இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | பகுதி-3 அட்டவணைகள் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது. முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது. பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது. 1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன. எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன. எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது. எட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன. எட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டன. ஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன. ஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அரசமைப்பு அட்டவணைகள் (Schedules ) முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல். இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள். மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல். நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை. ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம். ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம். ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல். எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்). ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள். பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம் பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்). பன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்). முக்கிய உறுப்புகள் (Articles) உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாந

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | பகுதி-3
அட்டவணைகள்
அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.
முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.
எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.
எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
எட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன.
எட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டன.
ஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
ஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசமைப்பு அட்டவணைகள் (Schedules )
முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.
இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.
மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.
நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.
ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.
ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.
ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.
எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).
ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள்.
பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்
பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்).
பன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்).
முக்கிய உறுப்புகள் (Articles)
உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாந

வரவேற்க காவல் நிலையங்களில் 2,640 வரவேற்பாளர்கள்

புகார் அளிக்க வருவோரை வரவேற்க காவல் நிலையங்களில் 2,640 வரவேற்பாளர்கள்
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க வரவேற்பாளர்களை தமிழக காவல்துறை நியமித்துள்ளது.
இதுகுறித்து தமிழக காவல் துறையின் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களின் குறைகளைக் கண்டறிந்து, அதை நீக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் நல்ல உறவை ஏற்படுத்தும் வகையில் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களை வரவேற்று, அவர்களது பிரச்னைகளைக் கேட்கும் வகையில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் முதல் நடவடிக்கையாக வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 1,007 பெண் காவலர்கள் உள்பட 2,640 காவலர்களுக்கு சென்னை காவலர் பயிற்சி கல்லூரி மூலம் இரு நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களுக்கு பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களிடம் எவ்வாறு பேசி பழக வேண்டும் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சிகள் காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், உளவியல் வல்லுநர்கள்,சமூக ஆர்வலர்கள்,வழக்குரைஞர்கள் ஆகியோர் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல காவல் நிலையங்களுக்கு வரும் பெண்கள்,முதியோர்கள் ஆகியோரின் தேவையறிந்து செயல்படுவது குறித்தும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல மனுதாரர்களின் குறைகளை கேட்டவுடன், அதை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தீர்வு காண்பதற்கும்,மனு தாரர்களுக்கு வழிகாட்டுவதற்கும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள், காவல் நிலையங்களுக்கு சென்றவுடன் அங்கு வரவேற்பாளர்களாக செயல்படும் காவலர்களிடம் தங்களது பிரச்னைகளை தெரிவிப்பதன் மூலம், நேரமும்,அலைச்சலும் குறையும் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளில் மீண்டும் உள்தாள்

மீண்டும் நீட்டிக்கப்பட்டது!
📄 ரேஷன் கார்டுகளில் மீண்டும் உள்தாள்.....! செல்லத்தக்க காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு தமிழத்தை பொறுத்தவரை கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
📄 இந்த ரேஷன் கார்டுகள் கடந்த 2009ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டி பழைய கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
📄 இந்த ரேஷன் கார்டுகள் தான் தற்போதும் புழக்கத்தில் உள்ளன. முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட காரணத்தால் ரேஷன் கார்டுகள் கந்தலாக மாறிவிட்டன. இது தவிர போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால் பொது வினியோக திட்டத்திற்கு அரசு வழங்கும் மானியத்தால் பல கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
📄 இதனால் ஆதார் கார்டு பெற்றவர்களிடம் நேரடியாக பதிவு செய்து ஏடிஎம் கார்டு அளவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
📄 தற்போது 60 சதவீத அளவிற்குதான் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் முடிவடைந்த பின்னர்தான் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க முடியும் என்பதால் இந்த ஆண்டும் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்ட அரசு முடிவு செய்தது.
📄 அதன்படி தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஜன.,1 முதல், டிச.,31 வரை நீட்டிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து உள்தாள் ஒட்டும் பணிகள் தொடங்கவுள்ளன.
📄 உள்தாள்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம், வழங்கப்படும். அதற்கு ஆதாரமாக, ரேஷன் கார்டில், '2017க்கான உள்தாளை பெற்றுக் கொண்டேன்" என்ற முத்திரையிட்டு, அதன் கீழே ரேஷன் கார்டுதாரரின் கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை பெறப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நுகர்வோர் குறைகள் தீர்வுக்கான வழிமுறைகள்

நுகர்வோர் என்பவர் 

பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர் வரை,

சாதாரண கிராமத்து மனிதன் முதல் நாட்டின் ஜனாதிபதி வரை

சாதி, மத, இன, கட்சி, பால், மொழி, பொருளாதாரப் பாகுபாடு இன்றி
ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் பார்வையில் நுகர்வோரே.

ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்தப் பல்வேறு பொருட்களை மற்றும் சேவையைப் பெறுகின்றனர்.

இப்படியான பொருட்களில் தரம் குறைத்தல், அல்லது


பாதிப்புக்குண்டானவர்கள் மன உலைச்சல், மனசோர்வு, பணவிரயம், மற்றும் பல இழப்புகளுக்கு ஆளாகக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு இருக்கும் நுகர்வோருக்கு பாதிப்பை நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முறையிட்டு,  குறைகளுக்குண்டான நிவாரணம் பெற முடியும்.

பொதுவாக நுகர்வோர் குறைதீர் மன்றம் என்றாலே மக்கள் மனதில் கோர்ட்டுக்கு ஒப்பாக நினைத்துக் கொண்டு பின்வாங்கும் நிலை உள்ளது.

நுகர்வோர் குறைதீர் மன்றம் நீதி வழங்கும் இடம் எனினும் நீதிமன்ற நடைமுறைகளில் வேறுபட்டது. 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.1986 ன்படி

ஒரு நுகர்வோர் அல்லது  

நிறுவனங்கள் சட்டம் 1956 அல்லது  நடைமுறையில் இருக்கின்ற ஏதாவது ஒரு சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட, தன்னார்வ நுகர்வோர் அமைப்பு அல்லது  

 முறையீடு செய்யும் மத்திய அரசு, அல்லது மாநில அரசு அல்லது   

அதிக எண்ணிக்கையிலான நுகர்வோர்கள் ஒரே தன்மையான அக்கறை கொண்டிருக்கும் பட்சத்தில் ஒன்று அல்லது 

ஒன்றுக்கு மேற்பட்ட நுகர்வோர்கள்.  

நுகர்வோர் இறந்து விட்டால் அவருடைய வாரிசு அல்லது பிரதிநிதிகள் முறையீடு செய்பவரால் எழுத்து வடிவத்தில் புகாரினை பதிவு செய்யலாம்.

இந்தச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறும் நோக்கத்தோடு மனு அளிக்கலாம்.  


எந்த ஒரு வணிகராலோ அல்லது அளிப்பவராலோ கடைப்பிடிக்கப்படுகின்ற 
நேர்மையற்ற  வணிக நடைமுறை  அல்லது தடைசெய்யப்பட்ட வணிகமுறை.

 முறையீடு செய்பவரால் வாங்கப்பட்ட பொருட்களில் அல்லது வாங்குவதற்காக ஒப்பு கொடுக்கப்பட்ட பொருளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடு.

 முறையீட்டாளரால் அமர்த்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட சேவையில் குறைபாடு அல்லது அமர்த்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட சேவையில் குறைபாடு.

 ஒரு வணிகரால் அல்லது சேவை அளிப்பவரால் முறையீட்டில் குறிக்கப்பட்டுள்ள சேவைக்காக அல்லது பொருளுக்காகக் கீழ்குறித்த வகையில் அதிகமாக விலை நிர்ணயம் செய்தல்.

 நடைமுறையில் உள்ள சட்டத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட அதிகமாகப் பொருளின் மீதோ, பொருளுக்கான சிப்பத்தின் மீதோ குறிப்பிடபட்ட விலையைவிட அதிகமாக வாங்குதல்.‘

 விலைப்பட்டியலில் அவரால் அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தால் குறிப்பிட்ட விலையை விட அதிகமாக வாங்குதல்.

