூறினார்.













கொளப்பள்ளி பகுதியில் இளையோர் பாராளுமன்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கொளப்பள்ளி பகுதியில் இளையோர் பாராளுமன்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்திய அரசு நேரு யுவகேந்திரா நீலகிரி மாவட்டம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மெர்குரிகாய்ஸ் இளைஞர் மன்றம் ஆகியன இணைந்து இளையோர் பாராளுமன்றம் குறித்த விழிப்புணர்வு நிகழச்சியை நடத்தின.
நிகழ்ச்சிக்கு ​​மெர்குரிகாய்ஸ் இளைஞர் மன்ற தலைவர் ஜம்சீர் தலைமை தாங்கினார். இளையோர் பாராளுமன்றம் குறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும், நீலகிரி மின் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினருமான சு.சிவசுப்பிர மணியம் பேசும்போது அரசின் திட்டங்கள் குறித்து இளைஞர்கள் அறிந்து கொண்டு அவற்றின் பயன்கள் கிராம மக்களுக்கு கிடைக்கவும். கிராமங்களின் தேவையை அரசிடம் சம்பந்தபட்ட துறைகளில் ​​தெரிவித்து அதன் மூலம் கிராம மேம்பாட்டிற்கு உதவும் இளைஞர் மன்றத்தினர்​ செயல்பட முன்வர வேண்டும் என்றார்.
கப்பாலா ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் பேசும்போது அரசு பல்வேறு துறைகள் பல்வேறு கட்டங்களில் செயல்பட்டு வருகின்றது. அவற்​றை அறிந்து ​​கெள்ள ​வேண்டும். குப்பைகளை குறைக்கும் போது அதனை அகற்ற உள்ளாட்சிகள் செய்யும் செலவு குறைகின்றது.  இதனால் மற்ற திட்டங்களுக்கும் அரசு செலவிட்டு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும். சிலர் பெயரளவிற்கு அமைப்பு தெடங்கி அதனை பயன்படுத்தி மக்களையும் ஏமாற்றுதல், தவறான செயல்பாடுகளுக்கு பயன்படுத்துதல், அரசு துறையினரை மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சமூகத்தில் அமைப்புகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.  இது போன்று இளைஞர் சங்கங்கள் செயல்பட கூடாது என்றார்.
கொளப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சத்தியமூர்த்தி பேசும்போது இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.  அப்போது தான் வெற்றி பெற முடியும்.  இளைஞர்களிடையே தாழ்வு மணபான்மை இருக்ககூடாது.  போட்டி ​தேர்வுகளில் பங்கேற்பதால் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
கொளப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் கிருஸ்ணமூர்த்தி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்து, பேக்டோ நிறுவன இயக்குனர் ராதாகிருஸ்ணன், அமைப்பு சாரா தொழிலாளர் வாரிய உறுப்பினர் கதிரேசன் சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ​மெர்குரிகாய்ஸ் இளைஞர் மன்றம், விவேகானந்தா இளைஞர் மன்றம்,  பாரதி இளைஞர் மன்றம் 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  முன்னதாக ​மெர்குரி காய்ஸ் இளையோர் மன்ற நிர்வாகி உதயராசு வரவேற்றார்.  முடிவில் நேரு யுவகேந்திரா தேசிய சேவை தொண்டர் ஆண்டம்மாள் நன்றி கூறினார்.

217 இந்திய ஸ்நாக்ஸ்களுக்கு அமெரிக்கா தடை!


217 இந்திய ஸ்நாக்ஸ்களுக்கு அமெரிக்கா தடை!
மேகி நூடுல்ஸ்-ல் அதிகப்படியான நச்சுத்தன்மை கலந்திருப்பது இத்தனை வருடம் கழித்தே நமக்குத் தெரிய வந்திருக்கிறது.
ஆனால், கடந்த ஐந்து மாதங்களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான 217 நிறுவனங்களின் பல்வேறு நொறுக்குத் தீனிகளைத் தடை செய்திருக்கிறது, அமெரிக்காவின் ‘ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்.டி.ஏ)’.

நொறுக்குத் தீனி மற்றும் இனிப்புக்குப் பெயர் போன ‘ஹால்டிராம்ஸ்’ தயாரிப்புப் பொருட்களை அமெரிக்காவில் உள்ள இந்தியக் கடைகளில் மட்டுமல்ல, அமெரிக்காவில் விற்கவே தடை விதித்திருக்கிறது எஃப்.டி.ஏ. தவிர, அது தடை விதித்த நிறுவனங்களின் பட்டியலில், சென்னையின் மிகப் பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டாலும் அடக்கம். 

தடைக்கு எஃப்.டி.ஏ சொன்ன காரணம் இதுதான்: இந்த ஸ்நாக்ஸ்களில் அதிகப்படியான பூச்சுக்கொல்லி மருந்துகள் கலக்கப்பட்டிருக்கின்றன!

