மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினத்தினை முன்னிட்டு

பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  மகாத்மா காந்தி கடந்த 1948ம் ஆண்டு சுட்டு கொல்லப்பட்டதன் 67வது நினைவு தினத்தினை முன்னிட்டு பந்தலூரில் நடைபெற்ற நினைவு தினத்திற்கு மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், ஓய்வு பெற்ற மருந்தாளுனர் ஆண்டனி,  மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் அகமது கபீர்  முன்னிலை வகித்தார்.  மைய நிர்வாகிகள் சலீம், ராஜாராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு மலர் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மது இல்லா தமிழகத்தினை உருவாக்க தமிழக அரசினை வலியுறுத்துவது, மதுவின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போதையின் பிடியில் சிக்கியவர்களை உரிய சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்க மாவட்டந்தோறும் மறுவாழ்வு மையங்களை அமைக்க அரசை வலியுறுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.  









http://cchepnlg.blogspot.in/







http://cchepnlg.blogspot.in/
http://cchepnlg.blogspot.in/http://cchepnlg.blogspot.in/

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...