உப்பட்டியில் இரத்ததான முகாம்

டெங்கு காய்ச்சல் பரவுவதால் அதனை தடுக்க இரத்த தேவை அதிகமாக உள்ளது அதனால் உப்பட்டியில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

உப்பட்டி எஸ் ஒய் எஸ் கிளை அலுவலகத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கூடலூர் அரசு இரத்த வங்கி, உப்பட்டி எஸ்எஸ்எப் எஸ் ஒய் எஸ் கிளை, உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன இணைந்து இரத்ததானம்  முகாமினை நடத்தின.

முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி. காளிமுத்து தலைமை தாங்கினார்.  உப்பட்டி எஸ் ஒய் எஸ் கிளை நிர்வாகி ஐமுட்டி முன்னிலை வகித்தார்.

கூடலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சாந்தி தலைமையிலான குழுவினர் கொடையாளர்களிம் இருந்து  இரத்ததானம் சேகரித்தனர். 20 பேர் இரத்த தானம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் இரத்த பரிசோதனை செய்து இரத்த கொடையாளர்கள் பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சு. சிவசுப்பிரமணியம், இரத்த வங்கி செவிலியர்கள் வசந்த், ரெக்சினா, மற்றும் எஸ்ஒய்எப் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...