‘‘உணவைப் பாதுகாக்க நாங்கள் பயன்படுத்தும் பிரிசர்வேட்டிவ்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இதைத்தான் ‘அதிகப்படியான பூச்சுக்கொல்லி’ என்கிறது எஃப்.டி.ஏ!’’ என்று விளக்கம் அளித்திருக்கிறது ‘ஹால்டிராம்ஸ்’ நிறுவனம்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் 217 ஸ்நாக்ஸ் அயிட்டங்களில், பாதி இந்தியாவிலேயே தயாராகுபவை. அமெரிக்காவில் உள்ள இந்திய ஸ்டோர்களில் விற்கத் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களில், பிரிட்டானியா பிஸ்கெட்டும் ஒன்று என்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.
2015ம் ஆண்டில் எஃப்.டி.ஏ தடை செய்துள்ள உணவு பொருள் நிறுவனங்களின் பட்டியல் அறிய, இந்த லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்: http://www.accessdata.fda.gov/scripts/importrefusals/ir_byProduct.cfm?DYear=2015&DMonth=5

நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு தர நிர்னய துறையின் சார்பான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு தர நிர்னய துறையின் சார்பான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் உதகை துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது,
கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்னய மாவட்ட அலுவலர் மரு.ரவி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி வியாபாரிகள் பதிவு செய்ய கிராம புறங்களில் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடத்த வேண்டும்கிராமபுறங்கள் மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் தடைச்செய்யப்பட்ட மற்றும் காலாவதியான உணவுகளை தமிழகத்திற்குள் விற்கும் நிலை உள்ளது,  எனவே இது குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும்.  பல ஓட்டல்களில் சுடுதண்ணீர் வழங்க வேண்டும் வழங்கப்படும் உணவுகள் தரமான உணவுகளா என்பது குறித்து ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும் பல உணவுப்பொருட்களில் முறையான தகவல் இல்லாமல் பழைய உணவுப்பொருட்கள் முறுக்கு மிக்சர் பிரட் உள்ளிட்டவை பொட்டலமிட்டு விற்பனை செய்கின்றனர்உதகை மற்றும் கிராம புறங்களில் விற்பனை செய்யப்படும் பொட்டல டீக்களில் கலப்படம் அதிகமாக உள்ளது,  சாலையோர உணவகங்களில் தரம்சேர்க்கப்படும் நிறங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார்,
பதிலளித்து பேசிய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி பேசும்போது தற்போது அவ்வப்போது ஆய்வுகள் மேற்க்கொள்ளபட்டு வருகின்றது,  ஊழியர்கள் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பற்றாக்குறையால் அடிக்கடி ஆய்வு நடத்த இயலவில்லை.  எனினும் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் ஆய்வுகள் எடுத்து அனுப்பபட்டு வருகின்றது,  இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் என ​தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.  தற்போது மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன,  3 வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  சாலையோர உணவகங்களுக்கு பல இடங்களில் சாக்கடைக்கு அருகில் உள்ளதுநகராட்சி நிர்வாகம் சுகாதாரமற்ற இடங்களில் கடைகள் அமைக்க அனுமதி வழங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,    தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் போது பிடிப்பட்டால் விற்பனையாளர் யாரிடம் கொள்முதல் செய்தாரோ அவருடைய பில் மற்றும் தகவல்கள் இருந்தால் விற்பனையாளர் சாட்சியாக இருப்பார்,  கொள்முதல் செய்ததற்கு ஆதாரம் இல்லை எனில் விற்பனை செய்தவரே அதற்கு முழு பொறுப்பாவார்.  விரைவில் அனைத்து பகுதியிலும் வியாபாரிகள் பதிவு செய்வதற்கு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  பல காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் உரிய கிடங்குகள் இன்றி முறையான பராமரிப்பு இல்லாததினால்  பாதுகாப்பு இல்லாமல்​ போகின்றதுபாக்கெட்டுகளில் தண்ணீர் அடைத்து விற்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை,  எனினும் பல பார்கள் மற்றும் கல்யான வீடுகள்கோவில் திருவிழாக்களில் இவை பயன்படுத்த படுகின்றது.  இவற்றை பயன்படுத்த கூடாது நெஸ்லே நிறுவன பொருட்கள் அனைத்தும் தற்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ப் படுகின்றது.  அதுபோல அனைத்து வகையான நூடுல்ஸ் வகைகளும் தற்போது ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது,  மக்களிடம் பாதுகாப்பான உணவு குறித்து விழிப்புணர்வு தேவை விழிப்புணர்வினால் மட்டுமே 80 சதவீத தரமற்ற உணவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்றார்
கூட்டத்தில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜன்கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் உதகை தொகுதி நுகர்வோர் சங்க செயலாளர் தருமலிங்கம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவக்குமார் சிவராஜ் அருன் அரிகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



பகை- பழியை - தக்காளியையும் தூக்கி எறியுங்கள்''

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா  உங்களுக்குசந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா,  நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை.
எல்லா மாணவர்களும் ஒரே குரலில் 'ஆமாம்...' என்றனர்அவர்களைஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார்ஒருவன் 'பத்துஎன்றான்அடுத்தவன் 'பதினைந்துஎன்றான்இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.
இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியைவகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ''நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படிகூடையில் உள்ள தக்காளிகளை எடுத்துஉங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்'' என்றார்மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
அவர்களிடம், ''இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார்புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லைஆனால்அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கினநாற்றம் அடிக்கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர்ஒரு கட்டத்தில்... ஆசிரியையிடம் சென்றுமூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமா..? அந்த நாற்றத்தைப் போலவேபகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றனஎனவேபகைபழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால்தக்காளியையும் தூக்கி எறியுங்கள்'' என்றார்!மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்.

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...