இந்தியா சிங்கப்பூர் போல மாற

சிறிது நாட்களாக சிங்கப்பூர் அரசாங்கம் தன் லாபத்தில் தன் குடிமக்கள் எல்லோருக்கும் பங்கு தருகிறது.

சிங்கப்பூரைப் போல இந்தியாவும் இருக்க வேண்டும் என்று மீம்ஸ்களாக சுற்றுகிறது.

ஆனால்..

இந்தியா சிங்கப்பூர் போல மாற வேண்டும் என்று நினைக்கும் எவனும் தாங்கள் சிங்கப்பூர் குடிமகன் போல் மாற வேண்டும் என்று விரும்புவதில்லை.

சிங்கப்பூரில் எதுவும் இலவசமில்லை. எவனும் எவரையும் ஏமாற்றியோ, லஞ்சம் ஊழல் செய்தோ வாழ முடியாது.

ஓட்டுப் போட இலவச பிச்சை கிடையாது.

விவசாயத்துக்கு மானியம், வேலை நிறுத்தம், வருடா வருடம் கட்டாய சம்பள உயர்வு, போனஸ் எதுவும் கிடையாது.

அரசாங்க வேலையில் தான் குறைந்த சம்பளம். அந்த வேலையும் நிரந்தரம் கிடையாது. அரசு வேலையில் இருப்பவன் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

சட்டத்தை மதிக்காதவன் இங்கே வாழ முடியாது. லஞ்சம் கொடுத்து எந்த அரசு காரியத்தையும் சாதித்துக் கொள்ளவும் முடியாது.

ஒரு ஓட்டுநர் உரிமம் வாங்க ஒருவனுக்கு ஒரு வருடம் ஆகும். அதற்கான அத்தனை பயிற்சிகளையும் ஒழுங்காக முடித்து தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

சிலருக்கு இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆகும் ஓட்டுநர் உரிமம் பெற.

சாலைகளில் விதிமுறைகளை மீறினால் வீட்டிற்கு நோட்டீஸ் வரும். எந்த டிராஃபிக் போலீசும் இருக்க மாட்டார்கள் லஞ்சம் கொடுத்து தப்பிக்க.

இருந்தாலும் காசு வாங்க மாட்டார்கள். மீறி கொடுக்க நினைத்தால் லஞ்சம் கொடுக்க முயற்சித்ததற்காக சிறை தண்டனை கிடைக்கும்.

தேசத்தின் பிரதமரை மீம்ஸ் போட்டு கேலி செய்வதோ, தேசியக் கொடியை கேவலப்படுத்துவதோ,

தேசியகீதத்தை அவமானப்படுத்துவதோ செய்தால் நிச்சயம் சிறை தண்டனை தான். ஜாமீன் கூட கிடைக்காது.

திறமையின் அடிப்படையிலேயே எல்லாம் கிடைக்கும். சாதிப் பெயரில் எந்த சலுகையும் எவனுக்கும் கிடைக்காது.

பிறந்தது முதல் எல்லோருக்கும் ஒரே ஒரு அடையாள எண் தான். அதை வைத்து உங்கள் முழு ஜாதகத்தையே சொல்லிவிடுவார்கள்.

இதையெல்லாம் இந்தியர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியும் என்றால்..

இந்தியாவும் தன் லாபத்தில் ஒரு பகுதியை நிச்சயம் தன் மக்களுக்கு கொடுக்கும்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...