தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

நுகர்வோர் தின வாழ்த்துக்கள்

எந்தவொரு பொருள் வாங்கினாலும்
ரசீதையும் கேட்டு வாங்குங்கள் !

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி
டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
(Consumer Protection Act) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது.

சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும்,

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும்,

சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும்,

மேலும் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும்.

 அப்போதுதான் ஏதாவது பிரச்சனை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி.
CCHEP Nilgiris
http://cchepnlg.blogspot.in

நுகர்வோர் தினம்


இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் உலகில், 

நமது உரிமைகளையும், நாட்டில் நடைபெறும் ஒழுங்கீனங்களையும் பற்றி எடுத்துரைக்க நமக்கு நேரம் இல்லை. 

நாம் நம், அறியாமை யினால் ஏமாறுவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். 

ஆனால் நாம் தெரிந்தே ஏமாற்றப்படுவது பொறுக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது.

நுகர்வோராகிய நாம், மிகுந்த விழிப்புடனும்,
எச்சரிக்கையுடனும், மற்றவரால் ஏமாற்றப்படாமலும் இருத்தல் அவசியம். 

இது சம்பந்தமாக நுகர்வோர் உரிமை பற்றி விழிப்புணர்வு,

செயல்வடிவம் பெறும் வண்ணம் அந்தந்த மாவட்டத்தில் கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகள் செயல்படுகின்றன. 

இந்த அமைப்புகள் மக்களை
விழிப்புடன் வைத்திருக்க பல
வழிகளில் மக்களுக்கு சேவை செய்து வருகின்றன.

இந்திய குடியரசு ஆட்சியில் சாதாரண குடிமகன் முதல், ஜனாதிபதி வரை அனைவருமே நுகர்வோர் தான். 

நிறத்தாலோ, இனத்தாலோ நுகர்வோரை பிரிக்க முடியாது. 
வாழ்க்கை கலாசாரத்திற்கு நுகர்வு அவசியமாகிறது. நுகர்வின்றி வாழ்வில்லை.

நுகர்வோர் என்பவர் ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ விலை கொடுத்து வாங்கி பயன்
படுத்துபவர். 

நுகர்வோர், தன் சொந்த
உபயோகத்திற்காக பொருளையோ அல்லது சேவையையோ பெறுபவர். 

ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ தங்கள் தேவைக்கு விலை கொடுத்து தங்களுக்கு தேவையானவற்றை பெற்று அனுபவித்தும், தேவையான சேவையை பெற்று கொள்வதும் 'நுகர்வு' எனப்படும்.

ஒருவர் தனக்கு வேண்டிய பொருளை விலை கொடுத்து வாங்குவதும், 
சேவையை குறுகிய கால கட்டத்தில் அனுபவிப்பதும், 
அதற்கான முழு கட்டணத்தை செலுத்தியோ அல்லது தவணை முறையில் செலுத்துவதாக ஒப்புக் கொண்டாலோ, 

அவரே நுகர்வோர் என நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 வரையறுக்கிறது. 

நுகர்வு செயல்பாடு என்பது நுகர்வோர், விற்பனையாளர் மற்றும் பொருளை சார்ந்திருக்கிறது.

வித்திட்ட ஜான் கென்னடி

அமெரிக்காவில் ரால்ப்நாடர் என்பவர்
முதல் முதலில் நுகர்வோர் இயக்கத்திற்கு வித்திட்டார்.

 அவரே நுகர்வோர் இயக்கத்தின் தந்தை. அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி, அமெரிக்க மக்கள் பயன்பெறும் பொருட்டு, 

1962ம் ஆண்டு
மார்ச் 15 ல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை
நிறைவேற்றினார். 

இதுவே உலக நுகர்வோர்
தினமாக அனுசரிக்கப்படுகிறது. 
அச்சட்டம் எட்டு
உரிமைகளை நுகர்வோருக்கு பெற்றுத் தருகிறது.

