அங்கிகாரம் இல்லாத கல்வி

அங்கிகாரம் இல்லாத கல்வி நிலையங்கள் பொதுமக்கள் பணம் வீண்

அங்கிகாரம் இல்லாத கல்வி நிலையங்கள்
பொதுமக்கள் பணம் வீண்

மாணவர்கள் கல்வி பாதிப்பு

பல்வேறு பகுதிகளில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் மேற்கல்வி தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு கல்வி என கூறி ஏதேதோ பாட பிரிவுகளை நடத்துகின்றன.

இவை படித்தபின் வேலை வாய்ப்பை தருமா என்பது மிக பெரும் கேள்வி குறியே,

இந்த படிப்புகள் பின்னனி என்ன

அரசு அங்கிகாத்த தொழிற்படிப்புகள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களிலேயே நடத்தப்படுகின்றது.

அதற்கு பல்வேறு விதிமுறைகள், கட்டிட அமைப்பு முறைகள், வகுப்பறைகள்,  செயல்முறைக்கான பயிற்சி வசதிகள் (லேப்), கழிப்பிடம், தகுதியான ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் என பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் இவை புதுபிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு.

ஆனால் எந்தவித அரசு அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் அரசு அங்கிகரிக்காத பாட பிரிவுகளை உடனடி வேலை வாய்ப்பு தரும் கல்வி என கூறி பலரும் தனியாக கல்வி நிலையத்தை துவக்கி செயல்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் படித்தவர்கள் பலரும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த சம்பள வேலைக்கே சென்று வருகின்றனர்.

சில மாவட்டங்களில் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் மீது அரசு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கல்வித்துறை, சுகாதார துறை உள்ளிட்ட துறையினர் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால் ஏமாற்றிய நிறுவனங்களில்
ஏமாந்த பலரும்
போன பணம் போகட்டும் என்று தனது நிலையை என்னி வருந்தி கொண்டு இருப்பது தான் மிச்சம்.

அங்கீகாரம் உள்ள படிப்புகள்  ஆசிரியர் படிப்பு

அரசு ஆசிரியர் பயிற்சி கல்வியியல் துறை சார்பில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகள்

இவை இரண்டாண்டு கல்வியியல் பட்டய படிப்பு D.Ted இவற்றை படித்தால் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம்

கல்வி தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி,

மற்றது

பி எட் எனப்படும் கல்வியியல் பட்ட படிப்பு இது கல்வியியல் கல்லூ ரிகளில் படிக்கலாம்.

இதற்கு கல்வி தகுதி இளங்கலை பட்ட படிப்பு

இவை தவிர பிற ஆசிரியர் பயிற்சிகள் அரசால் ஏற்றுக் கொள்வதில்லை என்பது குறிப்பிடதக்கது.

நர்சிங் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நர்சிங் பயிற்சி மட்டுமே அரசு மருத்துவமனை மற்றும் இதர தனியார் மருத்துவமனையில் நர்சிங் பணிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகின்றது

நர்சிங் கவுன்சில் அனுமதி இல்லாத நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களை ஏற்றக்கொள்ள முடியாது என சமிபத்தில் நடைப்பெற்ற வழக்கில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசு வேலை வாய்ப்பு மற்றும் முக்கிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பல்கலைகழகம் ஆகியன நேரடியாக வழங்கும் சான்றுகள் மட்டுமே செல்லுபடியாகும்.

இதர சான்றுகள் பயன்அளிக்காது என்பது குறிப்பிட தக்கது.

தீயணைப்பு மற்றும் இதர துறைகளின் படிப்புகளும் இதே நிலைதான்

 *கல்விக்கான செலவு மூலதனம்

அதை முறையாக செலவிடுவது
முக்கியம்*

எனவே அரசு வழங்கும் சன்றுகள் பெறும் படிப்புகளை தேர்வு செய்து படித்தால் அதற்கான செலவு செய்த பணம் பயணளிக்கும்.
இல்லையேல் வீனாகும்

எனவே அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் மற்றும்

பல்கலை கழகம் இணைப்பு பெற்ற கல்லூரிகளில்

பல்கலை கழகம் வழங்கும் சான்றிதல் கொண்ட படிப்பை தேர்வு செய்வது அவசியம் ஆகும்.

at May 16, 2015

CCHEP Nilgiris
http://cchepnlg.blogspot.in/?m=1

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...