தீபாவளி நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமவெளி பகுதிகளில் இருந்து சொந்த ஊர் வரும் பயணிகளின் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் மையம் வலியுறுத்தியுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களில் பலர் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு சமவெளி பகுதிகளில் தொழில்களுக்காக சென்றுள்ளனர். இவர்கள் முக்கிய பண்டிகை காலங் களில் சொந்த ஊர்களுக்கு வருகை புரிவார்கள். இதே போல் சுற்றுலா பயணிகளும் விடுமுறையை கொண்டாட நீலகிரிக்கு வருவார்கள். மேலும் சிறுதொழில் புரிவோர், வியாபாரிகளும் பொருட்கள் விற்பனைக்காக அடிக்கடி நீலகிரிக்கு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக பண்டிகை சமயங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்நிலையில், விரைவில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் வெளியூர்களின் பணிபுரிபவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவு நீலகிரி மாவட்டத்திற்கு வரத் துவங்கியுள்ளனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் சமவெளி பகுதிகளில் ஒடி தேய்ந்த பஸ்களாகும். இவைகள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. எனவே வரும் தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் நலன் கருதி பழுது ஆகாத கூடுதல் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

தேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள்

  ** தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 **  **அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்கள்** உங்கள் **EPIC** (வாக்காளர் அடையா...