safety-licence-mandatory-for-shops-from-2018/

https://www.covaipost.com/coimbatore/food-safety-licence-mandatory-for-shops-from-2018/

Shops selling food products have to get registered with the Food Safety and Standards Authority of India and have the necessary licence before December 30. This is aimed at ensuring that safety standards are met.
According to Food Safety and Standards Act, 2006, the licensing and registering under FSSAI is made compulsory for shops, producers and marketers from next year to regulate distribution, sale and storage of food products and ensuring standards before they reach the consumer.
To create awareness among the people and shopkeepers, the Centre for Consumer Human Resources and Environment Protection (CCHEP), Gudalur, has requested the Chief Minister’s Special Cell, the Food Safety and Standard Commission and the Nilgiris District Collector to conduct special camps in the various parts of district as also the State.
CCHEP general secretary S Sivasubramaniam said the government had now fixed the last date for getting licene or certificate from FSSAI as December 30. From 2018, selling of food products without licence was a punishable offence.
Every food product shop with an annual turnover above Rs 2 lakh would have to get licence and normal ones like petty shops can simply register with the FSSAI through the website www.fssai.gov.in.

லாக்டாலிஸ் ((Lactalis)), குழந்தைகள் பால்பவுடரில்

பிரான்சு நாட்டைச் சேர்ந்த பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லாக்டாலிஸ் ((Lactalis)), குழந்தைகள் பால்பவுடரில் சால்மொனேல்லா ((Salmonella )) என்ற கிருமி கலப்பு புகார் காரணமாக 7 ஆயிரம் டன் எடையுள்ள பால்பவுடரை திரும்பப் பெற்றுள்ளது.
சால்மொனேல்லா என்பது ஃபுட் பாய்சனிங் எனப்படும் உணவு நச்சுத் தன்மை ஏற்படுத்தும் கிருமியாகும். வடமேற்கு ஃபிரான்சின் க்ரான் ((Craon)) நகரில் உள்ள லாக்டாலிஸ் நிறுவன தொழிற்சாலையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் உற்பத்தி செய்யப்பட்டு பிரிட்டன், சீனா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை உள்பட அனைத்து பால்பொருட்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாதத்துக்குட்பட்ட குழந்தைகள் உட்பட பல்வேறு குழந்தைகள் லாக்டாலிஸ் பால் பவுடரால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து ஃபிரான்ஸ் நுகர்வோர் நல அமைப்பு பால் பவுடரை திரும்பப் பெற உத்தரவிட்டது. இதையடுத்து அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன.

வளர் இளம் பெண்கள் பிரச்சனை கள் தீர்வுகள்

கோவையில், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டல நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் சமூக கல்வி மேம்பாட்டு மையம் CSED இணைந்து
வளர் இளம் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் எதிர்நோக்கும் பிரச்சணைகளுக்கு தீர்வு ஏற்படுத்துதல் குறித்த ஆலோசணை கூட்டம் கோவை திவ்யோதையா ஹாலில் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு சமூக கல்வி மேம்பாட்டு மைய ணெயல் இயக்குனர் C. நம்பி தலைமை தாங்கினார்.

சோமனூர் நுகர்வோர் பாதுகப்பு சங்க தலைவர் வாகை சிவக்குமார் வரவேற்றார்.

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை விடுதிகளில் தரமான உணவு மற்றும் உணவு சார்ந்த பிரச்சனைகளை களைவதற்கான தகவல்கள் குறித்து பேசினார்.

வழக்குரைஞர் திரு. M. மதிவாணன்,

சிட்டிசன் வாய்ஸ் கிளப் தலைவர் திரு. C.V.ஜெயராமன்,

தமிழ்நாடு நுகர்வோர் நல மையத்தின் தலைவர்திரு. J.V .ஜார்ஜ் 

கோவை நுகர்வோர் அமைப்பு தலைவர் கவி. தமிழ்செல்வன்,

தமிழ்நாடு கன்ஸ்யூமர் அசோசியேசன் பொதுச்செயலாளர் நா.பிரதீப்குமார்

நீலகிரி கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சு. சிவசுப்பிரமணியம்

CSED ஒருங்கிணைப்பாளர்  திரு. N. ஆறுச்சாமி மற்றும்

மேட்டுப்பாளையம் நுகர்வோர் அமைப்பு நிர்வாகி திருமதி. K. மகபுனிசா

உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. ரங்கராஜன்,

ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை கோவை மண்டல நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு மற்றும் சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையமும் இணைந்து செய்திருந்தது.

கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம், நீலகிரி மாவட்டம், மற்றும் அவினாசி ஆகிய பகுதிகளிலிருந்து 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

http://cchepnlg.blogspot.in/?m=1

உலகின் டாப் 10 நீண்ட மலைத்தொடர்கள்


உலகின் டாப் 10 நீண்ட மலைத்தொடர்கள்


உலகின் டாப் 10 நீண்ட மலைத்தொடர்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
சங்கிலிலைப் போன்று காணப்படும் மலைகளின் தொடர்ச்சி மலைத்தொடர்கள் என்று அழைக்கப்படுகின்றன. மலைத்தொடர்கள் புவியியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன.
இம்மலைத் தொடர்கள் உலகின் எல்லா இடங்களிலும் பரவிக் காணப்படுகின்றன. இம்மலைத்தொடர்கள் நாடுகளிலும், கண்டங்களிலும் நீண்டும், சில இடங்களில் எல்லைகளை வரையறை செய்பவைகளாகவும் உள்ளன.
மலைத்தொடர்கள் பிளேட் டெக்டோனிக்ஸ் என்றழைக்கப்படும் செயல்பாட்டால் உருவாக்கப்படுகின்றன.

ஆன்டிஸ் மலைத்தொடர், தென்அமெரிக்கா


ஆன்டிஸ் மலைத்தொடர்
ஆன்டிஸ் மலைத்தொடர்


உலகின் முதலாவது நீண்ட மலைத்தொடர் என்ற பெருமை இம்மலையைச் சாரும். இம்மலைத்தொடர் 7000 கிமீ நீளத்தினையும், 500 கிமீ சராசரி அகலத்தினையும் கொண்டுள்ளது. இது தென்அமெரிக்காவின் மேற்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.
இம்மலைத்தொடர் வெனிசுலா, கொலம்பியா, ஈகுவடார், பெரு, பொலிவியா, சிலி, அர்ஜென்டினா ஆகிய ஏழு தென்அமெரிக்க நாடுகளில் வடக்கு தெற்காக தொடர்ந்து காணப்படுகிறது.


ஆன்டிஸ் மலைத்தொடர் வரைபடம்
ஆன்டிஸ் மலைத்தொடர் வரைபடம்


இமயமலைக்கு அடுத்தாற்போல் உலகின் அதிக உயரமான சிகரங்களை இம்மலை பெற்றுள்ளது. இம்மலையின் உயர்ந்த சிகரம் அக்கோன்காகுவா (உயரம் 6962 மீ) ஆகும். உலகின் இரண்டாவது மிகஉயரமான பீடபூமியான அலிப்ளானோவை இம்மலைத்தொடர் கொண்டுள்ளது.
உலகின் மிகஉயரமான எரிமலையான ஓஜோஸ் எல் சலாடோ சிலி-அர்ஜென்டினா எல்லையில் ஆன்டிஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
காலநிலையைப் பொறுத்து இம்மலைத் தொடர் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை வெப்பமண்டல ஆன்டிஸ், உலர் ஆன்டிஸ், வெப்பமண்டல மழைமிகு ஆண்டிஸ் ஆகியவை ஆகும்.
இம்மலைத்தொடரில் 3500 வகையான விலங்கு மற்றும் பறவையினங்கள் காணப்படுகின்றன.


ராக்கி மலைத்தொடர், வடஅமெரிக்கா


ராக்கி மலைத்தொடர்
ராக்கி மலைத்தொடர்


4800 கிமீ நீளத்தினைக் கொண்டுள்ள இம்மலைத்தொடர் உலகின் இரண்டாவது நீண்ட மலைத்தொடர் ஆகும். இது வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியில் நீண்டுள்ளது.
இம்மலைத்தொடர் கனடாவின் பிரிடிஷ் கொலம்பியாவில் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ வரை பரவியுள்ளது.


ராக்கி மலைத்தொடர் வரைபடம்
ராக்கி மலைத்தொடர் வரைபடம்


இம்மலையின் உயர்ந்த சிகரமான எல்பட் சிகரம் ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோவில் 4400 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
நடைபயணம், முகாம், மலையேறுதல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், பனிசறுக்கு போன்றவைகள் இம்மலைத்தொடரில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இது சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளக்குகிறது.


கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர், ஆஸ்திரேலியா


கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர்
கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர்


ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள இம்மலைத்தொடர் உலகின் மூன்றாவது பெரிய மலைத்தொடராகும். இதன் நீளம் 3500 கிமீ ஆகும். இது கிழக்கின் உயர்நிலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலைத்தொடர் வடக்கிழக்கில் குயின்ஸ்லாந்தில் இருந்து தொடங்கி தெற்கே மேற்கு விக்டோரியா வரை ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.


கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர் வரைபடம்
வலதுபுறம் அடர் மஞ்சள் நிறத்தில் உள்ளது கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர் வரைபடம்


இம்மலைத்தொடரின் அழகான டேஞ்சர் நீர்வீழ்ச்சி நியூசௌத் வேல்ஸில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் மிகஉயரான சிகரமாக கொஸ்கியூஸ்கோ 2228 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இம்மலைத்தொடரிலிருந்து கான்டாமைன், மேக்டொனால்ட், பிரிஸ்பேன், மிட்டா உள்ளிட்ட முக்கிய ஆறுகள் உற்பத்தியாகின்றன.


டிரான்டான்டரிடிக் மலைத்தொடர், அன்டார்டிக்கா


டிரான்டான்டரிடிக் மலைத்தொடர், அன்டார்டிக்கா
டிரான்டான்டரிடிக் மலைத்தொடர், அன்டார்டிக்கா


இம்மலைத்தொடர் 3500 கிமீ நீளம் மற்றும் 100 முதல் 280 கிமீ அகலம் கொண்டு உலகின் நான்காவது பெரிய மலைத்தொடராக உள்ளது.
இது அன்டார்டிக்காவை கிழக்கு மற்றும் மேற்கு என இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறது. இதில் நிறைய குறுமலைத்தொடர்கள் உள்ளன. இம்மலைத்தொடரானது 98 சதவீதம் பனிமூடி காணப்படுகிறது.


டிரான்டான்டரிடிக் மலைத்தொடர், அன்டார்டிக்கா வரைபடம்
டிரான்டான்டரிடிக் மலைத்தொடர், அன்டார்டிக்கா வரைபடம்


இம்மலைத்தொடரில் ராணி மாளட் என்னுமிடத்தில் கிர்க்பாட்டிரிக் என்னும் மிகஉயர்ந்த சிகரம் 4528 மீ உயரத்தில்; அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் சீல்கள், பென்குயின்கள் மற்றும் கடல்வாழ்பறவைகள ஆகியவற்றிற்கு வாழிடமாக உள்ளது.


