உலக உணவு தினத்தினை முன்னிட்டு உணவு பாதுகாப்பும், இயற்கை உணவும்

உதகை அருகே சிவசைலம் சாம்ராஜ் மேல்நிலை பள்ளியில் உலக உணவு தினத்தினை முன்னிட்டு உணவு பாதுகாப்பும், இயற்கை  உணவும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு  கருத்தரங்கு நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நீலகிரி  மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு  ஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாங்கினார்.  பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார்.  பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற மாணவி சந்தியா வரவேற்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் இன்று நம்மை நோயாளிகளாக மாற்றி வருகிறது.  விளம்பரங்களில் வரும் உணவுகளையும் ஊட்டசத்து பாணங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம்.  இவற்றினால் எந்த பயனும் இல்லை. அதுபோல பதப்படுத்தபட்ட உணவுகள்,   ரெடிமேட் உணவுகள் பலவற்றிலும்  கெடாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள் உடலுக்கு பதிப்பையும் நோயினை உருவாக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.  நொறுக்கு தீனியாக உண்ணக்கூடிய சிப்ஸ், லேஸ் உள்ளிட்டவைகளினால் இதய கோளாறுகள் மற்றும் கேன்சர் வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.  எனவே  இவற்றை தவிர்த்து சாதாரண உணவுகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.   http://cchepnlg.blogspot.inhttp://cchepeye.blogspot.inhttp://consumernlg.blogspot.in/

நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசும்போது   தற்போது  சைவ உணவுகளை தவிர்த்து அசைவ உணவுகளை அதிகம் உண்ணுகிறோம்.  கோழி ஆடு மாடு உள்ளிட்டவைகளை உணவுக்கு வளர்க்க செலவிடும் உணவு வகைகள் அளவுகள் மக்கள் பலருக்கு உணவு அளிக்க முடியும்,  மேலும் தற்போது உணவுக்கு வளர்க்கபடுபவை மருந்துகள் இட்டு வளர்க்கபடுகிறது இவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது. சிறு தானிய உணவுகள், தாவர உணவுகள் அதிக பயன்கள் தரக்கூடியது என்றார்.
நிலகிரி நுகர்வோர் கூட்டமைப்பு செயலாளர் வீரபாண்டியன் பேசும்போது இயற்கை உணவுகளில் மட்டுமே அதிக ஊட்ட சத்துகள் உள்ளது.  உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் பெறலாம்.  உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, கலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனம், ஊட்டசத்து விவரங்கள், சேர்க்கபட்டுள்ள பொருட்களின் விவரங்களை பார்த்து வாங்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் நுகர்வோர் மன்ற மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற மாணவன் கோகுல் நன்றி கூறினார்.
pls visit our webshttp://cchepnlg.blogspot.inhttp://cchepeye.blogspot.inhttp://consumernlg.blogspot.in/

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...