Consumer Commission

 

Centre notifies rules for Consumer Protection (Jurisdiction of the District Commission, the State Commission and the National Commission) Rules, 2021

The revised pecuniary jurisdiction for entertaining consumer complaints shall be upto -

1) 50 lakh for District Commissions,

2) More than ₹50 lakh to ₹2 Crore for State Commissions and

3) More than ₹2 Crore for National Commission

Posted On: 30 DEC 2021 5:34PM by PIB Delhi

In exercise of powers conferred by provisos to sub-section (1) of Section 34, sub-clause (i) of clause (a) of sub-section (1) of section 47 and sub-clause (i) of clause (a) of sub-section (1) of section 58 read with sub-clauses (o), (x) and (zc) of sub-section (2) of section 101 of the Consumer Protection Act, 2019, the Central Government has notified the Consumer Protection (Jurisdiction of the District Commission, the State Commission and the National Commission) Rules, 2021

The Consumer Protection Act, 2019 promulgates a three-tier quasi-judicial mechanism for redressal of consumer disputes namely district commissions, state commissions and national commission. The Act also stipulates the pecuniary jurisdiction of each tier of consumer commission. As per the existing provisions of the Act, District Commissions have jurisdiction to entertain complaints where value of the goods or services paid as consideration does not exceed one crore rupees. State Commissions have jurisdiction to entertain complaints where value of the goods or services paid as consideration, exceeds 1 crore rupees, but does not exceed 10 crore rupees and National Commission has jurisdiction to entertain complaints where value of goods or services paid as consideration exceeds 10 crore rupees.

After the Act came into force, it was observed that the existing provisions relating to pecuniary jurisdiction of consumer commissions were leading to cases which could earlier be filed in National Commission to be filed in State Commissions and cases which could earlier be filed in State Commissions to be filed in District Commissions. This caused a significant increase in the workload of District Commissions, leading to rise in pendency and delay in disposal of cases, defeating the very object of securing speedy redressal to consumers as envisaged under the Act.

With regard to revision of pecuniary jurisdiction, Central Government held wide consultation with States/UTs, consumer organizations, law chairs etc. and examined the issues that had created long pendency of cases in detail.

With notification of the aforementioned rules, the new pecuniary jurisdiction, subject to other provisions of the Act, shall be as under:

  1.  District Commissions shall have jurisdiction to entertain complaints where value of the goods or services paid as consideration does not exceed 50 lakh rupees.
  2.  State Commissions shall have jurisdiction to entertain complaints where value of the goods or services paid as consideration exceeds 50 lakh rupees but does not exceed 2 crore rupees.
  3. National Commission shall have jurisdiction to entertain complaints where value of the goods or services paid as consideration exceeds 2 crore rupees.

It may be mentioned that the Consumer Protection Act, 2019 stipulates that every complaint shall be disposed of as expeditiously as possible and endeavour shall be made to decide the complaint within a period of 3 months from the date of receipt of notice by opposite party where the complaint does not require analysis or testing of commodities and within 5 months if it requires analysis or testing of commodities.

The Act also provides consumers the option of filing complaint electronically. To facilitate consumers in filing their complaint online, the Central Government has set up the E-Daakhil Portal, which provides a hassle-free, speedy and inexpensive facility to consumers around the country to conveniently approach the relevant consumer forum, dispensing the need to travel and be physically present to file their grievance. E-Daakhil has many features like e-Notice, case document download link & VC hearing link, filing written response by opposite party, filing rejoinder by complainant and alerts via SMS/Email. Presently, facility of E-Daakhil is available in 544 consumer commissions, which includes the National Commission and consumer commissions in 21 states and 3 UTs. So far, more than 10,000 cases have been filed using the E-Daakhil Portal and more than 43000 users have registered on the portal.

To provide a faster and amicable mode of settling consumer disputes, the Act also includes reference of consumer disputes to Mediation, with the consent of both parties. This will not only save time and money of the parties involved in litigating the dispute, but will also aid in reducing overall pendency of cases

கவுனி அரிசி

 🌾 *உழவன் சந்தை* 🌾

________________________________

*கருப்பு கவுணி அரிசியின் வரலாறு :*

________________________________

உழவு பகிர்வு : 


▪️ கருப்புகவுணி அரிசி பண்டைய சீனாவை பூர்விகமாக கொண்டது. பண்டைய சீன மன்னர்கள் மற்றும் அரச குடும்பத்தினர், மந்திரிகள், பெரு வியாபாரிகள் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். 


▪️ *கருப்புகவுணி அரிசி நிறம்:*

கருப்பு கவுனி நிறம் கருப்பாக இருப்பதற்கு காரணம், இதில் உள்ள *அந்தோசினனின்* என்னும் மூல வேதிப்பொருள் தான்.


*ஊதா அரிசியா கருப்பு அரிசியா..?*

▪️ கருப்பு கவுணி அரிசி சமைத்த பின் ஊதா நிறத்தில் இருக்கும். கருப்பு கவுணி அரிசியின் கருப்பு நிறத்தின் காரணம் இதில் *அதிகப்பிடியான “Anthocyanins”* என்ற மூலக்கூறு தான்.


*கருப்புகவுணி தமிழகம் வந்த எப்படி:*

▪️ பண்டைய தமிழ் மன்னர்கள் – சீன மன்னர்கள் கிடையே இருந்த கப்பல் போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வியாபாரம் காரணமாக கருப்பு கவுனி தமிழகம் வந்தடைந்தது.


*கருப்புகவுணியும்-அரசரின் விருந்தும் :*

▪️ சீன அரசர்கள் தங்களின் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கருப்பு கவுனியில் செய்யப்பட்ட விருந்து அளிக்கப்பட்டது.


▪️ *தடை செய்யப்பட்ட அரிசி :*

▪️ பொது மக்கள் கருப்பு கவுணி பயன்படுத்த தடை செய்யப்பட்டது.. வரலாற்றில் கருப்பு கவுணி அரிசியை *“Forbidden Rice”* என்று அழைக்க காரணமாகும்..

▪️ சீனாவின் அரசர்கள், அரச குடும்பத்தார்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தடைசெய்யப்பட்ட அரிசியாக  “கருப்புகவுணி” கருதப்பட்டது. இதன் காரணம் *இதில் உள்ள ஊட்ட சத்துக்கள்*.. சீன அரசர்கள் இந்த வகை அரிசி கடவுள் தங்களுக்கு அளித்தாக கருதினார்கள். இதனால் பொது மக்கள் இவ்வகை அரிசியை பயன்படுத்த தடை செய்ய பட்டது.


*தண்டனைக்குரிய குற்றம் :*

▪️ அரசரின் கட்டளை மீறி, பொது மக்கள் யாரேனும் *“கருப்பு கவுணி”* அரிசியை பயன்படுத்தினால் தண்டனைக்கு உட்படுத்தபட்டனர்.


*Accupunture மருத்துவம்:*

▪️ தமிழகத்தின் தொடு வர்மம்க்கலை, சீனாவில் Accupunture என்று அறியப்படுகிறது. இவ்வகை மருத்துவர்கள் கருப்புகவுனியின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தார்கள். இவர்களின், கூற்றுப்படி *பிரபஞ்ச சக்தியை* உள்ள வாங்கும் கிரஹித்து கொள்ளும் ஆற்றல் கருப்புகவுணி அரிசிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது..

**********************************

*1 .கருப்புகவுணி அரிசியின் Antioxidants பலன்கள் :*

▪️ கருப்புகவுணி அரிசியின் Anthocyanine. சக்திவாய்ந்த Antioxidants ஆக செயல்படுகின்றது. மேலும்,  *புற்றுநோயை* எதிர்த்துப் போராடுவதற்கும், *இருதய நோய்களைத் தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை* மேம்பட உதவுகிறது.


▪️சிவப்பு அரிசி அல்லது Brown rice அல்லது மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்புகவுணி அரிசி அந்தோசினனின் *Antioxidants – Free Radical Damage* பாதிப்பினை தடுக்கிறது. மேலும், இதய பாதிப்பினை தடுக்கிறது. 


*2. கருப்புகவுணி புற்று நோய்க்கு எதிரானது :*

▪️ கருப்புகவுணி அரிசி புற்று நோய்க்கு எதிரானது என்பதை  Third Military University, என்ற சீனா உள்ள யூனிவர்சிட்டியில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில்  *கான்செர் செல்களை குறைத்தோடு மார்பக புற்று நோய்யும் குறைத்து..*


*3. நீர்கட்டிகள் மற்றும் Inflammation:*

▪️ கொரியாவின் Ajo University ஆராய்ச்சியாளர்கள் கருப்பு அரிசி வீக்கத்தைக் (inflammation) குறைக்கும்  என்பதைக் கண்டறிந்துள்ளனர். கருப்பு அரிசியின் சாறு edema வைக்(நீர்கட்டிகளை) குறைக்க உதவியது மேலும், எலிகளின் தோலில் dermatitis ஒவ்வாமை தொடர்பு, தோல் அழற்சியை கணிசமாக குறைத்து என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

▪️ *நாள்பட்ட அழற்சியுடன்(chronic inflammatory diseases)* தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் கருப்பு அரிசியின் ஆற்றலுக்கான சிறந்த சிறந்ததாக உள்ளது.


*4. உடல்பருமன் அல்லது உடல் எடை குறைக்க :*

▪️ பிரவுன் அரிசி, கருப்பு கவுணி அரிசி நார்ச்சத்து மற்றும் *குறைந்த Carbohydrate* உள்ளதால். உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைகிறது என்பதை Hanyang University, South Korea நாட்டில் நடைபெற்ற ஆய்வுவில்,  நாற்பது உடல் பருமன் குறைபாட்டால் பாதிப்பு அடைத்த பெண்களிடம் நடைபெற்ற ஆய்வில் ஆறு வாரங்கள் பின் கணிசமான அளவு உடல் எடை குறைத்து.


▪️ இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை வெள்ளை அரிசிக்கு மாற்றாக கருப்புகவுணி மற்றும் *Unpolished brown ரைஸ்* பயன்படுத்த வேண்டும் என்பதே..


*5. கருப்பு கவுணி இதயத்தை பாதுகாக்கிறது :*

▪️ உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால். இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது..


*6. கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது :*

▪️ கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது


*கல்லீரல் கொழுப்பு நோய்(Fatty liver disease)*

▪️  என்பது வெளிப்படையாகவே, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உருவாகிறது.  இந்நிலையில் எலிகள் மீது செய்யப்பட்ட சோதனையில் கருப்பு அரிசி செயல்பாடு கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதாகவும், *triglyceride மற்றும் total cholesterol* அளவைக் குறைத்து, இதனால் Fatty liver disease க்கான அபாயத்தைக் குறைப்பதாக முடிவுகளில் தெரிகிறது.


*7.  மன -அழுத்தம் :*

▪️ மன - அழுத்தம் காரணமாக உடலிலும் மூளையும் பாதிப்பு அடைகிறது. கருப்பு கவுணி அரிசியில் உள்ள ஆன்தோசயனின் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் *மனஅழுத்தம்*  மற்றும் *மூளையில் ஏற்படும் அழுத்தம்* குறைக்க உதவும்.


*8.  இதயத்திற்கு நன்மை தரும் கருப்பு கவுணி :*

▪️ கருப்புகவுணி அரிசியில் உள்ள அந்தோசினனின் *ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகளை*  கரைக்க உதவுகிறது. 


▪️ கருப்பு கவுனி அரிசி அன்றாட பயன்படுத்த *இதயத்தில் உள்ள சிறு ரத்த குழாய்களில்* அடைபட்டு இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும்.