பயன்பாட்டுக்காக விற்கப்படுகின்ற ஒரு பொருளால் உயிருக்கோ அல்லது பாதுகாப்புக்கோ கீழ்கண்டவாறு தீங்கு ஏற்படுமானால்

நடைமுறையில் உள்ள சட்டத்தால் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்புக்கான தரக்கட்டுப்பாட்டை மீறுவதால்

அளிக்கப்படுகின்ற பொருள்கள் பொது மக்களுக்குத் தீங்கானது தான் என தான் அறிவித்துள்ள பொருளை ஒரு வணிகர் விற்பாரேயானால்

பயன்படுத்துகின்ற போது ஒரு சேவை பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும்

அல்லது தீங்கு விளைவிக்கும் வாய்ப்புடையது என சேவை அளிக்கும் ஒருவர் தெரிந்து இருந்தும்
உயிருக்கும், பாதுகாப்புக்கும்” தீங்கு ஏற்படுத்தும் அத்தகைய சேவையை ஒருவர் அளிப்பாரேயானால்

நுகர்வோர் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.

ஒரு வியாபாரி அல்லது லாப நோக்கோடு பொருட்களை வாங்கியவர் அல்லது பொருளை பயன்படுத்தியவர் இழப்பீடு கோரி நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர முடியாது.


நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 
நுகர்வோர்களின் பிரச்சினைகளுக்கு முடிவுக்கான 

முன்று கட்டமைப்புகளோடு நுகர்வோர் குறைதீர்மன்றங்கள் செயல்படுகின்றன.

நுகர்வோர் கேட்கின்ற நஷ்டஈடு தொகைக்கு ஏற்ப 
நாம் மாவட்ட குறைதீர் மன்றத்தில் அல்லது 
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலோ அல்லது 
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலோ முறையிடலாம்,

நுகர்வோர் சார்ந்த வழக்குகள் பதிவு செய்ய

வக்கீல் தேவையில்லை,
பாதிக்கப்பட்ட நபரே வாதிடலாம்,

பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் சங்கங்கள் பாதிக்கப்பட்டவருக்காக வாதாடலாம்.
தாய் மொழியில் வாதாடலாம்.

மன உளைச்சலுக்கும் (மனம் அடையும் வேதனைக்கும் ) நிவாரணம் உண்டு

வழக்குச் செலவுகளையும் திரும்பப் பெறலாம்.

எளிமையான நடைமுறை

விரைவான தீர்ப்பு (மூன்று மாதங்களில் 90 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் சரத்து)

தபால் மூலமாகவும் புகாரைப் பதிவு செய்யலாம்

வாய்தாக்கள் அதிகம் இருக்காது.


நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 9ன் கீழ் இந்தியாவில் மூன்று நிலையில் நுகர்வோர் குறைதீர் முறைகள் ஆணையங்கள் செயல்படுகின்றன.

மாவட்ட அளவில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. 
இம்மன்றத்தில் 20 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் பதிவு செய்யலாம்.

மாநில அளவில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுகிறது. 
இங்கு 20 இலட்சத்திற்கு மேல் 1,00 கோடி ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் பதிவு செய்யலாம்.

தேசியக் அளவில்  தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுகின்றது. 
இங்கு 1,00 கோடி ரூபாய்க்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் பதிவு செய்யலாம்

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் மேலான முறையீடுகள் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும்,

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மேலான மேல் முறையீடுகள் தேசீய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் செய்யப்பட வேண்டும்.

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுகளின் மேலான முறையீடுகள் இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட வேண்டும்.

மாவட்ட குறைதீர்மன்றம் பிரிவு 10.11

மாவட்டக் குறைதீர் மன்றத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன்

ஒவ்வொரு மாநில அரசும்  அனைத்து மாவட்ட அளவில் இம்மன்றத்தை அமைத்திட வேண்டும்.

இம்மன்றத்தின் தலைவர் பதவிக்கு மாவட்ட நீதிபதி தகுதியுடையவர் தலைவராகவும்,

இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும்.

இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். பெண் உறுப்பினர் சமூக சேவையில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும்.

மற்றொரு உறுப்பினர் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இம்மன்றத்தில் மாவட்ட எல்லையிலான வழக்குகள் மற்றும் 20 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் நடத்தப் பெறுகின்றன.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன்
ஒவ்வொரு மாநில அரசும் மாநிலத் தலைநகரில் அமைத்திட வேண்டும்.

இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும்,

இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும்.

இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.

இரு உறுப்பினர்களும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர்.

இந்த ஆணையத்தில் மாநில எல்லையிலான 20 இலட்சத்திற்கு மேல் 1 கோடி ரூபாய் வரையிலான
நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும்

மாவட்டக் குறைதீர் மன்றத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன.

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசு, புதுதில்லியில் அமைத்துள்ளது.

இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு உச்சநீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும்,

நான்கு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும்.

உறுப்பினர்கள் நான்கு பேரும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் இருப்பர்.

இந்த ஆணையத்தில் 1 கோடி ரூபாய்க்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும்
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன. 


dsp Sakthivel special address for Pandalur TNPSC students




















உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?
“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும்.
நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன்.
 “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இர ண்டுவித தானங்கள்தான் அதிகளவி ல் இருந்து வருகின்றன. வேறு எந்த மாதிரியான உடல் தானங்கள் கொடு க்கப்படுகின்றன என்பதை சொல்ல லாமே?”
“உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்ன ர் தருவது.
“உயிருடன் இருக்கும் போது தானமா க தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?”
“ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குட லின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.”
“இறந் த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல் லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).”
 “யார் யார் உடல் உறுப்புக்களை தானமா க தரமுடியும்?”
“நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிக ள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.”
 “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?”
“18 வயது முதல் 60 வயது வரை யில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிசமமாக முன் வந்து தானம் செய்யலாம்.”
“உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா?”
“ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்புதானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:–
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோ ர், 18வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போ ன்ற நெருங்கிய சொந்தங்கள் உட ல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும் ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என் று வைத்துக் கொள்வோம், அவர் களுக்கு தானம் தர முன் வருபவ ர்களின் உடல் உறுப்பு
ஒருவருக்கு பொருந்தாமல், மற் றொரு நோயாளிக்கு பொருந்து மேயானால் அவர்கள் ஒருவருக் கு ஒருவர் சிறு நீரகங்களை பரி மாறிக் கொள்ள லாம்.
“தானம்செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய் யுமா?”
“பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொ ம்ளாமல், நிராகரித்து விடும். இதற் கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தா ன் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் “ப்ளாஸ்மா பெரிஸிஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறு வை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப் பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.”
“உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதா ல், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிறதா?”
“பொதுவாக, தானம் செய்கின்ற வர்களுக்கு எந்த பாதிப்பும் வரு வதில்லை. இரண்டு சிறு நீரக ங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெ ரியதாக ஆகும்,
ஆனால் நாளடைவில் தானாக வே சரியாகி விடும். தானம் செய் தவர், தன் வேலையை, தானாக வே செய்து கொள்ளலாம், பாதி ப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தானம் செய்தபின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.
நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதி கம் சீராக வேலை செய்ய தடை இல்லை.
ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில் லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண் டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.
ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்க ளையும் உபயோகப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக் கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது,  உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாக வோ அல்லது குறைந்த ரத்த அழு த்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடாது, குறைந்தது மூன்று மாதங்களு க்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அன வரும் ரத்த தானம் செய்ய முன் வரவேண்டு ம்.”
“வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்?”
“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போ ன்ற அ னைத்தையும் தானமாக தரலாம்.
ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.
ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டா லோ அல்லது நுரையீரல் வேலை செய் யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிர யின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற் று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக்களையும், திசுக்களையும், எடு த்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரண மாக இருந்தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.
ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல் லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”
“ஒருவரின் மூச்சு – சுவாசம் நின் ற பின்னர் என்ன மாறுதல் மூ ளையில் ஏற்படுகிறது?”  “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.
மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றன
நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத் திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக் க முடியாது.”
“உடல் உறுப்புக்களை எவ் வாறு பிரித்து எடுக்கிறார்கள்?”
“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பத ற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படு த்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலு த்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.
கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்த லாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,
குடுவை அல்லது பாத்திரத்தி லோ, ஐஸ் பெட்டியிலோ வை க்கப்படுகின்றது.
அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந் த தண்ணீரையும் ஊற்றி நிரப் பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது.
இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள் ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ï ரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயிய ல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.
சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்பு க்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.”
“முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது?”
 “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற் றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.”
1905ஆம் வருடம் டிசம்பர் மாத ம், டாக்டர் எட்வர்ட்ஸிம் என்ப வர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தா ர்.
1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டுதான், அமெரி க்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகி ச்சை செய்தார்.
1954 ஆம் ஆண்டு பீட்டர் பெ ண்ட் மருத்துவம னையில், ரிச் சர்ட், ரோ னால்ட்
என்ற இரட்டையரில், ரொனா ல்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள்.
1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
1963 ஆம் ஆண்டு “கொ லரா டோ” விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல் லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக் களை மாற்று அறுவை சிகிச் சைக்காக உப யோகித்தார்கள்.
1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப் டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன்முதலாக ஒரு ம னிதனிடமிருந்து இன்னொரு மனித னுக்கு இதய மாற்று அறுவை சிகிச் சை செய்தார். “டென்னிஸ்டார் வெ ல்’ என்பவரின் இதயத்தை `லூயிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார்.
1968ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச் சை நடைபெற்றது.
1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார்.
1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டு ம் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட் டது.