இந்தியாவில் டிசம்பர் 24 
தேசிய நுகர்வோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது

* பாதுகாப்பு உரிமை

* அறிந்து கொள்ளும் உரிமை

* தேர்ந்தெடுக்கும் உரிமை

* குறைதீர்க்கும் உரிமை

* நுகர்வோர் கல்வி உரிமை

* இழப்பீடு பெறும் உரிமை

* சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை

*     அடிப்படை வசதி பெறும் உரிமை

இந்திய நாட்டில் இதுகுறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு, 1986 டிசம்பர் 24ல் சட்டமாக இயற்றப்பட்டது. 

நுகர்வோர் தக்க நிவாரணம் பெற இச்சட்டம் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

நுகர்வோருக்கு சட்டப்பாதுகாப்பு
இந்தியருக்கு இச்சட்டம் மூலம் பெறப்பட்ட
உரிமைகள்

* நுகர்வோர் உரிமை பாதுகாப்பு

* நுகர்வோர் அறிந்து கொள்ளும் உரிமை

* குறைகள் கேட்பதற்கான உரிமை

* தேர்ந்தெடுக்கும் உரிமை

* குறைகளை முறையிடுவதற்கான உரிமை

* நுகர்வோர் கல்வி உரிமை

* நுகர்வோர் சட்டம், நுகர்வோருக்கு தன் இழப்பிற்கு நிவாரணம் மற்றும் இழப்பு தொகை பெற பெரிதும் உதவுகிறது.

* உணவு பொருளில் கலப்படம் செய்தல், வங்கி மற்றும் தபால் சேவை குறைபாடு, கள்ளச்சந்தை, 

திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படும் டிக்கெட் மற்றும் 

மின் விசிறி, குளிர்சாதன இயக்கத்தில் உள்ள குறைபாடு,

அரசு பஸ்களில் பயணத்தில் ஏற்படும்
குறைபாடுகள், 

டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பயணிகள் மேல் உள்ள அலட்சிய போக்கு, 

டவுன் பஸ், விரைவு பஸ், சொகுசு பஸ் என அதிக கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்து நிர்வாக குறைபாடு.

மற்றும் மின் வாரிய சேவை குறைபாடு, பழுந்தடைந்த மீட்டர், அதிகளவு காட்டும் மீட்டர், மின் இணைப்பு தாமதம், 

முன்னறிவிப்பு இன்றி மின் தடை, பழுதான மின் கம்பியால் மரணம், காப்பீட்டு கழகத்தில் உரிய நேரத்தில் இழப்பீடு பெற முடியாமை, ரயில் பயணச் சேவை குறைபாடு,

மருத்துவமனைகளில் நோயாளிக்கு ஏற்படும் சேவை
குறைபாடு, அதிக கட்டணம் வசூலித்தல்,
 நகர் மற்றும் கிராம நிர்வாகங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர்
குறைபாடு, 
பொது விநியோகத்திட்ட குறைபாடு
போன்ற குறைபாடுகளை களைந்து இழப்பீடு பெற

நாம் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களை அணுகலாம்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை அரசு இயற்றினாலும், நுகர்வோர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 சட்ட விரோத செயல்களை அனுமதிக்க இடமளிக்கக்கூடாது. 
பொருள் வாங்கியதில் இழப்பு, சேவை குறைபாடு போன்றவற்றை தக்க அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

மக்களின் விழிப்புணர்வு மிகமிக அவசியம். அரசாங்கம், மாணவர்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த, 
நுகர்வோர் மன்றங்களை பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு நீதிமன்றங்கள்

1. மாவட்ட குறைதீர் மன்றம்: 
இதன் தலைவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி. 
வணிகம் மற்றும் கல்வியியலில் தேர்ந்த ஒரு உறுப்பினரும்,
 சமூக சேவையில் தேர்ந்த ஒரு பெண் உறுப்பினரும் குறை கேட்பர். 

இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சம் வரை பெற, இந்நீதிமன்றத்தை அணுகலாம்.

2. மாநில குறைதீர் மன்றம்: 
இதன் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி. 
ஒரு உறுப்பினர் பொருளாதாரம் போன்ற துறையில் தேர்ந்தவராகவும், 
சமூக சேவையில் தேர்ந்த ஒரு பெண் உறுப்பினரும் குறைகேட்பர்.

இழப்பீட்டு தொகை ரூ.ஒரு கோடி வரை பெற, இந்
நீதிமன்றத்தை அணுகலாம்.

3. தேசிய குறைதீர் மன்றம்: 
இதன் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி. 
நான்கு உறுப்பினர்கள், அதில் ஒரு பெண் உறுப்பினரும் குறைகேட்பர். 
இழப்பீடு தொகை ரூ.ஒரு கோடிக்கு மேல் பெற, இந்நீதிமன்றத்தை அணுகலாம்.

4. நுகர்வோர் நீதிமன்றங்களில் தீர்ப்புகளை மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் வழங்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது. 

2002ம் ஆண்டு வரை நீதிமன்ற கட்டணம் ஏதுமின்றி வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

2002 ம் ஆண்டு திருத்த சட்டத்தில் கட்டணம் ரூ.100 முதல் ரூ.500 வரை இழப்பீடு தொகைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

நீதிமன்ற ஆணைகளால் திருப்தி அடையாத நுகர்வோர் 30 நாட்களுக்குள் அடுத்த நீதிமன்றத்தை அணுகலாம்.

 நுகர்வோர் விழிப்புடன் இருந்து தாம் ஏமாற்றப்படுவதை தடுத்து கொள்ள வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வலியுறுத்துகிறது.
பந்தலூர். நவ., 18:

பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர் நிலை பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.  பள்ளி தலைமை ஆசிரியர் செலின் தலைமை தாங்கினார். 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, செயலாளர் சிவசுப்பிரமணியம், ரெப்கோ வாங்கி கிளை மேலாளர் பாலாஜி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர். 

 ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.  

 பள்ளி மாணவிகள் நாம் பயன்படுத்தி தூக்கி எரியும் பயன்படாத பொருட்கள்.  பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நூல் காகிதங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு அலங்கார பொருட்கள், மறு பயன்பாட்டிற்கு உதவும் வகையிலான பொருட்களை உருவாக்கினார்கள்.  

இவை கண்காட்சியில் வைக்க பட்டிருந்தது.  இதில் காலி குடிநீர் பாட்டில்களில் பேனா ஸ்டாண்ட், இரவு விளக்கு,  கைப்பைகள், புகைப்பட பிரேம்கள், போன்றவை அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.  பல பொருட்கள் குப்பை  என தூக்கி ஏரியும் பொருட்களை அழகிய பொருட்களாக உருவாக்கியது வரவேற்க கூடியது என தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் ரோஸ்மேரி, மார்ட்டின உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்து இருந்தனர். 

விவசாயத்தில் தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்தலாம்?

விவசாயத்தில் தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்தலாம்?
சொட்டு நீர்ப்பாசனம் !!

தண்ணீருக்காக 'மூன்றாம் உலகப்போர் மூளும்" என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். எனவே, தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இனியாவது தண்ணீரை பணத்தைப்போல் எண்ணி எண்ணிச் செலவு செய்ய வேண்டும். நீரை சிக்கனமாக செலவழிக்க விவசாயத்திற்கு சொட்டு நீர்ப்பாசனம் கைக்கொடுக்கிறது.

பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போனால் பயிர்கள் வாடிவிடும். அதேபோல் தண்ணீர் அதிகமாக கொடுத்தால் வேர்ப்பகுதிகள் அழுகி நோய்கள் ஏற்படும். அதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது தான். பயிருக்கு தேவையான தண்ணீரை கணக்கிட்டு அதைக் குழாய்கள் வழியாக வேருக்கு அருகிலேயே அளிக்கும்பொழுது பயிர் வளர்ச்சி சீராக இருக்கும்.

