*சிவில் வழக்கில் வழக்கு தரப்பினருக்காக முகவராக ஆஜராகி வழக்கு விஜயாஜியங்களை கவனித்துக் கொள்வதற்கும், மனு செய்வதற்கும், மனுவை திரும்ப பெறுவதற்கும், சாட்சியங்களை விசாரணைக் உட்படுத்துவதற்கும், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வதற்கும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை பெறுவதற்கும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு கோப்புகளை பார்வையிடுவதற்கும் முகவராக நியமிப்பதற்கான மனு மாடல் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்*

 *கனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்*

பழனி

முதலேற்பு வழக்கு எண் .316/2006

நிறைவேற்றுகை மனு எண்.30/2019


டி.எம்.எஸ். நீலாவதி

மனுதார் / வாதி/தீர்ப்பாணை பெற்றவர்


           / எதிர் /

1.திரு.சுப்பைய்யா,

2. திரு.சொக்கைய்யா பிள்ளை,

3. திரு.பழனிச்சாமி,

எதிர்மனுதார்கள்/எதிர்வாதிகள்/தீர்ப்புக் கடனாளிகள்


உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் - கட்டளை 3 விதி - 2 இன் படி Power Agent நியமனம் செய்து அனுமதி வழங்கக் கோரும் மனு


1 . மனுதாராகிய நான் இந் நிர் வழக்கில் மனுதாரரும் / வாதியும் / தீர்ப்பாணை பெற்றவரும் / ஒரு முக்கிய சாட்சியும் ஆவேன். 


2. மனுதாராகிய எனக்கு வயது .......... ஆன மூத்த குடிமக்களில் ஒருவர் ஆவேன். எனது வயதான உடல் தளர்ச்சி சூழ்நிலை காரணமாக என்னால் இவ்வழக்கில் மாண்பமை நீதி மன்றத்திற்கு வருகை தர இயலாமலும், வழக்கு விஜயாஜ்ஜியங்களை கவனிக்க முடியாமலும் இருந்து வருகிறேன். மேலும் எனது வழக்கறிஞர் திரு. புலமை வேங்கடாசலம், எம்.பி.எல்., அவர்களுக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருதாலும் இந்நிர் வழக்கினை தொடர்ந்து வழிநடத்த இயலாமல் இருந்து வருகிறேன். இந்த தெய்வாதீனமான சூழ்நிலைகளால் மனுதாராகிய எனது தரப்பு கருத்துக்களை மாண்பமை நீதிமன்றத்தில் பதிவிட இயலாமல் இருந்து வருகிறேன். 


3. மேலும் இது போன்ற சூழ்நிலைகளில் வழக்கு விஜயாஜ்ஜியங்களை மேற்கொள்ளPower Agent ஆக அக்கறையுள்ள ஒருவரை நியமனம் செய்து கொள்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .CR.P.(PD) No.490/2018 And C.M.P.No.2558/2018 – தீர்ப்புரை நாள் : 18.09.2020 என்ற வழக்கில் தீர்ப்புரைத்துள்ளது. இத்தீர்ப்புரையானது அரசியல் அமைப்புச் சட்டம் - 1950 இன் 14வது பிரிவு படி எனது இந் நிர் வழக்கிற்கும் பொருந்தும் என மனுதாராகிய என்னால் கருதப்படுகிறது.


4.. ஆதலால் இந் நிர் வழக்கில் வழக்கு விஜயாஜ்ஜியங்களை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு உதவியாக எனது மகன் பழனிவேல், த/பெ... ................. வயது .......... என்பவரை power Agent ஆக நியமித்து உத்தரவிட வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கிறேன்.

                  மனுதார்


தேதி :

இடம்: பழனி


இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில் .............. தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.


                      Party In Persion


💐💐💐💐💐💐

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

💐💐💐💐💐💐

No comments:

Post a Comment

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...