1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீ ரலை தானமாக தந்தார்.
2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டி ன் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செ ய்தார்.
2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப் புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறுநீரகம்-72 மணி நேரம் வரை
கல்லீரல் – 18 மணி நேரம் வரை
இதயம் – 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை
கணையம் – 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும்
தோல் – 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள்-5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாது காத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.
உயிர் வாழும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு இந்தியக் குடிமக்களுக்குத் தருகிறது. இதன்படி சட்டம் வகுத்துள்ள வழிமுறை அல்லாமல் வேறேந்த வழியிலும், எவர் தம் உயிரையும், சுதந்திரத்தையும் பறித்திடல் கூடாது. எது ஒரு மனிதனின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதில்லை சட்டத்தினால் உருவாக்கப்பட்ட வழிமுறைப்படி தலையிட அரசுக்கு அதிகரம் வழங்குவதாகவும், கொள்ளலாம். எனினும் நீதிமன்றங்கள் இப்பிரிவின் மூலமாக உயிர் வாழும் உரிமையை நாட்டுகின்றன.
தொடர்புடைய வழக்குகள்[தொகு]
மேனகா காந்தி எதிர் இந்திய அரசு (ஏ.ஐ.ஆர் 1978, எஸ். சி. 597) வழக்கில் தனி நபர் வாழ்க்கையை அனுபவிக்கத் தேவையான உரிமைகளை அரசு வழங்கிட வேண்டுமென்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக உடல் நலத்துக்கும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்குமான உரிமை 21-வது பிரிவின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
பரமானந்த கட்டாரா எதிர் இந்திய அரசு (ஏ.ஐ.ஆர் 1989, எஸ்.இ.2039) வழக்கில் விபத்துக்குள்ளான நோயாளிக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கான வழிமுறை நெறிகளைக் கடைபிடிக்கவில்லை என்ற காரணத்துக்காக ஒரு தனியார் மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்ததைக் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. செய்முறை நெறிகள் பின்பற்றப்பட்டதா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல் உடனடியாக மருத்துவ உதவியும், சிகிச்சையும் அளிக்க உச்ச நீதிமன்றம் மருத்துவ நிலையங்களுக்கு உத்தரவிட்டது.
இதுபோன்ற ஹக்கிம் ஷேக் என்பவர் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை அணுகிய போது படுக்கைகள் இல்லை என்ற காரணத்துக்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேறு வழியின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டு சிகிச்சைக்காக அவர் பெரும் தொகை செலவழித்தார். மருத்துவமனையின் மனப்பான்மையால் துன்பத்துக்குள்ளான அவருக்கு அரசினால் சிகிச்சை தரவேண்டிய ஆரோக்கியத்தின் முக்கிய தேவையான சிகிச்சை பெறும் உரிமை மறுக்கப்பட்டது. உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டட்தென்று உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்று ரூ.25,000/- இழப்பீடு வழங்கியது (ஏ.ஐ.ஆர் 1966, எஸ்.இ.1426)
மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994[தொகு]
மனித உறுப்புகளின் தானம் வியாபார ரீதியில் நடப்பதைத் தடுப்பதற்காக மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994-ல் அமலாக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி நெருங்கிய உறவினர்கள், (பெற்றோர்கள், தம்பிகள், சகோதர சகோதரிகள்) உறுப்பு தானம் செய்யலாம். இச்சட்டத்தின் பிரிவு 9(3)-ன் படி நெருங்கிய உறவினர் அல்லாதவர்களும் நோயாளிடம் கொண்டுள்ள அன்பு, பாசப்பிணைப்பு மற்றும் இதர சிறப்பு தானத்தை அங்கிகரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தானம் செய்பவர் உரிய அங்கிகாரத்தை மாநிலம் அங்கிகரிக்கும் குழுவிடம் பெற வேண்டும். இக்குழு திறமையான செயல்பட்டால் மனித உறுப்பு வியாபாரம் குறித்து காவல்துறை சரியான நடவடுக்கை எடுக்க இயலாது. இது தொடர்பாக அதிகாரம் கொண்ட குழுவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரோ நீதிமன்றத்தில் புகார் செய்தால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித நோயாளிகளின் உரிமைகள்[தொகு]