ஒரு மணி நேரத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீர் அளவை மையமாக கொண்டு வௌ;வேறு அளவுகளில் சொட்டுவான்கள் தயாரிக்கப்படுகின்றன.

சொட்டுவான் வகைகள் :

1. ஆன்லைன் டிரிப்பர்

2. இன்லைன் டிரிப்பர்

3. ஏரோ ஜெட்

ஆன்லைன் டிரிப்பர் :

சொட்டுநீர்க் குழாயில் வெளிப்புறமாக சொட்டுவான்களைப் பொருத்தினால் அது ஆன்லைன் டிரிப்பர் ஆகும். இம்முறையில் குழாயின் வெளிப்புறத்தில் சொட்டுவான்கள் பொருத்தி இருப்பதால் அடிக்கடி குழாய்களை சுருட்டி வைக்க முடியாது.

எனவே தென்னை, மா, வாழை போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கு இது ஏற்றது. குறிப்பாக நான்கு அடிக்கு மேல் இடைவெளியுள்ள பயிர்களுக்கு இதை அமைக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு 2, 4 மற்றும் 8 லிட்டர் என்ற அளவில் தண்ணீர் சொட்டும் வகையில் சொட்டுவான்கள் கிடைக்கும்.

இன்லைன் டிரிப்பர் :

சொட்டுநீர்க் குழாயின் உட்பகுதியிலேயே சொட்டுவான்களைப் பொருத்தினால் அது இன்லைன் டிரிப்பர் ஆகும். இது சுலபமாக சுருட்டி வைத்துக்கொள்ள ஏற்றது. காய்கறி போன்ற குறுகிய காலப் பயிர்களுக்கு இம்முறை ஏற்றது. குறிப்பாக 30, 40, 50, 60 மற்றும் 90 செ.மீ இடைவெளியுள்ள பயிர்களுக்கு ஏற்றது. இந்த வகையில் ஒரு மணி நேரத்திற்கு 2 மற்றும் 4 லிட்டர் அளவில் தண்ணீர் சொட்டும் வகையில் சொட்டுவான்கள் கிடைக்கும்.

ஏரோ ஜெட் : 

பசுமைக்குடில் விவசாயத்திற்கு இம்முறை பயன்படுத்தப்படுகிறது. பசுமைக்குடிலில் பாலிபேக் எனப்படும் பைகளில் தான் விதைகளை ஊன்றி விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாதிரி பைகளில் ஏரோ ஜெட் முறை பாசனம் செய்ய ஏற்றது.

பாய்ச்சப்படும் தண்ணீரின் அளவிற்கு ஏற்ற வகையில் சொட்டுவான்களை குச்சி போன்ற அமைப்பில் பொருத்தி பையின் உட்பகுதியில் குத்தி வைக்க வேண்டும். இதுதான் ஏரோ ஜெட் முறையில் பாசனம் செய்வதாகும். இதன் மூலமாக பையில் உள்ள பயிருக்கு பாசனம் நடக்கும்.

மைக்ரோ டியூப் :

நிலத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் முன் மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, மின் மோட்டார்களின் அழுத்தம் ஆகியவற்றை தெரிந்துக்கொள்வது அவசியமாகும். அதிக உப்பு தண்ணீர் உள்ள நிலங்களுக்கு டிரிப்பர் பயன்படுத்துவது பொருந்தாது. அதுபோன்ற பகுதிகளில் மைக்ரோ டியூப் எனப்படும் சிறிய குழாய்களின் மூலம் பாசனம் செய்யலாம்.

நீரை சேமிப்போம் !! விவசாயத்தை காப்போம் !!






சர்வதேச தேயிலைத் தினம் டிசம்பர் 15

இன்று உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் உள்ளது. 

தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன.

எனவே தேயிலை உற்பத்தியின் தேவை மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்லவேண்டிய தேவை உள்ளது. 

எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயி-லையை உற்பத்தி செய்து வந்தன. ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

சர்வதேச தேயிலை தொழிலாளர் மாநாடு ஒன்றின் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் உலக சமூக மாமன்ற கூடுதல் நிகழ்வு நடந்தது. 

இந்த நிகழ்வில் ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை  நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் திகதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு புதுதில்லியில் 2005 டிசம்பர் 15 அன்று நடந்தேறியது.

தேநீர் அருந்துவோம்
இந்தியாவின் தேசிய பானத்தை கொண்டாடுவோம்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
நீலகிரி.

பந்தலூர் பாட்டவயல் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

பந்தலூரில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையை அகலப்படுத்தி தர    ேவண்டும் என  வலியுறுத்தப்பட்டுள்ளது. 
பந்தலூர் முனீஸ்வரன் கோவில் முதல் முக்கட்டி வரையிலான வழித்தடத்தில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் இரு மாநிலங்களை இணைக்கும் சாலையாக பந்தலூர் முக்கட்டி பாட்டவயல் சாலை உள்ளது. 
இந்த சாலை தற்போது இதர மாவட்ட புறவழி சாலை பிரிவில் (O.D.R) பிரிவில் உள்ளது,  இந்த சாலை தற்போது சுமார் 3.90 மீட்டர் அகலத்தில் உள்ளது.  இதனை மாவட்ட முக்கிய வழிசாலையாக (M.D.R) மாற்றி சாலையை சுமார் 6 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்த வேண்டும் .  
இந்த சாலையில் அரசு பேருந்துகள் மற்றும் பல்வேறு தனியார் வாகணங்கள் பலவும் தினசரி இயக்கப்பட்டு வருகின்றது. 
பந்தலூர் முனீஸ்வரன் கோவில் முதல் முக்கட்டி வரை மேங்கோரெஞ், தொண்டியாளம், உப்பட்டி, நெல்லியாளம், பொன்னானி, குந்தலாடி, முக்கட்டி  மற்றும் சார்புடைய கிராமங்களில் வசிப்போர் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளுக்கும்,  பாட்டவயல் மற்றும் கேரளா மாநிலம் பத்தேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு அலுவலகங்கள் சார்புடைய தேவைகளுக்கும், மருத்துவம் சார்புடைய தேவைகளுக்கும், இதர பணிகள் காரணமாகவும் வந்து செல்கின்றனர்.  பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் தினசரி நூற்றுகணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இதனால் அரசு பேருந்துகள் உட்பட தனியார் வாகணங்களின் பயன்பாடு அதிகரித்து அதிக போக்குவரத்து உள்ள சாலையாக இந்த சாலை உள்ளது. 
இந்த சாலை பல ஆண்டுகளாக அகலப்படுத்தப்படாமல் உள்ளதால் சாலை குறுகியதாகவே உள்ளது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகணங்களுக்கு வழிவிடமுடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது.
சாலையில் வாகணங்கள் சென்று வருவதற்கும் மிகவும் சிக்கலை அளிக்க கூடியதாக உள்ளது.  அவசர காலங்களில் இந்த சாலையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகணங்கள் நோயாளிகளை ஏற்றி வேகமாக செல்ல இயலாத நிலையும் உள்ளது.
இந்த சாலையை  மாவட்ட முக்கிய சாலையாக தரம் உயர்த்தி சாலையை அகலப்படுத்தி தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


S. Sivasubramaniam
General Secretary 

அயோடின் மாதிரி சேகரிப்பினால். அயோடின் பயன்பாடு அதிகரிப்பு



நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் அளவு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  அதுபோல மாணவர்கள், பெண்கள்  என பல்வேறு தரப்பினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.

