பெறுனர்

                                            

உயர்திரு.  மாவட்ட ஆட்சியர் அவர்கள்

நீலகிரி மாவட்டம்.

 

பொருள் :    நாடுகானி பகுதியில் தடுப்பனை உடைந்து சேதமானது 

நீர் வீனாவை தடுக்க கேட்டல் சார்பாக.

 

அம்மையீர், வணக்கம்,

 

            கூடலூர் அருகே நாடுகானி பகுதியில் இருந்து கூடலூர் வரும் வழியில் வனப்பகுதியை ஒட்டி சாலையோரத்தில் நீரை சேமிக்கும் விதமாக தடுப்பனை கட்டப்பட்டது.  இந்த தடுப்பனையில்  தேங்கும் நீரினை வன உயிரிணங்கள் பயன்படுத்தி வந்தன.  மக்களும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

 

இந்த தடுப்பனையில் தேங்கும் நீரின் காட்டுயானைகள் பருகுவதால் சாலையை தாண்டி யானைகள் வர வேண்டிய நிலை தடுக்கப்பட்டது..  மேலும் வன உயிரனங்களும் சாலையை கடக்க வேண்டிய நிலை தடுக்கப்பட்டது. 

 

தற்போது இந்த தடுப்பனை மண் நிறைந்து காணப்படுகின்றது.  தடுப்பனையில் அடிப்பகுதியில் அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் தண்ணீர் தேங்காமல் வடிந்து விடுகின்றது.  இதனால் வன விலங்குகள் பெரும்பாலும் தண்ணீர் தேவைக்கு சாலையை கடந்த அருகில் ஓடும் ஓடையை நோக்கி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

காட்டு யானைகளும் சாலையை கடந்தே தண்ணீர் தேவைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் சாலையில் செல்லும் வாகணங்களை காட்டுயானைகள் துரத்தும் அபாயம் உள்ளது.  மேலும் சாலைக்கு அடுத்தபகுதியில் டேன்டீ குடியிருப்புகளும் உள்ளது.

 

யானைகள் சாலையை கடந்த குடியிருப்பை நோக்கி செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  இதனால் மனித விலங்கு மோதல்களும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  அதுபோல் அருகில் உள்ள வனப்பகுதிக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

எனவே இந்த தடுப்பணையை தூர் வாரி.  மீண்டும் தடுப்பனையை தண்ணீர் வடியாமல் இருக்கும் வைகயில் தடுப்பனையின் உட்பகுதியில் கூடுதல் வார்ப்பு மூலம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

                                                                                                                                                     இப்படிக்கு

                                                                                              

 

 

சு. சிவசுப்பிரமணியம்

                                                                                                பொது செயலாளர்.  CCHEP. Nilgiris

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...