*9. சர்க்கரை குறைபாடு :*

▪️ ரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்க *டயாபடீஸ்* என்னும் குறைபாடு வரக்காரணம். கருப்பு கவுனி அரிசியில்  உள்ள *Antioxidants, நார்சத்து, அந்தோசினனின்* போன்றவை சர்க்கரை நோய்யை காட்டுக்குள்ள வைக்க உதவு கிறது.


*10.  Gluten அரவே அற்ற கருப்பு கவுணி :*

▪️ கருப்பு கவுணி அரிசியில் இயற்கையாகவே Gluten எனப்படும் ஓட்டும் தன்மையுள்ள வேதி பொருள் கிடையாது. சிலருக்கு Gluten ஒவ்வாமை ஏற்படும். 


▪️ இதனால் கருப்பு கவுணி  அரிசி தினசரி பயன்படுத்த *Gluten-அல்ர்ஜி* யிலிருந்து விடு பெறலாம்.


*11. ஆஸ்துமா:*

கொரியாவில் எலிகளிடம்  மேற்கொண்ட ஆய்வில் அறியப்படுவது.. *மூச்சு குழாய்களில் உள்ள நீர்க்கோர்வை அல்லது சளியால்* ஏற்படும் பாதிப்புகள் குறைக்கிறது. இதனால் ஆஸ்துமா குறைக்கிறது.


*12.*  Glycemic Index Value  = 42.3

***********************************

*1.பேரீச்சை கவுனி அரிசி பாயசம்*


*தேவையானவை :*

கவுனி அரிசி – 4 மேசை கேரண்டி (Tablespoon)


 பால் – 1000 மிலி. 


 பேரீச்சம்பழம் – 20 கொட்டையுடன். 


 Condensed Milk  – 4 மேசை கேரண்டி (Tablespoon)


 துருவிய பாதாம் பருப்பு – 10


 ரோஸ் வாட்டர் – 4 சொட்டுகள்


*செய்முறை :*

*1.*  கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவிடவும். 


*2.* பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கி, பின்னர் தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 


*3.* ஊறவைத்த கவுனி அரிசியின் தண்ணீரை வடித்துவிட்டு உலர வைக்கவும். பிறகு, லேசான ஈரப்பதத்தோடு இருக்கும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்துக்கொள்ளவும்.


*சமைக்கு முறை :*

▪️ குக்கரை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி, ஒரு கொதி வந்ததும், உடைத்த அரிசியைச் சேர்த்து மூடிபோட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும். 


▪️ வெந்தவுடன் அதனுடன் அரைத்த பேரீச்சம்பழ விழுது, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிடவும். கலவை எல்லாம் நன்கு சேர்ந்து வந்ததும், துருவிய பாதாம், ரோஸ்வாட்டர் சேர்த்து பரிமாறலாம்.


*பரிமாறு முறை :*

வறுத்த முந்திரி மேலே வைத்து சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

***********************************

*2.கருப்பு கவுனி - இடியாப்பம் :*


*தேவையானவை :*

கவுனி அரிசி மாவு – ஒரு கப்


 உப்பு – தேவையான அளவு


 நெய் – ஒரு டீஸ்பூன்


 தேங்காய்த்துருவல் – தேவையான அளவு


 சர்க்கரை – தேவையான அளவு


*செய்முறை :*

*1.* கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்து.


*2.* பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர விடவும். உலர்ந்த அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். 


*3.*  இதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய உபயோகப்படுத்தலாம்.


*சமைக்கும் முறை :*

*1.*  அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி, சூடானதும் உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் கவுனி அரிசி மாவைக் கொட்டி, சுடவைத்த தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும். 


*2.*  மாவு இடியாப்ப பதத்துக்கு வந்ததும் இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும். பிறகு, ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.


*பரிமாறு முறை :*

தேங்காய்த்துருவல், சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

************************************

*3. கருப்பு கவுனி –  இட்லி*


*தேவையானவை :*

கருப்பு கவுனி அரிசி – 2 கப்


 இட்லி அரிசி – ஒரு கப்


 கெட்டி அவல் – ஒரு கப்


 உளுந்து – ஒரு கப்


 வெந்தயம் – கால் டீஸ்பூன்


 உப்பு – தேவையான அளவு


*செய்முறை :*

*1.*  கருப்பு கவுனி அரிசி மற்றும் இட்லி அரிசி ஒன்றாகச் சேர்த்தும், அவலைத் தனியாகவும், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்தும் ஒட்டுமொத்தமாக 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, எல்லாவற்றையும் நன்கு கழுவி ஒன்றாக கிரைண்டரில் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவை நன்கு கலக்கிவிடவும்..


*சமைக்கும் முறை :*

*2.*  புளித்த மாவை நன்கு கலக்கி. இட்லித் தட்டில் துணி விரித்து மாவை ஊற்றி மூடி போட்டு ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கருப்பு கவுனி அரிசி இட்லி தயார்.


*பரிமாறும் முறை :*

தேங்காய் சட்னி/கரசட்டினி/கடப்பா சாம்பாருடன் பரிமாறவும்.

**********************************

*4. செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி இனிப்பு*


*தேவையானவை :*

கவுனி அரிசி – ஒரு கப்


 சர்க்கரை – முக்கால் கப்


 ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்


 தேங்காய்த்துருவல் – முக்கால் கப்


 நெய் – 2 டேபிள்ஸ்பூன்


 முந்திரி, பாதாம் – சிறிதளவு


*செய்முறை :*

சுத்தம் செய்த கவுனி அரிசியை 4 கப் நீரில் 4 மணி நேரம் ஊற விடவும்.


*சமைக்கும் முறை :*

*1.*   குக்கரை அடுப்பில் வைத்து ஊறிய அரிசியை தண்ணீருடன் சேர்த்து மூன்று விசில் வேகவிடவும். 


*2.*  பிறகு, 15 நிமிடம் தீயை முற்றிலும் குறைத்து வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு மூடியைத் திறந்து வெந்த அரிசியோடு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய், முந்திரி, பாதாம் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும்.


*பரிமாறும் முறை :*

சூடாக உண்ண/ஆறிய பின் உண்ண ஏற்றது.


**********************************

*1. உடலின் ஆரோக்கியத்திற்கு கருப்புகவுணி அரிசி ஏற்றதா..?*

▪️ ஆம், கருப்புகவுணி அரிசி உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. கருப்புகவுணி அரிசி உள்ள *Anthocyanine* அளவற்ற நன்மைகள் தரக்கூடியது. 


*2. கருப்பு கவுனி அரிசி  Glueten Free யா..?*

▪️ ஆம், கருப்பு கவுனி அரிசி  Glueten Free தான்.


*3. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுதானா..?*

▪️ ஆம், கருப்பு கவுணி அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தான். கருப்பு கவுணி அரிசி *ரத்தத்தில் உள்ள சர்க்கரை* அளவினை குறைக்க உதவும்.


*4. புற்று நோயாளிகளுக்கு கருப்பு கவுணி உணவினை உண்ணலாமா..?*

▪️ கருப்பு கவுணி அரிசியை ஆரம்ப நிலை புற்று நோய்யாளிகளுக்கு உட்கொள்ளலாம். மற்ற நிலை புற்று நோயாளிகளுக்கு மருத்துவரின்/சித்த மருத்துவரின் ஆலோசனை பெறவும். 


*5. அரிசியை பாதுகாப்பது எப்படி..?*

▪️ இயற்கை கருப்பு கவுணியை காற்று போகாத வகையில் பாதுகாக்க *லவங்கம், கிராம்பு அல்லது மிளகாய் வற்றல்* போட்டு வைக்கலாம். இதனால் பூச்சிகள் மற்றும் புழுக்கள்   வராமல் தடுக்கலாம்.


*6. கருப்புகவுணி அரிசி சுவை எப்படி இருக்கும்..?*

▪️ மற்ற அரிசி வகை போல அல்லாமல் கருப்பு கவுணி அரிசி *Nutty Flavour* பருப்பு சுவை போல் இருக்கும்.


*7. கருப்பு அரிசியா  அல்லது ஊதா அரிசியா..?*

▪️ கருப்பு அரிசி சமைத்த பின் பார்ப்பதற்கு ஊதா நிறத்தில் இருக்கும். இதனால் கருப்பு கவுணி அரிசிக்கு ஊதா அரிசி *“Purple Rice ”* என வேறு பெயர் உண்டு. 


🌾  *கருப்புகவுணி* *NutrinationalFacts*

*நார்ச்சத்து:* 

▪️கருப்புகவுணி அரிசி அதிக படியான நார்ச்சத்து உள்ளது.100 கிராம் அளவில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. 


🌾  *1 கப் அளவு சமைத்த கருப்புகவுணி அரிசியில் உள்ள சத்துக்கள்*


▪️ கலோரிஸ்   =160 கிராம் 


▪️ மொத்த கொழுப்பு  = 2 கிராம் 


▪️ சோடியம்     = 4 மில்லி கி


▪️ பொட்டாசியம்  = 268 கிராம் 


▪️ மொத்த carbs   = 34 கிராம் 


▪️ புரதம்           = 5 கிராம் 


▪️ இரும்பு               = 6%


▪️ நார்ச்சத்து     = 3 கிராம்

_________________________

தமிழ் எண்கள்

🌴🌴🌴

தமிழ்எண்களைப் பயன்படுத்தும் நாடு


உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.....


தமிழ் எண்கள்


1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,

11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo

21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo

31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,

41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo

51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo

61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo

71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo

81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo

91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo

101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo

111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo

121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo

131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo

141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo

151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo

161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo

171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo

181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo

191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo

      மொரீசியஸ்  நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ) இடம் பெற்றிருக்கின்றது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியஸ் அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியஸில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.  அகத்தியர் தந்த தமிழ் மொரீசியஸில் இன்றும் வாழ்கிறது.

நில அளவை தகவல்கள்

 சர்வே" பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:

--------------------------

1. சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.

1. நில அளவை துறை

2. நில வரிதிட்ட துறை

2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.

3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.

4. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது.

5. 1. கிராம வரைபடம்,

2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)

3. புலப்படம்

4.சர்வே கற்கள் பதிவேடு

5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட

உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.

6. ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.

7. மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.

எப்பொழுதெல்லாம் நிலத்தில் சர்வே செய்யப்படும்?

1. நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, இறுதியாக 1984 ல் இருந்து 1987 வரை நடந்தது.

2. பிறகு நத்தத்தில் நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது , இறுதியாக 1990 களில் நடந்தது.

3. சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும்.


4. கிராம வரைபடம் வரையும் போது திருத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்

5. புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல், புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும்.

6. நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது.

7. அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை, உருவப்பிழை பட்டாதரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுது.

8. பராமரிப்பு பணிகளின் போது புதிய சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை, சர்வே செய்யப்படும்.

9. இரண்டு நில உரிமையாளருக்கு நில அளவுகளில் தகராறு வரும்பட்சத்திலும் நிலத்தை சர்வே செய்ய வேண்டி இருக்கும்.

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி …

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

@#பாரம்பரியவழக்கம்:

நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஸ் அளவுகள், வெள்ளைகாரன் நாட்டை ஆண்டபோது நில நிர்வாகத்தை 90% அவர்கள் உருவாக்கியதால், அதன் அளவு முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.

உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில் மெட்ரிக் அளவுமுறையும் பயன் படுத்தி கொண்டு இருக்கின்றோம்.

• இன்றைக்கும் விருதுகள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யபடுகிறது.

