பந்தலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயனிகள் நலன் கருதி அடிப்படை வசதிகளை மேம்படுத்த கேட்டல் சார்பாக.


பெறுநர்
                ஆணையார் அவர்கள்                                                                            
நெல்லியாளம் நகராட்சி
பந்தலூர்.

பொருள்: பந்தலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயனிகள் நலன் கருதி               
      அடிப்படை வசதிகளை மேம்படுத்த கேட்டல் சார்பாக.
அய்யா அவர்களுக்கு வணக்கம்
பந்தலூா் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முழுமையாக செயல்படுத்திய தற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதில் பொதுமக்கள்  நலன் கருதி  சில அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

1 பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதியை சார்ந்த பயனிகள் வந்து செல்கின்றனர்.  பள்ளி கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட பலரும் வந்து செல்லும் இங்கு பாதுகாப்பு கருதியும் பயனிகள் நலன் கருதியும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்க்பப்பட வேண்டும். 

2. பயனிகள் இருக்கைகள் தற்போது சேதப்படுத்தபட்டுள்ளன.  இதனால் பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.  சேதபட்டுள்ள இருக்கைகள் சரிசெய்து தர வேண்டும்.   புதிய இருக்கைகள் மக்கள் பயன்பாட்டிற்கு அமைத்து கொடுக்க வேண்டும்.

3. பயனிகள் நலன் கருதி பேருந்து நிறுத்திற்கு எதிர்புறம் உள்ள கால்வாயின் மேற்பரப்பில் சிமென்ட் மூலம் பயனிகள் இருக்கைகள் அமைத்து கொடுத்தால் பெரும்பாலான பயனிகள் அப்பகுதியில் அமர்ந்து கொள்ள ஏதுவாக அமையும்.  அதற்கான நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

4. மழைகாலங்களில் பயனிகள் பேருந்துகளில் ஏறும்போது நனைந்து கொண்டு இறங்கவும் ஏறிச்செல்லவும் வேண்டிய நிலை உள்ளது.   இதனால் பயனிகள் நலன்கருதி பேருந்து நிறுத்தும் பகுதியில் சீட்டுகள் கொண்டு மேற் கூரை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

5.  வணிக வளாகத்தில் உள்ள கடைகள் பயனிகள் நிற்கும் பகுதியில் திறந்து செயல்படவில்லை.  தற்போது உள்ள கடைகளை அரைபாகம் பயனிகள் நிற்கும் பக்கம் திறந்து செயல்படசெய்ய வேண்டும்.   கடை நடத்தும் நபர்களுக்கு அனுமதி அளித்தால் அவர்களே கூட அதனை செய்துகொள்வார்கள்.  பயனிகள் நிற்கும் பகுதியில் முழு அளவு திறந்து செயல்பட அனுமதித்தால் பயனிகளுக்கு இடையூறு ஏற்படும் நிலை உருவாகும் என்பதும் குறிப்பிடதக்கது.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்


No comments:

Post a Comment

அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

 அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...