குன்லுன் மலைத்தொடர், ஆசியா


குன்லுன் மலைத்தொடர், ஆசியா
குன்லுன் மலைத்தொடர்


இம்மலைத்தொடர் ஆசியாவின் மிகநீண்ட மலைத்தொடராகும். இம்மலைத்தொடர் உலகின் ஐந்தாவது பெரிய மலைத்தொடராகும். இதனுடைய நீளம் 3000 கிமீ ஆகும்.
இம்மலைத்தொடரின் பெரும் பகுதி சீனாவில் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையில் கோபி பாலைவனம் ஆரம்பமாகிறது. திபெத் பீடபூமி இதனுடைய தெற்கு எல்லையில் உள்ளது. தஜகஸ்தானின் பாமீர் முடிச்சு இதனுடைய கிழக்கு எல்லையில் உள்ளது. இதனுடைய மேற்கு எல்லையில் வடகிழக்கு சீனாவின் வளமான பகுதி அமைந்துள்ளது.
இம்மலையில் இருந்து காரகாஸ் மற்றும் யுர்உங்காஸ் உள்ளிட்ட முக்கிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இம்மலையின் உயர்ந்த சிகரமாக குன்லுன் தேவதை 1895 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

யூரல் மலைத்தொடர், ஆசியா


யூரல் மலைத்தொடர்
யூரல் மலைத்தொடர்


யூரல் மலைத்தொடர் ஆசியா கண்டத்தில் வடக்கிலிருந்து தெற்காகச் செல்கிறது. இது உலகின் ஆறாவது நீண்ட மலைத்தொடராகும். இம்மலைத்தொடர் 2500 கிமீ நீளத்தினையும் 150 கிமீ சராசரி அகலத்தினையும் கொண்டுள்ளது.
இது ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியான ஆர்டிக்கில் தொடங்கி கசகஸ்தானின் வடக்குப் பகுதி வரை தெற்காக நீண்டு செல்கிறது. இம்மலைத்தொடர் ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு எல்லையாக உள்ளது.
ஐ ரோப்பாவின் முக்கிய ஆறான யூரல் ஆறு இம்மலைத்தொடரில் உற்பத்தியாகிறது.


அட்லஸ் மலைத்தொடர், ஆப்பிரிக்கா


அட்லஸ் மலைத்தொடர்
அட்லஸ் மலைத்தொடர்


இம்மலைத்தொடர் ஆப்பிரிக்க கண்டத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் உலகின் ஏழாவது பெரிய மலைத்தொடராகும். இது 2500 கிமீ நீளம் உடையது.
இம்மலைத்தொடர் அல்ஜீரியா, மொராக்கோ, டுனிசியா ஆகிய நாடுகளில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் டுனிசியாவின் மத்தியதரைக்கடல் பகுதியில் தொடங்கி அல்ஜீரியா வழிச்சென்று மொராக்கோவின் வடமேற்குப்பகுதியான அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிவரை நீண்டுள்ளது. இது சாகாரா பாலைவனத்தின் வடமேற்கு எல்லையாக உள்ளது.
இம்மலைத்தொடர் நான்கு புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன மத்திய அட்லஸ், உயர் அட்லஸ், ஆன்டி அட்லஸ், சகாரன் அட்லஸ் என்பவை ஆகும். இம்மலையில் 4165 மீ உயரத்தில் டுப்கால் மிகஉயர்ந்த சிகரமாக அமைந்துள்ளது.

அட்லஸ் மலைத்தொடர் வரைபடம்
அட்லஸ் மலைத்தொடர் வரைபடம்



அப்பலாசியன் மலைத்தொடர், வடஅமெரிக்கா


அப்பலாசியன் மலைத்தொடர்
அப்பலாசியன் மலைத்தொடர்


இம்மலைத்தொடர் கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு கிழக்கு கடற்கரை எல்லையாக அமைந்துள்ளது.
இம்மலைத்தொடரானது 2414 கிமீ நீளத்தினையும் 300 கிமீ சராசரி அகலத்தினையும் பெற்றுள்ளது. இது உலகின் எட்டாவது நீண்;;ட மலைத்தொடராகும். இம்மலைத்தொடரானது உலகின் ஏனைய மலைத்தொடர்களை விட உயரம் குறைவாக உள்ளது.
இம்மலைத்தொடரின் பெரும் பகுதி ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது. இதன் ஒருசில பகுதி தென்கிழக்கு கனடாவில் அமைந்துள்ளது. இதன் மிகஉயர்ந்த சிகரமான மிச்செல் 2037 மீ உயரத்தில் உள்ளது.


இமயமலை, ஆசியா


இமயமலை
இமயமலை


இம்மலைத்தொடர் தெற்காசியாவில் அமைந்துள்ளது. இதன் நீளம் 2400 கிமீ ஆகும். இது உலகின் ஒன்பதாவது நீண்ட மலைத்தொடராகும்.
உலகின் ஏனைய முக்கிய மலைத்தொடர்களைவிட இது இளமையானது. இது திபெத்திய பீடபூமியிலிருந்து சிந்து-கங்கை சமவெளியைப் பிரிக்கிறது.
இந்துகுஷ் மலைத்தொடர் இதனுடைய வடக்கு எல்லையாகும். இந்திய வடகிழக்கு மாநிலங்கள் இதனடைய கிழக்கு எல்லையாகும்.


இமயமலை வரைபடம்
இமயமலை வரைபடம்


இம்மலைத்தொடரில் உலகின் உயரமான ஒன்பது சிகரங்கள் அமைந்துள்ளன. இம்மலைத்தொடர் ஆசியாவின் முக்கிய ஆறுகளான சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவற்றிற்கு உற்பத்தி இடமாக உள்ளது.
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் இம்மலையில் அமைந்துள்ளது. இதனடைய உயரம் 8848 மீ ஆகும்.
 அல்தாய் மலைத்தொடர், ஆசியா

அல்தாய் மலைத்தொடர்
அல்தாய் மலைத்தொடர்


இம்மலைத்தொடர் மத்திய ஆசியா பகுதியில் அமைந்துள்ளது. இதனுடைய நீளம் 2000 கிமீ ஆகும். இது உலகின் பத்தாவது நீண்ட மலைத்தொடராகும்.
ரஷ்யா, மங்கோலியா, சீனா, கசகஸ்தான் ஆகிய நாடுகளை இம்மலைத்தொடர் இணைக்கிறது. இம்மலையின் பெரும்பான்மையான பகுதி மங்கோலியாவில் உள்ளது.
இதன் ஒரு சில பகுதிகளே சீனா, ரஷ்யா, கசகஸ்தான் நாடுகளில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரின் உயர்ந்த சிகரமாக பெலுகா 4506 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
– வ.முனீஸ்வரன்

எலிகள் குடும்பம் நடத்தின மோட்டல்…’

எலிகள் குடும்பம் நடத்தின மோட்டல்…’
இப்போது எப்படியிருக்கிறது?
நேரடி ஆய்வு!

பயணவழி உணவகங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை, ‘மோசடி மோட்டல்கள்’ என்ற தலைப்பில்  04.10.17 அன்றைய தேதியிட்ட'ஜூனியர் விகடன்' இதழில் விரிவாக எழுதி இருந்தோம். தமிழகம் முழுவதும் மோட்டல்களில் நடக்கும் மோசடிகள், சுகாதாரச் சீர்கேடுகள் ஆகியவற்றை அம்பலப்படுத்தியது அந்தக் கட்டுரை.
அதைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை மூலமாக நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. 

முதல் கட்டமாகக் காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தந்தை பெரியார் பயணவழி உணவகத்துக்குத் தடை ஆணை உத்தரவு வழங்கி அதிரடி காட்டி இருக்கிறார் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அமுதா.

இதையடுத்து மாமண்டூர் பயணவழி உணவகத்தில்  மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ''அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தால்தான் மோட்டலை இயக்க முடியும்'' என காஞ்சிபுரம் உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கறார் காட்டி வருகிறார்கள்.

''குறை இருந்தது என்பது உண்மைதான்!''

இந்த நிலையில் மாமண்டூர் மோட்டலுக்குச் சென்றோம். பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது மோட்டல். சமையல்கூடங்களில் டைல்ஸ் ஒட்டிக்கொண்டும், டேபிள்களுக்குப் பெயின்ட் அடித்துக்கொண்டும் இருந்தனர்.

மோட்டல் ஒப்பந்ததாரர் ராஜ்குமாரிடம் பேசினோம். “20 வருடமாக இருந்த இந்த மோட்டலில் இவ்வளவு புகார்கள் வந்ததில்லை. இப்போதுதான் அதிகமாகப் புகார்கள் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதுவரை இலவசமாக இருந்த கழிப்பறையைச் சில மாதங்களுக்கு முன்புதான் கட்டணக் கழிப்பறையாக மாற்றினார்கள்.

இங்குள்ள கழிவறைக்குத் தனியாக டெண்டர் விட்டுவிட்டார்கள். சிறுநீர் கழிக்க 5 ரூபாய் என்பதால், மக்களுக்குக் கோபம் வந்திருக்கலாம். எங்கள் தரப்பிலும் குறை இருந்தது என்பது உண்மைதான்.

அதை நாங்கள் சரிசெய்து வருகிறோம். பழைய பில்டிங் என்பதால் தண்ணீர் ஒழுகுகிறது.  'ஏழு அடி உயரத்துக்கு டைல்ஸ் ஒட்டவேண்டும்' என்றார்கள் அதிகாரிகள். தற்போது அவற்றைச் சரிசெய்து வருகிறோம். இந்த மோட்டலைப் பொறுத்தவரை, எல்லா விலையுமே குறைந்த அளவில்தான் இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மோட்டல்களில் நாங்கள் மட்டும்தான் எம்.ஆர்.பி விலையில் உணவுப்பொருள்களை விற்கிறோம். மற்ற எந்த மோட்டலிலும் இதுபோல் விற்பனை செய்வது கிடையாது. இங்கு மட்டும்தான் அம்மா வாட்டர் எந்த நேரத்திலும் கிடைக்கும். கட்டணக் கழிப்பிடத்தை இலவசமாகக் கொடுக்க அரசு முன்வர வேண்டும்” என்றார்.

''எலிகள் குடும்பம் நடத்தின!''

காஞ்சிபுரம் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். “தினமும் 400 பேருந்துகள் மாமண்டூர் பெரியார் பயணவழி உணவகத்துக்கு வந்து போகின்றன. 

ஒரு பேருந்துக்கு 10 பேர் எனக் கணக்கிட்டாலே தினமும் 4,000 பேர் அங்கே சாப்பிடுவார்கள்.
அத்தகைய இடங்களில் தயார் செய்யப்படும் உணவுகள் மிகவும் சுத்தமான முறையில் இருக்க வேண்டும். 'ஜூனியர் விகட'னில் செய்தி வெளியிட்டதைக் கண்டு நேரில் சென்று பார்த்தோம். 

அப்போது சமையல் கூடமும் சேமிப்பு அறையும் மிகவும் மோசமான நிலையில் இருந்தன.
குடிப்பதற்கும் சுத்தமான தண்ணீர் வழங்கவில்லை. எலிகள் குட்டிப் போட்டு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன. உணவுப் பொருள்கள் தரையில் சிதறிக்கிடந்தன. கழிவு நீர் போகாமல் சமையல்கூடத்திலேயே தேங்கி இருந்தது. சமைக்கும் இடமும் பாத்திரம் கழுவும் இடமும் ஒரே இடத்தில் இருந்தது.

ஆணையர் நடவடிக்கை!

ஆய்வுக்குப் பின், ‘இனி, இதுபோல் செய்யக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுப்போம்’ என அறிவுறுத்திவிட்டு வந்தோம்.
ஆனால், அதை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அதைத் தொடர்ந்தும் புகார்கள் வந்துகொண்டிருந்தன. 

இதனால் மீண்டும் அந்த உணவகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினோம். நாங்கள் கூறியது எதையுமே அவர்கள் செய்யவில்லை.
இதனால் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006, பிரிவு 32-ன்படி அவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் நோட்டீஸ் கொடுத்தோம். அதற்கான கால அவகாசம் முடிந்தபின், மீண்டும் அங்கு ஆய்வு நடத்தினோம். 

அப்போதும் தந்தை பெரியார் பயணவழி உணவகம் தரப்பில்  எதுவும் செய்யாமல் அலட்சியம் காட்டினார்கள்.
பிரிவு 34-ன்படி அவசரத் தடை ஆணை உத்தரவு வழங்க உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்குப் பரிந்துரை செய்தோம். நாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றைப் பார்த்துவிட்டு ஆணையரும் அதற்கு அனுமதி கொடுத்தார்.

