கூடலூர் இரத்ததான முகாமில் கல்லூரி மாணவர்கள் ஆர்வம்

கூடலூர் இரத்ததான முகாமில்
கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
23 பேர் இரத்த தானம் செய்தனர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பாரதியார் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், இளையார் செஞ்சிலுவை சங்கம், கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி, நெலக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியன இணைந்து நடத்திய இரத்த தான முகாம் கோழிபாலம் வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரிநாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேஸ்வரன் வரவேற்றார்.
முகாமிற்கு கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை தாங்கினார். இரத்த தானம் குறித்து இரத்தவங்கி மருத்துவ அலுவலர் மயில்சாமி பேசினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், பந்தலூர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் ஸ்டிபன்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெலக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் 23 பேர் இரத்த தானம் செய்தனர். முகாமில் சேகரிக்கப்பட்ட இரத்தங்கள் கூடலூர் அரசு இரத்த வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மேரி சுஜி, சைலஜா, கார்த்திக் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.

https://www.facebook.com/cchepnilgiris/posts/1230166847130701

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...