மின் இணைப்பு - விண்ணப்பிக்கும் போது - கட்டணம்

 பெறுனர்

 

          உயர்திரு.  தலைவர்  - ஆணையாளர்  அவர்கள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

          சென்னை.

 

பொருள் : மின் இணைப்பு  - விண்ணப்பிக்கும் போது  - கட்டணம் செலுத்துதல் – நிராகரிக்கும்

       போது கட்டணம் திரும்ப தருவதில்லை.  கட்டணம் திரும்ப அளிக்க நடவடிக்கை

        எடுக்க வேண்டும் அல்லது   அங்கிகரித்தபின் கட்டணம் செலுத்த வாய்ப்பளிக்க

        வேண்டும் என கேட்டல் சார்பாக.

        --  --  -- --  -- 

மதிப்பிற்குரி அய்யா

         

          மின் இணைப்புகோரி மின் பகிர்மான கழகத்தில் தற்போது இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய நிலை.  விண்ணப்பிக்கும் போது மின்சார இணைப்புக்கான கட்டணம் முழுமையாக செலுத்த வேண்டும். 

 

மின்வாரியத்தினர் ஏதேனும் ஆவணம் சரியில்லை, அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தினால் மின் இணைப்பு வழங்க மறுப்பு தெரிவித்து மின் விண்ணப்பத்தினை  நிராகரிக்கும் போது  விண்ணப்பித்த நுகர்வோருக்கு மின் கட்டணம் திருப்பி தருவதில்லை.

 

இதனால் பெறாத சேவைக்கு நுகர்வோர்  பணம் செலுத்தி ஏமாறும் நிலை உள்ளது.  இது நுகர்வோர் பாதிப்பை உருவாக்குகின்றது. 

 

எனவே மின் இணைப்புக்கான விண்ணப்பம் நிராகரிக்கும் போது விண்ணப்ப கட்டணத்தை மின் பகிர்மான கழகம்  திரும்பி வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அல்லது மின் இணைப்பு வழங்க உறுதி செய்த பின்னர் மின் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்த அனுமதி வழங்க வேண்டும்.

 

இதனால் நுகர்வோர் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

 

எனவே மேற்படி விண்ணப்பிக்கும் போது செலுத்தும் கட்டணம் திரும்ப செலுத்தவும், மின் இணைப்புக்கு உறுதி செய்தபின் மின் இணைப்புக்கான கட்டணம் செலுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...