அதன்பிறகு, ‘நாங்கள் எல்லாக் குறைகளையும் சரிசெய்துவிடுகிறோம்’ என மோட்டல் தரப்பில் உறுதியளித்தார்கள். அதன்பிறகே தற்போது வேலை நடந்துவருகிறது. நாங்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்தால்தான் தடை உத்தரவை ரத்து செய்வோம். 

புகாருக்கு வாட்ஸ்அப் எண்!

இதுபோன்ற மோட்டல்களில் உணவு சாப்பிடுபவர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணிப்பவர்களாக இருக்கிறார்கள். மஞ்சள்காமாலை, டைபாய்டு போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும்போது அது தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் பரவ வாய்ப்பு அதிகம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மோட்டல்களையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். 

தமிழகத்தில் உள்ள மோட்டல்கள், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.
இனி அடுத்தடுத்த மோட்டல்களுக்கும் இந்த அதிரடி தொடரும். மோட்டல்களில் சுகாதாரமற்ற உணவுப்பொருள்கள் வழங்கினால், 

அவற்றை எங்களுக்குத் தெரிவிக்கும் வகையில் 9444042322 என்றவாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருக்கின்றன” என எச்சரிக்கிறார்.

பயணிகளின் உடல்நலத்தையும் மோட்டல்கள் நிர்வாகத்தினர் கவனத்தில்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள்: 9-12-1979*

📮 *இந்த நாளில் அன்று* 📮

*பெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள்: 9-12-1979*

பெரியம்மை மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும்.

இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது.

இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும்.

இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடும் நிலை உருவாகியது.

உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலனவர்கள் முகத்தில் நீங்காத தழும்புகளால் காணப்பட்டனர்.

20-ம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300- 500 மில்லியன் மக்கள் இறந்தனர்.

1967-ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய் தாக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர்.

எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796-ம் அண்டு கண்டுபிடித்தார்.

1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார்.

அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.

அதனால் 1979-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி இந்நோய் உலகத்தில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

┈┉┅━❀••🌺🌳🇮🇳🌳🌺••❀━┅┉┈

அனைத்துலைக ஊழல் எதிர்ப்பு நாள் 2003: 9-12*

📮 *இந்த நாளில் அன்று* 📮

*அனைத்துலைக ஊழல் எதிர்ப்பு நாள் 2003: 9-12*

டிசம்பர் மாதம் 9-ந்தேதி அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்தது.

இந்த நாள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.

*இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-*

* 1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.

* 1856 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.

* 1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

* 1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.

* 1922 - போலந்தின் முதலாவது அதிபராக ‘கப்ரியேல் நருட்டோவிச்’ தேர்வு செய்யப்பட்டார்.

* 1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான நான்ஜிங்கைத் தாக்கின.

* 1940 - இரண்டாம் உலகப்போர்: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பைன்ஸ் ஆகியன ஜெர்மனி மற்றும் ஜப்பான் மீது போரை அறிவித்தன.

* 1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.

* 1953 - ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது.

* 1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.

* 1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

* 1990 - லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.

* 1992 - வேல்ஸ் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.

* 1995 - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, ‘கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்’ என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது.

* 2003 - மாஸ்கோ நகர மத்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

* 2006 - மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.

┈┉┅━❀••🌺🌳🇮🇳🌳🌺••❀━┅┉┈

போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு கூட்டம்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களில் போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.
பந்தலூர் தாலுக்கா அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில்  நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. 
தரமான கல்வி மற்றும் அரசு தேர்வாணைய போட்டி தேர்வுகள் என்ற தலைப்பில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு பள்ளி ஆசிரியர் பிரதீப் தலைமை தாங்கினார். 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி. காளிமுத்து பேசும்போது மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மாணவர்கள் படிக்க வேண்டும்.  பொழுதுபோக்கு அம்சங்களின் அதிக ஈடுபாடு கொண்டால் படிப்பு வீனாகும். கல்வியே சிறந்த மூலதனமாகும்.  படித்தவர்கள் தான் இப்போது வெற்றி பெற முடிகின்றது.  பெண்களும் படிப்பினால்தான் பல துறைகளில் முன்னேறி உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.  தரமான கல்வி எதிர்காலத்தை வளமாக்கும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  அரசு சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தியே அரசு பணிகள் வழங்கப்படுகின்றது.  படித்த பட்டதாரிகள் அதிகம் இருப்பதால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான வேலை என்கிற நிலையில் சாதாரன படிப்புக்கான பணிக்கு கூடி முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  அரசு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடதிட்டங்களில் உள்ள கேள்விகளை தொகுத்து கேட்கப்படும் கேள்விகள் போட்டி தேர்வில் இடம்பெறுகிறது.  எனவே  மாணவர்கள் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.  அதுபோல தினசரி செய்திதாள்கள் வாசிப்பதன் மூலம் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம். அப்போது தான் போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும்.  என்றார்.  தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
அதுபோல உப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் போட்டி தேர்வு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.  பள்ளி தலைமை ஆசிரியர் கீவர்கீஸ் தலைமை தாங்கினார் மாணவர்களுக்கு போட்டி தேர்வின் அவசியம் மற்றும் போட்டி தேர்விற்கு தயாராகும் முறைகள் குறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார்கள்.  பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியிலும் பள்ளி மாணவர்சகளுக்கு போட்டி தேர்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

சுதந்திர உரிமை

சரத்(19-22)
இதில் ஆறு சுதந்திர உரிமைகள் அனைத்துக் குடிமகன்களுக்கும் வழங்க்கப்பட்டுள்ளது 1.சுதந்திரமாக பேசுவதற்க்கு,எழுதுவதற்க்கு 2.அமைதியான முறையில் கூடுவத்ற்க்கு. 3. சங்கங்கள்.,அமைப்புகள் ஏற்ப்படுத்துவதற்க்கு,4. சுத்ந்திரமாக இந்திய நாட்டின் பகுதிகளுக்கு செல்வத்ற்க்கு 5.தொழில் மற்றும் வாணிபம் செய்வதற்க்கு 6.இந்திய நாட்டிற்க்குள் விரும்பிய இடத்தில் தங்கி வசிப்பதற்க்கு. 
 1.சுதந்திரமாக பேசுவதற்க்கு,எழுதுவதற்க்கு 

இந்திய அரசியல் அமைப்பு சரத் 19(1) கூறப்பட்டிருக்கும் சுதந்திரத்தினை தகுந்த காரணம் இன்றி கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது அல்லது உத்தரவு பிறப்பிப்பது தவறு.இந்தியக் குடிமக்கள் யாவரும் அரசியல் அமைப்பிற்க்குற்ப்பட்டு. யாரையும் புண்படுத்தாமல், நாட்டின் அமைதிக்கும் நீதிமன்ற அமைதிக்கும் பங்கம் விளைவிக்காமல் நாட்டின் பாதுகாப்பிற்க்கும் சட்ட்ம் ஒழுங்க்கிற்கு குந்தகம் விளை விக்காமலும் தங்களது கருத்தினை சுத்ந்திரமாக பேசுவதற்க்கும் எழுத்துமூலம் தெரிவிப்பதற்க்கும். உரிமையளிக்கின்றது. 

 2.அமைதியான முறையில் கூடுவதற்க்கு 

இந்திய அரசியல் அமைப்பு சரத் 19(2) கூறப்பட்டிருக்கும் சுதந்திரத்தினை தகுந்த காரணம் இன்றி கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது அல்லது உத்தரவு பிறப்பிப்பது தவறு இந்தியக் குடிமக்கள் யாவரும் அரசியல் அமைப்பிற்க்குற்ப்பட்டு நாட்டின் அமைதிக்கும் நீதிமன்ற அமைதிக்கும் பங்கம் விளைவிக்காமல் நாட்டின் பாதுகாப்பிற்க்கும் சட்ட்ம் ஒழுங்க்கிற்கு குந்தகம் விளை விக்காமலும்,அயுதங்கள் தாங்க்காமல் கூட்டமாகக் கூடிக்கொள்ளாம். 
05/12/17, 00:05 - Murasoli S: சங்கங்கள்.,அமைப்புகள் ஏற்ப்படுத்துவதற்க்கு

 இந்திய அரசியல் அமைப்பு சரத் 19(3) கூறப்பட்டிருக்கும் சுதந்திரத்தினை தகுந்த காரணம் இன்றி கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது அல்லது உத்தரவு பிறப்பிப்பது தவறு.இந்தியக் குடிமக்கள் யாவரும் அரசியல் அமைப்பிற்க்குற்ப்பட்டு. யாரையும் புண்படுத்தாமல், நாட்டின் அமைதிக்கும் நீதிமன்ற அமைதிக்கும் பங்கம் விளைவிக்காமல் நாட்டின் பாதுகாப்பிற்க்கும் சட்ட்ம் ஒழுங்க்கிற்கு குந்தகம் விளை விக்காமலும் இந்தியாவின் ஆளுகைக்கு உட்ப்பட்ட எந்த வொரு நிலப்பகுதியிலும் சங்கங்கள்.,அமைப்புகள் ஏற்ப்படுத்துவதற்க்கு இந்திய அரசியல் அமிப்பு அனுமதி அளிக்கின்றது. 

 4. சுத்ந்திரமாக இந்திய நாட்டின் பகுதிகளுக்கு செல்வத்ற்க்கு&5.தொழில் மற்றும் வாணிபம் செய்வதற்க்கு &6.இந்திய நாட்டிற்க்குள் விரும்பிய இடத்தில் தங்கி வசிப்பதற்க்கு இந்திய அரசியல் அமைப்பு சரத் 19(3) கூறப்பட்டிருக்கும் சுதந்திரத்தினை தகுந்த காரணம் இன்றி கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது அல்லது உத்தரவு பிறப்பிப்பது தவறு.இந்தியக் குடிமக்கள் யாவரும் அரசியல் அமைப்பிற்க்குற்ப்பட்டு. யாரையும் புண்படுத்தாமல், நாட்டின் அமைதிக்கும் நீதிமன்ற அமைதிக்கும் பங்கம் விளைவிக்காமல் நாட்டின் பாதுகாப்பிற்க்கும் சட்ட்ம் ஒழுங்க்கிற்கு குந்தகம் விளை விக்காமலும் இந்தியாவின் ஆளுகைக்கு உட்ப்பட்ட எந்த வொரு நிலப்பகுதியிலும் சென்று வர,பணியாற்ற தொழில்க்கூடங்க்களினை நிறுவ, குடியேற அனுமதி அளிக்கப்படுகிறது 
05/12/17, 00:05 - Murasoli S: Art - 19  6 வகை உரிமைகள்


=  19(1)( a) சுதந்திரமாக பேசும் உரிமை.(கருத்துரிமை) 

(பத்திரிக்கை சுதந்திரத்தை மறைமுகமாக குறிக்கிறது)


=  19(1)( b)  ஆயுதமின்றி அமைதியாக கூடும் உரிமை. (166 ஏ)


=  19(1)( c)  சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளல். (166 ஏ)


= (2005 – சிறப்பு பொருளாதார சட்டத்தின் படி சங்கங்களை அமைக்கக் கூடாது)


=  19(1)( d)  இந்தியா முழுவதும் சென்றுவர உரிமை


=  19(1)( e)  எங்கும் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளும் உரிமை


=  19(1)( f)  நீக்கப்பட்டது


=  19(1)( g)  எந்த வணிகமும் செய்ய உரிமை.
05/12/17, 00:14 - ‪+91 78678 88108‬ joined using this group's invite link
05/12/17, 00:15 - ‪+91 95971 71423‬ joined using this group's invite link
05/12/17, 00:18 - Murasoli S: இந்திய அரசியலமைப்பு


அரசியலமைப்புக்கு முன் தோற்றம். (1773 -1858)

விக்டோரியா பிரகடனம் முதல். (1858 - 1935)

அரசியலமைப் உருவாக்கம். (1935 - 1950)

அரசியலமைப்பு (1950 முதல் தற்போது வரை)



அரசியலமைப்பு வரலாறு


ஒழுங்குமுறைச் சட்டம் - 1773 


·          பிரிட்டன் பாராளுமன்றத்தின் கீழ் கிழக்கிந்திய கம்பெனி இயங்கும்.


