நாமக்கல்: நாமக்கல் அதன் சுற்று வட்டாரத்தில் செயல்படும் டீக்கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் உத்தரவின்படி, அலுவலர்கள் பாஸ்கரன், பாலமுருகன் ஆகியோர், நாமக்கல்லில் உள்ள டீக்கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தரமான டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா, பால் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், போலி அல்லது கலப்பட டீத்தூளை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் எச்சரித்தனர். இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர் கவிக்குமார் கூறியதாவது: மாவட்டத்தில், நான்கு மாதங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், 73 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 18 லட்சம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல், தற்போது வரை, 31 கிலோ வரை தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலப்பட, காலாவதியான, தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை குறித்து, 94440-12322 என்ற, வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால், 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். |
தரமற்ற, போலி டீத்தூள் பயன்பாடு:
Subscribe to:
Post Comments (Atom)
அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*
அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...
No comments:
Post a Comment