புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்...

 

புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்...

10 முக்கிய அம்சங்கள்!  புதிய சட்டம்

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் வர்த்தகத்தின் வளர்ச்சியானது எதிர்பாராத பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை, நுகர்வோர் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படும் அமைப்பும் அரசாங்கமும் நன்கு உணர்ந்திருந்தன.

இதன் விளைவாக, பழைய சட்டத்துக்கு மாற்றாக, ‘இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019’ என்னும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இதிலுள்ள 10 முக்கிய அம்சங்கள் இனி...

1. ஒழுங்குமுறை ஆணையம்

செபி, ஐ.ஆர்.டி.ஏ.ஐ போன்ற ஒழுங்குமுறை ஆணையங்கள் இருப்பதைப்போல, நுகர்வோர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் இருந்தாலும் இவற்றுக்குப் போதுமான அதிகாரம் இல்லையென்பதால், புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு அனைத்து மண்டலங்களிலும் அலுவலகம் இருக்கும். வாடிக்கையாளர்கள் புகார்மீது விசாரணை நடத்தி, இழப்பீடு வழங்குவதற்கு இந்த ஆணையத்துக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது. மேலும், பொருள்களின் தரத்திற்கு ஏற்படும் இழப்பீட்டுக்குத் தக்க நஷ்ட ஈடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.

2. தவறான விளம்பரம் மற்றும் முறைகேடான வர்த்தகம்

தவறான விளம்பரம் மூலமாக விற்கப்படும் பொருள்கள் தவறானது எனக் கண்டறியும் பட்சத்தில், இரண்டு வருட சிறைத்தண்டனையும் ரூ.10 லட்சம் தொகையும் வசூலிக்கத்தக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே தவற்றைச் செய்யும்பட்சத்தில், ஐந்து வருட சிறைத் தண்டனையும் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடும் வசூலிக்க நுகர்வோருக்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

3. நடிகர்கள் மற்றும் பிரபலங்கள்மீது தவறான விளம்பரங்களுக்கு நடவடிக்கை

நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்மூலமாக, நுகரும் பொருள் களைப் பற்றித் தவறான முறையில் விளம்பரப் படுத்தினால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது.

4. புகார் செய்யும் முறையில் தாராளமயம்

தற்போது புதிய சட்டப்படி, நுகர்வோர்கள் எந்த இடத்தில் இருந்தும் அதாவது மாவட்டம், மாநிலம் எதுவாக இருந்தாலும், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நுகர்வோர் நீதிமன்றங்களை நாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

5. வீடியோ கான்ஃபரன்ஸ்மூலம் விசாரித்தல்

நுகர்வோர் புதிய சட்டத்தின்படி, சாட்சியாளரையோ புகார் தாரரையோ வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக விசாரிக்க முடியும். இது நுகர்வோருக்குப் பெரிய வரப்பிரசாதமாகும்.

6. புகார் ஏன் நிராகரிக்கப்பட்டது?

ஒரு நுகர்வோரின் புகாரை, புகார்தாரரை விசாரிக்காமல் ஆணையத்தால் தள்ளுபடி செய்ய முடியாது. மேலும், இது சுமுகமாகத் தீர்க்கப்படவேண்டிய புகார் எனில், இருவரும் பேசி தீர்த்துக்கொள்ள இந்தச் சட்டத்தில் வழிமுறை உள்ளது.

7. புகார்களை விரைவில் தீர்வு செய்தல்

தற்போது அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்தச் சட்டம் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்குப் புதிய நடைமுறைகளைக் கொண்டுவர வழிமுறை செய்யப்பட்டுள்ளது.

8. முறையற்ற வர்த்தக நடைமுறைகள்

முந்தைய சட்டத்தில் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் இணைக்கப்படவில்லை. மேலும், ரசீது வாங்காமல் பொருள்கள் வழங்குவது, வாங்கிய பொருள்களைத் திரும்பப் பெறாமல் இருப்பது, சேவைகளை முன்கூட்டியே ரத்து செய்யமுடியாமல் போவது, முன்கூட்டியே கடனைச் செலுத்துவதை அனுமதிக்காதது, கூடுதலாக டெபாசிட் தொகையைக் கேட்பது, அதிகமாக அபராதம் கேட்பது போன்றவை புதிய சட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.