·          வங்காள கவர்னர் கல்கத்தா, பம்பாய் மற்றும் மெட்ராஸ் மாகணத்தின் கவர்னராகவும் நியமிக்கப்பட்டார்.


·          முதல் கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்.


·          1774 - கல்கத்தா உச்சநீதிமன்றம் உருவாக்கப்ட்டது.இதில் 1+4 உறுப்பினர்கள் இருந்தனர். (கவர்னர்+4 உறுப்பினர்கள்)


·          கவர்னர் ஜெனரலுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.
05/12/17, 00:18 - Murasoli S: பிட்ஸ் இந்தியா சட்டம் – 1784


·          கம்பெனியின் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்துதல்.


·          அதிகாரத்தை குறைத்தல்.


·          பிரிட்டீஸ் அரசின் அமைச்சர் 1 + 6 உறுப்பினர் கமிட்டியிடம் நிர்வாக பொறுப்புகள் அனைத்தும்  ஒப்படைக்கப்படும்.


·          மாகாணங்கள் மத்திய அரசின் ஒப்புதலுடன் செயல்பட்டன.


·          வாணிபம் தொடர்பாக ஒப்புதல் கம்பெனியின் போர்ட் ஆப் டிரெக்டர்ஸின் அதிகாரத்திற்குள் வந்தது.


·          லயட் பிட் இங்கிலாந்து பிரதமர். அவர் கொண்டு வந்த சட்டம்.


·          1786 – பிட் இந்திய திருத்த சட்டம்.


பட்டயச் சட்டம் – 1793


·          நிர்வாகக் குழு சம்பளம் இந்திய வருவாய்லிருந்து வழங்கப்பட்டது,


·          சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம்.


·          மேலும் 20 ஆண்டுகளுக்கு மாற்றி அமைத்தது.
05/12/17, 00:19 - Murasoli S: பட்டயச் சட்டம் – 1813


·          மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா கவுன்சில்களின் அதிகாரம் விரிவுபடுத்துதல்.


·          உள்ளுர் தன்னாட்சி அமைப்புகள் வரி வசூலிக்க உரிமை.


·          மேலும் 20 ஆண்டுகளுக்கு மாற்றி அமைத்தது.


·          ஒரு லட்சம் பேருக்கு ஆங்கில வழிக் கல்வி அறிவிப்பு ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கவில்லை. ஃ


·          ஃ 1830- கிறிஸ்துவம் சமயம் பரப்ப அனுமதிக்கப்பட்டனர்.


பட்டயச் சட்டம் – 1833



·          கிழக்கிந்திய கம்பெனியின் வணிக உரிமை ரத்தானது.


·          கிழக்கிந்திய கம்பெனி Government of India என்று அழைக்கப்பட்டது.


·          நிர்வாகக் குழு ‘இந்தியக்குழு‘ என்று அழைக்கப் பட்டது.


·          வங்காள கவர்னர்  ஜெனரல் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆனார்.  முதல் இந்திய கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு (சட்டப்படி)


·          சட்ட உறுப்பினர்கள் பதவி உருவாக்கப்பட்டது.


·          முதல் சட்ட உறுப்பினர் லார்ட் மெக்காலே.


·          கலெக்டர்களை தேர்ந்தேடுக்க போட்டி தேர்வுகள் முதல் முறையாக நடத்தப்பட்டது.
05/12/17, 00:19 - Murasoli S: பட்டயச் சட்டம் – 1853



·          நிர்வாக அதிகாரம் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது


·          ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் ஒரு வருடம் கண்டிப்பாக பயிற்சி பெற வேண்டும்.

.

·          அனைத்து கிழக்கிந்திய கம்பெனி ஆட்களும் போட்டி தேர்வு முறையில்

 தேர்ந்தேடுத்தனர்.



                 பொதுவானவை – முக்கியமானவை


·         17 மார்ச் 1835  - ஆங்கில பயிற்சி மற்றும் ஆட்சிமொழியாக          மாற்ற மெக்காலே பரிந்துரை.



·         2 ஆகஸ்ட் 1858 – இந்திய அரசு சட்டம்.

1.       கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது.

2.       வைசிராய் – அரச பிரதிநிதி

3.       அயலுறவு செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.
05/12/17, 00:19 - Murasoli S: சார்லஸ் வுட்ஸ் – முதல் அயலுறவு செயலாளர்.


1854 - வுட்ஸ் அறிக்கை இந்தியாவின்  அறிவுப்பெட்டகம்.


1857 – கல்கத்தா, பம்பாய், சென்னை பல்கலைக்கழகங்கள், லண்டன் பல்கலைகழகத்தைப் போன்று உருவாக்கப்பட்டது.


1858 – இந்தியா, பிரிட்டீஸ் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்தது.

 

 
05/12/17, 00:20 - Murasoli S: 1858 – இந்திய அரசாங்கச் சட்டம்

 

 

·          1858 – இந்தியா, பிரிட்டீஸ் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்தது.


·          இந்தியாவின் கவர்னர் வைஸ்ராய்ராகஅறிவிக்கப்பட்டார். முதல் வைஸ்ராய் கானிங் பிரபு. (கடைசி கவர்னர் ஜெனரல்)


·          மாநிலங்களின் செயலர் என்ற கேபினட் அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது. இவர் பிரிட்டிஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். (15 பேர் குழு – (8+7))


·          ஃ நவம்பர் 1 – 1858 விக்டோரியா அறிக்கை.


·          அலகாபாத் தர்பாரில் இந்த மகாசாசனம் அறிவிக்கப்பட்டது.


·          மாகாணங்களில் கல்வித்துறை ஏற்படுத்தப்பட்டது.



1861 – இந்திய கவுன்சில் சட்டம்


·          நிர்வாகக்குழு இனி மத்திய சட்ட மன்றமாக என்று அழைக்கப்படும்.


·          1862 – கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது.


·          வங்காளம், பம்பாய், மெட்ராஸ் - தனித் தனி சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
05/12/17, 00:20 - Murasoli S: 1892 – இந்திய கவுன்சில் சட்டம்


·         இந்தியர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கேள்வி கேட்க முடியாது.


·         நிர்வாகக் குழு எண்ணிக்கை அதிகரிப்பு. 10 – 16.


·         மிதவாதிகள், இந்திய தேசிய காங்கிரசுக்கு கிடைத்த முதல் வெற்றி.



1909 – மிண்டோ மார்லி சீர்திருத்தம்


·         மிண்டோ – அரசுப்பிரதிநிதி (வைஸ்ராய்)

·         மார்லி – அரசுச் செயலர்.


·         தேர்தல் அறிமுகம் (மறைகத்தேர்தல்)


·         ஓட்டு அளிக்கும் உரிமை கற்றவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது.


·         முஸ்லிக்ளுக்கு மட்டும் இடஒதுக்கீடு.


·         நிர்வாகக் குழுவில் இந்தியர் ஒருவர் இடம் பெற அனுமதிக்கப்பட்டனர். முதல் இந்தியர் எஸ்.பி. சின்ஹா. (சத்யேந்திர பால் சின்ஹா)


·         16-லிருந்து 60 ஆக நிர்வாகக்குழுவில் உறுப்பினர்கள் சேர்கப்பட்டனர்.


·         இடஒதுக்கிட்டின் தந்தை – மிண்டோ.
05/12/17, 00:20 - Murasoli S: 1919 – மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தம்


·         மாண்டேகு    –   செயலர் ( லிபரல் கட்சி )

·         செம்ஸ்போர்ட் -   வைசிராய்

·         1921 -ம் ஆண்டு சட்டம் அமலுக்கு வந்தது.


·         மாகணங்களில் இரட்டை ஆட்சிமுறை அறிமுகம்.


·         அனைத்து பிரிவினருக்கும் இடஒதுக்கீடு. ( சிக்கியர், பாரசீகர், கிறிஸ்துவம், ஆங்கிலோ இந்தியன்)


·         அனைத்து பிரிவினருக்கும் வாக்குரிமை. நேரடி தேர்தல் முறை அறிமுகம்.


·         இந்தியாவிற்கான உயர் ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டது.


·         1926 – ல் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது.



1919 – சைமன் கமிசன்


1919 – சட்டத்தினை ஆராய அமைக்கப்பட்டது. ராயல் குழு அல்லது சைமன் கமிஷன்.

7 உறுப்பினர்கள் ஒருவரும் இந்தியர் இல்லை.

1927 – மெட்ராஸ் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் புறகணிக்க முடிவு.

2 முறை இந்தியா வருகை (1928 பிப்-மார்ச்/ 1928 அக்-1929 ஏப்)

எதிர்ப்பு போராட்டத்தில் ‘பஞ்சாப் சிங்கம்‘ லாலா லஜபதிராய் இறப்பு

1930, மே 27 – அறிக்கை வெளியிட்டது.
05/12/17, 00:20 - Murasoli S: 1928 – நேரு அறிக்கை


·          7 அத்தியாயம், 2 அட்டவணை, 3 பின்னிணைப்பு, 24 பக்கம்.


·          7-வது அத்தியாயத்தில் ‘அரசியல் சட்டவரைவு‘ குறித்து விளக்கப்பட்டு இருந்தது.



·          முஸ்லிம் லீக் நிராகரித்தது, 14 அம்ச ஜின்னா அறிக்கையை சமர்பித்தது.



1935 – இந்திய அரசுச் சட்டம்



·         மாநிலங்களில் சுயயாட்சி அறிமுகம்.


·         மத்தியில் இரட்டை ஆட்சி.


·         மத்திய பட்டியல், மாநில பட்டியல் அறிகம்.


·         கூட்டாட்சி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. (01-04-1937)


·         மத்திய வங்கி ஏற்படுத்தப்பட்டது. – 1935


·         வகுப்புவாத பிரதிநிதிதுவம் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அளிக்க்ப்பட்டது.


·         1858ம் – சட்டப்படி நிறுவப்பட்ட இந்திய கவுன்சில் சட்டம் இது கலைத்தது.
05/12/17, 00:20 - Murasoli S: அரசியல் அமைப்பு உருவாக்கம்


·          அரசியலமைப்பு நிர்ணயச் சபை உருவாக்கம்.


·          மே 16, 1946. அமைச்சரவை து,,துக் குழு. சர் பெத்விக் லாரன்ஸ் தலைமையில் அமைக்கப்பட்டது.



·          உறுப்பினர்கள் – ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ், ஏ.வி.அலெக்ஸான்டர்.


·          6-12- 1946 அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.


·          9- 12. -1946 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம். தற்காலிகத் தலைவர் சச்சிதானந்த சின்ஹா.( இறந்து விட்டாடர் )


·          11 – 12 – 1946 டாக். ராஜேந்திர பிரசாத் நிரந்தர தலைவர்.


·          துணைத் தலைவர் எச்.சி. முகர்ஜி. ஆலோசகர் சர்.பி.என்.ராவ்


·          13 – 12 – 1946 குறிக்கோள், தீர்மானம் நேரு அவர்களால் நிறைவேற்றப்பட்டது.


·          22 – 01 – 1947, குறிக்கோள், தீர்மானம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது முகப்புரை எனப்பட்டது. அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டது.


·          29 – 08 – 1947 வரைவுக் குழு ஏற்படுத்தப்பட்டது. (1+6)


·          21 -02 – 1948  ‘இந்தியாவுக்கான வரைவு அரசியல் சட்டத்தை‘  நிர்ணய சபையிடம் வரைவுக்குழு சமர்பித்தது. இதற்கு 141 வேலை நாட்கள் ஆனது.


·          26 – 11  - 1949 அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


·          26 – 11 – 1950 நடைமுறைக்கு வந்தது.


·          ( 26 நவம்பர் தேசிய பால் தினம் )


·          மொத்த நாட்கள் 2 ஆணடுகள் 11 மாதங்கள் 18 நாட்கள்.


