கூடலூர் நிலப்பிரச்சனை இஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கேட்டு மனு

பெறுனர்

மேன்மைமிகு ஆளுனர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு  உதகை முகாம்.

பொருள்  : கூடலூர் நிலப்பிரச்சனை  காரணமாக மின்வசதி சாலை வசதி
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பதால் வாழ்வாதாரம்
பாதிப்பு  நடவடிக்கை எடுத்து மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்க
கேட்டல் சார்பாக.

மேன்மைமிகு ஆளுநர் அய்யா அவர்களுக்கு 
பணிவான வணக்கங்கள்
                       
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பந்தலூர் வட்டங்களில் பலரும் கைவசம் உள்ள நிலங்களில் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு பல ஆண்டுகாளாக அரசும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அடிப்படை வசதிகள் செய்வதில் சட்ட பிரிவுகளை காரணம் காட்டி தடை செய்து வருகின்றது.  யாணைகள் வழித்தடம், பிரிவு 17 நிலங்கள் தனியார் வனபாதுகாப்பு சட்டம் என பல்வேறு காரணங்களை கூறி அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை,

பல கிராமங்களுக்கு சாலைவசதி, மின்வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி கூட செய்து தராமல் உள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.   வனவிலங்கு தாக்குதல்கள் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிபடுகின்றனர், 

எனவே அய்யா அவர்கள் கருணை கூர்ர்ந்து அடிப்படை வசதிகளான மின் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதிகள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் சார்பில் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...