தமிழ் சிறப்புகள்

 *மனிதர்களை போன்று இனமும் நட்பும் கொண்டது - எழுத்துக்கள்.*


- ங் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து க. எ.கா: சிங்கம், தங்கை.


- ஞ் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து ச. எ.கா: மஞ்சள், அஞ்சாதே


- ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் எழுத்துகள் பெரும்பாலும் சேர்ந்தே வரும். எசகா: பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.


- நட்பு எழுத்துக்களை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.


- க், ச்,த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும். எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.


- தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்து - ர், ழ். எ.கா: சார்பு, வாழ்க்கை.


*தமிழ்த்தாத்தா உ.வே.சா.*


* உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி.


* ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்


* இயற்பெயர் - வேங்கடரத்தினம்


* ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.


* அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்


* உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா


* இவரின் தந்தை - வேங்கடசுப்பையா


* காலம் - 19.02.1855 முதல் 28.04.1942


* 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.


* உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.


* உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.


* இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.


* பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.


* ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.


* ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.


* குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.


* தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.


* ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா


* உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.


* உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்


* ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர்.


* குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது


* எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.


* உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:


- எட்டுத்தொகை - 8


- பத்துப்பாட்டு - 10


- சீவகசிந்தாமணி - 1


- சிலப்பதிகாரம் - 1


- மணிமேகலை - 1


- புராணங்கள் - 12


- உலா - 9


- கோவை - 6


- தூது - 6


- வெண்பா நூல்கள் - 13


- அந்தாதி - 3


- பரணி - 2


- மும்மணிக்கோவை - 2


- இரட்டைமணிமாலை - 2


- பிற பிரபந்தங்கள் - 4


*கடைசிவரை நம்பிக்கை*


* கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.


* சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.


* ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.


* அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு * ஏற்பட்டது.


* சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம் நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.


* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.


* காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.


* 1955 அக்டோபர் 25-இல் நல்ல சடகோ இறந்தாள்.


* மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.


* சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.


* சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.


* அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.


* நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்! இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!


*வாழ்த்து - திருவருட்பா*


கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்


எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்


கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்


கலந்தான் கருணை கலந்து


* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்


* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்


* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.


* பெற்றோர் - இராமையா - சின்னமையார்


* வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874


* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.


* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை


* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை


* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.


* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.


* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்


* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.


* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.


* நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.


* வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.


* சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.


* மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.


* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.


* கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.


அறிவுரைப் பகுதி: திருக்குறள் - அன்புடைமை


சொற்பொருள்:


ஆர்வலர் - அன்புடையவர்


புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்


என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.


வழக்கு - வாழ்க்கை நெறி


நண்பு - நட்பு


மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே


அன்புதான் அடிப்படை என்பது பொருள்)


அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்


என்பிலது - எலும்பில்லாதது(புழு)


பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்


ஆருயிர் - அருமையான உயிர்


ஈனும் - தரும்


ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை


உண்டாக்கும் என்று பொருள்)


வையகம் - உலகம்


என்ப - என்பார்கள்


புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்


எவன் செய்யும் - என்ன பயன்?


அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு


பிரித்து எழுதுக:


அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -


அன்பு உள்ளத்தில் இல்லாத


வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்


தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல


வற்றல்மரம் - வாடிய மரம்


- இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.


- இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.


- சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்


- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.


- அதிகாரங்கள்: 133


- அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.


- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.


- திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.


- திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.


எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.


ஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து


* பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்.


சொற்பொருள்:


* பண் - இசை


* வண்மை - கொடைத்தன்மை


* போற்றி - வாழத்துகிறேன்


* இருக்கை - ஆசனம்


* திரு.வி.க என்பதன் விரிவாக்கம்


- திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.


* திரு.வி.க வின் பெற்றோர்


- விருத்தாசலனார் - சின்னம்மையார்


* திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர்


- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.


* துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?


- தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)


திரு.வி.க வின் சிறப்பு:


* இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.


* திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?


- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்


- பெண்ணின் பெருமை


- தமிழ்த்தென்றல்


- உரிமை வேட்கை,


- முருகன் அல்லது அழகு முதலியன.


* திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?


- 26.08.1883 - 17.09.1953


* திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?


- பொதுமை வேட்டல்


* பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?


- போற்றி


* பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது?


- நாடு, மதம், இனம், மொழி, நிறம்


* தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது?


- நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.


நூல் பயன்:


- இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.


* பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது?


- நானூற்று முப்பது


* சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்?


- இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி


* இறைவன் உயிரில் வைத்தது எதனை?


- இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.


* இறைவனின் இருக்கை யாது?


- இறைவனின் இருக்கை உண்மை.


திருக்குறள்


சொற்பொருள்:


* புரை - குற்றம்


* பயக்கும் - தரும்


* சுடும் - வருத்தும்


* அன்ன - அவை போல்வன


* எய்யாமை - வருந்தாமல்


* அகம் - உள்ளம்


* அமையும் - உண்டாகும்.


ஆசிரியர் குறிப்பு:


* திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.


சிறப்பு பெயர்கள்:


- நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்


நூல் குறிப்பு:


- மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.


- இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.


- ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.


- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.


- இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


- திருவள்ளுவரின் பெற்றோர் யார்?


- தாயின் பெயர் - ஆதி


- தந்தையின் பெயர் - பகவன்


* திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார்?


- மயிலாப்பூர் (மதுரை என்றும் கூறுவர்)


* திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்?


- வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்.


* வள்ளுவன் என்றால் பொருள் யாது?


- அரசருக்கு அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்


* திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?


- வாசுகி


* வாசுகி யாருடைய மகள்?


- மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள்


* திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?


- நெசவுத் தொழில்


* திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன?


- நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகன், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் என்பன.


* திருவள்ளுவர் காலம் எது?


- கி.மு. 31


- திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப் பெறுகிறது.


* திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?


- மூன்று பிரிவுகளைக் கொண்டது.


1. அறத்துப்பால்


2. பொருட்பால்


3. இன்பத்துப்பால்


* இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?


- திரு+குறள். மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.


* திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது.


* திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?


- பத்து


* திருக்குறள் நூலின் பயன் யாது?


- திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும், உலகெல்லாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும், மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும், எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.


* உடலை நீர் தூய்மை செய்யும்: வாய்மை உள்ளத் தூய்மையை வெளிப்படுத்தும்.


* வாய்மை என்றால் என்ன?


- மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.


* திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?


- ஆயிரத்து முந்நூற்று முப்பது


* திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று வழங்கப் பெறுகிறது?


- உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இவ்வாறு வழங்கப் பெறுகிறது.


பிரித்து எழுதுக:


* யாதெனின் - யாது + எனின்


* பொய்யாதொழுகின் - பொய்யாது + ஒழுகின்


* சொற்றொடரில் சொற்களை அமைத்தல்:


* இயற்கை - குற்றாலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்கின்றன.


* பெண்மை - பாரதியார் பெண்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.


* வாய்மை - வாய்மையே வெல்லும் என்ற தொடர் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது.


* உள்ளம் - குழந்தையின் உள்ளண் கள்ளம் புகா இடமாகும்.

No comments:

Post a Comment

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...