·          செலவு 64 லட்சம்.


·          பொதுமக்கள் பார்வைக்கு 8 மாதங்கள்வைக்கப்பட்டது.


·          அரசியல் நிர்ணய சபை மொத்த கூட்டம் 11. சுதந்திரத்திற்கு முன் 4 முறை, சுதந்திரத்திற்கு பின் 6 முறையும் கூடியது. 5- வது கூட்டத்தின் போது சுதந்திரம் பெற்றது.
05/12/17, 00:20 - Murasoli S: இந்தியதேசியக் கொடி


Ø       22– 7- 1947,   மு,,வர்ணக்கொடி இந்திய தேசிய காங்கிரசால்    அங்கிகரிக்கப்பட்டது.


Ø       1931 – ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிங்களி வெங்கைய்யா வடிவமைத்தார்.


Ø       டிசம்பர் 29, 1931, கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் முதல் முதலாக கொடி பறக்கவிடப்பட்டது. (மாநாட்டின் தலைவர் ‘சர்தார் வல்லபாய் பட்டேல்‘) அடிப்படை உரிமைகள் சட்டம் வேண்டுமென தீர்மானம் கொண்டு வரப்பட்டது.


Ø       வெள்ளை நிறம் காந்தி பரிந்துரை செய்தது.


Ø       3 வண்ணங்களைப் பற்றி டாக். ராதாகிருஷ்ணன் விலக்கம் அளித்தார்.



இந்தியதேசிய கீதம்



Ø       24 –1 -1950, ஜன கன மன தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


Ø       1911 – ஜன கன மன ... பாடல் தாகூர் அவர்கள் 5-ம் ஜார்ஜ் மன்னன் வரவேற்க பாடப்பட்ட பாடல் இது.


Ø       டிசம்பர் 27, 1911. கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதல் முதலாக பாடப்பட்டது. ( 2-வது நாளில் பாடப்பட்டது.) (தலைவர் – பிஷன் நாரயணன் தர்)


Ø       1912 – ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு ‘மார்னிங் சாங்’என்ற பெயரில் ‘தத்துவ போதனி‘ என்ற இதழில் வெளியானது.


Ø       1882 - ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல். பங்கிம் சந்திர சட்டர்ஜி. ஆனந்த் மடம் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டது.


Ø       1896 – கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக பாடப்பட்டது. இசையமைப்பாளர் தாகூர்.( தலைவர்- எம். ரகமத்துல்லா சயானி)


Ø       1918 – வந்தே மாதரம் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர்  அரவிந்த் கோஷ்
05/12/17, 00:21 - Murasoli S: Ø       மே 1949-ல் காமன்வெல்த் நாட்டில் இந்தியா இணைந்தது.

Ø       மும்பை விக்டோரியா சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் முதல் ஹரிட்டேஜ் ரயில் நிலையம்



Ø       24 – 1 -1950 – ராஜேந்திரபிரசாத் இந்திய குடியரத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Ø       24 – 1 – 1950, கடைசியாக அரசியல் நிர்ணயசபை கூடியது.    (11 கூட்டங்களில் இது கிடையாது)  


Ø       25 – 1 – 1950, தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.


Ø       ஜனவரி 25, தேசிய வாக்காளர் தினம், 2011 முதல்


Ø       ஜனவரி 24, தேசிய பெண் குழந்தைகள் தினம்.


Ø       26 -1 -1950, சாரநாத் நான்கு முக சிங்கம் தேசிய சின்னமாக அங்கீகரிப்பு. (சாரநாத் –உ.பி)


Ø       28 – 1 – 1950, கூட்டாட்சி நீதிமன்றம் உச்சநீதிமன்றமாக மாற்றப்பட்டது.


Ø       15 – 3 – 1950, திட்டக்குழு அமைக்கப்பட்டது. கே.சி. நிபோச்சி குழு பரிந்துரை (1946)


Ø       13 – 8 – 2014, திட்டக்குழு கலைக்கப்பட்டது. நிதி ஆயுக் உருவாக்கப்பட்டது.
05/12/17, 00:21 - Murasoli S: இந்திய அரசியலமைப்பு



Ø       அரசியலமைப்பு உருவாக்கிய போது 8 அட்டவணை, 22 பாகம், 395 சட்ட விதிகள் இருந்தன.

Ø       தற்போது 12 அட்டவணை, 25 பாகம், 496க்கு மேல் விதிகள்.



முகப்புரை



Ø        இறையாண்மை, சமதர்மம், மதச்சார்ப்பற்ற, மக்களாட்சி, குடியரசு, என்ற வார்த்தைகள் இடம் பெற்றுருக்கும்.


Ø       1976 – 42 சட்ட திருத்தம் மு‘லம் சமதர்மம், மதச்சார்பற்ற என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. (இந்திரா காந்தி)


Ø       3 வகை நீதி === சமு‘க நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி (ரஷ்ய புரட்சியிலிருந்து எடுக்கப்பட்டது – 1917 )


Ø       5 வகை சுதந்திரம் === எண்ணம், எழுத்து, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு (முகப்புரை)


Ø       சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், (பிரெஞ்ச் புரட்சி -1789 )


Ø       சமத்துவம் 2 வகை ==  தரத்திலும், வாய்ப்பிலும் சம உரிமை


Ø       1976 – 42 திருத்தம், முகப்புரை ஒருமுறை மட்டுமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


Ø       1976 – 42வது திருத்தம் மு/லம் 3 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. சமத்துவம், மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு.
05/12/17, 00:21 - Murasoli S: முகப்புரை சார்ந்த வழக்குகள்



Ø        1960 – பெருபாரி யூனியன் வழக்கு –முகப்புரை அங்கம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


Ø       1967 – கோலக்நாத் வழக்கு – முகப்புரை ஒரு அங்கம்.



Ø       1973 – கேசவானந்த பாரதி எதிர் கேரள வழக்கு, முப்புரையை திருத்திக் கொள்லாம் ஆனால், அடிப்படை கட்டமைப்பு மாறாமல் மாற்றிக் கொள்ளலாம்.


Ø       1970 – மினர்வா மில்ஸ் வழக்கு. முப்புரை ஒரு அங்கம். அடிப்படை உரிமை, அரசியல் நெறிகாட்டு வழிமுறை, சமதர்மத்தை எடுத்துக் கூறுகிறது.


Ø       1994 – எஸ்.ஆர்.பொம்மை எதிர் இந்தியன் வழக்கு. ஒரு அங்கம்.


Ø       1995 – எல்.ஐ.சி வழக்கு, முகப்புரை ஒரு அங்கம்.
05/12/17, 00:21 - Murasoli S: அட்டவணை – 12


அட்டவணை – 1


Ø     இந்தியாவின் எல்லைகள் மற்றும் தலைநகரம்


Ø     மாநிலத்தின் எல்லை மற்றும் தலைநகர்.


Ø     மத்திய ஆட்சிப் பகுதியின் எல்லைகள்.



அட்டவணை – 2



Ø     பதவிகள் மற்றும் சம்பளம்.

-          குடியரசுத் தலைவர்.

-         பிரதமர் மற்றும் அமைச்சர்.

-         நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜசபா உறுப்பினர்கள், லேக்சபா மற்றும் ராஜசபா தலைவர்கள்.

-         சி.ஏ.ஜி.

-         ஆளுநர்

-         முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.

-         எம்.எல்.ஏ

-         உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம்.

-         தேர்தல் ஆணையம்

-         யுபிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்.

-         ஸ்டேட் கமிஷன் தலைவர் மற்றும் உறுப்பினர்.


அட்டவணை - 3


Ø     பதவி பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம்.
05/12/17, 00:21 - Murasoli S: அட்டவணை – 4


Ø     மாநிலங்களவையில் மாநில பிரதிநிதித்தவம் பற்றியது.


அட்டவணை – 5


Ø     எஸ்சி, எஸ்டி பகுதிகளை பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது.

Ø     அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலம் தவிர


அட்டவணை – 6


Ø     எஸ்டி பகுதிகளை பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது.

Ø     அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் மட்டும்.



அட்டவணை – 7


Ø     மத்திய மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் அதிகார பகிர்வுப் பற்றியது.


     3 வகைப்பட்டியல்

        

மத்திய பட்டியல்

 100

மாநிலப் பட்டியல்

  61

பொதுப்பட்டியல்

  52


= மத்திய மற்றும் மாநில பட்டியல்கள் 1935 இந்திய அரசாங்க சட்டத்தின் படி ஏற்படுத்தப்பட்டது.


= பொதுப்பட்டியல் ஆஸ்திரேலியாவிலிருந்துபெறப்பட்டது.
05/12/17, 00:21 - Murasoli S: அட்டவணை – 8


அலுவலக மொழி

        = முதன் முதலில் 14 அலுவல் மொழிகள் இருந்தன.

        = தற்போது 22 அலுவல் மொழிகள் இருக்கின்றன.

        = நாகலாந்து ஆட்சி மொழி ஆங்கிலம்



15வது மொழி

சிந்தி

21 Amt 1967

16

கொங்கனி


71  -  1992

17

மணிப்பூரி

18

நேபாளி

19

போடோ



92  - 2003

20

டோக்ரி

21

சந்தாலி

22

மைதிலி



அட்டவணை – 9


Ø       1951 - முதலாவது திருத்தம் மூலம் இணைக்கப்பட்டது.


Ø       நீதிமன்ற தலையிட்டில் இருந்து பாதுகாக்க. (30 art)


Ø       சில சட்டங்களில் நீதிமன்ற தலையீட்டை தடுக்க.            (284 சட்டங்கள்)


Ø       (எ.கா) 1988 சிறப்பு ஆயுதப்படைச் சட்டம்.(அஸ்ஸாம், மணிப்பூர் கறுப்புச்சட்டம்- இர்னோ சர்மிளா- இரும்பு மங்கை)


Ø       தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டம் – 1994 (69%) (இது 1976 சட்டதிருத்தம் 1994ன் படி இணைக்கப்பட்டது.)


Ø       1961 – தமிழ்நாடு நில உச்சவரம்புச் சட்டம். 15 ஏக்கர் மட்டும்.


Ø       இந்தியா நில உச்சவரம்புச் சட்டம் – 30 ஏக்கர்.
05/12/17, 00:21 - Murasoli S: அட்டவணை – 10


Ø       1985 – 52, திருத்தம் மு/லம், கட்சி தாவல் தடைச்சட்டம்.


              1= எம்.எல்.ஏ, எம்.பி பதவி பறிக்கப்படும்.


              2= கொரடா உத்தரவுக்கு மதிப்பளிக்காத போது   (மசோதாவுக்கு மட்டும்)


              3= கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் பதவி பறிக்கப்படமாட்டாது.


              4= 3ல்1 பங்கு உறுப்பினர்கள் சேர்ந்து போனால் பதவி பறிக்கப்படாது.



அட்டவணை – 11


பஞ்சாயத்து ராஜ் அல்லது உள்ளாச்சியமைப்பு


Ø       1993 – 73ல் பஞ்சாயத்து ராஜ் நிறைவேற்றப்பட்டது.

Ø       24 – 4- 1993 தேசிய பஞ்சாயத்து தினம்

Ø       நவம்பர் 1 தமிழ்நாடு பஞ்சாயத்து தினம்.
05/12/17, 00:22 - Murasoli S: 3 அடுக்கு பஞ்சாயத்து ராஜ்


Ø       1957 - பல்வேந்தரா மேத்தா கமிட்டி அமைக்கப்பட்டது.

Ø       1959 – அறிக்கை சமர்பித்தது.

Ø       அக்டோபர் 2, 1959. ராஜஸ்தானில் அறிமுகம்.

