அம்பல மூலா பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்













பந்தலூர் அருகே அம்பல மூலா ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது தேசிய இளையோர் தினத்தினை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்கம், ஷாலோம் சேரிடப்பிள் டிரஸ்ட், நேரு யுவ கேந்திரா ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தங்கினார். நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, நீலகிரி ஆதிவாசி வயநாடு ஆதிவாசிகள் நல சங்க நிர்வாகி கோவிந்தன், ஷாலோம் சேரிடப்பிள் டிரஸ்ட் செயலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

ஊட்டி அரசு கண் மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதணை சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  14 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டது, 8 பேர்  விருப்பத்துடன் கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  
முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர்  முத்துராஜ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி ராஜா நீலகிரி

நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்க ஊழியர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...