மாநிலச் சட்டம் 1987 மன நோயாளிகளின் உரிமைகளை கூறுகிறது. இச்சட்டம் 22.05.87-ல் அமலுக்கு வந்ததது. இச்சட்டத்தின் படி மன நோயாளிகளை சிறையில் வைக்க அனுமதி இல்லை. இந்தியாவில் மே 22-ம் தேதி மனநல நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1996-ல் பீகார் மாநிலத்தில் பாட்னா உயர்நீதிமன்றம் பீகார் மாநில சிறையில் வாடிய பல நோயாளிகளை ராஞ்சி மனநல காப்பகத்திற்கு அனுப்பும்படி உத்தரவிட்டது. மனநோயாளிகளின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டால் அந்த மனநோயாளிகளுக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ மாநில அரசு நஷ்டஈடு தர வேண்டுமென்று அவ்வாறு வழங்கப்பட்ட தொகை தவறு இழைத்த அதிகாரியின் சம்பள்த்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநோயாளிகள் பலர் விலங்கிடப்பட்டு இருந்த சூழ்நிலையில் திடிரென்று நெறுப்பு பற்றிக்கொண்டதால் அனேகர் தீயில் கருகீ உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் உரிய அங்கீகாரத்துடன் இயங்கவேண்டுமெனவும் மனநோயாளிகளுக்கு வைத்தியம் செய்பவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
உட‌ல் உறு‌ப்பு தான‌ம்: ‌வி‌திமுறை தள‌ர்வு
வியாழன், 30 செப்டம்பர் 2010 (12:10 IST)
‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி மூளை‌ச்சாவு ஏ‌ற்படுபவ‌ர்களது உட‌ல் உறு‌ப்புகளை தான‌‌ம் செ‌ய்ய அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ள் மு‌ன் வருவது த‌ற்போது அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. எ‌னினு‌ம், உறு‌ப்புகளை உ‌ரிய நேர‌த்‌தி‌ல் பய‌ன்படு‌த்த இயலாம‌ல் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் ச‌ட்ட‌ நடவடி‌க்கைக‌ள் ஏராளமாக உ‌ள்ளன.
எனவே, உட‌ல் உறு‌ப்பு தான‌த்து‌க்கு உ‌ள்ள ச‌ட்ட நடவடி‌க்கைகளை த‌ள‌ர்‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ஏராளமானோ‌ர் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர். இதையடு‌த்து உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் உ‌ள்ள மரு‌த்துவ‌‌ம் சா‌ர்‌ந்த ச‌ட்ட நடவடி‌க்கைக‌ளி‌ல் நடைமுறைகளை தள‌ர்‌த்‌‌தி, சுகாதார‌ம் ம‌ற்று‌ம் குடு‌ம்ப நல‌த்துறை உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.
த‌மிழக‌த்‌தி‌ல் சாலை ‌விப‌த்துக‌ளி‌ல் உ‌யி‌ரிழ‌ப்போ‌ர் ஏராள‌ம். இ‌தி‌ல் தலை‌யி‌ல் அடிப‌ட்டு அதனா‌ல் மூளை‌ச்சா‌வு ஏ‌ற்ப‌டுபவ‌ர்களு‌ம் ஏராள‌ம். மூளை‌ச் சாவு எ‌ன்பது, உட‌ல் உறு‌ப்புக‌ள் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌‌க்க, அவ‌ர்களது மூளை செய‌லிழ‌ந்து, உ‌யி‌ர் வாழ வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்ற ‌நிலை‌யி‌ல், அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ரி‌ன் உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் செ‌ய்ய மு‌ன் வரு‌கி‌ன்றன‌ர்.
ஆனா‌ல் உட‌ல் உறு‌ப்புகளை தா‌ன‌ம் செ‌ய்வது என‌்று உற‌வின‌ர்க‌ள் முடிவெடு‌த்து ‌வி‌ட்டா‌ல் ம‌ட்டு‌ம் போதாது. அத‌ற்கென ‌சில மரு‌த்துவ ம‌ற்று‌ம் ச‌ட்ட நடைமுறைக‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை எ‌ல்லா‌ம் முடி‌ப்பத‌ற்கு‌ள் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ரது உட‌ல் உறு‌ப்புக‌ள் ‌வீணா‌கிறது. இதனா‌ல் தானமாக ‌கிடை‌க்க வே‌ண்டிய உட‌ல் உறு‌ப்புக‌ள் பய‌ன்படு‌த்த ‌முடியாத ‌நிலையை அடை‌கிறது.
எனவே, உட‌ல் உறு‌ப்பு தான‌ம் கு‌றி‌த்த ச‌ட்ட நடவடி‌க்கைகளை தள‌ர்‌த்‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள பு‌திய உ‌த்தர‌வி‌ல், மூளை சாவு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தா‌ல், மரு‌த்துவரே முத‌ல்க‌ட்ட ப‌ரிசோதனை மே‌ற்கொ‌ள்ளலா‌ம். இது உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ல், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ரி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ரிட‌ம் (மனை‌வி,குழ‌ந்தைக‌ள், பெ‌ற்றோ‌ர் அ‌‌ல்லது சகோதர, சகோத‌ரிக‌ள்) உட‌ல் உறு‌ப்பு தான‌ம் கொடு‌ப்பது தொட‌ர்பான ‌விரு‌ப்ப‌த்தை அ‌றியலா‌ம்.
தான‌ம் கொடு‌க்க ‌விரு‌ம்‌பினா‌ல், அடு‌த்த க‌ட்டமாக ‌விசாரணை நட‌த்து‌ம் காவ‌ல்துறை அ‌திகா‌ரி‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌த்து, உடனடியாக மரு‌த்துவ‌ம் சா‌ர்‌ந்த ச‌ட்ட நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
அவரது புல‌ன் ‌விசாரணை‌க்கு‌ப் ‌பி‌ன்பு, உட‌ல் உறு‌ப்பு தான ச‌ட்ட‌ப்படி மூளை சாவு உறு‌தி செ‌ய்வத‌‌ற்கான 2வது ப‌ரிசோதனை நட‌த்த வே‌ண்டு‌ம். இற‌ப்பு‌க்கானகாரண‌த்‌தி‌ல் ச‌ந்தேக‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல், உடனடியாக ‌விசாரணை அ‌திகா‌ரி, உட‌ல் உறு‌ப்பு தான‌ம் ச‌ெ‌ய்வத‌ற்கான அனும‌தியை வழ‌ங்க வே‌ண்டு‌ம்.

‌பிரேத ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் என ‌விசாரணை அ‌திகா‌ரி கரு‌தினா‌ல், அத‌ற்கான அனும‌தி கடித‌ம், உட‌ல் உறு‌ப்புக‌ளி‌ன் இய‌ங்கு‌நிலை கு‌றி‌த்து மரு‌த்துவ அ‌திகா‌ரி கொடு‌க்கு‌ம் சா‌ன்றை சம‌ர்‌ப்‌பி‌க்க வே‌ண்டு‌ம். அத‌ன் ‌பி‌ன் உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் வழ‌ங்குவத‌ற்கு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...