Ø       2வது இடம் ஆந்திரா


கிராம பஞ்சாயத்து

500 நபர் (ஒரு வார்டு உறுப்பினர்)

ஊராட்சி ஒன்றியம்

5,000 நபர் (ஒன்றிய கவுன்சிலர் உறுப்பினர்)

மாவட்ட ஊராட்சி

50,000 (மாவட்ட கவுன்சிலர்)

அட்டவணை – 12


நகராட்சியமைப்பு - 3 அடுக்கு


பேருராட்சி 10,000

நகராட்சி   1,00,000

மாநகராட்சி   10,00,000
        

1688- சென்னை மாநகராட்சி ஆசியாவில் 2வது பழமையான மாநகராட்சி, இந்தியாவின் முதல் மாநகராட்சி.

தமிழ்நாட்டின் 2வது மாநகராட்சி – மதுரை.
பாகம் மொத்தம் – 25

பாகம் – 1

இந்தியாவின் அமைவிடம் மற்றும் நிர்வாகம் பற்றியது. (Art 1 -4 )

Ø       Art -1   பாரதம் அதன் அமைவிடம் மற்றும் தலைநகரம்.

Ø       Art -2   புதிய மாநிலம் உருவாக்குதல், இணைத்துக் கொள்ளுதல்.

          (எ.கா) சிக்கிம் இணைத்தல் (1975)

          சட்டத்திருத்தம் மூலம் மட்டுமே இணைக்க முடியும்

Art -3      மாநிலங்களில் மாற்றங்களை ஏற்படுத்துதல்.

          எல்லையை குறைத்தல், அதிகரித்தல், மாற்றியமைத்தல்.நாடாளுமன்றத்தில் சாதரண சட்டத்தைன் மூலம்        நிறைவேற்ற முடியும். (எ.கா) தெலுங்கானா

Art -4    இந்தியா மற்ற நாடுகளுக்கு நிலத்தை கொடுக்கும் போது    நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.
பாகம் – 2

குடியுரிமை. (Art 5 -11 )

Ø       Art - 5  பிறப்பின் மூலம் குடியுரிமை

Ø       Art - 6 பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்கள்            
19 -7-1948 அன்று அல்லது அதற்கு முன்.


Ø       Art - 7 இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்றவர்கள் மற்றும்         பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்கள்.           

1-3-1947 அன்று அல்லது அதற்குபின் சென்றவர்கள் 19-7-1948க்குள் வந்தவர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்.

Ø       Art - 8  பதிவுசெய்வது மூலம் குடியுரிமை

Ø       Art - 9  குடியுரிமை துறத்தல் குறித்தது.

Ø       Art -10  Art 5,6,7,8ன் படி குடியுரிமை தொடர்வர்.

Ø       Art-11 குடியுரிமை சார்ந்த சட்டங்களை நாடாளுமன்றம்   வகுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

பெயர் பதிவின் வரம்பு காலம்

பெயர் பதிவின் வரம்பு காலம்

01-01-2000-த்திற்குப் பிறகு நிகழ்ந்த பிறப்புக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகள்.01-01-2000-த்திற்கு முன்பு நிகழ்ந்த பிறப்புக்கு திருத்தியமைக்கப்பட்ட விதிகள் செயலாக்கத்திற்கு வந்த நாளிலிருந்து (01-01-2000) 15-ஆண்டுகள்.நிர்ணயிக்கப்பட்ட 15 ஆண்டுகள் காலக்கெடு முடிவுற்ற பின்னர் குழந்தையின் பெயரை பதிவு செய்ய விதிகளில் இடமில்லை.

ஓராண்டுக்குப் பின் மற்றும் 15-ஆண்டுகளுக்குள் பெயர் பதிவை மேற்கொண்டால் தாமதக் கட்டணம் ரூ.5 வசூலித்து, பதிவு மேற்கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலருக்கு தகவல் அனுப்ப வேண்டும்.ஒரு முறை பெயர் பதிவு மேற்கொள்ளப்பட்ட பின்பு பெயர் பதிவுகளை முழுவதும் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றலாகாது. ஆனால் எழுத்துப் பிழைகளை சரி செய்ய (Spelling Corrections) அதிகாரம் பெற்ற அலுவலர் அனுமதிக்கலாம்.

சாதிப்பெயர், குடும்ப பெயர் அல்லது வேறு அடையாளங்களைப் (Any other identification) பெயருடன் சேர்க்கவோ, நீக்கவோ முடியும் ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெயரில் எந்த மாற்றமும் செய்யாமல் பெற்றோர் அல்லது காப்பாளரின் உறுதிமொழி அடிப்படையில் செய்யலாம்.பெயர் பதிவு மேற்கொள்ளக் கோருபவரின் உண்மைத்தன்மையை தொடக்கத்திலும் அல்லது பதிவு செய்யும்போதும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். 

பதிவாளர் மேற்கண்டபடி நிகழ்வின் உண்மைத் தன்மையை தன் மனநிறைவுப்படி உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள் (பிரிவு-15, விதி-11)-இன் படி வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பதிவாளர் பின்பற்றி, அதிகாரம் பெற்ற அலுவலரின் முன் அனுமதி பெற்று சரிசெய்தல் மற்றும் நீக்கம் செய்யலாம்.அதிகாரம் பெற்ற அலுவலரின் முன் அனுமதி பெற்று, மூலப்பதிவில் மாற்றம் ஏதும் செய்யாமல், பக்க ஓரத்தில் தகுந்த பதிவைச் சரிசெய்யலாம் அல்லது நீக்கம் செய்யலாம். பக்க ஓரப்பகுதியில் கையொப்பமிட்டு சரிசெய்த (அ) நீக்கம் செய்த தேதியை அதில் சேர்க்க வேண்டும்.
பிறப்பு - இறப்பு - பதிவேட்டில் திருத்தம் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை (Before Correction):

நம்பத்தகுந்த இரு நபரிடம் சான்றுகளைக் கண்டிப்பாக பெற வேண்டும்.பிரிவு – 21-இன் படி திருத்தங்களை உறுதி செய்வதற்குத் தேவையான வேறு ஏதாவது சான்று ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தலாம்.

திருத்தங்கள் செய்வதற்காக வரும் நபர் உண்மையில் நிகழ்வுக்கு சம்பந்தப்பட்டவரா என்பதனையும், தரப்படும் விவரங்களை முற்றிலுமாக விசாரிக்க வேண்டும்.திருத்த நேர்வின் விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலரின் எழுத்து மூலமான அனுமதி விதிகள் 11(1), 11(2) மற்றும் 11(3)-இன் படி பெற வேண்டும்.
பிறப்பு - இறப்பு திருத்தங்கள் மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டியவைகள் (Effecting Corrections)

பதியப்பட்ட பதிவினை அழித்துவிடுவதோ அல்லது அழித்துவிட்டு திருத்தங்கள் மேற்கொள்வதோ கூடாது, ஆனால் முதலாம் பதிவுகளை மையினால் சுழித்துவிட்டு (Rounded by ink) சரியான விவரங்களை பதிவின் ஓரமாக எழுத வேண்டும்.செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பதிவாளர் தன் கையொப்பம் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட தேதியிட்ட மேற்குறிப்பு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பதிவேட்டின் முதல் பக்கத்தில் ஆண்டு எண் விவரங்கள் மற்றும் செய்யப்பட்ட திருத்தங்களின் விவரங்களை வரிசைப்படி காண்பிக்கப்பட வேண்டும் அவ்வப்போது செயலாட்சி அதிகாரம் (Executive authority) கொண்ட அலுவலரின் கையொப்பத்தை பெற வேண்டும்.சான்றுகள் வழங்கப்பட்ட பின் திருத்தங்கள் ஏதேனும் மேற்கொண்டால் அதனின் விவரம் பதிவேட்டிலும் அதே போன்று சான்றிலும் திருத்தங்களுக்குப் பின் பதியப்பட வேண்டும்.

திருத்தங்கள் தேவையான ஆவணச் சான்றுகள் முழுமையான விசாரணையின் அடிப்படையில் செயல்படுத்தல் வேண்டும். மேற்கொண்டு அதே இனத்தில் திருத்தங்களை அனுமதித்தல் ஆகாது. ஏனெனில் மேற்கொண்ட விசாரணை மற்றும் பரிசீலிக்கப்பட்ட சான்றாவணங்களின் செல்லத்தக்க (Validity) நிலைக்கு எதிராகக் கொண்டுசெல்ல இயலும்.
அயல்நாட்டிலுள்ள இந்திய குடிமக்களின் பிறப்புகள் மற்றும் இறப்புகளின் பதிவு (பிரிவு 20)

இந்திய தலைமைப் பதிவாளர் விதிக்கு உட்பட்டு அயல்நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களில் இந்தியாவுக்கு வெளியே வாழ்கின்ற இந்தியக் குடிமக்களைப் பதிவு செய்ய வேண்டும்.குடிமைச்சட்டம் 1955-இன் படி பிறப்பு – இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என பிரிவு 20 கூறுகிறது.

வெளிநாட்டில் “பிறந்து” பிறப்பு பதியப்படாமல் இந்தியாவில் நிலையாக தங்கியிருக்கும் நோக்குடன் வந்து இந்தியாவில் தங்கிய நாளிருந்து 60 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இந்தியாவில் வந்து தங்கிய 60 நாள்களுக்கு மேல் பிறப்பினை பதிவு செய்யும் போது பிரிவு-13-இன் ஷரத்தின் படி பின்பற்ற வேண்டும்.
விபத்தினால் நிகழும் இறப்பின் பதிவுகள்

இறப்புகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை, கொலை, விபத்துகள் அல்லது வன்முறை போன்றவற்றால் மருத்துவமனைகளில் சேர்த்த பின்பு ஏற்படும் இறப்புகள்.பொது இடங்களில், சிறைச்சாலைகளில் ஏற்படும் இறப்புகள். தற்கொலை, கொலை, விபத்துகள் அல்லது வன்முறை போன்றவை மூலம் ஏற்படும் இறப்பை மருத்துவமனை பொறுப்பாளர்கள் பிரிவு 8(1) (b)-இன் படி பதிவாளருக்கு பதிவு செய்ய தகவல் அளிக்க வேண்டும்.

விசாரணை, அல்லது பிரேத விசாரணை மேற்கொள்ளும் நிலையில் விசாரணை அதிகாரி அல்லது காவல்துறை பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

பொது இடங்களில், சிறைச்சாலையில் இருக்கும் போது ஏற்படும் இறப்புகள் பற்றி விசாரணை செய்யும் அலுவலர் குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவாளருக்கு இறப்பு அறிக்கை அனுப்ப வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு / இறப்பு காலமுறை அறிக்கை அனுப்புதல் : (விதி-14-இன் படி).


கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு மாதமும் பதிவுகளை முடித்த பின் புள்ளி விவரங்களடங்கிய புள்ளி விவரத் தகவல்களை(Statistical parts of the reporting terms) மாதாந்திர சுருக்க அறிக்கைகள் (படிவம் 11, 12 மற்றும் 13) ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு முடிந்த அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்குள் அனுப்புதல் வேண்டும்.வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பிறப்பு / இறப்பு அறிக்கை சுருக்கத்தை பிரதிமாதம் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட தலைமையிடத்தில் உள்ள சுகாதாரப் பணி இணை இயக்குநருக்கு காலமுறை அறிக்கைகளை (Report) அனுப்ப வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு – 

இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல் (விதி-17):

கிராம நிர்வாக அலுவலர் பாதுகாக்கும் இப்பதிவேடுகளை (மூன்று) பிரிவாக பாதுகாப்பர்.

i) பிறப்புப் பதிவேடுகள்

ii) இறப்புப் பதிவேடுகள்

iii) உயிரற்ற பிறப்புப் பதிவேடுகள்

இம்மூன்றும் நிரந்தரப் பதிவேடுகள் ஆகும்.

