அத்திக்குன்னா இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் . பந்தலூர் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் மருந்தகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரிமாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், கிரீன் வூட் பவுண்டடேசன், மேங்கோ ரென்ஞ் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமினை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஊட்டி அரசு கண் மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதணை சிகிச்சைகள் அளித்தனர். 
 
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  16 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டது, 10 விருப்பத்துடன் கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, ஸ்ரீதர், கலாவதி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பந்தலூர் வட்டார பொறுப்பாளர் தனிஸ்லாஸ், அத்திக்குன்னா எஸ்டேட் மருந்தாளுனர் செல்வகுமார் மற்றும் மருந்தக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

 ஊட்டி அரசு கண் மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதணை சிகிச்சைகள் அளித்தனர். 

 

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.







முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



 மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதணை சிகிச்சைகள் அளித்தனர். 









 16 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டது, 10 விருப்பத்துடன் கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  




No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...