கோவை : கொசு உற்பத்தி செய்ய ஏதுவாக சுகாதாரமற்ற முறையில் பராமரித்த ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க, சுகாதார துறை சார்பில், தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இருப்பினும் கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கோவை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், டாஸ்மாக் பார்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை உணவுப்பிரிவு நியமன அலுவலர் விஜய் கூறியதாவது:ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில், தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுகளில், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கப்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இவற்றில் தேங்கும் நீர் வாயிலாக, கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்பட வழி இருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. அவை உடனடியாக அகற்றப்பட்டன. பிளாஸ்டிக் தட்டுகள், காலியான அட்டைப்பெட்டிகள், பாட்டில்களை உடனுக்குடன் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டல்
|
ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு நோட்டீஸ்! – உணவு பாதுகாப்பு துறை தடாலடி
Subscribe to:
Post Comments (Atom)
சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*
*Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
செங்காந்தள் மலர், கண்வலிக்கிழங்கு கண்வலிக்கிழங்கு, காந்தள் மலர், கலப்பைக்கிழங்கு, செங்காந்தள் மலர், கார்த்...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
No comments:
Post a Comment