இவைகளை அழித்துவிடக் கூடாது. ஏனெனில் விதி 13-இன் படி நீதிமன்றங்கள் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட இதர அலுவலரின் அறிவுறுத்தல் மூலம் காலதாமதம் பிறப்பு / இறப்பு பதிவுகளை மேற்கொள்வதற்காக பதிவேடுகளை பாதுகாக்க வேண்டும்.வட்டாட்சியர் அளவில் 2 - ஆண்டுகள் பாதுகாத்து காப்புறு சார்பதிவாளரிடம் (Sub Registrar) ஒப்படைக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலரின் முக்கியக் கடமைகள்:

தனது அலுவலகத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் என்ற ”விளம்பரப் பலகை” வைத்து நேரம் மற்றும் VAO வின் பெயர் குறிப்பிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.பிறப்பு / இறப்பு பதிவுகள் மேற்கொள்ள போதிய படிவம் வைத்திருக்க வேண்டும்.பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.பிறப்பு / இறப்பு உரிய காலத்துக்குள் பதிவை செய்ய வலியுறுத்த வேண்டும்.

பிறப்பு / இறப்பை நாட்காட்டி மாதத்தில் முன், பின்னாக மாறாமல் நாள் வரிசைப்படி பதிவை மேற்கொள்ள வேண்டும்.பிறப்பு / இறப்பை பதிய தவறியவர்களுக்கு குறிப்பாணை வழங்கி இப்பதிவை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்தால் மருத்துவ அலுவலரிடம் 

படிவம் 4 (இறப்புக்கான காரணம்) சான்று பெற்றுப் பதிய வேண்டும்.பிரதிமாதம் 5-ஆம் தேதிக்குள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு / இறப்பு பதிவினை அனுப்ப வேண்டும்.பிறப்பு / இறப்பு மேற்கொண்டவுடன் பிரிவு – 12 - இன் படி பதிவு நகல் தகவல் அளிக்கும் நபருக்கு வழங்க வேண்டும்.

பிறப்பு / இறப்பு பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவை, கீழ்க்கண்டவாறு அமைய வேண்டும்.பிறப்பு பதிவு – குழந்தையின் முதல் உரிமையாகும்.

வீட்டில் நிகழும் பிறப்பு / இறப்பை 21 நாள்களுக்குள் VAO விடம் பதிவு செய்ய வேண்டும்.பிறப்பினை பதிந்தவுடன் குழந்தையின் பெயரையும் பதிய வேண்டும்.குழந்தையின் பெயரை பதிவு செய்வது பெற்றோரின் கடமையாகும்.ஒருமுறை பதிவுசெய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது.பிறப்பு / இறப்பு பதிவு முடித்தவுடன் இலவசச் சான்று பெற வேண்டும்.

பிறப்பு/இறப்பு பதிவு செய்வதின் நன்மைகள்
பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்திற்கான அத்தாட்சி இதுவே ஆகும்.குடியுரிமைக்கான அத்தாட்சியும் ஆகும்.

வாரிசுரிமைக்கான அத்தாட்சியும் ஆகும்.
கடவுச்சீட்டு விண்ணப்பிக்க ஆதாரம் இதுவேயாகும்.

வயதை நிரூபிக்க இறுதிச்சான்று இதுவே ஆகும்.

ஓட்டுநர் உரிமம் பெற மற்றும் இதர நன்மைகளுக்காகவும் இச்சான்று முக்கியத் தேவையாகும்

சட்ட உதவிபெற அணுகும் சமயம்

உதவிபெற அணுகும் சமயம் (When to approach for aid)
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுக்கவோ, எதிர்த்து வழக்காடவோ நேரிடும் சூழல்களில், மத்தியதர வருமான சமுதாயத்தை வழக்காடுபவர் அணுகலாம்; அச்சூழல்கள் பின்வருவனவற்றையும் தன்னுள் கொண்டிருக்கும்;
a)    மேல் முறையீடு/சிறப்பு விடுமுறை மனுக்கள், உரிமையியல் அல்லது குற்றவியல், உயர் நீதிமன்ற ஆணைக்கு எதிரான வழக்கு,
b)    நீதிப்பேராணை மனு (Writ Petition)/ஆட்கொணர்வு மனு (Habeas Corpus)
c)    உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்கு ஒரு மாநிலத்தில் தேங்கி இருக்குமானால் அதனை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் மனு மற்றும்
d)    உச்சநீதிமன்ற சட்டச்செயல்பாடுகள் குறித்த சட்ட ஆலோசனை.
 செயல்படும் முறை (How it works)
•    உச்சநீதிமன்ற நடுத்தர வருமானத்தினரின் சமுதாயம், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரையும் உறுப்பினராகக் கொண்ட வழக்கறிஞர் குழுவினை (panel of Advocates) கொண்டுள்ளது. இக்குழுவினை உருவாக்கும்போது ஒரு வழக்கறிஞரை, ஆனால் இரண்டுக்கு மேற்படாத வழக்கு நடைபெறும் நீதிமன்ற மாநிலத்தின் வட்டாரமொழி தெரிந்த வழக்கறிஞரை உறுப்பினராகக் கொள்ள வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படுகிறது.
•    வழக்கறிஞர்கள் குழு, ஒரு வழக்கில் பங்குபெறும்போது இத்திட்டத்தின், சட்டங்களுக்கு உட்படுவதாக எழுத்து மூலம் உறுதியளிக்கிறது.
•    ஆணையத்திலுள்ள (Committee) 3 வழக்கறிஞர்கள், விருப்ப அடிப்படையில் குழுவிற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர், வழக்குரைப்பவர் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் அல்லது வழக்காடும் ஆலோசகர் (arguing counsel) அல்லது உயர் ஆலோசகர் (Senior Counsel)  இவர்களில் யாராவது மூவரைச் சுட்டிக்காட்டலாம். விண்ணப்பதாரரின் தேர்வினை குழு மதிக்க முயலும்.
•    பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர், வழக்காடும் ஆலோசகர் மற்றும் உயர் ஆலோசகர் இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் வழக்கினை அளிக்க குழுவினருக்கு உரிமையுண்டு. 

விண்ணப்பதாரரின் மனுவினை பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர், வழக்காடும் ஆலோசகர், உயர் ஆலோசகர் இவர்களின் யாருக்கு வேண்டுமானாலும் தரும் உரிமை உச்சநீதிமன்ற (நடுத்தர வருமானக்குழு) சட்ட உதவி சமுதாயத்திடம் (Supre
சட்ட உதவிக்காக அணுக வேண்டிய இடம். (Where to approach for legal aid)
•    விருப்பமுள்ள வழக்குரைப்போர் உச்சநீதிமன்ற நடுத்தர வருமான குழுவினரின் சட்ட உதவி மையத்தின் செயலரை அணுகும் முன் மையத்தால் அளிக்கப்படும் ஒரு படிவத்தினை நிரப்பி அதற்குரிய ஆவணங்களோடு குழுவின் செயலரை அணுக வேண்டும். 
(விலாசம்:- Supreme Court Middle Income Group Legal Aid Society, 109- Lawyers Chambers, Post Office Wing, Supreme Court Compound, New Delhi-110001)
•    மனுதாரரின் மனுவை வாங்கியப் பின் சட்ட உதவிக்குழுவானது (legal aid society) அம்மனுவினை பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரிடம் கொடுத்து, அவ்வழக்கு மேற்கொண்டு ஆவன செய்வதற்கு ஏதுவானதா என்பதை ஆய்ந்தறிந்த பின்னரே, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
•    மனுதாரர் இத்திட்டத்தின் பயன்களை அனுபவிக்கலாம் என்று கற்றறிந்த, பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் என்று கூறினால், மட்டுமே இத்திட்டத்தின் பயன்களை மனுதாரர் அனுபவிக்க முடியும். 

அவ்வாறு மனுதாரரின் விண்ணப்பத்தில்/ வழக்குத் தாள்களில் பதிவு செய்த வழக்கறிஞர் மேலொப்பமிட்ட பின், (endorsement) உச்சநீதிமன்ற நடுத்தர வருமான சட்ட உதவிக்குழு, (Supreme Court Middle Income Group Legal Aid Society) மனுதாரரின் மனுவினை மனுதாரரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு சேவை வரியாக ரூ.350/- மட்டுமே வசூலிக்கும்.
சட்ட உதவிக்கான கட்டணம் (Fee for legal aid)
இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வழக்கிற்கேற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணத்தை செயலர் சுட்டிக்காட்ட, அத்தொகையை மனுதாரர் செலுத்த வேண்டும்.
அக்கட்டணத்தை செலுத்திய பின்னரே செயலர், வழக்கினை, நடுத்தர வருமானக்குழுவின் சட்ட உதவித்திட்டத்தின் (MIG Legal Aid Scheme) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் / வாதாடும் ஆலோசகர் / குழுவின் மூத்த ஆலோசகரிடம் வழக்கின் தன்மை குறித்து கேட்பார்.
•    ஏற்படக்கூடிய செலவுகளின் அடிப்படையில் செயலரால் கூறப்படும் தொகையை, விண்ணப்பதாரர் ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்த வேண்டும்.
•    விண்ணப்பங்களை அச்சிடுதல் மற்றும் இதர அலுவலகச் செலவுகளை இத்திட்டத்தின் ஆரம்பத்தொகை ஏற்றுக்கொள்ளும்.

பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்/வழக்கறிஞரின் கட்டணம் குறித்த செய்திகள்.(Schedule of fee for advocate on record /advocates)
வழக்குத் தொடுப்பவர்களிடமிருந்துத் தேவைப்படும் ஆவணங்கள் (Documents required from the litigants)
மனுதாரர்கள் தங்கள் மனுவை நடுத்தர வருமான குழுவினுக்கு (MIG Society) சமர்ப்பிக்கும்போது முழுமையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். 

எடுத்துக்காட்டாக ஒருவர் அல்லது ஒரு பெண்மனி உயர்நீதி மன்றத்தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடுக்க விரும்பினால், அவர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகல், அவர் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த மனுவின் நகல், கீழ் கோர்ட்டில் தரப்பட்ட தீர்ப்பின்/ஆணையின் நகல் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் தனது மனுவுடன் சமர்ப்பிக்கவேண்டும். 

மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலமில்லாத வேறு ஒரு மொழியில் இருக்குமானால் அவைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
•    செயலரால் கணிக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்ட கட்டணமும் இதர செலவுகளுக்கான பணமும், 
•    இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு (Supreme Court Middle Income Group Legal Aid Society)

இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு மதத்திற்கும் மணவிலக்குச் சட்டங்கள் தனியே உண்டு. அதேபோன்று சாதி மற்றும் மதத்தை மறுத்து திருமணம் செய்தவர்களுக்கு சிறப்பு திருமணச் சட்டம் (Special Marriage Act ), 1954 உண்டு.

இந்து என்று அழைக்கப்படும் மக்கள் அனைவரும் இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act) 1955 மூலம் மணவிலக்குப் பெற முடியும். சீக்கிய மதம்,  ஜெயினமதம், புத்த மதம் ஆகிய மதங்களும், இந்து மதத்தின் கிளை மதங்களாகவே இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற காரணத்தால் அவர்களுக்கும் இந்து திருமணச்சட்டம் பொருந்தும்.

இசுலாமியர்களைப் பொருத்தவரையில் இசுலாமிய திருமண ரத்துச் சட்டம் (Dissolution of Muslim Marriages Act, 1939)மூலம் மணவிலக்குப் பெறலாம். அதே போன்று கிறித்துவர்கள் இந்திய மணவிலக்குச் சட்டம் (Indian Divorce Act, 1869) மூலம் மணவிலக்குப் பெறலாம். பார்சி மதத்தினர் பார்சி திருமண மற்றும் மணவிலக்குச் சட்டம் (The Parsi Marriage and Divorce Act, 1936) மூலம் மணவிலக்குப் பெறலாம்.