• கொங்கு பகுதிகளில் சென்ட் என்றும், சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது.

• நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஸ் அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன.

• ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

#வேலி

• 1வேலி – 2௦ மா

• 1வேலி – 6.17 ஏக்கர்

• 1வேலி – 5காணி

#மா

• 1மா – 1௦௦ குழி

• 2௦மா – 1வேலி

• 3மா – 1ஏக்கர்

• 3மா – 1௦௦ சென்ட்

• 7மா – 1ஹெக்டேர்

#சதுமீட்டர்

• 1௦,௦௦௦ சதுர மீட்டர் – 1ஹெக்டேர்

• 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர்

• 4௦.5 சதுர மீட்டர் – 1சென்ட்

• 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட்

• 1சதுர மீட்டர் – 1௦.76391 சதுர அடி

• ௦.௦929 சதுர மீட்டர் – 1 சதுர அடி

• 1௦௦ சதுர மீட்டர் – 1ஏர்ஸ்

• ௦.8361 சதுர மீட்டர் – 1குழி

• 1௦1.17 சதுர மீட்டர் – 121 குழி

#செயின்

• 1செயின் – 66அடி

• 1செயின் – 1௦௦ லிங்க்

• 1௦செயின் – 1 பர்லாங்கு

• 1செயின் – 22 கெஜம்

#ஏக்கர்

• 1ஏக்கர் – 43,56௦ சதுர அடிகள்

• 1ஏக்கர் – 1௦௦ சென்ட்

• 1ஏக்கர் – 16௦ square Roads

• 1ஏக்கர் – 1.1834 Square Arpents

• 1ஏக்கர் – 1௦ Square Chains

• 1ஏக்கர் – 16௦ Perches

• 1ஏக்கர் – 16௦ Poles

• 1ஏக்கர் – 4௦46.82 சதுர மீட்டர்

• 2ஏக்கர் 47சென்ட்- 1 ஹெக்டேர்

• 1ஏக்கர் – ௦. 4௦469 ஹெக்டேர்

• 1.32ஏக்கர் – 1 காணி

• 64௦ஏக்கர் – 1 சதுர மைல்

• 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்

• 6.17ஏக்கர் – 1 வேலி

• 1ஏக்கர் – 3 மா

• 1ஏக்கர் – ௦. 4௦4694 ஹெக்டேர்

• 1ஏக்கர் – 4௦.5ஏர்ஸ்

• 1ஏக்கர் – 4840 சதுர கெஜம்

• 64௦ ஏக்கர் – 1 சதுர மைல்

• 8.64ஏக்கர் – 1வள்ளம்

#கெஜம்

• 1கெஜம் – 3அடி

• 22கெஜம் – 1 செயின்

• 22கெஜம் – 66 அடி

• 1கெஜம் – ௦.9144 மீட்டர்

• 1.௦93613 – 1மீட்டர்

#ஏர்ஸ்

• 1௦ ஏர்ஸ் – ௦2471 சென்ட்

• 1ஏர்ஸ் – 1௦76 சதுர அடி

• 1ஏர்ஸ் – 2. 47 சென்ட்

• 1ஏர்ஸ் – 1௦௦ ச.மீ

• 1௦௦ ஏர்ஸ் – 1ஹெக்டேர்

• ௦. 4௦5 ஏர்ஸ் – 1 சென்ட்

#ஹெக்டேர்

• 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்

• 1ஹெக்டேர் – 1௦,௦௦௦ ச.மீ

• 1ஹெக்டேர் – 1௦௦ ஏர்ஸ்

• ௦௦4௦ ஹெக்டேர் – 1சென்ட்

• 1ஹெக்டேர் – 247 சென்ட்

• 1ஹெக்டேர் – 1௦7637.8 சதுர அடிகள்

• ௦. 4௦5 ஹெக்டேர் – 1ஏக்கர்

#சென்ட்

• 1சென்ட் – 435.சதுரஅடிகள்

• 1சென்ட் – 4௦.5 சதுர மீட்டர்

• 1சென்ட் – 3குழி

• 1சென்ட் – 48.4 சதுர குழி

• 1௦௦ சென்ட் – 484௦ சதுர குழி

• 1 சென்ட் – ௦௦4௦ ஹெக்டேர்

• 1 சென்ட் – ௦. 4௦5 ஏர்ஸ்

• 1சென்ட் – 4௦. 46 சதுர மீட்டர்

• 2. 47 சென்ட் – 1ஏர்ஸ்

• 1 சென்ட் – 1௦௦௦ சதுர லிங்ஸ்

• 5.5 சென்ட் – 1கிரவுன்ட்

• 1.5 சென்ட் – டிசிமல்

• 1சென்ட் – ௦.௦௦4௦47 ஹெக்டேர்

• 1௦ சென்ட் – ௦.௦4௦47 ஹெக்டேர்

• ௦.௦2471சென்ட் – 1 ஏர்ஸ்

• ௦.௦2471சென்ட் – 1௦ ஏர்ஸ்

• 5.5 சென்ட் – 24௦௦ சதுர அடிகள்

• 5.5 சென்ட் – 1 மனை

• 33.௦6சென்ட் – 1 மா

• 6.61 சென்ட் – 1 வேலி

• ௦.7 சென்ட் – 1 குழி – 3௦௦ சதுர அடி ( மதுரை)

• ௦.7. சென்ட் – 3௦௦ சதுர அடிகள் ( மதுரை )

#சென்ட்

• 11.௦ சென்ட் – 4800 சதுர அடிகள்

• 11.௦ சென்ட் – 2மனை

• 56 சென்ட் – 1குருக்கம்

• 56 சென்ட் – 24,௦௦௦ சதுர அடிகள்

• 2. 47 சென்ட் – 1௦76 சதுர அடிகள்

• 4.7 சென்ட் – 1வீசம்

#கிரவுண்ட்

• 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்

• 1கிரவுண்ட் – 24௦௦ சதுர அடிகள்

• 1கிரவுண்ட் – 5.5 சென்ட்

#மீட்டர்

• 1 மீட்டர் – 3.281 அடிகள்

• 161௦ மீட்டர் – 1 மைல்

• 1௦௦௦ மீட்டர் – 1கி.மீ

• 1௦௦௦ மீட்டர் – ௦.62 மைல்

• ௦.9144 மீட்டர் – 1 கெஜம்

• 1 மீட்டர் – 39.39 இஞ்ச்

• 2௦1.16 மீ – 8 பர்லாங்கு

• 1 மீட்டர் – 1.௦93613 கெஜம்

• ௦.3௦48 – 1அடி

• 1௦ மீட்டர் – 32. 8௦84 அடிகள்


#அடி_சதுரஅடிகள்


• 435.6 சதுர அடிகள் 1சென்ட்

• 24௦௦ சதுர அடிகள் 1கிரவுண்ட்

• 57,6௦௦ சதுர அடிகள் 1காணி

• 3.28 அடி 1மீட்டர்

• 1அடி 12 இன்ச்

• 1அடி 3௦. 48 செ. மீ

• 528௦ அடி 1 மைல்

• 328௦ அடி 1கி. மீ

• 1௦76 சதுர அடிகள் 1 ஏர்ஸ்

• 1௦.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்

• 1சதுர அடி ௦.௦929 சதுர மீட்டர்

• 24௦௦ சதுர அடிகள் 1 மனை

• 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்

• 43,56௦ சதுர அடிகள் 1 ஏக்கர்

• 1 சதுர அடி 144 சதுர அங்குலம்

• 1௦89 சதுர அடிகள் 33 அடி

• 1௦7637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்

• 33 அடி 1 குந்தா

• 66௦ அடி 1 பர்லாங்கு

• 66௦ அடி 22௦ கெஜம்

• 66 அடி 1 செயின்

• 66 அடி 1௦௦ லிங்க்

• ௦.66 அடி 1 லிங்க்

• ௦.66 அடி 7.92 அங்குலம்

• 3 அடி 1 கெஜம்

• 1௦76 சதுர அடிகள் 2. 47 சென்ட்

• 66 அடி 22 கெஜம்

• 3.28 அடி 1.௦93613 கெஜம்

• 1 அடி ௦.3048 மீட்டர்

• 3.28௦84 அடி 1 மீட்டர்

• 32. 8௦84 1௦ மீட்டர்

• 1 சதுர அடி ௦.௦929௦ சதுர மீட்டர்

• 1௦ சதுர அடிகள் ௦.929௦ சதுர மீட்டர்

• 1௦௦ சதுர அடிகள் 9.29௦ சதுர மீட்டர்

• 2௦௦ சதுர அடிகள் 18.58௦ சதுர மீட்டர்

• 5௦௦ சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்

• 1௦7.6939 சதுர அடிகள் 1௦ ச. மீ

• 215.278 2௦சதுர மீட்டர்

• 538.195 சதுர அடிகள் 1௦௦ சதுர மீட்டர்

• 4,356 சதுர அடிகள் 1௦ சென்ட்

• 48௦௦ சதுர அடிகள் 1 மிந்திரி

• 24, 4௦௦ சதுர அடிகள் 1குறுக்கும்

• 144 சதுர அடிகள் 1குழி

கருவளையம் போக்க

 *🌷🌷கருவளையத்தைப் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்…*


கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.


சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.


திக்கான கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும். பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து… பிறகு, கழுவிவிடலாம்.


கண்ணுக்கு கீழ் வரும் பை: சிலருக்கு கண்ணுக்கு கீழ் சதைப் பை தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு, பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் 10 - 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.





🌷🌷

குளிர்காலத்தில் எலும்புகளை காக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

*🌷🌷குளிர்காலத்தில் எலும்புகளை காக்க சாப்பிட வேண்டிய உணவுகள்*


குளிர்காலத்தில் உடலின் வெப்ப நிலை குறைவதன் காரணமாக தசைகள் இறுக்கமடையும். மூட்டுகள் விறைப்படையும். மூட்டு வலி பிரச்சினையும் தலைதூக்கும். அதனை தவிர்க்க குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய அவசியமான உணவு பட்டியல்களின் தொகுப்பு இது.


தினை:


தினை வகைகளில் நார்ச்சத்தும், அமினோ அமிலமும் நிறைந்துள்ளது. குர்செடின் எனும் சேர்மமும் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. மேலும் இது மூட்டு வலியை குறைத்து உடலை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்க உதவும். தினை வகைகளில் ராகியை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.


நெய்:


இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை மூட்டு விறைப்படைவதை குறைக்க உதவுகிறது. மற்றும் மூட்டுகளில் உராய்வு மற்றும் வீக்கத்தை தணிக்க உதவுகிறது.


நட்ஸ் வகைகள்:


பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் இது உதவும். மேலும் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் துணை புரியும்.


பச்சை இலை காய்கறிகள்:


குளிர்காலத்தில் பச்சை இலைக் காய்கறிகள் எளிதாகக் கிடைக்கும். அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தவை. அவற்றில் சல்போராபேன் உள்ளது. இது எலும்பு தொடர்பான பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. பச்சை இலை காய்கறிகளை அதிகம் எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது நல்லது. சூப்பாக தயாரித்தும் உட்கொள்ளலாம். அது எளிதில் உடலில் உறிஞ்சப்படும்.


எலும்பு சூப்:


ஆடு, கோழி போன்ற இறைச்சிகளின் எலும்பு பகுதிகளை வேக வைத்து சூப்பாக தயாரித்தும் பருகலாம். இந்த எலும்பு சூப்பில் தாதுக்கள், குளுக்கோசமைன் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மூட்டு வலிக்கும் நிவாரணம் தரும்.


