தாயகம் திரும்பியோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்க கேட்டல் சார்பாக.

பெறுனர்

மேன்மைமிகு ஆளுனர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு  உதகை முகாம்.

பொருள்  : தாயகம் திரும்பியோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து
வழங்க கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்

நீலகிரி மாவட்டத்தில் இந்திய இலங்கை அரசுகள் ஒப்பந்ததின் மூலம் கடந்த 1966 க்கு பிறகு பல குடும்பங்கள் வந்து வசித்து வருகின்றனர்.  இவர்கள் பலர் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்திலும்,  பலர் தனியாக வீடுகள் கட்டி கூலி வேலை செய்தும் ஆங்காங்கே வசித்து வருகின்றனர்.

சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் தாயகம் திரும்பியவர்களுக்கு அரசு மூலம் கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுககீடு வழங்கப்பட்டு வந்தது.  இதனால் பொருளாதாரத்தில் பின்னடைவு பெற்ற சிலர் சிறப்பு இடஒதுக்கீடு வாய்ப்புகள் மூலம் அரசு பணி பெற்று பயனடைந்தனர்.

ஆனால் தற்போது இரண்டாம் தலைமுறை என கூறி தாயகம் திரும்பியோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகின்றது.  தற்போது தான் தாயகம் திரும்பியவர்கள் படித்து பட்டம் பெற்று வருகின்றனர்.
தற்போது இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருவதால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடம் கிடைப்பதில்லை. இதனால் இவர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகவே உள்ளது.

எனவே மீண்டும் தாயகம் திரும்பியோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி தாயகம் திரும்பியோர்களின் வாழ்வில் வளம்பெற செய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...