அதேபோன்று மணவிலக்குப் பெற விரும்பும் சாதி மற்றும் மத மறுப்பு திருமணம் செய்தவர்கள் சிறப்புச் சட்டம் (Special Marriage Act, 1954) மூலம் மணவிலக்குப் பெறலாம்.
இந்து திருமணச் சட்டத்தில் மணவிலக்கு பெறும் வழிமுறைகள்

இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act, 1955) மூலம் மணவிலக்குப்பெற கீழ்கண்டவற்றில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நிலையினை நிரூபிக்க வேண்டும்.எதிர் மனுதாரர் கூடாஒழுக்கம் (Adultery) கொண்டவராக இருத்தல், கைவிடுதல் (Desertion), கொடுமைப்படுத்துதல் (Cruelty), இனப்பெருக்கத்திறனற்ற நிலை அல்லது ஆண்மையின்மை (Impotency) கொண்டவராக இருத்தல், நாள்பட்ட நோய் கொண்டு இருத்தல் (Chronic Disease).

கொடுமைப்படுத்துதல் (Cruelty)

கொடுமைப்படுத்துதல் (Cruelty)  என்று வரும்போது,  தொடர்ந்து இரண்டு வருடங்கள் மனுதாரரைப் பிரிந்து வாழ்ந்தால் அது கொடுமைப்படுத்துதல் என்ற விளக்கத்திற்குள் வரும். அதேபோல் இந்து மதத்தைத் துறந்து வேறு மதம் மாறியிருந்தாலும் அதுவும் கொடுமைப்படுத்துதல் என்ற விளக்கத்திற்குள் வரும்.

இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act )1955 மூலம் இருதரப்பும் மனமுவந்து மணவிலக்குப் பெறுவதும் சாத்தியமே. இதன் மூலம் ஆறு மாதங்களில் மணவிலக்கிற்கான விசாரணை முடிவுற்று பணமும்-நேரமும் வீணாக்கப்படுவதைத் தடுக்க முடியும். இந்து திருமணச் சட்டத்தின் படி 13-B மூலம் மணவிலக்கு பெறலாம். 

இதன்படி விருப்பப்பட்டு கணவனும்,  மனைவியும் மணவிலக்குப் பெற குறைந்தபட்சம் ஒரு ஆண்டு தனியாகப் பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். இருவரும் மனமுவந்து பிரியும் நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் மனு போட வேண்டும். எழுத்துத் தரவுகளை உள்ளடக்கிய உறுதிமொழியும் உடன் இணைக்கப்பட வேண்டும் (affidavit). 

முதல் மனு (First Motion Petition) போட்டு ஆறு மாதங்கள் கழித்து இரண்டாவது மனு (Second Motion Petition) போட வேண்டும் என்பது விதிமுறை.

நீதிபதி இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டப்பின்னர், இருவரும் சேர்ந்து வாழ வழியில்லை என்று உறுதி செய்த பின்னர் மணவிலக்கு உறுதி செய்யப்படும். இதன் கீழ் குழந்தை யாருடன் இருப்பது?, மனைவிக்கு வாழ்வாதார நிதி, திருமணத்தின்போது தரப்பட்ட சீதனத்தைத் திருப்பிக் கொடுத்தல், வழக்குச் செலவு  என்று அனைத்தும் எழுதி மணவிலக்கினைப் பெற்றுக் கொள்ளலாம்.
சுயமரியாதை திருமணம்

தமிழ்நாட்டில் சடங்குகள், புரோகிதர், தாலி, அக்னி, சப்தபதி இல்லாத சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என்று அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது 1967 - இல் சட்ட வரைவு கொண்டுவந்து, பின் 1968 இல் அதனை சட்டமாக்கினார்.

கிறித்துவ மதத்தைப் பொருத்தவரை அவர்களின் வேதம், கடவுளால் இணைக்கப்பட்டவர்களை மனிதர்கள் பிரிக்கக் கூடாது என்று கூறி வந்தமையால், பல்வேறு சட்டச்  சிக்கல்கள் அவர்கள் மணவிலக்கு பெறுவதில் இருந்து வந்தது. உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் வழங்கும் மணவிலக்கை உறுதி செய்தால் மட்டுமே மணவிலக்குச் செல்லும் என்ற நிலை இருந்தது. 

ஆனால் இந்திய மணவிலக்குச் சட்டம் (திருத்தம்) 2001 இன் படி மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் மணவிலக்கை உயர்நீதிமன்றம் உறுதி செய்யத்தேவை இல்லை என்று திருத்தியது
இசுலாமிய மணவிலக்கு முறை

இசுலாமிய  திருமணம் என்பது  ஒப்பந்தம். நிக்காஹ் எனப்படுவது இரண்டு பேரை இணைக்கின்றது.கணவன் நீதிமன்றம் செல்லாமலேயே மனைவியை மணவிலக்கு செய்யலாம். அதற்கு எந்தக்காரணமும் தேவையில்லை. தலாக் என்ற சொல்லை கணவன் மூன்று முறை கூறி விட்டால் (முத்தலாக்கு) அந்தத் திருமணம் ரத்து செய்யப்படும். தலாக் என்றால் திருமண ஒப்பந்தத்திலிருந்து மனைவி விடுவிக்கப்படுகிறாள் என்று பொருள்.

தலாக் சொல்லப்படும் முறைகள்

அஹ்சான் ஒரு முறை தலாக் சொல்வது. இந்தக் காலத்தில் மாற்றிக் கொள்ளலாம்.ஹஸ்ஸான் 3 முறை கால இடைவெளி கொடுத்து சொல்வது. 3வது முறை சொல்வது இறுதியானது.தலாக் – ஏ- பித்தத் – ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்வது.தலாக்- ஏ-தஃப் வீத் – கணவன் தன் சார்பாக தலாக் சொல்ல வேறு ஒருவருக்கு அதிகாரமளிப்பது.முபாரா – கணவன் – மனைவி இருவரும் ஒப்புக் கொண்டு மணவிலக்கு செய்தல்.குலா – மனைவி மணவிலக்கு  கோருதல். குலா முறைப்படி மணவிலக்கு பெற்றால் மனைவி மெஹர் தொகையை இழக்க நேரிடும்.

அறிமுகம்

பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 39-A வலியுறுத்துகின்றது. 

ஒரு அரசின் கடமை, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கிட உறுதி செய்ய வேண்டும் என்பதே என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 14 மற்றும் 22(1) வலியுறுத்துகின்றது.

குற்றவியல் நடைமுறை 304 இன் படி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் இருந்தே, அவருக்கு பண வசதி இல்லாத நிலையில் சட்ட உதவி வழங்கிட வேண்டும் என்றும், பின் எப்போதெல்லாம் அந்த குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நீட்டிக்கப்படுகின்றதோ, சட்ட உதவி தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

1980-இல் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் திரு. P.N. பகவதி அவர்கள் தலைமையில் தேசிய அளவில் சட்ட உதவிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்  குழு “CILAS “(Committee for Implementing Legal Aid Schemes) என்னும் பெயரால் வழங்கப்பெற்றது. 

1987 இல் Legal Services Authorities Act என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள சட்ட உதவி மையங்கள் ஒரே வடிவங்களில் செயல்பட வழிவகுத்தது. இந்தச் சட்டம் இறுதியாக 1995 நவம்பர் ஒரு சில திருத்தங்களுக்குப் பின் செயல்பாட்டிற்கு வந்தது.

free legal advice 1972 ஆம் ஆண்டு நீதியரசர் கிருஷ்ணா ஐயர் தலைமையில் சட்ட உதவி யாருக்கெல்லாம் வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.
சட்ட உதவிகள் பெறுபவர்கள்

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்மலைவாழ் மற்றும் பழங்குடி மக்கள்விவசாய மக்கள்எல்லையில் நெடுங்காலம் பணியாற்றும் இராணுவ சிப்பாய்கள்சமூகத்தில் பின்தங்கிய மகளிர் மற்றும் குழந்தைகள்தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள்

இவர்கள் அனைவருக்கும் சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகள் மூலம் சட்ட உதவி வறியவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று உறுதி செய்தது.

வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் வறுமையில், தனிக்காவலில் இருக்கும் நிலையில் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை அரசு அவருக்கு வழங்க வேண்டும். 

இலவச சட்ட உதவி ஒருவருக்கு மறுக்கப்படுவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21 க்கு எதிரானது என்று கூறியது.

சட்டத்தின் ஆட்சி என்பது தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பு. ஒருவருக்கு சட்ட உதவி வழங்கப்படவில்லை என்றால், ஒரு வழக்கின் விசாரணையே சீர்குலைக்கப்படுகின்றது என்று கூறியது.

National Legal Services Authority (NALSA) – என்ற ஆணையம் தேசிய அளவில் நிறுவப்பட்டு பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்காக சட்ட உதவி வழங்கிடவும், விரைவாக நீதி வழங்கும் லோக் அதாலத் (Lok  Adalat) ஏற்படுத்தவும் செயல்படுகின்றது.
சட்ட உதவி வேண்டி தரப்படும் மனு, மனு தந்த நபருக்கு போதிய பண வசதி இருக்கின்றது என்று தெரியவரும் பட்சத்தில் நிராகரிக்கப்படலாம். அப்படி நிராகரிக்கப்பட்ட மனுவின் மீது மனுதாரர் மேல்முறையீடும் செய்யலாம்.

வழக்குகள்

அவதூறு வழக்கு,பழிவாங்கும் வழக்கு,நீதிமன்ற அவமதிப்பு,உறுதி மொழியில் பொய் கூறுதல்,தேர்தல் தொடர்பான வழக்குகள்,அபராதம் 50 ரூபாய் மேல் இல்லாத வழக்கு,பொருளியல் சார்ந்த குற்றங்கள்

போன்ற குற்றங்களுக்கு இலவச சட்ட உதவி பொருந்தாது. சட்ட உதவி என்பது பிச்சை அல்ல அது உரிமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அதன் இலக்கு.
கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.பிறப்பு / இறப்புக்கானப் பதிவுகள் – மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர் அதற்கான சட்டம் மற்றும் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறப்பு

ஒரு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு பதிவுதான்

பிறப்பு / இறப்புக்கான சட்டம்

1969-ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் சட்டம் (மத்தியச் சட்டம் 18/1969)தமிழ்நாட்டில் 2000-ஆம் ஆண்டில் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது,தமிழ்நாட்டில் திருத்தியமைக்கப்பட்ட புதிய செயல்திட்டம் (Revamped system). தமிழ்நாட்டில் 01-01-2000 முதல் செயல்பட்டு வருகிறது.
: 2000-ஆம் ஆண்டில் பிறப்பு / இறப்பு பற்றி புதிய திட்டத்தின் நோக்கங்கள்

பதிவேடுகள், அறிக்கை செய்யும் படிவங்கள் மற்றும் மாதாந்திர அறிக்கை படிவங்களை ஒன்று படுத்துதல்.பிறப்பு, இறப்பு பதிவேடுகளை எளிதில் பராமரித்தல்.அடிப்படை பதிவாளர்களின் (Primary Registrars) வேலைப்பளுவினைக் குறைத்தல்.மாதாந்திர அறிக்கைகளை எளிதில் தொகுப்பதற்கும் மற்றும் அனுப்புவதற்கும் 2000-ஆம் ஆண்டு பிறப்பு, இறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

பிறப்பு இறப்பு பதிவு செய்ய அதிகாரம் பெற்ற துறைகள்

1969-ஆம் ஆண்டில் பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் செயல்படுத்தும் துறை, பொதுச் சுகாதாரத்துறையாக இருந்தது.பொதுச் சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர், தமிழகத்தின் பிறப்பு, இறப்பு, பதி முதன்மைப் பதிவாளர் ஆவார்.தற்போது பிறப்பு, இறப்பு பதியும் துறைகள்கிராமப் பஞ்சாயத்து – வருவாய்த் துறை (கிராம நிர்வாக அலுவலர்).சிறப்பு ஊராட்சி – சிறப்பு ஊராட்சித் துறை.நகராட்சி / மாநகராட்சி – நகராட்சி நிர்வாகத் துறை / மாநகராட்சி ஆணையர்

பிறப்பு / இறப்பு பதிவு செய்யும் இதர துறைகள் : (Supporting Role)

மருத்துவப் பணிகள்மருத்துவக் கல்விபதிவுத் துறைகாவல்துறைநீதித்துறை

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...