இந்த காலாண்டில் பந்தலூர், கூடலூர் வட்டாரத்தில் உப்புகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருவாரூர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆய்வகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.  பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், கனேசன், தனிஸ்லாஸ், நாகராஜ், செல்வராஜா உள்ளிட்ட பலர் 75 மாதிரிகள் சேகரித்தனர்.  

கல் உப்புகள் கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்ததில் அயோடின் அளவு குறைவாக இருந்ததையும், பாதுகாப்பாக வைக்கவும் வலியுறுத்தப்பட்டது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின்  தொடர் கண்காணிப்பினால் 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2016ல் 55%சதவீதமாக இருந்த அயோடின் அளவு 2018 ல் தற்போது  அயோடின் உப்பு பயன்பாட்டில் 70% சதவீதமாக உயர்வு பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

தொடர்ந்து அனைத்து நியாய விலை கடைகளிலும் அயோடின் கலந்த அரசின் உப்பு விற்பனை செய்யவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தொடர்ந்து அனைத்து வட்டங்களிலும் அயோடின் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளபட உள்ளது. 

மக்களவையில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்.

வெள்ளிக்கிழமை 21 டிசம்பர் 2018

மக்களவையில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்.

பொருள்கள், சேவைகள் தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து, மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அந்த மசோதா அனுப்பப்படுகிறது.

நாட்டில் நுகர்வோரின் நலனை பாதுகாப்பதற்கு கடந்த 1986ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த சட்டத்தில், அனைத்துப் பொருள்கள், சேவைகள் தொடர்பான நுகர்வோரின் புகார்களை விசாரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில், இலவச மற்றும் தனிப்பட்ட சேவைகள் தொடர்பான புகார்கள் குறித்து இந்த சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

அதேபோல், இணைய வர்த்தகம், மோசடி வியாபாரங்கள், உற்பத்திப் பொருள் மீதான பொறுப்புடைமை, ஒழுங்காற்று அமைப்பு குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம் உள்ளிட்ட மாற்று வழி மூலம் தீர்வு காண்பது உள்ளிட்டவை குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

இதனால் மேற்கண்ட பிரச்னைகளுக்கு நுகர்வோரால் தீர்வு காண முடியாத நிலை இருந்து வந்தது.

இதனிடையே, மாநிலங்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற விவாதத்தில், 

அந்த அவையின் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியபோது, உடல் எடை குறைப்பு மருந்து தொடர்பான விளம்பரத்தை நம்பி பணம் செலுத்தியது குறித்தும், 

பிறகு மருந்து அனுப்பப்படாமல் தாம் ஏமாற்றப்பட்டது குறித்தும் தெரியப்படுத்தினார். 

இதையடுத்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பேசுகையில், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான புதிய மசோதாவை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும் என்று உறுதியளித்தார்.

இதன்படி, மக்களவையில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

இதையடுத்து, மக்களவையில் அந்த மசோதாவை ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டதால், அதன்மீது விவாதம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், மக்களவையில் அந்த மசோதா மீது வியாழக்கிழமை விவாதம் நடத்தப்பட்டது. 

விவாதத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ததாகத சத்பதி பேசுகையில், இந்த மசோதாவில் அதிகாரிகளுக்கு ஏராளமான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன; 

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகப் பல்வேறு அம்சங்கள் மசோதாவில் இருக்கின்றன என்றார்.

தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர். 

பின்னர் விவாதத்துக்கு பதிலளித்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பேசினார். 

அப்போது அவர் கூறுகையில், 1986ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கடந்த 30 ஆண்டுகளாக திருத்தப்படாமல் உள்ளது; 

ஆதலால் நுகர்வோரின் உரிமைகளை வலுப்படுத்தும் வகையில், அதில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இந்த மசோதாவில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக எந்த விதிகளும் இல்லை. அதற்குப் பதிலாக, இந்த மசோதாவில் இருக்கும் விதிகள், கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தவே செய்யும் என்றார்.