இஞ்சி - பூண்டு:


மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் கிருமி நாசினியாக இவை அறியப்படுகின்றன. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்டிருக்கின்றன. இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்து உணவில் பயன்படுத்தலாம். இஞ்சி டீ பருகலாம்.





🌷🌷

லைசென்ஸ் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா?

 சட்டம் என்ன சொல்கிறது..?

லைசென்ஸ் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா? அப்படி வட்டிக்குக் கொடுத்தால் என்ன தண்டனை?

வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

அதில் தமிழ்நாடு 1957-லிலிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் (tamil nadu money lenders act 1957) நடைமுறையில் உள்ளது.

அதன்படி வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாக நடத்துபவர்கள் முறைப்படி தாசில்தாரிடம் அனுமதி பெற்று நடத்தவேண்டும். இது தனி நபர், கூட்டாக பங்குதாரர்களாக நடத்தலாம்.

ஆனால் இந்தச் சட்டம் வங்கிகளுக்கோ, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கூட்டுறவு சங்கங்கள், நிதி நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால் டெபாசிட் வாங்குவது வட்டிக்குப் பணம் கொடுப்பது என்றால் வங்கி நடைமுறைக்கு கீழ் வருவதால் அதற்கு ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும்.

நான் டெபாசிட் எதுவும் வாங்கவில்லை, வெறுமனே பணம் மட்டுமே வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன் என்றால் அதற்கு தாசில்தாரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும். 

அடகுக் கடை வைத்திருப்பவர்கள் லைசென்ஸ் வாங்குவது போல் இதற்கும், ‘மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957’-ன் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் லைசென்ஸ் வாங்க வேண்டும்.

அப்படி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாக செய்வது சட்டப்படி குற்றம். ஒரு வித்தியாசம் என்னவென்றால் அதை முழு நேரத் தொழிலாக ஒரு இடத்தில் நிறுவனம் தொடங்கி முழு நேரத் தொழிலாகச் செய்தால் லைசென்ஸ் எடுக்க வேண்டும். 

ஆனால் ஒரு தனிநபர் யாருமே தனது வாழ்க்கையில் மற்றவர்களிடம் பணம் கொடுத்து வட்டி வாங்குவது நடக்கும்.

தனது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வாழ்க்கையில் பணத் தேவைக்கு உதவும்போது பணம் கொடுத்து வட்டி வாங்குவது வழக்கமாக இருக்கும். அவர்களை முழு நேரத் தொழிலாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அதில் லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.

சில வருடங்களுக்கு முன், வருமான வரித்துறை நடிகர் ரஜினிகாந்த் மீது தாக்கல் செய்த வழக்கில், நடிகர் ரஜினி தனது அபிடவிட்டில் கீழ்கண்டவாறு பதில் அளித்திருந்தார்.

"நான் நண்பர்களுக்குப் பணம் கொடுத்து அதற்காக வட்டி வாங்கினார் என்பதை முழு நேரத் தொழிலாக கருத முடியாது. ஒருவருக்கோ, சிலருக்கோ உதவி செய்வதை லைசென்ஸ் வாங்கி செய்யவேண்டும் என்று அவசியமில்லை". 

ஒருவேளை ஒருவர் லைசென்ஸ் எடுக்காமல் தொழிலாகச் செய்தார் என்று புகார் வந்தால் அதற்கு தண்டனை ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தால் விதிக்கப்படும். சிறைத் தண்டனை எதுவும் இல்லை.

இதில் கோடிக்கணக்கில் பணம் வட்டிக்கு கொடுத்திருந்து உரிமம் வாங்கவில்லை என்று குற்றச்சாட்டு வந்தாலும் சட்டம் தொகையைப் பற்றி சொல்லவில்லை. 

உரிமம் வாங்காமல் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்வதுதான் குற்றம் என்கிறது. ஒருவேளை நடவடிக்கை வந்தால் அதற்கு ரூ.1000 அபராதம் என்பதுதான் சட்ட நடவடிக்கை''.

நன்றி.

இந்திய மருத்துவச் சட்டம்


இந்திய மருத்துவச் சட்டம்

"Drugs and cosmetic Act, 1940, 1945, 1995, 'Schedule J' contains a list of 51 diseases and ailments (by whatever name described) which a drugh not purport to prevent or cure or make claims to prevent or cure"

'மருந்துகள் மற்றும் அழாஅகு சாதன்ங்கள்' சட்டம் 1940இல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995இல் திருத்தியமைக்கப் பட்டுள்ள நோய்களின் விபரம் வருமாறு:-

1.    எய்ட்ஸ் 'AIDS'

2.    நெஞ்சுவலி

3.    குடல் வால் நோய்

4.    இதய இரத்தக்குழாய் அடைப்பு

5.    தலை வழுக்கை

6.    கண்பார்வை அற்ற நிலை

7.    சுவச காசம் (ஆஸ்த்துமா)

8.    உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்று நோய் வரை

9.    கண்புரை

10.  தலை முடி வளர்த்தல், நரையை அகற்றல்

11.  கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுதல்

12.  பிறவிக் கோளாறுகள்

13.  காது கேளாமை

14.  நீரிழிவு நோய்

15.  கருப்பை சார்ந்த அனைத்துக் குறைப்பாடுகளும்

16.  வலிப்பு நோய் – மனநோய்கள்

17.  மூளைக்காய்ச்சல்

18.  உடல் நிறம் கருப்பைச் சிவப்பாக மாற்றுதல்

19.  மார்பக வளர்ச்சி

20.  புரையோடிய புண்

21.  மரபணு நோய்கள்

22.  க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23.  கழுத்து வீக்கம் (தைராய்டு)

24.  குடலிறக்க நோய் (ஹெர்னியா)

25.  இரத்த அழுத்தம் ( மிகுதி, குறைவு)

26.  விரை வீக்கம்

27.  பைத்தியம்

28.  ஞாபக மறதி, ஞாபக சக்தியை விருத்தி செய்தல்

29.  குழந்தையின் உயரத்தைக் குட்டுதல்

30.  கண் – கிட்டப்பார்வை – தூரப்பார்வை

31.  ஆண் உறுப்பு வளர்ச்சி; வீரியம்

32.  பற்களை உறுதிப்படுத்த, கால்ஷியம் மருந்து மூலமாக மருத்துவம் பார்ப்பது

33.  மஞ்சள் காமாலை – கல்லீரல் மர்ம நோய்.(ஹெப்டைட்டிஸ்)

34.  இரத்தப் புற்று

35.  வெண்குஷ்டம்

36.  உடலுறவில் வீரியம் அதிகப்படுதல்

37.  மூளைவளர்ச்சிக் குறைவு

38.  மாரடைப்பு நோய்

39.  குண்டான உடம்பு மெலிவு

40.  பக்கவாதம்

41.  உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42.  மூலம், பவுத்திரம்

43.  வாலிப சக்தியை மீட்க

44.  குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45.  குறைந்த வயதில் தலை நரை

46.  ரூமாட்டிக் இதய நோய்

47.  ஆண்மைக் குறைவு

48.  கழுத்து வலி, முதுகுத் தண்டில் ஏற்படும் வலிகள்

49.  திக்குவாய்

50.  சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப்பை கற்கள்

51.  காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்து காணப்படுதல்.

மேற்கண்ட பட்டியலிலுள்ள நோய்களுக்கு ஆங்கில மருத்துவர்கள் தங்கள் மருந்துகளால் மருத்துவம் அளித்துவருவது குற்றச் செயல் என்று இந்திய அரசு சட்டம் மூலமாக எச்சரித்த பின்பும் மேற்கண்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் செய்யப்படுகிறது. இது சட்டத்திற்கு எதிரானதாகவும் மக்கள் நலனுக்கு எதிரானதாகவும் இருந்தாலும், சிறப்பு மருத்துவம் எனும் பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகள் என்று கூறிக்கொண்டு மருந்து கம்பனிகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன.

மேற்கண்ட இச்செயலை 'இந்திய மருத்துவச் சங்கமும் தமிழ்நாடு மருத்துவக் குழுவும் நடவடிக்கை எடுக்காத்து ஏன்?

இக்குற்றச் செயலுக்கு மருத்துவச் சங்கம் துணைபோகக் காரணம் என்ன?

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பசு நெய்

*நாட்டு மாட்டு பசு நெய்*

*Country Cow Ghee*

நெய் என்றால் பாலை தயிராக்கி வெண்ணெய் எடுத்து உருக்கி *(பஞ்சகர்ண சுத்தி)* செய்யப்படுவது மட்டுமே. 

இன்று நாம் கடைகளில் வாங்கும் நெய் எதுவுமே நெய் அல்ல. அவை பால் கொழுப்பு. பாலை அரைத்து கொழுப்பை பிரித்து செய்யப்படுவது.

உடலுக்கு மிகவும் தீங்கானது.


*பயன்கள்*

♦️நெய்யில் A. D. E. K ஆகிய விட்டமின்கள் உள்ளன.


♦️நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.


♦️நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.


♦️நெய்யில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர். இது மூளைக்கு சிறந்த டானிக்.


♦️மலச்சிக்கலைப் போக்கி வாத, பித்த, கபத்தின் தாக்கத்தைத் தடுக்கும்.


♦️ஞாபக சக்தியை தூண்டும். சரும பளபளப்பைக் கொடுக்கும்


♦️கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

*

முருங்கை

 *_முருங்கை கீரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?_*



மலச்சிக்கல் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவை மறுநாள் கழிவுகளாக நமது உடல் வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 


ஒரு சிலருக்கு உடலில் நீர் வற்றி, உடல் உஷ்ணமடைந்து மலச்சிக்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.


உடல் மற்றும் கை, கால் வலிகள் உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போதும், கடின உழைப்பில் ஈடுபட்ட பின்பும் சிலருக்கு உடல் மற்றும் கை கால்களில் வலி ஏற்படுகின்றன. 


இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.


மலட்டுத்தன்மை எந்த ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உடலில் எந்தவிதமான குறைபாடுகள் இல்லாமல் இருந்தால் குழந்தை பிறப்பதில் தடையேதும் இருக்காது.


 தற்காலங்களில் சத்தில்லாத மற்றும் கலப்படங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அனைவரும் சாப்பிடுவதால் மலட்டுத் தன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. 


ஆண், பெண் இரு பாலர்களும் முருங்கை இலைகளை வேக வைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கி குழந்தை பிறக்க வழி வகை செய்யும். 


ரத்த சோகை ரத்தத்தில் வெள்ளை ரத்த அணுக்கள் குறையும் போது ரத்த சோகை ஏற்படுகிறது.


 பெரியவர்களை விட இந்த குறைபாடு குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இதற்கு சிறந்த நிவாரணியாக முருங்கை கீரை இருக்கிறது. 


முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.


பற்களின் உறுதி, வாய்ப்புண் நாம் சாப்பிடும் உணவை நன்கு மென்று சாப்பிடவும், உணவை செரிமானம் செய்வதிலும் பற்களின் செயல்பாடுகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அத்தகைய பற்கள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். 


முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும். இரும்புச்சத்து நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன. 


எனவே குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது முருங்கைக்கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


தலைமுடி நமது தலையில் இருக்கும் முடிகள் நமது உச்சந்தலையை வெப்பத்திலிருந்து காக்கிறது. 


அத்தகைய தலை முடிகள் அடர்த்தியாக வளரவும், உறுதியாக இருக்கவும் நமது உணவில் வைட்டமின் மற்றும் புரதச் சத்துக்கள் இருப்பது அவசியம்.