 

புதிய சட்டத்தில் உற்பத்தியாளர் அல்லது சேவையை வழங்குபவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சேவையால் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் புதிய சட்டத்தின்கீழ் இழப்பீடு பெறமுடியும்.

 

9. உற்பத்தியாளரின் பொறுப்பு

புதிய சட்டத்தில் உற்பத்தியாளர் அல்லது சேவையை வழங்கு பவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சேவையால் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் புதிய சட்டத்தின்கீழ் இழப்பீடு பெறமுடியும்.

10. கலப்படத்துக்கு உண்டான தண்டனைகள்

எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத கலப்படமாக இருந்தால், ஆறு மாதம் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப் படும். சுமாரான பாதிப்பை ஏற்படுத்தும் கலப்படமாக இருந்தால், ஒரு வருடம் சிறைத்தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இதன்மூலம் இனி கலப்படம் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

இதைப்போல, பல புதிய திருத்தங்களும் வழிமுறைகளும் நுகர்வோருக்குச் சாதகமாக இந்தச் சீர்திருத்தப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.

கலப்பட பொருட்களை தயாரித்தால் தண்டனை! – புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமல்!

நுகர்வோர் பாதுகாப்பு மசோதா-2019 அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் கலப்பட பொருட்களை தயாரித்தாலோ, விற்றாலோ தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கு பதிலாக, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா-2019 (Consumer protection act 2019) நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து காணொளிக் காட்சி மூலம் மத்திய நுகர்வோர்நலம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசினார்

நுகர்வோருக்கு அதிக அதிகாரம்

இந்தப் புதிய சட்டம் நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதுடன், நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில்கள், நுகர்வோர் பிரச்சினைத் தீர்வு ஆணையம், மத்தியஸ்தம், கலப்படம் மற்றும் போலிப்பொருள்கள் விற்பனை அல்லது உற்பத்திக்குத் தண்டனை போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் என்றார்.

இந்த சட்டத்தின் மூலம் நுகர்வோரின் உரிமைகளை அமல்படுத்துதல், பாதுகாத்தல், ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க சட்டம் வகை செய்கிறது என்றும் அவர் கூறினார்.

நுகர்வோர் உரிமைகள் மீறல்களை விசாரித்தல், புகார்கள், வழக்குகளைப் பதிவுசெய்தல், பாதுகாப்பற்ற பொருட்கள் மற்றும் சேவைகளைத் திரும்பப் பெறுதல், நியாயமற்ற வணிக நடைமுறைகள், திசைதிருப்பும் விளம்பரங்களை ரத்து செய்தல், தவறான விளம்பரங்களைத் தயாரிப்போர், அனுமதி அளிப்போர், வெளியிடுவோருக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள சிசிபிஏ-வுக்கு  (Central Consumer Protection Authority)  அதிகாரம் வழங்கப்படும்.

இ-வணிகத்தளங்கள் விதிக்கும் நியாயமற்ற வணிக நடைமுறைகளுக்கான விதிமுறைகளும் இந்தச்சட்டத்தின் கீழ்வரும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்அமைத்தல், இ-வணிகத்தில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பதற்கான விதிமுறைகள் குறித்த அரசிதழ் அறிவிக்கை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

எளிமையாக்கப்பட்ட நீதி நடைமுறைகள்

மாநில , மாவட்ட ஆணையங்கள் தங்கள் உத்தரவுகளை மறு ஆய்வு செய்தல், நுகர்வோர் தங்கள் புகார்களை மின்னணு அடிப்படையில் தாக்கல் செய்யவும், நுகர்வோர் ஆணையங்களில் தங்கள் இருப்பிடம் அமைந்துள்ள பகுதிக்கு உட்பட்டு புகார்களைத் தாக்கல் செய்யவும் வகை செய்யும் நுகர்வோர் தாவா நீதிநடைமுறைகளை எளிதாக்க புதிய சட்டத்தில் இடமுள்ளதாக பாஸ்வான் தெரிவித்தார்.

