கல்வித்துறை சார்பானவை நடவடிக்கை எடுக்க


 **கூடலூர்* *நுகர்வோர்* *பாதுகாப்பு* *மையத்தின்* *செயற்குழு* *மற்றும்* **நிர்வாக குழு கூட்ட தீர்மாணம்*  

 *கல்வித்துறை* சார்பானவை நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.

தீர்மாணம் எண் 14.2018          3. 

கல்வி உரிமை சட்டப்படி  தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,  

சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் பணம் பெற்று இலவச ஒதுக்கீட்டில் சேர்த்து கொள்வதாகவும் 

பணம் அரசு தந்தவுடன் திருப்பி தருவதாக கூறியும் மாணவர்களை சேர்க்கின்றனர்.  

இது சட்டப்படி தவறான செயலாகும் இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

கல்வி உரிமை சட்டப்படி தகுதியான ஆசிரியர்கள் நியமணம் செய்யப்பட வேண்டும்.

ஆனால் பல பள்ளிகளில்  தகுதியான ஆசிரியர்கள்  நியமனம் செய்யப்படவில்லை.  

அரசு அங்கீகாரம் பெறாத படிப்புகளை படித்தவர்களை தனியார் பள்ளிகளில் பணிக்கு நியமனம் செய்துள்ளனர்.  

இதனால் சிறிய குழந்தகைள் சரியான பராமரிப்பு இன்றி பாதிக்கும் நிலையும் உள்ளது. 

தக்க ஆய்வும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

அதுபோல அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் குறித்த பட்டியலை இப்போதே *ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் வாரத்தில்* வெளியிடவேண்டும்.  

இதனால் பெற்றோர் மாணவர்களை சேர்ப்பது இப்போதே  தடுக்கப்படும்.  

பின்னர் குழந்தைகளை காட்டி அங்கீகாரம் கேட்கும் நிலை ஏற்படாது.

அரசு பள்ளிகளில் கழிப்பிடங்கள் விடுமுறை காலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம்.  

இதனால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.  மாணவர்கள் நலன் காக்கப்படும்.


அரசு பள்ளி சீருடைகள் சில தனியார் அமைப்புகள் மூலம் மகளீரை வைத்து தைக்கப்படுகின்றது.  

ஆனால் மாணவர்களுக்கு ஏற்ற மாதிரி சீருடைகள் தைப்பதில்லை.  

இதனால் மாணவர்களுக்கான சீருடை சீராக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  

பலரும் அரசின் சீருடையை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.  

எனவே மாணவர்களுக்கு தக்க வகையில் சீருடை தைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பெற்றோர்களுக்கு சீருடை தையல் கூலி வழங்க வேண்டும்.


பள்ளிகளில்  செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை சிறப்பாக செயல்படுத்த கல்வி துறைசார்பான ஒத்துழைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் நியமணம் செய்யவேண்டும்.

அல்லது தற்காலிக ஆசிரியர்களை அரசு ரூபாய் 10,000 மதிப்பூதியம் கொடுத்து நியமனம் செய்யவேண்டும்.

இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வழிவகுக்கும்,  

ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி
 *அரசு பள்ளிகளில்* பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மூலம் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்படாது  

தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கின்றோம்.

தறியார் பள்ளிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விவரம் பள்ளிகளில் தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும்.  

இதர கட்டணம் என சில பள்ளிகளில் கூடுதலாக வாங்குவதை தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதிணொன்றாம் வகுப்புகளில் சில மாணவர்களை கட்டாயமாக மாற்றுசான்று கொடுத்து அனுப்பும் தனியார் பள்ளிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் விளையாட உரிய அடிப்படை வசதிகள் விளையாட்டு உபகரணங்கள் இல்லாத பள்ளிகளில் LKG UKG PKG சேர்ப்பதை தடைசெய்ய வேண்டும்.

அல்லது அங்கீகாரம் நிறுத்து வைத்து  உரிய உபகரணங்கள் வாங்க காலக்கெடு கொடுப்பதோடு  குழந்தைகள் விளையாட ஒதுக்கிய நேரங்கள் குறித்தும் தகவல் பலகையில் தகவல் வெளியிட வேண்டும்.

அரசு பள்ளிகள் உட்பட
அனைத்து பள்ளிகளிலும்   மாணவர்கள் குடிக்க சுகாதாரமான சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


நன்றி            

இப்படிக்கு

சு. சிவசுப்பிரமணியம் 
பொதுச்செயலாளர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
நீலகிரி 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...