 முருங்கைக் கீரையில் வைட்டமின்கள், புரத சத்துகள் அதிகம் உள்ளன. 


முருங்கைக் கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு தலைமுடி உதிர்வது, முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.


 தோல் வியாதிகள் உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் வெளிப்புற காரணிகளால் சிலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படுகின்றன.


 முருங்கைக்கீரையில் தோல் வியாதிகள் மற்றும் இதர தோல் சம்பந்தமான குறைபாடுகளை போக்க உதவும் வைட்டமின்கள், புரத சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன.


 முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது.


தாய்ப்பால் சுரப்பு குழந்தைகள் பிறந்து ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு முக்கிய உணவாக இருக்கிறது ஒரு சில குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது. 


இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை சந்திக்கும் பெண்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.


 சுவாச கோளாறுகள் குளிர்ந்த சீதோஷணம் நிலவும் காலத்திலும், தூசுகள் நிறைந்த இடங்களில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் சிலருக்கு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.


 இத்தகைய பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் முருங்கை கீரையை சூப் செய்து, இளம் சூடான பதத்தில் குடித்து வர சுவாச சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் விரைவில் நீங்கும்.




🌷🌷

தேசிய டிஜிட்டல் நூலகம்

 *மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய*மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம். மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை சென்றடையும் வரை அதிகம் பகிரவும்.* அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம். மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை சென்றடையும் வரை அதிகம் பகிரவும்.*

*V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி

 *V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..?* 


_எத்தனை பேருக்கு தெரியும்..?_


 1. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.


2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.


3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.


4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.


5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.


6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.


7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.


8. காலரா, டெங்கு, பிளேக் கொரோனா உள்ளிட்ட கொடிய நோய்களும் மற்றும் கால்நடை தொற்று  நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.


9. இருப்புப் பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.


10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.


11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.


12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுகாத்தல்.


13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.


14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.


15. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.


16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.


17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.


18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்து கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.


19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.


20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.


21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.


22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.


23. அரசாங்கம் அவ்வப்பொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.


24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல்.

அக்மார்க் என்பது

 அக்மார்க்

சான்றளிப்பு நிறுவனம்சந்தைப்படுத்துதல் மற்றும் ஆய்வு இயக்ககம், இந்திய அரசுagmark
நிறுவப்பட்ட மண்டலம்இந்தியா
நடைமுறைபடுத்தப்பட்ட வருடம்1986
பொருட்கள் வகைவேளாண் பொருட்கள்
சட்ட நிலைஆலோசனை
இணையதளம்agmarknet.nic.in/agm_std1.htm
  

அக்மார்க் என்பது இந்திய அரசின் வேளாண் பொருட்களுக்கான சான்றளிப்பு குறியாகும். சந்தைப்படுத்துதல் மற்றும் ஆய்வு இயக்குநரகம் வேளாண் பொருட்களை ஆராய்ந்து தர நிலையை உறுதி செய்கிறது. இது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் முகமையாகும். வேளாண் பொருட்களுக்கு (தரம் மற்றும் குறியீடு) சட்டம் 1937 மற்றும் (திருத்தப்பட்ட சட்டம் 1986) மூலம் இந்தியாவில்  நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது அக்மார்க் தர நிலைகள் 205 பல்வேறு விளைப் பொருட்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றுள் தானியங்கள், பயறு வகைகள், அத்தியாவசிய எண்ணெய்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் சேமியா போன்ற அரை பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கும்.

அக்மார்க் என்பது வேளாண்மை (Agriculture) மற்றும் குறியீடு (Mark) ஆகியவை சேர்ந்த சொல்லாகும். வேளாண் பொருட்கள் (தரம் மற்றும் குறியீடு) சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அக்மார்க் ஆய்வகங்கள்

அக்மார்க் சான்றளிப்பு நாடு முழுவதும் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கு சொந்தமான அக்மார்க் ஆய்வகங்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இவைகளுடன் மத்திய அக்மார்க் ஆய்வகம் (CAL) நாக்பூர், 11 ஒருங்கிணைந்த நகரங்களில் அக்மார்க் ஆய்வகங்கள் (மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, கான்பூர், கொச்சி, குண்டூர், அமிர்தசர், ஜெய்பூர், ராஜ்கோட், போபால்) உள்ளன. ஒவ்வொரு வட்டார ஆய்வகங்களும் அந்தந்த வட்டாரத்தில் சிறப்பு வாய்ந்த பொருட்களுக்காக சோதனை செய்ய அமைக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் மற்றும் சோதனைகள்

இந்த ஆய்வகங்களில் இரசாயன பகுப்பாய்வு, நுண்ணுயிரி வழிப் பகுப்பாய்வு, பூச்சிக்கொல்லி மீதம் மற்றும் கரும்பூசண நச்சு வகை பகுப்பாய்வு, வாசனை பொருட்கள், நெய், வெண்ணெய், தாவர எண்ணெய், கடுகு எண்ணெய், தேன், உணவு தானியங்கள் (கோதுமை), கோதுமை பொருட்கள் (ஆட்டா, சுஜா மற்றும் மைதா), பயறு மாவு, சோயா மொச்சை, கொண்டைக் கடலை, இஞ்சி, பிண்ணாக்கு, அத்தியாவசிய எண்ணெய், எண்ணெய் மற்றும் கொழுப்பு, விலங்கு பொதியுறை, இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களில் மேற்கொள்ளப்படுகிறது.

அக்மார்க் பதிவு பின்வரும் பொருட்களுக்கு கிடைக்கும்

விலங்கின் தோல், ஆட்டு முடி, முட்கள், கம்பளி, புலால் (குளிர்ந்த மற்றும் உறைந்த) கைளால் பொறுக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வேர்கடலை, முந்திரி பருப்பு, அம்பாடி விதைகள், கடுகு விதைகள், நிலக்கடலை, அக்ரூட் பருப்பு, தாவர எண்ணெய் புண்ணாக்கு, நெய், வனஸ்பதி பாலாடைக்கட்டி வெண்ணெய், அத்தியாவசிய எண்ணெய், தாவர எண்ணெய், புகையிலை, கரும்பு, வெல்லம் (பனை வெல்லம்), பால், பாக்கு, நெல்லி, பீடி சுற்றும் இலைகள், சென்னா இலைகள் மற்றும் காய்கள்,  மரவள்ளி கிழங்கு பொருட்கள் (கால்நடை தீவணம்), முட்டை, தேன், விதையில்லா புளி, உலர்ந்த சாப்பிடக்கூடிய காளான், குங்குமப்பூ, சீகக்காய் தூள், காங்க்ரா தேயிலை, அகார் அகார், பப்பேயின், அரிசி, கோதுமை ஆட்டா, பயறு வகைகள், தானியங்கள், கடலை மாவு, பாசுமதி அரிசி (ஏற்றுமதி), சுஜி மற்றும் மைதா, திராட்சை, ஆப்பிள், அல்போன்சா மாம்பழம் – ஏற்றுமதி, தாவரங்கள், அல்போன்சா மாம்பழம் – வீட்டு உபயோகத்திற்கு, பெட்டியில் அடைக்கப்பட்ட, பாட்டிலில் அடைக்கப்பட்ட பழங்கள், பழ பொருட்கள் சிட்ரஸ், உருளைக்கிழங்கு (ஏற்றுமதி), நீர் கஷ்கொட்டை,  வில்லியம் பேரிக்காய், மாம்பழம், விதை உருளைக்கிழங்கு, தேங்காய், குழம்பு பொடி, மிளகாய், ஏலக்காய், கொத்துமல்லி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாய் தூள், பாப்பி விதைகள், மஞ்சள், பெருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் சீவரிக்கீரை விதைகள்,  சீரகம், மிளகு, சோம்பு, சணப்பை, பனை நார், பருத்தி, கற்றாழை இழை, சணல் மற்றும் இதர பொருட்கள்.       

அக்மார்க் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கைகள்

  • அங்கீகரிக்கப்பட்ட அக்மார்க் ஆய்வகத்திலிருந்து முறையாக வாங்கிய சோதனை அறிக்கை
  • நிறுவனத்தின் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் ஆவணம்
  • விண்ணப்பதாரர் வரையறுக்கப்பட்ட நிறுமமாக இருந்தால் மாநில அதிகாரம் அல்லது குறிப்பாணை
  • கூட்டாண்மையாக இருந்தால் கூட்டாண்மை ஒப்பந்தம்
  • பொருட்களின் பெயர்
  • விண்ணப்பதாரரின் பெயர்
  • நிறுவனம்/ குழுமத்தின் பெயர்
  • நிறுவனம்/ குழுமத்தின் முகவரி
  • பொருளின் மாதிரி (500கிகி.1கிகி பை)
  • தயாரிப்பு துவங்கியது (சரியான தேதி/மாதம்/வருடம்)
  • மொத்த உற்பத்தி கிலோ கிராமில் (சென்ற வருடம்)
கடந்த ஆண்டின் உற்பத்தி மதிப்பு   

போக்ஸோ சட்டம் கூறுவது என்ன

 போக்சோ சட்டம் என்றால் என்ன...?

போக்ஸோ சட்டம் கூறுவது என்ன...? புதிய மாற்றங்கள் என்ன...?

வயது வரம்பும் 18-ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது.

இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், அதற்கான தண்டனைகளும் என்னவென்று பார்ப்போம்.

போஸ்கோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4-ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம்: இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டணையாகவும் உள்ளது கூடவே அபராதமும் விதிக்கப்படும்.

போஸ்கோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6-ன் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

போஸ்கோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8-ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம் அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

போஸ்கோ சட்டம் பிரிவு 9 மற்றும் 10-ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிரை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

போஸ்கோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12-ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

போஸ்கோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14-ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றம். 

இது இணைய தளம், கணிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும்.

போஸ்கோ சட்டம் பிரிவு 18ன் படி குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம் இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத்திருந்ததை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

