இலவச கண் சிகிச்சை முகாம் மேங்கோரெஞ் 29 04 2018

 இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர், ஏப்ரல் 29 : பந்தலூர் அருகே மேங்கோரெஞ் மருந்துவமனையில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம், மேங்கோரெஞ் மருத்துவமனை 

ஆகியோர் இணைந்து நடத்திய 
 இலவச கண் சிகிச்சை முகாமிற்கு  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். 

உதகை தலைமை மருத்துவமனை முதன்மை கண் மருத்துவரும், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளருமான மருத்துவர் அமராவதிராஜன், முத்துராஜ் உள்ளிட்ட கண் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்

இதில் 100க்கும் மேறபட்டோர் கலந்துகொண்டு
அனைத்துவித கண்நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். 
10 கண்புரை  இலவச அறுவை சிகிச்சை செய்திட உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த முகாமில் ஷாலோம் சாரிட்டபிள்  டிரஸ்ட் அறங்காவலர் சுப்பிரமணி மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், அம்போத்கார் மக்கள் இயக்க செயலாளர் இந்திரஜித், மேங்கோரெஞ் மருத்துவமனை தலைமை செவிலியர் எலிசபெத், மருந்தாளுனர் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...