நீரின்றி அமையாது இவ்வுலகு

நீரின்றி அமையாது இவ்வுலகு என்பது நமக்கு இயற்கையாக வந்துள்ள ஐம்பூதங்கள் இவற்றிற்கு முதன்மையானது நீர்

இந்த நீருக்கு ஆகாயம் காற்று சூடு நிலம் மற்றும் வெளிச்சத்தால் தானே இயக்கம் என்ற ஒன்றும் தன்னை சுத்திகரித்து தூய்மையாக புனிதமாக என்றும் நமக்காக நிலைத்திருக்க உள்ள உயரிய வாழ்க்கை.

நாம் என்றாலும் நீர் எனலாம் நமக்கும் மூலம் இந்த ஐம்பூதங்கள் தானே இவற்றைக்கொண்டு நன்முறையில் பயன்படுத்தி தன்னை சுத்திகரித்து தூய்மையாக புனிதமாக என்றும் நமக்காக நிலைத்திருக்க உள்ள உயரிய வாழ்க்கை என எப்போது வாழ உள்ளோமோ அப்போது உலக மண்நாள் என்ற ஒன்றே நம் உலகத்தோடு ஒட்டி உறவாட என்ற மணநாள்.

பூமி தினம் என்றால் அதன் வளத்தைக்காத்தேன் காக்கிறேன் இனிமேலும் காப்பேன் என்ற வகையில் கொண்டாட வேண்டும்.

ஆனால் இக்காலத்தில் எப்பொழுதும் பூமியின் வளத்தை அழிக்கும் செயற்கை முறைகளைக்கொண்டு உரம் நெகிழி மணல் மற்றும் கனிமவளங்களை விற்று மரங்களை விளைநிலங்களை ஆக்கிரமித்து அழித்து ....

இவ்வளவையும் செய்வதை நிறுத்தாமல் உலக வெப்பமயமாக்கல் நீர் காற்று மற்றும் நில மாசடைவதற்கு என்றே நாம் நமக்கென்று வாழும்வரை மண் தினம் கொண்டாடுவது ஒரு வெட்கம் மானம் சூடு சொரணையற்ற செயல் தானே!

அம்மாவை அல்லது இவ்வுலத்துக்கே தாய் என்ற மண்ணை கூறு போட்டு விற்றுக்கொண்டு தாயுக்கு மரியாதை என்று எந்த நாளைக்கொண்டடினாலும் அவள் மகிழந்து வரம் தருவாளா? சாபம் பெற்ற பாவிகளுக்கு பாவவிமோசனம் பரிகாரம் என்பது விரைவில் அத்தாயின் மண்ணுள் அடக்கமாகிவிடுவது என்ற ஒற்றைச்செயல் தானே?

அடக்கமாகிவிடு அல்லது அடங்கிவிடு. இம் மண் உனக்கு மட்டுமே சொந்தமல்ல வருங்காலம் செழிக்க நம் முன்னோர்கள் செய்த தியாகங்கள் ஏராளம். ஆனாலும் அவர்களையும் மதிக்காமல்

அறிவியல் வளர்ச்சி என்று முன்னோருக்கும் நமக்கு உண்ண உணவும் உறங்க வீடும் உடுக்க உடையும் தந்த மண்ணுக்கு செய்நன்றியில்லாத மனிதர்கள் என்றும் மண்ணுக்கு

துரோகிகள் எதிரிகள் கோழைகள் பலமற்று வாழ வழியின்றித்தன் உடல் பாகங்களை விற்றுப்பிழைக்கும் ஈனர்கள் முடமான வெற்றுப்பிண்டங்கள் என்றால் மிகையில்லை.

மனிதன் தன் சக மனிதனை மதிப்பதைவிட மறிதர்களுக்குப்பொதுவாக உள்ள ஐம்பூதங்களை மதித்து அவற்றை சீராக்க செம்மைப்படுத்தி பண்பட்ட ஒன்றாக இருக்க தன்னை அளிக்கவேண்டும் என்ற வாழ்வே நாம் வாழ்வதற்கான பொருள்.

இதுவே நம் கடமை குறிக்கோள் என்றில்லாமல் பணம் வேண்டும் என்ற ஒன்றுக்காக இயற்கையை அழிப்பது கயமை. ஈனர் வீணர் கயவர் என எதைக்கொண்டு நம்மை நம்மண்ணெனும் தாய் நம்மை அழைத்தாலும் அதற்கும் மேலான கெட்ட மனம் கொண்டவர்கள் தானே நாம்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...