வயது வரம்பும் 18 ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள்*

*💠மழையால்பாதிக்கப்பட்டால்*

*பொது மக்கள் தங்களது பிரச்சினைகளை கூற*

*உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள்*

1 Fort-Tondiarpet 94450 00484

2 Purasawakkam-Perambur 94450 00485

3 Egmore-Nungambakkam94450 00486

4 Mylapore-Triplicane 94450 00487

5 Mambalam-Guindy 94450 00488

2 திருவள்ளூர் மாவட்டம்

6 Ambattur 94450 00489

7 Ponneri 94450 00490

8 Gummudipoondi 94450 00491

9 Thiruthani 94450 00492

10 Pallipattu 94450 00493

11 Thiruvallur 94450 00494

12 Uthukottai 94450 00495

13 Poonamallee 94450 00496

3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram

14 Kancheepuram 94450 00497

15 Uthiramerur 94450 00498

16 Sriperumbudur 94450 00499

17 Chengalpattu 94450 00500

18 Thirkkalukunram 94450 00501

19 Tambaram 94450 00502

20 Madurantakam 94450 00503

21 Cheyyur 94450 00504

4 வேலூர் மாவட்டம் Vellore

22 Arcot 94450 00505

23 Valaja 94450 00506

24 Arakkonam 94450 00507

25 Vellore 94450 00508

26 Gudiyatham 94450 00509

27 Katpadi 94450 00510

28 Tirupathur 94450 00511

29 Vaniyampadi 94450 00512

5 திருவண்ணாமலை மாவட்டம்

Thiruvannamalai

30 Cheyyar 94450 00513

31 Vandavasi 94450 00514

32 Arni 94450 00515

33 Thiruvannamalai 94450 00516

34 Polur 94450 00517

35 Chengam 94450 00518

6 விழுப்புரம் மாவட்டம் Villupuram

36 Kallakurichi 94450 00519

37 Sankarapuram 94450 00520

38 Thirukkoilur 94450 00521

39 Ulundurpettai 94450 00522

40 Thindivanam 94450 00523

41 Chengee 94450 00524

42 Villupuram 94450 00525

43 Vanur 94450 00526

7 கடலூர் மாவட்டம் Cuddalore

44 Chidambaram 94450 00527

45 Kattumannarkoil 94450 00528

46 Cuddalore 94450 00529

47 Panruti 94450 00530

48 Virudhachalam 94450 00531

49 Tittakudi 94450 00532

8 தருமபுரி மாவட்டம் Dharmapuri

50 Dharmapuri 94450 00533

51 Harur 94450 00534

52 Pappireddipatti 94450 00535

53 Pennagaram 94450 00536

54 Palacode 94450 00537

9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri

202 Krishnagiri 94450 00538

203 Uthangarai 94450 00539

204 Pochampalli 94450 00540

205 Hosur 94450 00541

206 Denkanikottai 94450 00542

10 நாமக்கல் மாவட்டம் Namakkal

64 Namakkal 94450 00543

65 Rasipuram 94450 00544

66 Thiruchengode 94450 00545

67 Paramathi-Velur 94450 00546

11 சேலம் மாவட்டம் Salem

55 Salem 94450 00547

56 Yercaud 94450 00548

57 Valaappadi 94450 00549

58 Attur 94450 00550

59 Gangavalli 94450 00551

60 Mettur 94450 00552

61 Omalur 94450 00553

62 Sankari 94450 00554

63 Edappadi 94450 00556

12 நீலகிரி மாவட்டம் The Nilgiris

84 Gudalur 94450 00557

85 Pandalur 94450 00558

86 Uthagamandalam 94450 00559

87 Kuntha 94450 00560

88 Kothagiri 94450 00561

89 Coonoor 94450 00562

13 ஈரோடு மாவட்டம் Erode

77 Erode 94450 00563

78 Perundurai 94450 00564

79 Dharapuram 94450 00565

80 Kangeyam 94450 00566

81 Bhavani 94450 00567

82 Gobichettiapalayam 94450 00568

83 Sathyamangalam 94450 00569

14 கோவை மாவட்டம் Coimbatore

68 Coimbatore(South) 94450 00570

69 Coimbatore(North) 94450 00571

70 Mettupalayam 94450 00572

71 Palladam 94450 00573

72 Thirupur 94450 00574

73 Avinashi 94450 00575

74 Pollachi 94450 00576

75 Valparai 94450 00577

76 Udumalaipettai 94450 00578

15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul

90 Dindigul 94450 00579

91 Natham 94450 00580

92 Nilakottai 94450 00581

93 Palani 94450 00582

94 Oddanchatram 94450 00583

95 Vedasedur 94450 00584

96 Kodaikanal 94450 00585

16 Madurai

102 Madurai(North) 94450 00586

103 Madurai(South) 94450 00587

104 Melur 94450 00588

105 Vadipatti 94450 00589

106 Usilampatti 94450 00590

107 Thirumangalam 94450 00591

108 Peraiyur 94450 00592

17 *தேனி மாவட்டம்Theni*

97 Periakulam 94450 00593

98 Theni 94450 00594

99 Andipatti 94450 00595

100 Uthamapalayam 94450 00596

101 Bodinayakanur 94450 00597

18 Karur 109 Karur 94450 00598

110 Aravakurichi 94450 00599

111 Kulithalai 94450 00600

112 Krishnarayapuram 94450 00601

19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli

119 Tiruchirappalli 94450 00602

120 Srirangam 94450 00603

121 Manapparai 94450 00604

122 Lalgudi 94450 00605

123 Manachanallur 94450 00606

124 Musiri 94450 00607

125 Thottiam 94450 00608

126 Thuraiyur 94450 00609

20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur

113 Perambalur 94450 00610

114 Veppanthattai 94450 00611

115 Kunnam 94450 00612

116 Ariyalur 94450 00613

117 Udayarpalayam 94450 00614

118 Senthurai 94450 00615

21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam

127 Nagapattinam 94450 00616

128 Vedaranyam 94450 00617

129 Keelvelur 94450 00618

130 Thirukkuvalai 94450 00619

131 Mayiladuthurai 94450 00620

132 Tharangampadi 94450 00621

133 Seerkazhi 94450 00622

22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur

134 Mannargudi 94450 00623

135 Needamangalam 94450 00624

136 Thiruthuraipoondi 94450 00625

137 Thiruvarur 94450 00626

138 Nannilam 94450 00627

139 Kodavasal 94450 00628

140 Valangaiman 94450 00629

23 தஞ்சை மாவட்டம் Thanjavur

141 Thanjavur 94450 00630

142 Thiruvaiyaru 94450 00631

143 Orathanadu 94450 00632

144 Kumbakonam 94450 00633

145 Thiruvidaimaruthur 94450 00634

146 Papanasam 94450 00635

147 Pattukottai 94450 00636

148 Peravoorni 94450 00637

24 புதுக்கோட்டை மாவட்டம்

Pudukkottai

149 Kolathur 94450 00638

150 Elluppur 94450 00639

151 Alangudi 94450 00640

152 Pudukkottai 94450 00641

153 Gandarvakottai 94450 00642

154 Thirumayam 94450 00643

155 Aranthangi 94450 00644

156 Avudaiyarkoil 94450 00645

157 Manamelkudi 94450 00646

25 சிவகங்கை மாவட்டம் Sivagangai

158 Thirupathur 94450 00647

159 Karaikudi 94450 00648

160 Devakottai 94450 00649

161 Sivagangai 94450 00650

162 Manamadurai 94450 00651

163 Ilayankudi 94450 00652

26 ராமநாதபுரன் மாவட்டம்

Ramanathapuram

164 Ramanathapuram 94450 00653

165 Rameswaram 94450 00654

166 Thiruvadanai 94450 00655

167 Madukalathur 94450 00656

168 Kamudhi 94450 00657

169 Paramakudi 94450 00658

170 Kadaladi 94450 00659

27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar

171 Srivilliputhur 94450 00660

172 Rajapalayam 94450 00661

173 Sathur 94450 00662

174 Sivakasi 94450 00663

175 Aruppukkottai 94450 00664

176 Kaariapatti 94450 00665

177 Virudhunagar 94450 00667

178 Thiruchuli 94450 00668

28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli

187 Palayamkottai 94450 00669

188 Sakarankoil 94450 00670

189 Tirunelveli 94450 00671

190 Ambasamudram 94450 00672

191 Nanguneri 94450 00673

192 Radhapuram 94450 00674

193 Thenkasi 94450 00675

194 Shenkottai 94450 00676

195 Veerakeralampudur 94450 00677

196 Aaangulam 94450 00678

197 Sivagiri 94450 00679

29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi

179 Thoothukudi 94450 00680

180 Srivaikuntam 94450 00681

181 Thiruchendue 94450 00682

182 Sathankulam 94450 00683

183 Koilpatti 94450 00684

184 Ottapidaram 94450 00685

185 Vilathikulam 94450 00686

186 Ettaiyapuram 94450 00687

30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari

198 Thovalai 94450 00688

199 Agastheeswaram 94450 00689

200 Kalkulam 94450 00690

201 Vilavancode 94450 00691...

RTi act books

கூட்டுறவு சங்க தகவல் அறியும் உரிமை சட்டம்

 வணக்கம் நண்பர்களே...!


கூட்டுறவு சங்கங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h) -ன் வரம்பிற்குள் வரவே வராது என்று தமிழ் நாட்டில் பல கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மனுதாரர்களுக்கு தகவல்களை தராமல் அலைக்கழிப்பு செய்து வந்த நிலையில், வழக்கு எண் : SA 5467/A/2019, நாள் : 08 -10 -2021 -ல், கூட்டுறவு சங்கங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் வரும் என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்கள் மூலம் சென்னை மற்றும் அனைத்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை, பல நீதிமன்றங்களின் தீர்ப்புகள், மான்பமை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, பொதுத் தகவல் அலுவலர்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கின்ற வகையில் பதில் அளிப்பது ஏற்புடையதல்ல என்று தமிழ் நாடு தகவல் ஆணையம் வன்மையாக கண்டித்து இனிவரும் காலங்களில் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 2(h) -ன் படி பொது அதிகார அமைப்பாகும் என்றும் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு கள ஆய்வு செய்ய அனுமதி மற்றும் கோப்புகளை வழங்க ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.


தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/13s0oRl1ZXFd7UkkOLfJLGk3qcTo07Kr2/view?usp=drivesdk


இனிவரும் காலங்களில் நண்பர்கள் அனைவரும் இந்த ஒரே ஒரு தீர்ப்பை மட்டும் பயன்படுத்தி தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) -ன் கீழ் மனு செய்யும் போதே இந்த ஆணையின் உத்தரவு நகலை இணைத்து மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி...!

நீரிழிவு நோய்….

 *_உலக நீரிழிவு நோய் தினம்_* 



மக்களிடையே அதிகம் பேசப்படும் ஒரு நோய், நீரிழிவு நோய்….


முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், இந்த சர்க்கரை வியாதியைக் கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்டவர் வைத்திருக்கமுடியும். 


நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் அறியப் பட்டிருந்தாலும் இதற்கான உறுதியான சிகிச்சை முறை 20-ம் நூற்றாண்டில் தான் கண்டறியப்பட்டது. 


அதுவரை இந்நோய் ஆபத்தான நோயாகவே கண்டறியப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் தான் இன்சுலின் கண்டறியப்பட்டது. 


இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாக 1991-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி, கொண்டாடி வருகிறது.


ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையம் அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. 


சர்வதேச ரீதியில் இந்த நீரிழிவு நோய் குறித்த பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. 


வயது வித்தியாசம், இன பேதம் என தயவு தாட்சண்யம் பார்க்காமல் இன்றைய நாளில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத்  தொண்டு நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு தருகின்றன. 


வானொலி, தொலைக்காட்சி என தொடர்பு சாதனங்கள் இதற்கு ஒத்துழைப்பு தருகின்றன.


இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. 


உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு நோயில் முதல் இடத்தில் உள்ளது. பொதுவாக, நீரிழிவு நோய் என்பதை பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமில்லாது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 


பெற்றோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் 80% பிள்ளைகளுக்கும் இந்த நோய் வரும் என்பது ஆய்வு கருத்து.


மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் நீரிழிவு நோய்க்கு எவ்வித தடுப்பும் உபயோகிக்கப்படாது.


மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதனின் உடலை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குவது, நீரிழிவு நோய்தான். 


ஆராய்ச்சிகள் பல செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கூறப்படுவதால், நாம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த என்னதான் வழிமுறைகளை எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.



🌷🌷

போக்ஸ்சோ சட்டம்

 18 வயதிற்கு கீழ் இருக்கும்  குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்ஸ்சோ சட்டம் சொல்வது என்ன?

போக்ஸ்சோ சட்டம்:

இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(pocso) Act 2012).

இந்த சட்டம் சுருக்கமாக போக்ஸ்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14 தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

சட்டத்தின் பொது அம்சங்கள்:

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.

இச்சட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். 

இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.

மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

குழந்தையின் நலனே பிரதானம்:

வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். 

அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று இச்சட்டம் கூறுகிறது. உதாரணமாக, "பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். 

அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது."இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.

இதுவரை போக்ஸ்சோ சட்டத்தில், குற்றவியல் ஆவணக் காப்பகத் துறையின் தகவலின்படி 2016 ஆம் ஆண்டு 1567 வழக்குகளும், 2015 ஆம் ஆண்டு 1544 வழக்குகளும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளன.

பிரிவு 1: எல்லை:

1. இச்சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(posco) Act 2012) என்று அழைக்கப்படுகிறது.

2. இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.

பிரிவு 2:

சில பதங்களின் வரையறை:

ஊடுருவக்ககூடிய பாலியல் தாக்குதல்(pentrative sexual assult):

ஒரு குழந்தையின் பெண்ணுறுப்புகளை பலவந்தமாக புண்ணாக்குதல், காயப்படுத்துதல், புணர்தல், உடல் உறவு கொள்ளுதல், கூர்மையான பொருட்களை பிறப்பு உறுப்பில் சொருகுதல் இதில் அடங்கும்.

இந்த குற்றத்திற்கு ஏழு வருடம் சிறை தண்டனை, அபராதம் அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

மோசமாக ஊடுருவக்ககூடிய பாலியல் தாக்குதல்( aggravated pentrative sexual assult):

ஒரு காவல் துறை அதிகாரி, பொதுத்துறை ஊழியர், ஆயுதப்படை உறுப்பினர் ஆகியோர் குழந்தையின் மீது பாலியல் தாக்குதல் செய்தல் அல்லது குழந்தையின் நெருங்கிய உறவினர் பாலியல் தாக்குதல் செய்தல் முதலிய குற்றத்திற்கு பத்து வருட சிறை விதிக்கப்படும்.

அத்தகைய பாலியல் தாக்குதல் விளைவாக குழந்தை இறந்து விடும் பச்சத்தில் இருபது வருடங்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.

மோசமாக பாலியல் தாக்குதல்(aggravated sexual assault) :

குழந்தைகளின் உடல் உறுப்புகளான மார்பு, ஆண்குறி, பிறப்பு உறுப்பு, பிற உறுப்புகளை ஆரம்ப கால பாலியல் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே தூண்டுதல், தீண்டுதல், காயம் விளைவித்தல் இதில் அடங்கும்.

குழந்தைகளை ஆபாச காட்சிகளுக்கு பயன்படுத்தல்(ponography purpose):

18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வலுக்கட்டாயமாக, குற்ற உணர்வு எதுவும் இன்றி எவர் ஒருவர், பிரித்தறிய முடியாத புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் அல்லது கணினி உருவாக்கிய படம் உள்ளிட்ட ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட பாலியல் வெளிப்படையான காட்சி சித்தரிப்புகளுக்கு பயன்படுத்துகிறாரோ அவர் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவார்.

ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:

அதிகபட்சம்: 5 ஆண்டுகள்

குறைந்தபட்சம்: 5 ஆண்டுகள்

ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக:

குழந்தையைப் பயன்படுத்துதல்

குறைந்தபட்சம்: 10 ஆண்டுகள்

அதிகபட்சம்: ஆயுள் தண்டனை

குறைந்தபட்சம்: 10 ஆண்டுகள் (16 வயதுக்குக் குறைவான குழந்தையின் விஷயத்தில்:

அதிகபட்சம்: ஆயுள் தண்டனை

மோசமான ஊடுருவக்கூடிய பாலியல் தாக்குதலின் விளைவாக குழந்தையை ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல்:

அதிக பட்சம்: ஆயுள் தண்டனை

குறைந்தபட்சம்: 20 ஆண்டுகள்

அதிகபட்சம்: ஆயுள் தண்டனை, அல்லது மரணம்.

பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:

குறைந்தபட்சம்: ஆறு ஆண்டுகள்

அதிகபட்சம்: எட்டு ஆண்டுகள்

குறைந்தபட்சம்: மூன்று ஆண்டுகள்

அதிகபட்சம்: ஐந்து ஆண்டுகள்

மோசமான பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:

குறைந்தபட்சம்: எட்டு ஆண்டுகள்

அதிகபட்சம்: 10 ஆண்டுகள்

குறைந்தபட்சம்: ஐந்து ஆண்டுகள்

அதிகபட்சம்: ஏழு ஆண்டுகள்

குறிப்பு: எந்தவொரு பாலியல் வன்கொடுமையும் விளைவிக்கும் ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துவதற்கான தண்டனை, குழந்தையை ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்த குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகும்.

Use of child for pornographic purposes

· Maximum: 5 years

· Minimum: 5 years

Use of child for pornographic purposes resulting in penetrative sexual assault

· Minimum: 10 years

· Maximum: life imprisonment

· Minimum: 10 years (in case of child below 16 years: 20 years)

· Maximum: life imprisonment

Use of child for pornographic purposes resulting in aggravated penetrative sexual assault

· Life imprisonment

· Minimum: 20 years

· Maximum: life imprisonment, or death.

Use of child for pornographic purposes resulting in sexual assault

· Minimum: Six years

· Maximum: Eight years

· Minimum: Three years

· Maximum: Five years

Use of child for pornographic purposes resulting in aggravated sexual assault

· Minimum: Eight years

· Maximum: 10 years

· Minimum: Five years

· Maximum: Seven years

Note: Punishment for using child for pornographic purposes resulting in any form of sexual assault is in addition to minimum five years for use of child for pornographic propose...

Cyper craime

உடல் நலன்

போனஸ் சட்டம்

 👍👍👍👍👍👍


*தொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்*


👉தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம்


👉மீதூதிய வகைகள்

மீதூதியச் சட்டத்தின் சிறப்புகள்

வரையறைகள்

👉மீதூதியம் 

👉கணக்கிடும் விதி

👉கழிவுகள்


*தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம்*


தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி லாபமாக முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, தொழிலாளிகளுக்கும் பங்கு தரப்பட வேண்டும் என்கிற சமூக நீதிக் கோரிக்கையில் பிறந்ததுதான் தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம் - 1965 (Payment of Bonus Act - 1965). இச்சட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு மீதூதியம் (Bonus) வழங்கப்பட்டு வருகிறது.


*நோக்கம்*


இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கினை வழங்குவதற்கான மீதூதியம் வழங்கும் சட்டம் 1965-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பினை நிர்ணயித்து மீதூதியம் குறித்த தொழிற்தகராறுகளைத் தவிர்ப்பது என்று விளக்கப்பட்டுள்ளது.


*மீதூதிய வகைகள்*


மீதூதியம் வழங்கல் சட்டம் லாபத்தில் இருந்து கணக்கிடப்படும் மீதூதியத்தைப் பற்றி மட்டுமே தெரிவிக்கிறது. ஆனால் மீதூதியம் நடைமுறையில் அது வழங்கப்படும் முறைகளைப் பொறுத்தும் வேறுபடுகிறது. இதனால் மற்றவகை மீதூதியங்களைப் பெற உரிமை இல்லை என்பதல்ல.


*உற்பத்தி மீதூதியம்*


ஒரு குறிப்பிட்ட ஆண்டில் செய்யப்பட்ட மொத்த உற்பத்தியின் அடிப்படையில் வழங்கப்படும் மீதூதியம் இது.


*லாபத்தில் மீதூதியம்*


ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஈட்டப்பட்ட லாபத்திலிருந்து அந்த ஆண்டிற்குரிய மீதூதியத்தின் அளவைக் கணக்கிட்டு லாபத்தில் மீதூதியம் எனப்படுகிறது.


வழக்காறு மீதூதியம்


தீபாவளி, தைப்பொங்கல் போன்று சிறப்பு விழாக்களின் போது அந்த விழாக்காலச் செலவுகளைச் சரிக்கட்ட தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் மீதூதியம் இது.


*ஒப்பந்த மீதூதியம்*


தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் மீதூதியம் இது.


*மீதூதியச் சட்டத்தின் சிறப்புகள்*


இச்சட்டத்தின் கீழ் வரும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் அதன் தொழிலாளர்களுக்கு மீதூதியம் வழங்குவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

இச்சட்டம் மீதூதியம் வழங்குவதற்கான கோட்பாடுகளை வரையறை செய்கிறது.

இச்சட்டம் வழங்கப்பட வேண்டிய மீதூதியத்திற்கு குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்புகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

லாபத்தில் இருந்து வழங்கப்படும் மீதூதியத்திற்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும்.

இச்சட்டம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.

வரையறைகள்

ரூ.6500 வரை மாதச்சம்பளம் பெறும் தொழிலாளர்களும், மேற்பார்வையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் எழுத்தர்கள் அனைவரும் இச்சட்டப்படி தொழிலாளர்கள் என்று கருதப்படுவார்கள். ஆனால் பயிற்சித் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது.

பணமாகத் தரப்படும் ஊதியம் அனைத்தும் சம்பளம் எனப்படும். அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி ஆகியவைகள் அதில் அடங்கும்.(மிகுநேரக் கூலி,பயணப்படி, ஊக்குவிக்கும் மீதூதியம், ஆட்குறைப்பிற்காகக் கொடுக்கப்படும் நஷ்டத் தொகை, நன்றித் தொகை மற்றும் ஓய்வு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் தொகை, ஓய்வூதிய நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் சந்தாத் தொகை போன்றவை சம்பளக் கணக்கில் வராது.)

ஒரு நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாடும் பராமரிப்பும் அரசால் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தால் செய்யப்பட்டு வந்தால் அந்நிறுவனம் பொது நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் எனப்படுகிறது. அத்தகைய நிறுவனம் அரசு அல்லது ரிசர்வு வங்கி அல்லது அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் மூலமாகக் கட்டுப்படுத்தப்படலாம்.


4. ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக மீதமிருக்கும் உபரித்தொகை மீதூதிய உச்சவரம்பின்படி தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய மீதூதியத்தை விட அதிகமாக இருந்தால் அந்த மிகுதித் தொகையை அடுத்து வரும் நான்காண்டுகளுக்கு ஒதுக்கி வைக்கலாம். அத்தொகையினை அந்த நான்கு கணக்காண்டுகளில் மீதூதியம் வழங்கப் பயன்படுத்தலாம். இதை ஒதுக்கி வைத்தல் என்கிறார்கள்.

ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக தொழிலாளர்களுக்குத் மீதூதியம் தருவதற்கு இறுதியாகக் கிடைக்கும் உபரித்தொகை இல்லாது போனால் அல்லது குறைவாகத் தோன்றக்கூடிய பணத்தை அடுத்து வரும் நான்கு கணக்காண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டில் சரி செய்து கொள்ளலாம். இதை சரி செய்தல் என்கிறார்கள்.

மீதூதியம் கணக்கிடும் விதி

மீதூதியம் என்பது நிர்வாகம் கருணையின் அடிப்படையில் வழங்கும் கருணைத்தொகை அல்ல. மீதூதியம் வழங்குவது தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்தின் சட்டக் கடமை. இத்தொகையைக் கணக்கிடுவதற்காக விதி ஒன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு ஆண்டின் மொத்த லாபத்தில் இருந்து கீழ்க்காணும் கழிவுகளைக் கழித்துக் கொண்ட பின்னர் இறுதியாகக் கிடைக்கக் கூடிய உபரி மதிப்பிலிருந்து மீதூதியம் கணக்கிடப்படுகிறது.


*கழிவுகள்*


ஒரு ஆண்டில் ஒரு நிறுவனம் ஈட்டும் மொத்த லாபத்திலிருந்து போடப்பட்ட முதலீடுகளுக்காக 6 சதவிகிதம் தொகையைக் கழித்துக் கொள்ளலாம்.

