உப்பட்டியில் கொரனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கபசுர குடிநீர் விநியோகம்

 பந்தலூர் அருகே  உப்பட்டியில் கொரனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கபசுர குடிநீர் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவ பிரிவு. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், உப்பட்டி எஸ் ஒய் எஸ் அமைப்பு ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் தலைமை தாங்கினார்.

உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அனுசுயா பேசும்போது 

கொரனா நோய் தொற்று பரவி வருவதை தடுக்க பொதுமக்கள் அடிக்கடி கைகள் கழுவுதல், சமூக இடைவெளி , முக கவசம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் சளி பிடித்து இருந்தால் அரசு மருத்துவமனையில் ஆலோசனை சிகிச்சை பெற்று கொள்ளலாம். தேவைப்படுவோருக்கு மட்டும் கொரனா பரிசோதனை மேற்கொள்ள படும். என்றார்.

 சித்தா மருத்துவர் புவனேஸ்வரி பேசும்போது 

 கபசுர குடிநீர் நுரையீரல் மற்றும் சுவாச பாதை நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கொரனா தாக்கம் இருக்காமல் இருக்க உதவும். 5 கிராம் கபசுர பொடியை 250 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 50 மில்லி அளவுக்கு வற்ற வைத்து குடிக்கலாம். பெரியவர்கள் 30 மில்லி சிரியவர்கள் 10 மில்லி என வயதிற்கேற்ப குடிக்கலாம். நிலவேம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனையும் நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கலாம் என்றார்.

உப்பட்டி எஸ் ஒய் எஸ் மாவட்ட இணை செயலாளர் ஐமுட்டி, நுகர்வோர் மைய ஆலோசகர் சுந்தர்ராஜ், உப்பட்டி சமூக ஆர்வலர் ஆலி ஆகியோர் பேசினார்கள். 

நிகழ்ச்சியில் கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது.  அதுபோல் நிலவேம்பு கசாயம் பொடி பொட்டலம் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

பொது மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குழந்தை நேய பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ் வரவேற்றார். 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...