மேலும், விசாரணையை காணொளிக் காட்சி மூலம் நடத்தவும், புகார்களை விசாரணைக்கு ஏற்பதற்கான குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படாவிட்டால், அவற்றை ஏற்க அனுமதிப்பது போன்றவற்றுக்கும் புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் தாவா தீர்வு ஆணையத்தின் விதிமுறைப்படி, ரூ.5 லட்சம் வரையிலான வழக்கு தாக்கல் செய்ய கட்டணம் ஏதுமில்லை என்று அவர் தெரிவித்தார். மின்னணு அடிப்படையில் புகார்களைத் தாக்கல் செய்ய வசதி உள்ளது. அடையாளம் தெரியாத நுகர்வோர் விஷயத்தில் நுகர்வோர் நலநிதியில் கடன்பெற முடியும். காலியிடங்கள், தீர்க்கப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி மாநில ஆணையங்கள் மத்திய அரசுக்கு காலாண்டுக்கு ஒருமுறை தகவல் அளிக்கும்.

பொதுவான விதிகள் தவிர, புதிய சட்டத்தின் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் விதிகள், நுகர்வோர் தாவா தீர்வு ஆணைய விதிகள், மாநில/மாவட்ட ஆணைய உறுப்பினர்கள், தலைவரை நியமிப்பதற்கான விதிகள், மத்தியஸ்த விதிகள், மாதிரி விதிகள், இ-வணிக விதிகள், நுகர்வோர் ஆணைய நடைமுறை ஒழங்குமுறை, மத்தியஸ்த ஒழுங்குமுறை ஆகியவையும் உள்ளன. மாநில ஆணையம் மற்றும் மாவட்ட ஆணைய நிர்வாகக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையும் இதில் அடங்கும்.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்

மத்திய நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரைத் தலைவராக கொண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 34 உறுப்பினர்களையும் கொண்ட நுகர்வோர் பிரச்சினைகள் பற்றிய ஆலோசனை அமைப்பான மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சிலை அமைப்பதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் விதிகளில் இடமுள்ளதாக பாஸ்வான் தெரிவித்தார்.

முந்தைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986-இல் நீதி வழங்க ஒற்றை அம்ச அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதால், காலவிரயம் ஆனதாகவும், பாரம்பரிய விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமல்லாமல், புதிய இ-வணிக சில்லரை விற்பனையாளர்கள்/தளங்களில் இருந்தும் வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க பல திருத்தங்கள் செய்த பின்னர் இந்தப் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் ராம்விலாஸ் பாஸ்வான் குறிப்பிட்டார் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் , 2019 இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய மத்திய நுகர்வோர்நலம், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், இந்தப் புதிய சட்டம் நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதுடன், நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில்கள், நுகர்வோர் பிரச்சினைத் தீர்வு ஆணையம், மத்தியஸ்தம், கலப்படம் மற்றும் போலிப்பொருள்கள் விற்பனை அல்லது உற்பத்திக்குத் தண்டனை போன்றவற்றின் மூலம் , அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் என்றார்.

நுகர்வோரின் உரிமைகளை அமல்படுத்துதல், பாதுகாத்தல், ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை {சிசிபிஏ) உருவாக்க சட்டம் வகை செய்கிறது என்று அவர் கூறினார்.