செயல் மூலதனத்திற்காக 2 முதல் 4 சதவிகிதம் தொகை வரை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம்.

தேய்மானச் செலவுகளைக் கணக்கிட்டு அதனை லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

நிறுவனத்தின் புனரமைப்பு அல்லது தொழில் வளர்ச்சிக்கான நிதியைக் கழித்துக் கொள்ளலாம்.

அந்த ஆண்டின் அந்நிறுவனம் கட்டுகின்ற வருமானவரி மற்றும் இதர நேரடி வரிகளைக் கழித்துக் கொள்ளலாம்.

மேற்கண்டவைகள் கழிக்கப்பட்டது போக மீதியிருக்கும் லாபத்தை தொழிலாளர்கள் அனைவரும் நேர்மை நெறியின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். மீதி எதுவுமில்லாத போது மீதூதியம் என்பதே கிடையாது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019

 https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/08/31154307/New-Consumer-Commission-Regulating-Counterfeit-Goods.vpf


போலிகளுக்கு கிடுக்கிப்பிடி போடும் புதிய நுகர்வோர் ஆணையம் : ஆன்லைனில் புகார் செய்யலாம் ; நியாயமற்ற வணிகமுறை தடுக்கப்படும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம்

போலிகளுக்கு கிடுக்கிப்பிடி போடும் புதிய நுகர்வோர் ஆணையம் : ஆன்லைனில் புகார் செய்யலாம் ; நியாயமற்ற வணிகமுறை தடுக்கப்படும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம்
நுகர்வோர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒரு புதிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஒரு மத்திய ஆணையத்தை ஏற்படுத்த வகை செய்கிறது. இந்த ஆணையத்திற்கு, தரக்குறைவான பண்டங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மற்றும் அவற்றை விளம்பரப்படுத்துபவர்களுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.
புதிதாக அமைக்கப்பட உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நுகர்வோர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியாயமற்ற வழிமுறைகள் மற்றும் பொய்யான விளம்பரங்களை செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்களை தடுக்க வகை செய்கிறது. இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களும் இனி இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட முடியும். நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2019 மாநிலங்களவையில் ஆகஸ்டு 6-ந்தேதி நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்டு 9-ந்தேதி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று, சட்டமாக மாறியது. “ஒரு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019-ன் கீழ் அமைக்கப்படும் ஒழுங்குமுறை ஆணையம்) அமைக்கப்படுவது புரட்சிகரமான விஷயமாகும். அதிகாரம் கொண்ட இந்த ஆணையத்தின் மூலம் நுகர்வோர்களுக்கு தகுந்த இழப்பீடுகளை பெற்றுத்தர முடியும்” என்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத்துறைகளுக்கான மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஆகஸ்டு 13 அன்று நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பில் கூறினார். 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின் ஒரு அம்சமாக இதை கருதலாம் என்றார்.

கடந்த முப்பது வருடங்களில் இந்திய சந்தை மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளில், பல்கிப்பெருகியுள்ள விற்பனை வழிமுறைகளில், அதிகரித்து வரும் நுகர்வோர்கள் இவற்றை வாங்க பல விதமான முறைகளில் பெரும் மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த 1986-ல் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

2019 சட்டம் நுகர்வோர்கள் உரிமைகளை பாதுகாக்க உறுதியளிக்கிறது. பொருட்கள் மற்றும் சேவைகளின் அளிப்பில் ஏற்படும் குறைபாடுகள் பற்றிய புகார்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி, இழப்பீடுகளை பெற வகை செய்கிறது. ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கி, நியாயமற்ற ஒப்பந்தங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அளிக்கப்படும். பொய்யான விளம்பரங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவற்றின் மீது அதிக அளவில் அபராதம் விதிக்கவும், அவற்றில் நடிக்கும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஆன்லைன் வணிகமும் இதன் கீழ் கொண்டு வரப்படும். வாங்கப்பட்ட ஒரு பொருள் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால், அந்நிறுவனம் தயாரித்த (இதே போன்ற) பொருட்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்க செய்ய வகை செய்யப்படுகிறது.



மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது மாநில நுகர்வோர் ஆணையத்திடம், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் புகார் அளிக்க முடியும். இதுவரை பொருள் விற்பனை செய்யப்பட்ட இடத்தில் அல்லது அந்நிறுவனத்தின் பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் மட்டுமே புகார் அளிக்க அனுமதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் புகார்கள் அளிக்கவும், அதற்கான கட்டணத்தை டிஜிட்டல் முறைகளில் செலுத்தவும் தேவையான விதிமுறைகளை நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரகம் இறுதி செய்து வருகிறது.

இதுவரை பெரும்பாலான நுகர்வோர்கள் இந்த சட்டத்தை பற்றி தெரியாமல் இருந்தனர். ஒரு மோசமான பொருள் அல்லது சேவை பற்றிய அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். நிறுவனங்கள் மீது வழக்கு தொடர முயன்றவர்கள், நீதிமன்றங்களில் புகார்களை நிரூபிக்க பல வருடங்கள் ஆகியதால், சோர்வடைந்தனர்.

நுகர்வோர்கள் தொடர்ந்த வழக்குகள் முடித்து வைக்கப்படும் விகிதம் அதிகமாக (சுமார் 90 சதவீதம்) இருந்தாலும், இவற்றை தீர்க்க, சராசரியாக 12 மாதங்கள் ஆகிறதாக பி.ஆர்.எஸ். சட்டமன்ற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

நுகர்வோர் யார்?

ஒரு பொருளை வாங்குபவரும், ஒரு சேவையை பெற கட்டணம் செலுத்தியவரும் இந்த புதிய சட்டத்தின் மூலம் புகார் அளிக்க முடியும். ஆனால் மறு விற்பனைக்காக பொருட்கள் அல்லது சேவைகளை வாங்குபவர்கள், வணிகத்திற்காக வாங்குபவர்கள் இந்த சட்டத்தை பயன்படுத்த முடியாது. மாறி வரும் சூழல்களை கருத்தில் கொண்டு, ஆன்லைன் மற்றும் ஆப் லைன் விற்பனைகள், தொலைபேசி மூலம் விற்பனை, பல தள சந்தைபடுத்தும் முறைகள், நேரடி விற்பனை ஆகியவை இந்த புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ், புகார் அளிப்பவர் என்பவர், ஒரு நுகர்வோர் அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு நுகர்வோர் சங்கம், மத்திய அரசு, மாநில அரசுகள், மத்திய ஆணையம், ஒரு வழக்கில் பல நுகர்வோர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் அனைவரும் புகார்தாரர்கள் என்று வகைப்படுத்தப்படுவார்கள். ஒரு புகார்தாரர் இறந்துவிட்டால், அவரின் வாரிசுகளும், 18 வயதிற்கு கீழ் உள்ள நுகர்வோருக்கு அவரின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் புகார்தாரராக கருதப்படுவார்கள்.



பொருட்களுக்கு யார் பொறுப்பு?

குறையுள்ள பொருள் அல்லது சேவையை அளித்து, அதனால் நுகர்வோருக்கு பாதிப்பு அல்லது தீங்கு ஏற்பட்டால், அதற்கு அந்த பொருள் அல்லது சேவையை அளித்த நிறுவனமே பொறுப்பு என்று நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 வரையறை செய்கிறது. இழப்பீடு பெற, நுகர்வோர் இந்த சட்டத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளின் படி, பொருள் அல்லது சேவையில் உள்ள குறைபாட்டை நிரூபிக்க வேண்டும். ஒரு பொருள் அல்லது சேவையில் இருந்த குறைபாட்டினால் பாதிப்பு அடையும் நுகர்வோர், அந்த நிறுவனத்திடம் இதன் அடிப்படையில் இழப்பீடு கேட்டு வழக்கு பதிவு செய்ய முடியும்.

ஒழுங்குமுறை ஆணையம்

நுகர்வோர்களின் நலன்களை முழுமையாக பாதுகாக்கவும், விரைவாக நீதி வழங்கவும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில், செயல் இயக்குனர் தலைமையிலான ஒரு புலனாய்வு பிரிவு அமைக்கப்படும். இந்த பிரிவு சட்ட மீறல்கள் சம்பந்தப்பட்ட புகார்களை விசாரணை செய்யும்.

பொய்யான தகவல்களை அளிக்கும் விளம்பரங்கள்

பொய்யான தகவல்களை அளிக்கும் விளம்பரத்தை வெளியிடும் நிறுவனத்திற்கும், அதில் நடிப்பவர்களுக்கும் ரூ.10 லட்சம் வரையிலான அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கும் அதிகாரத்தை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு, இந்த புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 அளிக்கிறது. இரண்டாவது முறையாக இதே தவறை செய்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான அபராதமும், ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் இது போன்ற விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்பட அனைவரையும், ஓராண்டு வரை அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்க முடியும். அடுத்தடுத்து விதி மீறல்களின் போது இந்த தடையின் கால அளவை மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். விளம்பரத்தில் சில சந்தர்ப்பங்களில், இத்தகைய விளம்பரங்களில் நடிப்பவர்கள் தண்டிக்கப்படுவதில் இருந்து விதிவிலக்கு பெற வகை செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் குறை தீர்ப்பு

புகாரில் உள்ள பொருளின் மதிப்பை பொறுத்து, மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று, மூன்று அடுக்குகள் கொண்ட நுகர்வோர் வழக்குகள் தீர்ப்பாயம் அமைக்கப்படும். ஒரு கோடி ரூபாய் வரையிலான மதிப்புடைய பொருட்கள், சேவைகள் பற்றிய புகார்களை மாவட்ட தீர்ப்பாயம் விசாரிக்கும். ஒரு கோடியில் இருந்து பத்து கோடி ரூபாய் வரையிலான மதிப்புடைய பொருட்கள், சேவைகள் பற்றிய புகார்களை மாநில அளவிலான தீர்ப்பாயம் விசாரிக்கும். பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள், சேவைகள் பற்றிய புகார்களை தேசிய அளவிலான தீர்ப்பாயம் விசாரிக்கும். புகார்தாரர் எழுத்துப்பூர்வமான புகார்களை தீர்ப்பாயத்தில் அளிக்க வேண்டும்.

மாவட்ட தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை மாநில தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம். மாநில தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை தேசியதீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம். அங்கும் நீதி கிடைக்கவில்லை என்று கருதும் நுகர்வோர், இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். ஒரு புகார் மீது மூன்று மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சோதனை கூடங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய பண்டங்கள் பற்றிய புகார்களுக்கு பொருந்தாது. அது போன்ற பொருட்கள் மீதான புகார்கள் ஐந்து மாதங்களில் தீர்க்கப்பட வேண்டும். ஒரு புகார்தாரர் அளிக்கும் புகார் பற்றி 21 நாட்களில் தீர்ப்பாயத்தில் இருந்து பதில் வரவில்லை என்றால், அந்த புகார் ஏற்கப்பட்டதாக கருதப்படும். தீர்ப்பாயத்தின் முன் விசாரணை நடத்தப்படாமல் எந்த புகாரும் நிராகரிக்கப்பட முடியாது. சமரசம் செய்து கொள்ளவும் இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாநில, தேசிய தீர்ப்பாயங்களில் சமரச மையங்கள் அமைக்கப்படும். இரண்டு தரப்பினரும் சம்மதித்தால், அவர்களின் வழக்குகள் இந்த சமரச மையங்கள் மூலம் தீர்க்கப்படும்.







போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...