சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி


கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் நடைப்பெற்றது

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகப்பு மையம், நீலகிரி மாவட்ட காவல்துறை கூடலூர்,  போக்குவரத்து துறை, பயிற்சி மைய குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு மற்றும் முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு பயிற்சி மைய முதல்வர் தலைமை தாங்கினார்.

மைய ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார்

நுகர்வோர் மைய தலைவர் சி காளிமுத்து முன்னிலை வகித்தார்

கூடலூர் மோட்டார் வாகண ஆய்வாளர் காசிவிஸ்வநாத் பேசும்போது
கடந்த 15 ஆண்டுகளாக சாலைவிபத்துகளில் முதலிடத்தில் இருந்துவந்த தமிழகம் கடந்தாண்டு 2017ல் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது 2016 யை விட 2017 6.2% விபத்துகள் குறைவாகியுள்ளது. வகணங்களில் வேகமாக ஓட்டுவது தவிர்க்கபட வேண்டும், வாகனம் இன்சூரன்ஸ், லைசென்ஸ், மற்றமு இதர ஆவணங்கள் இல்லாமல் வாகணங்கள் இயக்குவது குற்றம்.  இதற்கு குறைபாட்டினை பொறுத்து அபாராதம் விதிக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் துடிப்பதை பார்த்தால்  விபத்து குறித்த பயம் ஏற்படும், ஹெல்மெட் காவல்துறை யினரை பார்த்தவுடன் தலையில் மாட்டுவதைவிட வாகணத்தை எடுக்கும்போதே  ஹெல்மட்   அனிந்துகொள்வதே உயிருக்கு பாதுகாப்பு என்றார்.

காவல்துறை ஆய்வாளர் வெங்கடாசலம் பேசும்போது

சாலைவிதிகள் மக்களின் நலன்கருதி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போன் உபயோகம் அதிக விபத்துக்குள்ளாக்குறிது. அதிக வேகத்துடன் இயக்கும் வாகணங்களை பெற்றோர் இளையோர்களுக்கு வாங்கி தருவதை தவிர்க்கவேண்டும். வாகண பெருக்கத்தால் போக்குவரத்து சிரமங்கள் அதிகரித்து வருகின்றது.  இளையோர்களிடம் ஹன்ஸ், போதை பவுடர்கள், குடிபழக்கம் போன்று பெருகி வரும் போதைபழக்கம் அதிகரித்து வருகின்றது.  
இதனால் மூளை முதல் இதர உறுப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றது. போதைபொருட்கள் விற்பதும், போதையுடன் வாகணங்கள் இயக்குவதும் குற்றம் ஆகும்.

போக்குவரத்து காவல் ஆய்வளர்  சத்தியன் பேசும்போது  நகர பகுதிகளில் 20 கிமீ வேகமும் வளைவு பகுதிகளில் 15 கிமீ வேகத்திலும், மற்ற இடங்களில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் இயக்கலாம்.  அதிவேகம் விபத்தினை ஏற்படுத்திடுவதால் வேகத்தை தடுக்க ஆங்காங்கே ஆய்வுகள் மேற்க்கொள்ளபடுகின்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது சாலை விபத்துகள் தவிர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.  சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் சாலைவித்துகளால் 10முதல் 12 இலட்சம் பேர் வரை பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர், இவற்றை தவிர்க்க வேண்டுமெனவே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகின்றது என்றார்

நிகழ்ச்சியில் பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில் ஆசிரியர் பெஞ்சமின் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...