மசோதா மீது விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போது, காவிரி விவகாரத்தை எழுப்பி தமிழக எம்.பி.க்களும், ரஃபேல் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்களும் கோஷமிட்டபடி இருந்தனர். 

இதனால் மக்களவையில் அமளி நிலவியது. இந்த அமளிக்கு மத்தியில், நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அந்த மசோதா அனுப்பப்படுகிறது.

2018ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு மசோதா குறித்து,
 நாடாளுமன்றத்துக்கு வெளியே ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

இணையவழி வியாபாரம், பொய் விளம்பரங்கள், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு மசோதாவில் தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது; 

அடுத்த 10 முதல் 20 ஆண்டுகள் வரையிலான நுகர்வோரின் தேவைகளை கருத்தில் கொண்டு, மசோதா உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

2018ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவில், நுகர்வோரின் உரிமைகளை வலுப்படுத்தவும், பொருள்கள் மற்றும் சேவைகளில் இருக்கும் குறைபாடுகள் குறித்து அவர்கள் அளிக்கும் புகார்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பான நடைமுறையை ஏற்படுத்தும் வகையிலும் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை அளித்ததும், அது சட்டமாகும். 

நேரடி விற்பனை, இ - காமர்ஸ், டெலி மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு வியாபார முறைகளை  வரைமுறைப்படுத்தவும், போலி விளம்பரங்களை தடுக்கும் வகையில் இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. 

போலி விளம்பரங்கள் மூலம் நுகர்வோரை ஏமாற்ற முயற்சிக்கும் நிறுவனங்களுக்கு, ரூ. 50 லட்சம் வரை அபராதம் முதல் ஐந்து ஆண்டு சிறை தண்டனை வரை விதிக்கும் வகையில், இந்த மசோதாவில் பல முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்படுகிறது.

புதிய நுகர்வோர் சட்டம் சொல்வது என்ன?

புதிய நுகர்வோர் சட்டம் சொல்வது என்ன?


குளிர்கால கூட்டத் தொடரின் இறுதிநாளில் மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். 
அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் இந்த மசோதா விரைவில் சட்டமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய சட்டம் 1986-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கு மாற்றாக இருக்கும்.
இதில் மூன்று புதிய பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. 
முதலாவது பொருட்களில் ஏதேனும் சேதாரம் இருந்து அதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அது உற்பத்தியாளரின் பொறுப்பாகும். 
அடுத்ததாக, நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுவது, 
மூன்றாவதாக சமரச மையமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். வீடு வாங்குவது, கட்டுவது, தொலைத் தொடர்பு சேவைகள், ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்கள், டெலி ஷாப்பிங், நேரடி விற்பனை மற்றும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் வரும்.
முந்தைய சட்டத்தில் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் இணைக்கப்படவில்லை. 
மேலும் ரசீது வாங்காமல் பொருட்கள் வழங்குவது, வாங்கிய பொருட்களை திரும்ப பெறாமல் இருப்பது, சேவைகளை முன்கூட்டியே ரத்து செய்ய முடியாமல் போவது, முன்கூட்டியே கடனை செலுத்துவதை அனுமதிக்காதது, 
கூடுதலாக டெபாசிட் தொகையை கேட்பது, அளவுக்கு அதிகமான அபராதம் கேட்பது போன்றவையும் புதிய சட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.

உற்பத்தியாளரின் பொறுப்பு

புதிய சட்டத்தில் உற்பத்தியாளர் அல்லது சேவையை வழங்குபவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சேவையினால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் 
புதிய சட்டத்தின் கீழ் நுகர்வோர்கள் இழப்பீடு பெற முடியும். வடிவமைப்பு குறைபாடு, பொருள் தயாரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாதது, 
பொருளை எப்படி பயன்படுத்துவது ஆகியவை குறிப்பிடப்படாதது உள்ளிட்ட சில காரணங்களால் நுகர்வோர் இழப்பீடு பெற முடியும். 
பழைய விதிகளின் கீழ் இழப்பீடு பெறுவதற்கு அனைத்து காரணங்களையும் நிரூபித்தாக வேண்டும். ஆனால் புதிய மசோதாவில் ஏதேனும் ஒரு காரணத்தை நிரூபிக்கும் பட்சத்தில் இழப்பீடு கோர முடியும்.