நுகர்வோர் உரிமைகள் மீறல்களை விசாரித்தல், புகார்கள் ,வழக்குகளைப் பதிவுசெய்தல், பாதுகாப்பற்ற பொருள்கள் மற்றும் சேவைகளைத் திரும்பப் பெறுதல், நியாயமற்ற வணிக நடைமுறைகள், திசைதிருப்பும் விளம்பரங்களை ரத்து செய்தல், தவறான விளம்பரங்களைத் தயாரிப்போர், அனுமதி அளிப்போர், வெளியிடுவோருக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள சிசிபிஏ-வுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

இ-வணிகத்தளங்கள் விதிக்கும் நியாயமற்ற வணிக நடைமுறைகளுக்கான விதிமுறைகளும் இந்தச்சட்டத்தின் கீழ்வரும் என்று திரு. பாஸ்வான்கூறினார். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்அமைத்தல், இ-வணிகத்தில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பதற்கான விதிமுறைகள் குறித்த அரசிதழ் அறிவிக்கை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநில , மாவட்ட ஆணையங்கள் தங்கள் உத்தரவுகளை மறுஆய்வு செய்தல், நுகர்வோர் தங்கள் புகார்களை மின்னணு அடிப்படையில் தாக்கல் செய்யவும், நுகர்வோர் ஆணையங்களில் தங்கள் இருப்பிடம் அமைந்துள்ள பகுதிக்கு உட்பட்டு புகார்களைத்

தாக்கல் செய்யவும் வகை செய்யும் நுகர்வோர் தாவா நீதிநடைமுறைகளை எளிதாக்க புதிய சட்டத்தில் இடமுள்ளதாக திரு. பாஸ்வான் தெரிவித்தார். மேலும், விசாரணையை காணொளிக் காட்சி மூலம் நடத்தவும், புகார்களை விசாரணைக்கு ஏற்பதற்கான குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படாவிட்டால், அவற்றை ஏற்க அனுமதிப்பது போன்றவற்றுக்கும் புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் தாவா தீர்வு ஆணையத்தின் விதிமுறைப்படி, ரூ.5 லட்சம் வரையிலான வழக்கு தாக்கல் செய்ய கட்டணம் ஏதுமில்லை என்று அவர் தெரிவித்தார். மின்னணு அடிப்படையில் புகார்களைத் தாக்கல் செய்ய வசதி உள்ளது. அடையாளம் தெரியாத நுகர்வோர் விஷயத்தில் நுகர்வோர் நலநிதியில் கடன்பெற முடியும். காலியிடங்கள், தீர்க்கப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி மாநில ஆணையங்கள் மத்திய அரசுக்கு காலாண்டுக்கு ஒருமுறை தகவல் அளிக்கும்.

பொதுவான விதிகள் தவிர, புதிய சட்டத்தின் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் விதிகள், நுகர்வோர் தாவா தீர்வு ஆணைய விதிகள், மாநில, மாவட்ட ஆணைய உறுப்பினர்கள், தலைவரை நியமிப்பதற்கான விதிகள், மத்தியஸ்த விதிகள், மாதிரி விதிகள், இ-வணிக விதிகள், நுகர்வோர் ஆணைய நடைமுறை ஒழங்குமுறை, மத்தியஸ்த ஒழுங்குமுறை ஆகியவையும் உள்ளன. மாநில ஆணையம் மற்றும் மாவட்ட ஆணைய நிர்வாகக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையும் இதில் அடங்கும்.

மத்திய நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரைத் தலைவராகவும், இணையமைச்சரை துணைத்தலைவராகவும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 34 உறுப்பினர்களையும் கொண்ட நுகர்வோர் பிரச்சினைகள் பற்றிய ஆலோசனை அமைப்பான மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சிலை அமைப்பதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் விதிகளில் இடமுள்ளதாக பாஸ்வான் கூறினார்.

பாஸ்வான் தமது நிறைவுக் கருத்தாக, முந்தைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986-இல் நீதி வழங்க ஒற்றை அம்ச அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதாகவும், அதனால் காலவிரயம் ஆனதாகவும் தெரிவித்தார். பாரம்பரிய விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமல்லாமல், புதிய இ-வணிக சில்லரை விற்பனையாளர்கள்/ தளங்களில் இருந்தும் வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க பல திருத்தங்கள் செய்த பின்னர் இந்தப் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். நாட்டில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க உபகரணமாக இந்தச் சட்டம் இருக்கும் என்று அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...