ஒழுங்குமுறை ஆணையம்

செபி, ஐஆர்டிஏ போன்ற ஒழுங்குமுறை ஆணையங்கள் இருப்பதை போல, நுகர்வோர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது குறித்த திட்டமும் இந்த மசோதாவில் இருக்கிறது. 
நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் இருந்தாலும், இவற்றுக்கு போதுமான அதிகாரம் இல்லை என்பதால் புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட இருக்கிறது.
நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என பெயரிப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு அனைத்து மண்டலங்களிலும் அலுவலம் இருக்கும். 
வாடிக்கையாளர்கள் புகார் மீது விசாரணை நடத்தி, இழப்பீடு வழங்குவது குறித்த உத்தரவினை வழங்குவதற்கு இந்த ஆணையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 
மேலும் தவறான விளம்பரங்கள் மற்றும் முறைகேடான வர்த்தகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
நுகர்வோர்கள் எழுத்து பூர்வமாகவோ அல்லது எலெக்ட்ரானிக் முறையிலோ புகார்களை அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் மண்டல அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். 
இந்த ஆணையம் வழங்கியிருக்கும் தீர்ப்பினை செயல்படுத்தவில்லை எனில் அது தண்டனைக்குரிய குற்றமாகும். 
ஆறு மாத சிறை தண்டனை அல்லது 20 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது. 
அதேபோல தவறான விளம்பரங்கள், உணவு கலப்படம், போலி பொருட்கள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். 
தவறான விளம்பரங்களுக்கு இரு ஆண்டுகள் சிறை ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க முடியும்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை கொடுக்கும் அல்லது 
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விளம்பரங்களில் நடித்திருக்கும் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

சமரச மையம்

தற்போது மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் தீர்ப்பாயங்கள் உள்ளன. 
புதிய சட்டத்தின் படி, இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்படும் பட்சத்தில் சமரசம் ஏற்படுத்திகொள்ள புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இதற்காக மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் சமரச மையங்கள் அமைக்க இந்த மசோதா பரிந்துரை செய்கிறது. 
இந்த மையம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமாக தீர்த்துக்கொள்வதற்கு உதவும்.

கொளப்பள்ளி தையல் பயிற்சி மையம்




























தொடர் கண்காணிப்பினால் அயோடின் பயன்பாடு அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் அளவு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  அதுபோல மாணவர்கள், பெண்கள்  என பல்வேறு தரப்பினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.

இந்த காலாண்டில் பந்தலூர், கூடலூர் வட்டாரத்தில் உப்புகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருவாரூர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆய்வகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.  பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், கனேசன், தனிஸ்லாஸ், நாகராஜ், செல்வராஜா உள்ளிட்ட பலர் 75 மாதிரிகள் சேகரித்தனர்.  

கல் உப்புகள் கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்ததில் அயோடின் அளவு குறைவாக இருந்ததையும், பாதுகாப்பாக வைக்கவும் வலியுறுத்தப்பட்டது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின்  தொடர் கண்காணிப்பினால் 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2016ல் 55%சதவீதமாக இருந்த அயோடின் அளவு 2018 ல் தற்போது  அயோடின் உப்பு பயன்பாட்டில் 70% சதவீதமாக உயர்வு பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

தொடர்ந்து அனைத்து நியாய விலை கடைகளிலும் அயோடின் கலந்த அரசின் உப்பு விற்பனை செய்யவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தொடர்ந்து அனைத்து வட்டங்களிலும் அயோடின் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளபட உள்ளது. 

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...